ARUMBU FEB 2023 ONLINE FINAL Flipbook PDF

ARUMBU FEB 2023 ONLINE FINAL

41 downloads 114 Views 23MB Size

Recommend Stories

Story Transcript

இளைய தலைமுறை இதழ் இதழ் 2 | மலர் 66 | பிப்ரவரி, 2023 | Rs.30/- 1 ஆயுதங்களுக்கு எதிராகப் ப�ோர் செய்யும் மாணவி - எக்ஸ் க�ோன்சாலெஸ் யானைகளை அழிக்கும் மனிதர்களின் அட்டகாசம் கால்பந்தாட்டத்தின் கடவுள் பீலே


DESIGN: We accept advertisments designed by you. We also design them for you free of cost. ADVERTISEMENT TARIFF SPECIFICATIONS Full Page Size with 195 x 260 mm Half Page 195mm x x 129 mm Back Cover 195 MM X 215 MM Bleed 2mm SPACE TARIFF PAPPER WRAPPER ( BACK OUTER) 12,000 ART WRAPPER ( FRONT INNER 12,000 ART WRAPPER (BACK INNER) 11,000 ART INNER FULL PAGE 8,000 - HALF PAGE 4,000 - QUARTER PAGES 2,000 - குறுக்கெழுத்து - 15 இளைய தலைமுறை இதழ் PAYMENT MODE M.O/DD/CHEQUE / BANK TRANSFER IN FAVOUR OF ARUMBU NAME : ARUMBU AC/NO: 0138053000012794 IFSC: SIBL0000138 BANK: THE SOUTH INDIAN BANK BRANCH: KELLYS, CHENNAI - 10 இடமிருந்து வலம் 1. இளவரசன் 4. பித்தா 6. மணி 7. மா பலா வாழை 8. காமா 9. புவனம் 10. மான் 11. கவனி 15. கற்பு 16. மதர் 17. ரைபிள் 18. பூம்புகார் 21. தேரை 23. (நவ)தானியம் 25. வடம் 26. பாயா 27. புத்திரன் மேலிருந்து கீழ் 1. இரும்புத்திரை 2. வருமானம் 3. சலாம் 4. பிணி 5. தாயுமானவர் 6. மழைமானி 11. கற்பூர(வல்லி) 12. வம்பு 13. பதர் 14. பாபிலோனியா 16. மகாதேவன் 19. புரை 20. பாம்பு 22. பொம்மை 23. தாபா 24. நதி 1 இ ள 2 வ ர 3 ச ன் 4 பி த் 5 தா ரு ரு ம் 6 ம ணி யு ம் 7 மா ப லா வா ழை 8 கா மா 9 பு வ ன ம் 10 மா ன் ன த் ம் 11க 12வ னி 13ப வ தி 14பா 15க ற் பு 16ம த ர் 17 ரை பி ள் 18 பூ ம் 19 பு கா ர் லோ 20பா ர 21 ரை தே 22பொ 23 தா னி ய ம் 24 ந 25வ ட ம் 26பா யா 27 பு த் தி ர ன் மை 2 பிப்ரவரி, 2023


Printed and Published by A. Amirtharaj, on behalf of Salesian Publishing Society,No. 45, Landons Road, Kilpauk, Chennai-600 010. Printed at Salesian Institute of Graphic Arts (SIGA), No. 49, Taylors Road, Kilpauk, Chennai - 600 010. Editor: A. Amirtharaj. உள்ளே... இளைய தலைமுறை இதழ் இதழ் 2 | மலர் 66 | பிப்ரவரி, 2023 அரும்பு இதழில் வெளியாகும் படைப்புகளை எடுத்தாளவோ மறுபதிப்புச் செய்யவோ ஆசிரியரின் எழுத்துப்பூர்வமான அனுமதியைப் பெற வேண்டும். ஆசிரியர் ஆ.அமிர்தராஜ் துணை ஆசிரியர் ஜெயராணி நிர்வாகக் குழு அருள் திரு முனைவர் கே.எம். ஜோஸ், ச.ச. அருள் திரு முனைவர் லூர்துசாமி போஸ்கோ, ச.ச. அருள் திரு முனைவர் எட்வின் வசந்தன் பதிப்பாசிரியர் ஆ.அமிர்தராஜ் ஆசிரியர் குழு தமிழச்சி தங்கபாண்டியன் எம்.பி. சுரேஷ் பால், சுஜாதா நடராஜன் பத்மா அலிஸ்டர் கணினி மேலாண்மை அ. ஜோஸ்பின் நாதன் சந்தா மேற்பார்வை/அஞ்சல் வெ. ஆரோக்கிய செல்வி வடிவமைப்பு RRR CREATIVE விற்பனை மேலாளர் ரா. ஜான் போஸ்கோ வெளியீடு முகவரி: அரும்பு 49, டெய்லர்ஸ் ரோடு, ரெனால்டி ஹவுஸ், இரண்டாவது மாடி, கீழ்பாக்கம், சென்னை - 600 010. 044 - 26612138/40, 9444799942 [email protected] www.arumbupublications.in சந்தா விபரம் தனி இதழ் ரூ. 30 ஆண்டுச் சந்தா ரூ. 330 2 ஆண்டு் சந்தா ரூ. 600 3 ஆண்டு சந்தா ரூ. 810 ஆயுள் சந்தா ரூ. 5000 விளம்பரக் கட்டணம் முழுப்பக்கம் ரூ. 8,000 அரைப்பக்கம் ரூ. 4,000 கால்பக்கம் ரூ. 2,000 பின் அட்டை ரூ. 12,000 உள் அட்டை ரூ. 12,000 16 10 28 சாக்ரடீஸிற்கு விஷம் கொடுத்தது ஏன்? ஆயுதங்களுக்கு எதிராகப் போர் செய்யும் மாணவி யானைகளை அழிக்கும் மனிதர்களின் அட்டகாசம் 18 நண்பர்களையும் உறவுகளாக்கலாம்! பிப்ரவரி, 2023 3


உங்கள் நலனில் விருப்பம் உள்ள (ஆ.அமிர்தராஜ்) ஆசிரியர் அடிப்படையில் நான் ஒரு கஞ்சன் என்று சிலர் கூறுவதை நாம் கேட்டிருக்கின்றோம். நான் ஒரு கோபக்காரன் என்று சிலர் அறிவிப்பதையும் கேட்டிருக்கின்றோம், புது வருடமான 2023 தொடங்கியுள்ள இந்நேரத்தில் நான் உங்களோடு இணைந்து சிந்திக்க விரும்புவது உங்களது தாராள குணம் பற்றியோ, சாந்த குணம் பற்றியோ அல்ல. அதைவிடவும் நம் வாழ்வுக்கு அடிப்படையான ஓர் அம்சமாக உள்ள நம்பிக்கை என்கிற உங்களது உள்ளுணர்வு குறித்தே சில சிந்தனைகளை முன் வைக்க விரும்புகிறேன். யோசித்து விடை கூறுங்கள். அன்றாட வாழ்வில் நீங்கள் ஓர் அவநம்பிக்கைவாதியா? அல்லது நம்பிக்கைவாதியா? உள்ளுணர்விலே ஒருவர் அவநம்பிக்கையைத் தழுவி நிற்பதா? அல்லது நம்பிக்கையைத் தன் அடிப்படை நிலைப்பாடாக அன்றாட வாழ்விலே தேர்ந்துகொள்வதா? என்பது அவரவருக்கான சுதந்திரம் என்பதை மறுக்க முடியாது. இது அவரவரது தனிப்பட்ட விருப்பம் என்பதும் உண்மையே. ஆனாலும் நம்பிக்கை மிக்க நோக்குநிலையே நமது வளர்ச்சிக்கும் வளமைக்கும் நிறைவுக்கும் உகந்தது என்பது பல்வேறு ஆன்மிக மரபுகளுக்கும் பொதுவான ஒரு நிலைப்பாடு. இவ்வித ஆன்மிக நோக்கை நிராகரிக்கின்ற யதார்த்தவாதம் நமக்கு முன்மொழியும் அவநம்பிக்கையானது முழுமையான, நிறைவான வாழ்க்கைக்கு ஏன் தடையாக இருக்கிறது? வாழ்க்கையை ஓர் ஆபத்தான யுத்தம் என்றோ, இடைவிடாத போர் என்றோ, நம் கற்பனையிலே உருவகித்துக்கொள்ள நேர்ந்தால், அது அவநம்பிக்கை. நாம் வாழ்வில் எதிர்கொள்ளும் ஒவ்வொ ரு பிர ச்சனை யும் சவாலும் ந ம்மை ந ம் அவநம்பிக்கையின் நிமித்தம் எளிதில் மிரள வைத்துவிட முடியும். சிறு பிரச்சனையைக் கூட ஒரு பெரும் யுத்தமாகக் கருதி அதில் வெற்றி பெற்றால்தான் உண்டு வாழ்வு: இல்லையேல் ஒழிந்தோம் என்கிற வீண் மனநெருக்கடிக்கு உள்ளாகி விடுவோம். நிம்மதியற்ற ஒரு மனநிலைக்கு நிரந்தரமாகவே தள்ளப்படுவோம். இதோ எல்லா பிரச்சனைகளும் ஒழிந்தன, எந்தக் கவலையும் எனக்கு இனி இல்லை. இப்போது, எல்லாம் என் கட்டுப்பாட்டுக்குள் உள்ளது என்றானால் மட்டுமே என்னில் நிம்மதி பெருமூச்சு சாத்தியம் என பிடிவாதம் பிடித்தால், அது மிகவும் துக்ககரமான, இறுக்கமான ஒரு மனோபாவத்தின் பிடியில் நம்மை சிக்க வைத்துவிடும். பிறவிப் பெருங்கடலும் நம்பிக்கையெனும் நங்கூரமும் இதுதான் யதார்த்த வாதம் என்றெண்ணி, வீண் அவநம்பிக்கையில் மூழ்கிப்போய், மனித வாழ்க்கையை ஒரு போராட்டம் என்றோ, பெரும் போர் என்றோ விளங்கிக் கொள்ளக் கூடாது. நம் வாழ்வு ஓர் இனிய பயணம். இடையிடையே குறுக்கிடும் மேடு பள்ளங்களாகப் பல்வேறு சிரமங்களும் இழப்புகளும் நம்மை போட்டுலுக்கினாலும் இது அரியதோர் பயணம். இவ்வாழ்கை பிறப்பு என்னும் ஒரு முக்கிய புள்ளியிலிருந்து மறைவு என்னும் முற்றுப் புள்ளிவரை, மெல்ல அவரவர் இஷ்டப்படி அசைந்தாடியோ, அவசரகதியில் நடை பயின்றோ, முன்னகரும் ஒரு முக்கிய பயணம். பிறரோடும் கை கோர்த்து நடந்து, உற்ற வழித் துணையாகிட நாம் பயிற்சி பெறுவதும் இப்பயணத்திலே அடக்கம். அவநம்பிக்கைவாதம் என்பது ஒரு மிகைப்படுத்தல் மட்டுமே. நமது கடந்தகால அனுபவங்களின் ஊடாக நோக்கினால் இது புரிந்துவிடும். நமக்கு நேரிடப் போகிறது என்றெண்ணி நாம் பயந்துகொண்டிருந்த எண்ணற்ற தோல்விகள், துயரங்கள், துரதிஷ்டங்கள் இவற்றில் ஏறத்தாழ தொண்ணூறு சதவீதம் நம்மில் யாருடைய வாழ்விலும் நேர்ந்ததேயில்லை என்பதே நிதர்சனம். எனவேதான் நாம் நேர்மறையாக எண்ண வேண்டும்; நம் நிஜ வாழ்வில் தீயதை விட நல்லதே அதிகம் நேர்கிறது என்கிற சுய தெளிவுடன், துணிவுடன் நாம் செயல்பட வேண்டும் என்று நம்பிக்கைவாதிகள் வலியுறுத்துகின்றனர். நாம் ஒவ்வொருவரும் ஒரு பிரமாண்டமான பயணக் கப்பலைப் போல! `கடல் என்றாலே ஆபத்தானது; ஆழமானது; அலை வீசும்; புயல் அடிக்கும், நாம் மாட்டிக்கொண்டு மூழ்கிவிடவே தொண்ணூறு சதவிகித வாய்ப்புள்ளது என்று ஆரம்பத்திலிருந்தே இருண்ட மனங்கொண்டு வெற்று யதார்த்தவாதம் பேசியபடி துறைமுகத்தின் உள்ளேயே கட்டுண்டு நின்றுவிட்டால், இழப்பு நமக்கே, துணிவும் நன்னம்பிக்கையும் மிக்க பயணங்களை மேற்கொள்ளுவதன் மூலமே நிறைவான வளர்ச்சியையும் மனப் பக்குவத்தையும் ஆழ்ந்த மகிழ்வையும் தேடிக்கொள்ள முடியும். ஆசிரியர் பக்கம் 4 பிப்ரவரி, 2023


தொகுப்பு: பிஜூ ரோஷன் குடும்ப வன்முறை! தேசிய மகளிர் ஆணையத்தில் பதிவான பெண்களுக்கு எதிராக குடும்பத்தில் நடைபெற்ற குற்றங்களின் எண்ணிக்கை! (இந்தியா) சைபர் க்ரைம் குற்றங்கள் 2021 863 2022 925 பாலியல் வன்கொடுமை / அதற்கான முயற்சி 2021 1,681 2022 1,711 பெண்களின் நாகரிகத்தை/ அடக்கத்தை சீர்குலைப்பதற்கு எதிரான புகார்கள் 2021 1,839 2022 2,527 வரதட்சணைக் கொடுமை தொடர்பான குற்றச்சாட்டுகள் 2021 341 2022 357 திருமணமானப்பின் பெண்ணை துன்புறுத்தல் (வரதட்சணை கேட்பது உட்பட) 2021 4,613 2022 4,613 குடும்ப வன்முறைகள் தடுப்பு தொடர்பான புகார்கள் 2021 6,684 2022 6,982 மரியாதையுடன் வாழ உரிமை கேட்டு 2021 11,088 2022 9,736 பெண்களுக்கு எதிராக குடும்பத்தில் நடைபெற்ற மொத்த குற்றங்களின் எண்ணிக்கை! 2021 2022 30,865 30,957 Source: National Commission for Women பிப்ரவரி, 2023 5


முகப்பு கட்டுரை சுரேஷ் பால் இந்தியாவில் விலைவாசி கிடுகிடுவென உயர்ந்து கொண்டே போகின்றது. சென்ற மாதம் வாங்கிய விலையில் அதே பொருட்களை இந்த மாதம் வாங்க முடிவதில்லை. ஆடம்பரப் பொருட்கள் மட்டும் அல்ல, அத்தியாவசியப் பொருட்களின் விலைகளும் உயர்ந்துகொண்டே போகின்றது. குறிப்பாக அன்றாட உபயோகத்தில் உள்ள அரிசி, சர்க்கரை, பால், காய்கறிகள், மருந்துகள் போன்றவற்றின் விலை அதிகரிப்பால் நடுத்தர மற்றும் கீழ்தட்டு மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். பத்து ரூபாய்க்கு விற்றுக்கொண்டிருந்த டீ இன்று 12 ரூபாய். ஏன் என்று கேட்டால் பால் விலை, சர்க்கரை விலை மற்றும் டீத்தூள் விலை ஏறிவிட்டது என்கிறார்கள். பாலின் விலை ஏன் ஏறியது? கொள்முதல் விலை அதிகரித்ததுதான். கொள்முதல் விலை ஏன் அதிகரித்தது? தீவனச் செலவுகள் அதிகரித்தது என பதில் வருகின்றது, இந்தக் கேள்வி பதில் ஒரு முடிவே இல்லை. மருந்துகளை எடுத்துக்கொண்டாலும் அடிப்படை மருந்துகளின் விலையும் அதிகரித்துக் கொண்டேதான் போகின்றது. 2.5% அளவுக்கு அதிகரிக்கும் மருந்துகளின் விலை கடந்த ஆண்டு 10% க்கும் அ தி க ம ா க ஏ ற ்ற ப்ப ட ்ட து . அதேபோல பெட்ரோல்/டீசல், சிலிண ்ட ர் விலை க ள் ஏறிக்கொண்டே போகின்றன. ஏற்கனவே கோவிட்பெருந்தொற்று காரணமாக முடக்கப்பட்ட வேலைவாய்ப்புகள் இன்னமும் மு ழு மை ய ா க த் திரும்பி வரவி ல்லை . ஏராளமானோர் வேலை வாய்ப்பின்றியோ அல்லது குறைந்த சம்பள வேலையிலோ இருந்து வருகின்றனர். மாத ஊதியதாரர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் சம்பளம் அதிகரிக்கும் என்றாலும் அது விலைவாசி உயர்வு க் கு ஏ ற ்ற அ ள வி ல் அதிகரிக்கப்படவில்லை. அரசு ஊழியர்களுக்குள் கூட அகவிலைப்படிகள் அதிகரிக்கப்பட்டாலும் அது விலைவாசி உய ர்வை ச மாளிக்க ப் போதுமானதாக இல்லை. இவர்கள் தவிர முறைசாரா தொழில்களில் ஈடுபட்டிருக்கும் கோடிக்கணக்கான தொழிலாளர்கள் மற்றும் வாழ்வை நெரிக்கும் விலைவாசி உயர்வு 6 பிப்ரவரி, 2023


விவசாயிகளின் நிலையை எண்ணிப் பார்த்தால் மிகவும் வேதனையாக இருக்கிறது. அண்மைக் காலத்தில் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு குறைந்தது. இன்று 82 ரூபாய்கள் கொடுத்துதான் ஒரு டாலரை பெற முடியும். இதனால் உள்நாட்டில் இறக்குமதி செய்யப்படும் பொருள்களின் விலைகளும் ஏறிவிட்டன. விலையேற்றம் என்பது இரண்டு வகையானது. இதில் முதல் வகை குறிப்பிட்ட சில பொருட்கள் தட்டு ப்பாட்டில் இரு க் கு ம்பே ாது, அதன் காரணமாக விலை அதிகரிக்கும். மழைக் காலங்களில் காய்கறி வரத்து குறையும்போது அவற்றின் விலை அதிகரிக்கும். மழை நின்று நிலைமைகள் சரியானதும் விலை பழைய நிலைக்கு வந்துவிடும். இதை தற்காலிக விலை உயர்வு எனலாம். இவை பெரும்பாலும் ஒரே ச மயத்தில் எ ல்லா பெ ாருட ்க ளு க் கு ம் ஏற்படுவதில்லை. மற்றொரு வகையில் சில பல காரணங்களுக்காக உயரும் விலையானது பின்னர் குறையாமல் அப்படியே நிலைத்து நின்றுவிடுகிறது. அல்லது குறைகிறது பழைய நிலைக்கு திரும்புவதில்லை. ஏறத்தாழ நிரந்தர விலை உயர்வாய் அது மாறிவிடுகின்றது. உதாரணமாக 70 அல்லது 80 ரூபாய்களில் இருந்த பெட்ரோல் விலை கச்சா எண்ணெய் விலை உயர்வு க ாரணமா க மடமடவென உயர்ந்து 100 ரூபாய்களுக்கு மேல் போனது. பின்னர் கச்சா எண்ணெய் விலை குறைந்த பின்னரும் பல போரட்டங்களுக்குப் பின் விலை குறைக்கப்பட்டது. ஆனால் குறைக்கப்பட்ட விலையே 102 ரூபாயில்தான் உள்ளது. நிச்சயமாக அது பழைய 70 ரூபாய்க்கு வருவதற்கு சாத்தியமே இல்லை. பெ ட ்ரே ால், டீ ச ல் ப ோன்றவற்றி ன் விலையேற்றம் என்பது வாகன ஓட்டிகளை மட்டும் பாதிக்கும் விஷயம் இல்லை. இன்று அனைத்து வர்க்கத்துக்கும் அடிப்படையாக இருப்பது போக்குவரத்துதான். வேன், லாரி, ட்ரக் தொடங்கி விமானம் வரை எல்லாமே எல்லா வகையானப் பொருட்களின் வர்த்தகத்திற்காக பயன்படுத்தப்படுகின்றன. எனவே, வாகன எரிபொருளின் விலை உயரும்போது தானாகவே அ னை த்துப் பொ ரு ட ்க ளி ன் வி ல ை யு ம் உயர்கின்றன. நேரடியான பொருள் தட்டுப்பாடு இ ல்லையெ ன ்றா லும் பெ ா ரு ள் போக்குவரத்திற்கான கட்டணம் அதிகரிப்பதால் பொருளின் விலைகளும் அதிகரிக்கின்றன . இவ்வாறு மறைமுக காரணங்களாலும் விலை அதிகரிப்பு நடைபெறுகின்றது. இவற்றை விடவும் மிகவும் முக்கியமான ஒரு காரணம் பண வீக்கம். பண வீக்கம் என்பது பொருளாதாரம் தொடர்பான ஒரு சொல். எளிமையாக சொல்ல வேண்டுமெனில் பணத்தின் மதிப்பு குறைதலே பண வீக்கம் என்பதாகப் புரிந்து கொள்ளலாம். அதாவது பணத்தின் மதிப்பு குறைந்துவிடுவதால் அதிக பணம் கொடுத்து ஒரு பொருளை வாங்க வேண்டி உள்ளது. உதாரணமாக 10 ரூபாய்க்கு விற்கப்பட்ட இட்லி ரூபாயின் மதிப்பு குறைந்ததால் இப்போது 15 ரூபாய்க்கு மாறிவிடுகின்றது. இட்லியின் மதிப்பு 10 ரூபாயாகத்தான் உள்ளது. ஆனால், இப்போது 10 ரூபாயின் மதி ப் பு அ ப ்பே ாதிரு ந்த 10 ரூ ப ாயா க இ ல்லை குறைந்துவிட்டது. எனவே இப்போதைய 15 ரூபாய்தான் அப்போதைய 10 ரூபாய்க்கு சமமாக உள்ளது. எனவே இப்போது நாம் 10 ரூபாய்க்கு பதில் 15 ரூபாய் கொடுத்து அந்தப் பொருளை வாங்குகின்றோம். இதைத ான் பணவீக்கம் என்கிறோம்., பணவீக்கம் என்பது பல்வேறு காரணங்களால் ஏற்படுகின்றது எந்த ஒரு நாட்டிலும் ஒரு சிறிய அளவிலாவது, பண வீக்கம் இருக்கும். ஆனால் பண வீக்கம் அதிகமாகும்போது ரூபாயின் மதிப்பு மிக மிக குறைந்துவிடும். ஒரு கா ல த் தி ல் பொருட்களின் விலை ஒரு காசாக இருந்தது. இன்று பணத்தின் மதிப்பு குறைந்து போனதில் பிப்ரவரி, 2023 7


ஒன்று இரண்டு மூன்று பைசாக்களுக்கு எந்தவித மதிப்பும் இல்லை, அரசாங்கம் அதை அச்சிடுதும் இல்லை. பணத்தின் தொடக்கமே இப்போதெல்லாம் ஒரு ரூபாய் என்றாகிவிட்டது. இன்னும் கொஞ்ச நாட்களில் தொடக்கமே 10 ரூபாய் என மாறிவிடும். பணத்தின் வாங்கும் சக்தி குறைவதால் அதிக பணத்தை செலவிட்டு அதை வாங்கவேண்டிய நிலை ஏற்படுகின்றது. இந்தியாவில் தற்போது அதிகமான அளவில் பண வீக்கம் உள்ளது. இந்திய அரசே நிர்ணயித்த பண வீக்க அளவை விட அதிகமான அளவில் அது உள்ளது. பணவீக்கம் கட்டுப்படுத்தப்படாவிட்டால் அது விலைவாசியை கடுமையாகப் பாதிக்கும். பொருட்களின் விலை தாறுமாறாக ஏறும். இதன் கூடவே வர்த்தகர்களும் தங்களின் லாபம் கருதி பொருட்களின் விலை ஏற்றும்போது பொருட்களின் விலை இன்னமும் ஏறுகிறது. நேரடி மற்றும் மறைமுக வரிகள் மற்றும் போக்குவரத்து போன்ற செலவீனங்கள் அதிகரிக்கும்போது அவை நேரடியாக விலை உயர்வில்தான் போய் முடிகின்றது. அரிசி கிலோ 20 ரூபாய் விற்கும்போது 100 ரூபாய் சம்பாதிக்கும் ஒருவன் குடும்பத்திற்காக 5 கிலோ அரிசி வாங்க முடியும். ஆனால், அரிசி விலை கிலோ 25 ஆக்கப்படும்போது அவரால் 4 கிலோ அரிசி தான் வாங்க முடியும். ஏனென்றால் அவரது வருமானம் 125 ரூபாயாக உயர்வதில்லை வேண்டுமானால் 110 ரூபாயாக உயரக்கூடும், ஆனால் அந்தத் தருணத்தில் கூட அவரால் குடும்பத் தேவைக்கான 5 கிலோ அரிசி வாங்க முடியாது. இந்திய மக்கள் தொகையில் பெரும்பாலானோர் நிலையான வருமானம் தரும் வேலைகளில் இல்லை. பெரும்பாலானோர் கூலித் தொழிலாளர்களாகவே உள்ளனர். பணவீக்கம் காரணமாக ஏற்படும் விலைவாசி உயர்வு இவர்களின் வாழ்க்கையை வெகுவாகப் பாதிக்கின்றது. நிலையான வருமான பிரிவினருக்கும் கூட பண வீக்கத்தை ஈடுகட்டும் அளவிற்கு வருவாய் அதிகரிப்பு இருந்தால்தான் சமாளிக்க முடியும். ஆனால் அவ்வாறு நடைபெறுவதில்லை, எனவே கடன்கள் மூலமாக சமாளிக்க முயல்கின்றனர், ஆனால், இதுவும் கடுமையான நிதி நெருக்கடியையே ஏற்படுத்துகின்றது. இத்தகைய சூழ்நிலையில் ஏழைகளுக்கும் நலிந்த பிரிவினருக்கும் இருக்கும் ஓர் ஆறுதல் பொது விநியோக முறைதான். தமிழகத்தைப் எல்லோரும் எல்லா விதமான உரிமைகள�ோடும் நல்வாழ்க்கை வாழும் அடிப்படைக் கட்டுமானத்தை உருவாக்குவதே ஆட்சியாளர்களின் முதன்மைக் கடமை 8 பிப்ரவரி, 2023


பொறுத்த அளவில் பொது விநியோக முறைபெரும்பாலும் சரியாகவே இயங்குகின்றது. எனினும் தரமற்ற உணவுப்பொருட்கள் வழங்கப்படுவது முற்றிலும் தவிர்க்கப்படவில்லை. கோடிக்கணக்கான மக்கள் சுதந்திரமடைந்து 75 ஆண்டுகள் ஆன பின்னரும் ரேஷன் கடைகளையே தங்கள் குடும்பத் தேவைகளுக்காக நம்பிக் கொண்டிருக்கின்றனர் என்பது வேதனையான ஒன்று தான். மானிய விலையில் உணவுப் பொருட்களை வழங்குவது ஒருபுறமிருக்க அரசு விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். அத்தியாவசிய உணவுப்பொருட்கள், மருந்துகள் போன்றவற்றிற்கு விலை கட்டுப்பாட்டு முயற்சிகளை அரசாங்கமே செயல்படுத்த வேண்டும். வியாபாரிகளை கொள்ளை அடிக்க அனுமதிக்கக் கூடாது, பொருளாதார நடவடிக்கைகள் மூலம் பணவீக்கத்தைக் கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும். அரசானது உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவிக்க வேண்டும் உற்பத்திக்கு தடையாக இருக்கும் விஷயங்களை நீக்க வேண்டும். செயற்கையான தட்டுப்பாடுகளை ஏற்படுத்துபவர்கள் கடுமையாகத் தண்டிக்கப்பட வேண் டும் கு றைந்தப ட ்ச ஊ தி ய ம் ம ற் று ம் அகவிலைப்படிகள் பே ான்றவற்றில் மாற்றங்களைக் கொண்டு வருவதன் மூ ல ம் விலை உயர்வி ன் பாதிப்புகளை குறைக்க முடியும். கல்வியறிவை அதிகப்படுத்துதல், சு க ாதார வ ச தி கள ை மேம்ப டு த் து த ல் , உ ள் கட் டுமான ங்கள ை வ ளப்ப டு த் து த ல் , பு தி ய வே லைவா ய் ப் பு கள ை உருவா க் கி த் த ரு த ல் , க டு மை யான தர க் கட்டுப்பாடுகள் , தரமான பெ ாருட ்கள ை க்கெ ாண்ட பெ ா து விநியோக முறை, பொது போக்குவரத்து விலை கட்டு ப்பாட்டுச் சட்டங்கள் மூலமாக விலைவாசி உயர்வின் பாதிப்பு களையும் பணவீக்கத்தையும் குறைக்க முடியும். விலைவாசி உயர்வு என்பது அனைத்துத் தரப்பினரையும் பாதிக்கும் ஒன்று, நமது வளமான வாழ்க்கையின் எதிரி அது. எனவே , அனைத் து த் த ர ப் பின ரு ம் கு றிப்பாக அனைத்துக் கட்சிகளு ம் இயக்கங்களும் விலைவாசி உயர்வுப் போராட்டங்களில் ஆர்வம் காட்ட வேண்டும். நி றைந்த நீடி த்த முன்னேற ்ற ம் ஒன்றுதான் நமது வாழ்க்கையின் எதிர்கால நம்பிக்கையாக உள்ளது. அந்த முன்னேற்றம் ஒரு நாட்டின், சமுதாயத்தின் அனைத்து மக்களையும் உள்ளடக்கியதாக இருக்க வேண்டும். பணமிருப்பதால் என்ன விலை எ ன ்றா லும் வாங்கி க்கெ ா ள்வ து ம் ப ண மி ல்லா த வ ர்க ள் பட் டி னி கிடப்பதுமான நிலை ஒரு ஜனநாயக சமுதாயத்துக்கான அடையாளம் அல்ல. எ ல ்லோ ரும் எ ல்லா வி த ம ா ன உரிமைகளோடும் நல்வாழ்க்கை வாழும் அ டி ப்படைக் கட் டுமான த்தை உருவாக்குவதே ஆட்சியாளர்களின் முதன்மைக் கடமை. அதைச் செய்ய இந்தியா தவறிவிட்டது என்பதும் இந்த அவலத்தின் தீவிரம் மக்கள் வாழ்க்கையை பந்தாடும் கொடுமை குறித்தும் யாருமே பேசுவதில்லை என்பது பெரும் வேதனை. பிப்ரவரி, 2023 9


உலகை செதுக்கும் பெண்கள் – 8 நிவேதிதா லூயில் ‘‘எங்கள் மதிப்பெண் அதிகமாக இருந்தால் எங்களைப் பிடிக்கிறது; கருத்துகள் வலுவாக இருந்தால் பிடிக்கவில்லையோ? அமெரிக்காவின் புளோரிடா மாகாணம் பார்க்லாண்ட் நகரில் மார்ஜரி ஸ்டோன்மேன் டக்ளஸ் மேல்நிலைப் பள்ளியில் படித்துவந்தார் எக்ஸ். எல்லா குழந்தைகளைப் போலத்தான் எக்ஸின் குழந்தையும் அமைந்தது. எக்ஸின் அம்மா கணித ஆசிரியர், அப்பா சைபர் பாதுகாப்பு வழக்கறிஞர். 1968ம் ஆண்டு கியூபாவிலிருந்து எ க் ஸி ன் குடு ம்ப ம் அ மெ ரி க்கா வு க் கு க் குடிபெயர்ந்தது. 1999ம் ஆண்டு நவம்பர் 11 அன்று எக்ஸ் மூன்றாவது குழந்தையாகப் பிறந்தார். பிறந்த பெண் குழந்தைக்கு பெற்றோர் எம்மா எனப் பெயரிட்டனர். தன்னை இருபாலீர்ப்பாளராக இனம் கண்டுகொண்ட எக்ஸ், எம்மா என்ற இடுபெயரைத் துறந்தார், தற்போது எக்ஸ் என்றே அறிய ப்ப டுகின ்றா ர். அதன ்ப டி எ ம்மா கோன்சாலெஸ் எக்ஸ் கோன்சாலெஸ் (X Gonzalez/Emma Gonzalez) ஆனார். பிறந்தது முதலே புளோரிடா பார்க்லாண்ட் பகுதியில் வசித்து வந்தனர் என்பதால் எக்ஸ் படித்தது அப்பகுதியின் பெருமை வாய்ந்த மார்ஜரி ஸ்டோன்மேன் டக்ளஸ் பள்ளியில்தான். அம்மா கணித ஆசிரியர்; எ க் ஸுக்கோ கணி த ம் ஒ வ ்வா ததாகிப் போ னது. அவ ர்கள து விருப்பப்பாடங்கள் வானியல் மற்றும் எழுத்து. மேல்நிலைப் பள்ளியில் படிக்கும்போது மார்ஜரி பள்ளி விண்ணுக்கு அனுப்பிய காலநிலை பலூன் (weather balloon) திட்டமான ‘புராஜக்ட் அக்விலா’வின் நிலையைக் கண்காணிக்கும் தலைமைப் பொறுப்பை எக்ஸ் ஏற்றிருந்தார். அந்த அளவுக்கு அவர்களுக்கு வானியலில் ஆர்வம் உண்டு. மாற்றுப் பாலினத்தவர் போராட்டங்களில் தன் கவனத்தைக் குவித்த எக்ஸ், பள்ளியில் அதற்கென அமெரிக்கப் பள்ளிகளில் மாணாக்கரை ஒன்றிணைக்கும் Gay-Straight Alliance அமைப்பின் பள்ளித் தலைவராகவும் செயல்பட்டு வந்தார். 2018ம் ஆண்டு, பிப்ரவரி 11 அன்று ‘திருமண சான்றிதழ்’ போல வடிவமைக்கப்பட்ட காதலர் நாள் வாழ்த்து அட்டைகளை தங்களுடன் பயின்ற மாணவர்களுக்கு எக்ஸ் வழங்கி மகிழ்ந்தார். அதிலிருந்து மூன்றாவது நாள் ஆயுதங்களுக்கு எதிராகப் ப�ோர் செய்யும் மாணவி எக்ஸ் க�ோன்சாலெஸ் 10 பிப்ரவரி, 2023


அந்த மறக்கமுடியாத படுகொலைச் சம்பவம் நடந்தது. பிப்ரவரி 14, 2018. காதலர் நாள். பள்ளியின் அரங்கத்தில் அன்று அமெரிக்க அரசியலில் தனியார் அமைப்புகள் (special interest groups) செலுத்தும் அதிகாரம் பற்றி அமெரிக்க அரசு நடத்தும் வகுப்பில் எக்ஸும் அவர்களது நண்பர்களும் இருந்தனர். சரியாக 2.19 மணிக்கு பள்ளிக்குள் முதுகில் பேக்பாக், கையில் துப்பாக்கி கேஸ் சகிதம் நுழைந்த நிக்கலாஸ் குரூஸ் என்ற அந்தப் பள்ளியின் முன்னாள் மாணவன், ஆறு நிமிடத்துக்குள் 17 பேரை சுட்டுக் கொன்றான். இறந்தவர்கள் 14 பேர் ஏன் சுடப்படுகிறோம் என்பதே அறியாத 14 முதல் 18 வயது மாணவர்கள். அவர்களைக் காப்பாற்ற முனைந்த மூன்று ஆசிரியர்களும் சுட்டுக் கொல்லப்பட்டனர். அந்த நேரம் பள்ளியின் உள் அரங்கத்தில் இருந்த எக்ஸ் உள்ளிட ்ட மாணவ ர்க ள் உள்ளு க் கு ள் பூட்டிக்கொண்டு பாதுகாப்பாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டனர். பதைபதைப்புடன் சென்ற சில மணி நேரத்தில் குரூஸ்கைது செய்யப்பட்டான். மார்ஜரி பள்ளி, மாணவர்கள், பெற்றோர் , ஆசிரிய ர்க ள் அழு கை யால் கல ங் கி ய து . இ றந்த வ ர்களின் உ டல்க ள் ந ல்லடக்க ம் செய்யப்பட, மக்கள் மத்தியில் கோபம் கனன்றது. அமெரிக்காவின் மிக சிக்கலான உள்நாட்டு விவகா ரங்களில் ஒன்று அதன் துப்பாக்கி கட்டுப்பாட்டு சட்டம் (Gun Control Laws). அங்கு ஒவ்வொரு மாகாணமும் அதன் சூழல், அமைப்புக்கு ஏற்றவாறு துப்பாக்கிகளை லைசன்ஸ் இன்றி விற்க, வ ா ங்க அனுமதி க் கின்றன. அவற்றி ன் பயன்பாட்டை நெறிமுறைப்படுத்துவதும் அரசின் பணிகளில் ஒன்றுதான். ஆனால், வலதுசாரி ஆதரவு இயக்கங்களும் கட்சியும் ‘கத்தி எவ்வளவு ஆபத்தானதோ, அதே அளவு ஆபத்தானதுதான் துப்பாக்கியும்; இறப்பவன் கார் இடித்துக்கூட இறப்பான்’ என தங்கள் தரப்பு வாதங்களை எடுத்துவைத்தன. தங்களுடன் முந்தைய நாள் விளையாடிய, பேசிய, சிரித்த குழந்தைகள் குண்டடி பட்டு இறந்துபோனதை மார்ஜரி பள்ளி மாணவர்களோ, பெற்றோரோ, ஆசிரியர்களோ அவ்வளவு எளிதாக மறப்பதாயில்லை, மன்னிப்பதாயும் இல்லை. கொலைகா ரன் நிக்கலாசுக்கு அதிகபட்ச தண்டனையான மரண தண்டனை வேண்டும் எனக் கோரிய அதே நேரம், தங்கள் நண்பர்களின் மரணத்துக்கு உண்மையான நியாயம் கிடைக்க வேண்டுமெனில் சட்டத்திருத்தம் வேண்டும், துப்பாக்கிக் கட்டுப்பாட்டுச் சட்டம் இன்னும் கடுமையாக்கப்பட வேண்டும் என பொதுமக்கள் பேசத் தொடங்கினர். பிப்ரவரி, 2023 11


பார்க்லாண்ட்பகுதியில் மக்கள் போராட்டங்கள் தொடங்கின. அமெரிக்க வரலாற்றில் மிக அதிக மாணவர்கள் (17 பேர்) சுட்டுக் கொல்லப்பட்டது பார்க்லாண்டில்தான். பிப்ரவரி 17, 2018 அன்று பார்க்லாண்ட் பொதுமக்கள் துப்பாக்கிகளுக்கு எதிரான ஆர்ப்பாட்டம் ஒன்றை ஃபோர்ட் லாடர்டேல் பகுதியில் ஏற்பாடு செய்திருந்தனர். அதில் கல ந் து கொண்டு மாணவ ர்களு ம் பெற்றோரும் கோஷங்களை எழுப்பினர். அதில் கலந்துகொண்ட எக்ஸ், மேடையில் தோன்றி சில நிமிட நேரங்கள் மௌன அஞ்சலி செலுத்துமாறு கூட்டத்தைக் கேட்டுக்கொண்டார். சரியாக ஆறு நிமிடங்கள் அஞ்சலி செலுத்தியபின், ஆறு நிமிடங்கள் சிற்றுரை ஒன்றை அங்கு எக்ஸ் நிகழ்த்தினார். “இங்கே இருக்கும் ஒவ்வொருவரும் தங்கள் வீ டு க ளு க் குள் அ டை ந்துகி ட ந் து அ ழு து கொண்டிருக்க வேண்டும். ஆனாலும் இங்கே ஒன்றுதிரண்டு நிற்கின்றனர். இதற்குக் காரணம் நம் குடியரசுத் தலைவரும் அரசும்தான்! மாற்றம் தேவைப்படும் நேரத்தில் அவர்கள் நமக்காக வேண்டி க்கொண்டும் ந ம்மை நி னைத் து க் கொண்டும் இருப்பதாகச் சொல்கிறார்கள். நாடு உருவான காலம் தொட்டு, அனுமதியின்றி துப்பாக்கிகள் வைத்துக்கொள்ள இயற்றப்பட்ட இரண்டாவது சட்டத் திருத்தம் முதற்கொண்டு இங்கே சட்டம் மாறவில்லை, ஆனால் துப்பாக்கிகள் மாறியிருக்கின்றன. ஆயுத வளர்ச்சி நம்மைத் தலைசுற்ற வைக்கிறது… புளோரிடாவில் துப்பாக்கி வாங்க அனுமதி தேவையில்லை, லைசன்ஸ் வேண்டாம், வாங்கிய பிறகு அதைப் பதிவு செய்யவும் வேண்டாம். ஒரே நேரத்தில் எத்தனை து ப்பாக் கி க ள் வேண் டு ம ா ன ா லு ம் வாங்கிக்கொள்ளலாம்.” “இன்று ஒரு வாசகத்தைக் கேட்டேன். ‘துப்பாக்கி வாங்க எனக்கு உரிமை இருக்கிறது என்று பெரியவர்கள் ஒவ்வொரு முறை சொல்லும்போதும், உனக்கு இருக்கும் வாழும் உரிமையைவிட துப்பாக்கியை உரிமையாக்கிக்கொள்ள எனக்கு உரிமை அதிகம்’, என்ற வாசகம் அது. எனக்குக் கேட்பதெல்லாம் ‘நான், என், எனது’ என்பது மட்டுமே…” “இத்தனைக் கொலைகளைச் செய்தவனுக்கு மனநல சிக்கல் இருந்தது; அதையும் நாங்கள் அரசுக்குத் தெரியப்படுத்தியிருந்தோம். ஆனால் இந்த சம்பவம் நடந்தது அவன் மனநோயாளி என்பதால் அல்ல, அவன் கையில் துப்பாக்கி இருந்ததால்… அவனிடம் கத்தி இருந்திருந்தால் இத்தனை உயிர்ச்சேதம் ஏற்பட்டிருக்காது. தேசிய ரைபிள் சங்கத்திடமிருந்து (National Rifle Association) 30 மில்லியன் டாலர்கள் அமெரிக்க அரசுக்கு ஆண்டுதோறும் செல்கிறது. அதை வாங்கிக்கொண்டு எப்படி இங்கே இரங்கல் செய்தி அனுப்பமுடிகிறது? அந்த சங்கத்திடமிருந்து நன்கொடை வாங்கும் 12 பிப்ரவரி, 2023


அரசியல் கட்சிகள் ஒவ்வொருவரும் வெட்கித் தலைகுனிய வேண்டும்.” “மனநலம் குன்றியவர்கள் துப்பாக்கி வாங்கத் தடைவிதித்த ஒபாமாவின் சட்டத் திருத்தத்தை மாற்றியமைத்து இந்த நிலைக்கு வித்திட்டவர் டொனால்டு டிரம்ப். நாங்கள் வாக்களித்த அரசாங்கமும் அரசியல்வாதிகளும் எங்களை ஏமாற்றுகின்றனர். இந்தத் தலைமுறைக் குழந்தைகள் சுயந லவாதிகள், தெளிவற்றவர்கள் என்று பெரியோர் சொல்வதை நான் ***** என்கிறேன். கண்ணாடி மாளிகைகளில் உட்கார்ந்துகொண்டு இந்த துர்மரணங்களைத் தவிர்த்திருக்க முடியாது என்று அரசியல்வாதிகள் சொல்வதை * * * * என்கிறேன். ஆயுத சட்டத்தை மாற்றினால்கூட இத்தகைய படுகொலைகளைத் தடுக்க முடியாது என்று அரசு சொல்வதை **** என்கிறேன்.” “துப்பாக்கி ஏந்திய நல்லவன் துப்பாக்கி ஏந்திய க ெ ட ்ட வ னை த் தடு க்கல ாம் எ ன் று சொல்லப்படுவதை **** என்கிறேன். எந்தச் சட்டம் இ ரு ந்தா லும் நூற்று க்க ண க்கா ன ப் படுகொலைகளைத் தடுத்திருக்கமுடியாது என்று சொல்வதை **** என்கிறேன். குழந்தைகளுக்கு ஒன்றும் தெரியாது, அரசாங்கம் எப்படி இயங்கும் என்பதை அவர்கள் அறியமாட்டார்கள் என்று சொல்வதை **** என்கிறேன். அதை நாங்கள் **** என்கிறோம். இதை நீங்கள் ஒப்புக்கொண்டால், வாக்களிக்க பதிவு செய்யுங்கள். உங்கள் பகுதி செனட்டருடன் பேசுங்கள். நீங்கள் நினைப்பதைச் சொல்லுங்கள். அவர்களை வெளியேற்றுங்கள்!” எக்ஸின் இந்த உரை ட்விட்டர் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் வைரலானது. அவர்களுக்கு சர்வதேச கவனம் கிடைத்தது. உலகமே அமெரிக்க ஆயுதச் சட்டம் குறித்து பேசத்தொடங்கியது. அ மெ ரி க்கா வில் பல இ டங்க ளி ல் அறப்போராட்டங்கள் வெடித்தன. ஒரு பெரும் மாற்றத்துக்கான வித்தை அன்றைய தன் பேச்சில் எக்ஸ் ஏற்படுத்தினார். அத்துடன் நில்லாமல் தொடர்ச்சியாக அமைதிப் பேரணிகளை எக்ஸ் முன்னெடுத்தார். ‘நம் உயிருக்காக நடப்போம்’ (March for our Lives) என பேரணிகளில் தொடர்ச்சியாகப் பேசிவந்தார். 2018ம் ஆண்டு, மார்ச் மாதம் புளோரிடா மாகாண அரசு மார்ஜரி ஸ்டோன்மேன் டக்ளஸ் மேல்நிலைப் பள்ளி `பொதுப் பாதுகாப்புச் சட்டம்' இயற்றியது. 21 வயதுக்குக் கீழுள்ளவர்கள் துப்பாக்கி வாங்கி வைத்துக்கொள்வதை இந்தச் சட்டம் தடை செய்தது. முதல் கட்டப் போராட்டம் வென்றது. ஆனாலும் ஆயுத ங்க ளு க் கு எ தி ர ா ன போ ராட ்டத்தை எ க்ஸ் தொட ர் ந் து செய்துவருகிறார். இன்று அமெரிக்காவின் துப்பாக்கிக்கு எதிரான சமரில் முன் களத்தில் நிற்பவர் எக்ஸ். அவர்களது பாலியல் விருப்பத் தேர்வு, சரும வண்ணம், கியூப பின்புலம் போன்றவை கடும் விமர்சனத்துக்கு உள்ளாயின. தன் தலையை முழுவதுமாக மழித்துக்கொள்ள பெற்றோரின் அனுமதியை வேண்டிய எக்ஸ் அ த ற்கெ ன ப த்து சிலைடு க ள் கொண்ட பவர்பாய்ன்ட் பிரெசன்டேஷன் ஒன்றைத் தயாரித்து உரையளித்ததாக எக்ஸின் பெற்றோர் குறிப்பிடுகின்றனர். போராடுவது முக்கியம் , ஆனால் எப்படி என்பதை உலகம் முழுக்க இருக்கும் இளம்வயதினருக்குச் சொல்லி த் தந்திருக்கிறார் எக்ஸ்! பிப்ரவரி, 2023 13


இன்று இரவு மல்லிகா அக்கா வீட்டிற்கு வருகின்றார். நம்ம வீட்டில் விருந்து சாப்பிடுவதற்காக வர இருக்கின்றார் . எங்களுடையது சின்ன வீடு. மல்லிகா அக்காவை போன ஆண்டு முதல் தெரியும். இல்லம் தேடிக் கல்வி மையத்தை அவர்தான் நடத்துகின்றார். கொரோனா காலத்துல ரெண்டு வருஷம் படிக்காம பசங்க இருந்தாங்கன்னு சாயிந்திர நேரம் அங்க சொல்லிக்கொடுத்தாங்க. விட்டுப்போன பாடங்களை படிச்சிட. என்னை அங்க சேர்த்திப்பாங்களான்னு முதல்ல தெரியல. அம்மா தினமும் சாய்ந்திரம் கொண்டுபோய் விடுவாங்க. எனக்குப் பாடத்தைகவனிக்கிறதைவிடபசங்க எல்லோரையும் பாக்குறதுதான் குஷி. அதைவிடுங்க, அக்கா ஏன் நம்ம வீட்டுக்கு வராங்க தெரியுமா? போனவாரம் என்னைய ஓர் இடத்துக்கு கூட்டிகிட்டு போனாங்க. பத்திரமா கூட்டிகிட்டு வந்துவிட்டாங்க. அதுவும் ரயில்ல. ஆமா ஆமா. கூகூகூன்னு கத்திகிட்டு போகும்னு நெனச்சேன். அப்படி சத்தம் எதுவும் வரல. எங்க ஊரு திருத்தனின்னு சொல்லி இருக்கேனா? இல்லையா ஆமா திருத்தனி. முருகன் கோவில் பேமஸ். மலைமேல இருக்க கோயில் வாசல்ல அப்பா கூல்டிரிங்ஸ் கடைவெச்சிருக்கார். வீட்ல நான் ஒருத்திதான். ஒரு நாள் க்ளாஸ் முடியும்போது யாரெல்லாம் ராக்கெட் பார்த்திருக்கீங்கன்னு மல்லிகா அக்கா கேட்டாங்க. சுர்ர்ன்னு பறக்கும்னு ஒருத்தன் சொன்னான். பேப்பர்ல ராக்கெட் செய்ய என் அண்ணா சொல்லிக்கொடுத்திருக்கான்னு ஒருத்தன் சொன்னான். அங்க மையத்துல எல்லாரும் ஆறாவதில இருந்து எட்டாவது படிக்கிற பசங்க. 11 ஆண் பசங்க 10 பெண் பசங்க (என்னையும் சேர்த்து). அப்புறம்தான் அக்கா சொன்னாங்க ஒரு ராக்கெட்டை விண்ணின் ஏவப்போறாங்க நேர்ல போய்வர ஏற்பாடு செய்யப்போறேன்னு சொன்னாங்க. அன்னைக்கு சாயிந்திரத்துல இருந்து இதே பேச்சுத்தான் பசங்க மத்தியில. ராக்கெட்னா எப்படி இ ரு க் கும், பின ்னா டி பு கை வரும், அந்த நெ ருப்பு ல கரிகிடமாட்டோமான்னு. ஆறு பையங்க வீட்ல மட்டும் ஒத்துக்கிட்டாங்க. ஒரு பொண்ணுவீட்லயும் ஒத்துக்கல. ஒவ்வொருத்தரையா ஏன்னு கேட்டாங்க. என்னை கேட்டப்ப என் கண்ணுல தண்ணிய பார்த்துட்டாங்க. வீட்டுக்கு மறுநாள் காலை வந்தாங்க ``மல்லி, வேண்டாம்மா, உனக்கு எதுக்கு சிரமம்'' அம்மா மறுத்தாலும் அக்கா விடல. அப்பாவையும் சம்மதிக்க வெச்சிட்டாங்க. ஆறு பையங்க, நான், மல்லிகா அக்கா, அவங்க பையன். திருத்தனியில இருந்து சூளூர்பேட்டைக்கு ரயில். அங்கிருந்து கிட்டதானாம். ஆனால் எல்லாருக்கும் கோவிட் தடுப்பூசி போட்டிருக்கணும் அந்த சான்றிதழ் தரணும்னு விதியாம். பையனுங்க எல்லோருக்கும் ஸ்கூல்ல போட்டிருந்தாங்க. என்னை ஒரு நாள் பக்கத்துல ஆரம்ப சர்ர்ர்ர்ர்னு பறக்குமே சு க ாதார மை யத்து க் கு கூட்டிப்போய் ஊசி போட்டாங்க அக்கா. அன்னைக்கு நைட் சுரம். ஆனா எனக்கு ராக்கெட் பார்க்க போறதுலயே மனசு இருந்ததால எந்த வலியும் தெரியுல. ஒரு நைட் அங்க தங்கணும். தங்க ஏற்பாடு எல்லாம் செய்துட்டாங்க. அக்கா யார்மூ லமோ இ தை செய்திருக்காங்க. அன்னையில இருந்து பேப்பர்ல இந்த நியூஸ் வருதான்னு பார்த்தேன். ஒரு செய்தியும் காணல. "SSLV-D1/EOS02 Rocket"இ தைத்தான் அனுப்பப்போறாங்க. ரயில்ல ஜன்னல் சீட் கொடுத்துட்டாங்க. க ம்பிய பிடிச்சிகிட ்ட து ம் ஜிவ்வுன்னு இருந்துச்சு. ஒவ்வொரு வீட்ல இருந்து டிபன், ஸ்நாக்ஸ்ன்னு பை எல்லாம் நிறைய இருந்துச்சு. சிறார் கதை விழியன் 14 பிப்ரவரி, 2023


முத்து, கணேஷ் எல்லாம் என்னை சிரிக்க வெச்சிட்டே இருந்தாங்க. வயிறே வலிக்க ஆரம்பிச்சிடுச்சு. சூளூர்பேட்டையில இறங்கி ஹரிகோட்டாவுக்குப் போனோம். அங்கதான் விண்வெளிக்கு ராக்கெட் அனுப்புற தளம் இருக்கு. நாங்க போனதும் நாலு பெட் இருக்க பெரிய ரூம் கொடுத்தாங்க. நைட்டு செம காரமான சாப்பாடு. அதுவும் அந்த கெட்டி சட்னில அவ்ளோ மொளகா. கணேஷ்தான் நாக்கை டம்ளர்ல விட்டு உஸ் உஸ்ன்னு சொல்லிட்டு இருந்தான். விடிய விடிய பேசிட்டே இருந்தோம். ``தூங்கலாம்பா, காலையில ராக்கெட் லாஞ்ச் பார்க்கணும்''ன்னு அக்கா தூங்கவெச்சாங்க. எனக்கு தூக்கமே வரல. ராக்கெட் எவ்ளோ பெருசு இருக்கும்.. க ாலையி ல அ தை ப ார்த்துட்டோ ம் . எம்மாடியோவ். எந்தா தண்டி பெருசு. எல்லாரும் ஆஆன்னு வாய பொளந்துட்டோம். நிறைய பிள்ளைங்க வேற வேற ஊர்ல இருந்து எல்லாம் வந்திருந்தாங்க. முதல் லாஞ்சிங் பேட்லல இருந்து போகுதாம். ``அது மேல போற வரைக்கும் நிச்சயம் இ ல்லை . எ ல்லா ம் ச ரி ய ா இருந்தாத்தான் ஏவுவாங்க. கடைசி விநாடியிலகூட கேன்சல் செய் வாங்க''ன்னு பேதிய கிளப்பிட்டு போனாறு ஒரு விஞ்ஞானி. ஒரு அங்கிள் தமி ழ் ல் ``ஏ ன் ராக்கெட்டின் பின்னால் புகை வருது, அது மேல போக போல ஒவ்வொரு பகுதியா கழற்றிவிடும், உள்ள இருக்கு சாட்டிலைட் பூமியோட சுற்றுப்பாதையில் போகும்''ன்னு ரொம்ப நேரம் விளக்கினார். அவர் சொல்றதைக் கேட்கும்போதே எப்படி ராக்கெட் போகப்போகுதுன்னு கற்பனை பண்ணிகிட்டேன். ரொம்ப நாளா அது இஸ்ரோ இஸ்ரோன்னு கூப்பிட்டுகிட்டு இருந்தேன் அதை ஐ.எஸ்.ஆர். ஓன்னு சொல்லணும்னு ஒரு ஆந்திரா குட்டிப் பையன் சொன்னான். கசமுசா கசமுசான்னு பேசிட்டு இருந்தாங்க. திடீர்ன்னு ஒரு அமைதி. இன்னும் இரண்டு நிமிடங்களில் விண்ணுக்குச் செல்ல இருக்குன்னு கவுண்ட்டவுன் போட்டாங்க. ஒரு பெரிய திரையில் 120ல் இருந்து ஒவ்வொரு நம்பரா குறைஞ்சிட்டே வந்தது. 100 வந்ததும் எல்லாரும் ஹண்ட்ரட், நைண்டி நைன், நைண்டி எயிட்டுன்னு கத்த ஆரம்பி ச்சாங்க. ஒ ரே சீரா எ ல ்லோ ரு ம் சொன்னோம். அப்பவே சிலிர்த்துகிச்சு. ஒரு பக்கம் இதைக் கண்டிப்பா செலுத்திடணும்னு ஒரு வேண்டுதல், வாழ்நாள்ள திரும்பப் பார்க்கமுடியுமா என்ன. அந்த ராக்கெட் ஒரு மாதிரி என்னை வசீகரிச்சுது. பிப்டி, பார்ட்டி நைன், ... த்ரீ, டூ, ஒன்.... கோ'ன்னு வந்ததும் ராக்கெட்டுக்கு கீழ நெருப்பு எரிய ஆரம்பிச்சது. அந்த சத்தம் மட்டும் கேட்டுச்சு. முழு அமைதி. சில விநாடிகளில் நிலத்தைவிட்டு சர் ர்ன்ன்னு வானத்தை நோக்கி பறந்தது . வானத்தை கிழிச்சிகிட்டுன்னு சொல்லுவாங்களே அது நிஜம்தான். சர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர். மேல போனதுமே ஒரே கூச்சல், ஆரவாரம். சிலர் அழறாங்க. விஞ்ஞானிகளும் அழுதாங்க. அந்த படபடப்பு அடங்கவே ரொம்ப நேரம் ஆச்சு. வாழ்நாள்ள திரும்ப பார்க்கமுடியுமான்னு நெனச்சு போன நானு வேற மாதிரி வந்தேன். ராக்கெட்டும் நானும் ஒன்னு தெரியுமா , ர ா க்கெ ட ்டா லையும் ந டக்க மு டி ய ா து என்னாலையும் நடக்க முடியாது. எப்பவும் ஒரு துணைதேவைப்பட்டுகிட்டே இருக்கும். அக்காவும் பசங்களும் என்னை அப்படி பார்த்துகிட்டாங்க. அக்கா மட்டும் வரல, டூர் போன எல்லாரும்தான் வராங்க. ஜம்முன்னு என் வீல் சேர்ல உட்கார்ந்து சன்னல்ல அவங்க வருகைக்காக காத்திருக்கேன். ஆனா ராக்கெட் பறந்தப்ப மனசுல ஒரு ஒளி தோனிச்சு. நானும் ராக்கெட்டும் ஒன்னு, நானும் ராக்கெட் மாதிரி பறப்பேன், உயர உயர உயர... ஓவியம்: லலிதா பிப்ரவரி, 2023 15


மனிதர்களின் வேர்களைக் கண்டறிய கதைக்குள் பயணிக்கலாம் என்பார்கள். மாயாஜாலக் கதைகள், முற்றுப் பெறாத கதைகள், நீதிக்கதைகள் என வகைப்படுத்தியக் கதைகளைவிட ஏராளமான வகைப்படுத்தாத கதைகள் நாள்தோறும் புழக்கத்தில் இருந்துகொண்டே இருக்கும். அந்த வகையில் அறிவியல், தத்துவம் போன்ற படிக்க கடினமானது என்ற சிந்தனையைப் போக்கும் வகையில் கதைகளினூடே அறிவியலையும் தத்துவத்தையும் குழந்தைகளுக்குப் புரியும் வகையில் கதைகளாகச் சொல்லும் முயற்சியை Book for Children என்ற பதிப்பகம் செய்துவருகிறது. அந்தப் பதிப்பகம் வெளியிட்டிருக்கும் ஆசிரியர் எம்.எம். சுசீந்திரனின் ‘சாக்ரடீஸுக்கு விஷம் கொடுத்தது ஏன்?’ என்ற புத்தகத்தைப் படிப்பது என்பது உலக வரைபடத்தில் உள்ள வரலாற்றையும், கிரேக்க நாகரிகத்தையும் புரிந்துகொள்ள உதவியாக இருக்கும். கிரேக்க தத்துவம் மட்டும்தான் முதன்முதலில் தோன்றியதா? இல்லை. இல்லை. இந்திய, சீனா, எகிப்து போன்ற நாடுகளிலும் தத்துவம் தோன்றி இருந்தது. கிரேக்க தத்துவத்தில் அறிவியல் இருந்தது என்பதே கிரேக்க தத்துவத்தைப் போற்றும் வகையில் அமைந்ததற்குக் காரணமாக இருந்தது. உலகில் ஒன்று வளரத் தொடங்கிய காலத்தில் மற்றது எதுவுமே இருக்காது என்ற மாய தோற்றத்தை உருவாக்காமல் கிரேக்க தத்துவம் ஏன் பரப்பப்பட்டது என்ற காரணத்தை விளக்கிச் செல்கிறார், ஆசிரியர். ஓர் அப்பா தன் மகளிடம் சொல்லும் கதையாக இந்நூல் அமைந்திருக்கிறது. மனித குல வரலாறு, காலண்டர் வரலாறு, சமூக யதார்த்த பிரச்சனைகளைச் சான்றாகக் கூறி விளக்க முற்படுவது என ஏராளமான செய்திகள் காணக் கிடக்கின்றன. ஆனால், இது போன்ற தத்துவ வரலாறுகளைத் தன் பிள்ளைகளுக்குச் சொல்லிக்கொடுக்க எவ்வளவு பெற்றோர்கள் முயற்சி எடுக்கிறார்கள் என்ற கேள்வியே என்னைச் சுற்றிக்கொண்டு இருக்கிறது. கற்றுக்கொள்வது வேறு; புரிந்துகொள்வது என்பது வேறு என்பதை உணர இத்தகு புத்தகங்கள் உதவிபுரியும். மலையாள மொழியிலிருந்து தமிழில் எழுதப்பட்ட நூல் என்றாலும் தங்கு தடையின்றி வாசிப்பதற்கு ஏற்ற வகையில் உள்ள எழுத்தாளர் யூமா வாசுகியின் மொழி பெயர்ப்பு மிகவும் சிறப்பானது. கிரேக்கத்தில் ஏதென்ஸ், ஸ்பார்ட்டா என்ற இரு நாடுகளும் எதிர் எதிராக நின்றது. ஆசிய நாட்டின் பாரசீகப் படை இரு நாட்டின் மீதும் போர் புத்தக அலமாரி ப.ரேவதி சாக்ரடீஸிற்கு விஷம் க�ொடுத்தது ஏன்? 16 பிப்ரவரி, 2023


தொடுத்தது. ஸ்பார்ட்டாவின் வீரர்கள் படையும் ஏதென்ஸின் கப்பல் வீரர்களின் படையும் இணைந்து பாரசீக படையைப் பின்வாங்கச் செய்தன. வெற்றியடைந்த ஸ்பார்ட்டா நாடு அதன்பின்னர் தன் படையைக் கலைத்தது . ஆனால், ஏதென்ஸ் தன் கப்பல் படையை வாணிபத்தில் ஈடுபடுத்தியது. பயணத்துக்காக இயற்கையைக் கவனித்தார்கள். வாணிபத்தில் வெற்றியும் பெற்றார்கள். செல்வச் செழிப்போடு இருந்தார்கள். ஓய்வு நேரமும் கிடைத்தது. இதனால், சிந்திக்கத் தொடங்கிய அறிவுச் சமூகம ாக மாறினார்கள். கப்பல் பயண அறிவையும், கிரேக்க தத்துவத்தையும் அருகில் இருந்த ஐரோப்பியர்கள் பயன்படுத்திக் கொண்டார்கள். இவ்வாறு கிரேக்க தத்துவம் உலகம் முழுவதும் பரவியது என்ற வரலாற்று உண்மையைப் பள்ளி படிப்பு படிக்கும் தன் மகள் மல்லிகாவுக்குக் கதையாகச் சொல்கிறார் அப்பா. அறிவுப் பாதையில் பயணிக்கும் ஏதென்ஸ் நகரில் ஜனநாயகமும் ஓங்கி ஒலித்தது. ஓட்டு போடும் உரிமையும் இருந்தது. பொதுச் சபையும், உச்ச நீதிமன்றமும் இருந்தது. யார் வேண்டுமானாலும் நீதிபதிகளாக இருக்க முடியும் என்பதால் 1000 பேர் நீதிபதிகளாக இருந்தனர். ஊரின் பெயர்ப் பட்டியிலிருந்து நீதிபதிகள் தேர்ந்தெடுக்கப் படுவார்கள். அந்த நீதிபதிகள் ஓட்டெடுப்பு நடத்தி தீர்ப்பு வழங்குவார்கள். இந்த முறை சாக்ரடீஸைத் தொந்தரவு செய்தது. அ ந்தக் க ா ல த்தில் அடி மைக ளு ம் இருந்திருக்கிறார்கள். அவர்கள் ஓட்டு போட முடியாதவ ர்கள் என்ற கூடுதல் தக வலு ம் கிடைக்கிறது. சாமனிய மக்கள் நீதிபதியாக இ ரு ப்ப து ந ல்ல துதானே என்ற எண்ணம் தோன்றுகிறது அல்லவா? சாக்ரடீஸ் இதைத்தான் பொறுக்க முடியாமல் கேள்வி கேட்கிறார். ஒரு நீதிபதி பகுத்து ஆராய்ந்து நீதி வழங்க வேண்டுமே தவிர எண்ணிக்கையை அளவீடாக வைத்து தீர்ப்புகளை வழங்கக் கூடாது என்பதே அவர் வைத்த வாதம் ஆகும். ஆம்! எண்ணிக்கை அறிவுக்கு மாற்றாகும் என்பது எத்தனை பெரிய மூட நம்பிக்கை. இருக்கின்ற கெட்டித்தட்டிப் போன அமைப்பை மாற்ற முயற்சி செய்பவரை அரசுக்கு துரோகம் செய்பவர் என்று கூறுவது எந்தக் காலத்திலும் இருக்கத்தான் செய்தது. சாக்ரடீஸும் துரோகியானார். ஜனநாயகம் ஓங்கி ஒலித்த ஏதென்ஸுக்கு அதுவே எதிராக மாறுகிறது. தடி எடுத்தவர் எல்லாம் தண்டல்காரன் என்ற பழமொழிக்கு ஏற்ப இ ரு ந்த நீதி அ மை ப் பி ன் மீது அதி ர்வை உண்டாக்கியது. ஸ்பார்டாவின் அரசு ஏதென்ஸைக் கைப்பற்ற இந்தச் சூழல் பெரிதும் உதவியது. கைப்பற்றிய ஸ்பார்ட்டா அரசு கேள்வி கேட்கும் தத்துவாதிகளுக்கு மரண தண்டனை விதித்தது. சாக்ரடீஸ் மீது அரசுக்கு எதிராக இளைஞர்களைத் திரட்டினார் என்ற குற்றச்சாட்டு வைக்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக ஹாம்லக் என்னும் விஷத்தைக் குடித்து உயிர் துறக்க வைக்கப்படுகிறார் சாக்ரடீஸ். சாக்ரடீஸை ஏன் தெரிந்துக�ொள்ள வேண்டும்? நடைமுறையில் உள்ள யதார்த்தங்களைப் பகுத்தறிவைக்கொண்டு ஆராய்ந்து பார்க்கவும் எப்போதும் கேள்விகள் கேட்கவும் கற்றுக் கொடுத்த மாமேதை என்பதற்காக மட்டுமல்ல; ஆட்சி, அதிகாரம் என்ற எதுவும் நிலையானது அல்ல. காலத்திற்கு ஏற்ப மாறிவிடும். அத்தகைய மாற்றம் அறிவியல்பூர்வ சிந்தனையாக இருக்க வேண்டும் என்று சொல்லி அதற்காக உயிரையும் துறந்தவர் சாக்ரடீஸ். ``தர்க்கம் இல்லாத வாழ்க்கை வீண்'' என்றும் இளைஞர்களைத் தன் பேச்சா ல் கவர்ந்தவர். மேலும், ``ஒரு விஷயம் மட்டுமே எனக்குத் தெரியும்; எனக்கு ஒன்றும் தெரியாது என்பதுதான் அறிவு'' என்ற அறிய இயலா கொள்கைக்குத் தந்தையாக மிளிர்கிறார். கற்றது கையளவுகூட இல்லை என்று ஒப்புக்கொண்டார், இன்று உலகம் போற்றும் அந்த மாமேதை. நீ ங்க ளும் இந்நூலை வாங்கி உ ங்க ள் குழந்தைகளுக்கு சாக்ரடீஸின் வரலாற்றை கற்பியுங்கள். பிப்ரவரி, 2023 17


குழந்தைகளுக்கான நிகழ்ச்சி ஒன்று ஏற்பாடு செய்திருந்தோம். சிறப்பு விருந்தினர் வருவதற்கு தாமதமானது. அதனால், அந்த நேரத்தை நிரப்புவதற்காகக் குழந்தைகளிடம் பேசிக் கொண்டிருந்தேன். ``உங்களுக்குத் தெரிந்த உறவு பெயர்களைச் சொல்லுங்க?” என்றேன். அம்மா, அப்பா, தாத்தா, பாட்டி, மாமா, அத்தை, சடசடவென்று ஆரம்பித்தது ஆறு உறவுகளுக்குப் பிறகு திக்க ஆரம்பித்துவிட்டது. யோசித்தார். `சின்ன தாத்தா’ என்றான் ஒருவன். அதை மறுத்து `வேறு ஏதேனும் உறவு பெயர் சொல்’ என்றதும் யோசித்து `அங்கிள்’ என்றதும், அருகில் இருந்த சிறுமி `ஆன்ட்டி’ என்றாள். அதற்குப் பிறகு ரொம்ப நேரம் யோசித்து யோசித்து சில உறவுப் பெயர்கள் சொல்லப்பட்டன. இது எனக்குச் சற்றே ஆச்சர்யத்தை அளித்தது. ஏனெனில், ஆறேழு உறவுகளின் பெயர்கள் மட்டுமே தெரிகிறது என்பதற்கு அர்த்தம், ஆறேழு உறவுகளோடு மட்டுமே அவர்கள் வாழும் சூழல் உள்ளது என்பதே. சித்தி - சித்தப்பா, அண்ணன் – அண்ணி, மாமியார் – மாமனார், மைத்துனர் – மைத்துனி, மருமகன் – மருமகள், சகலை என்று உறவுகளின்பெயர் விரிந்துகொண்டே இருக்கும். அம்மா, அவரின் அம்மா பாட்டி, அவரின் அம்மா பூட்டி. அப்பா, அவரின் அப்பா தாத்தா, அவரின் அப்பா பூட்டன் என்று சொல்வார்கள். கூட்டுக் குடும்பத்தின் சிதைவில் குடும்ப அமைப்பில் ஜனநாயகத்தன்மையை அதிகரிக்க வைத்திருக்கிறது போன்ற நன்மைகள் இருக்கின்றன. அதேநேரம், உறவுகளோடு பழகுதல், அது தரும் நம்பிக்கை, ஆறுதல், உதவி, ஏமாற்றம் போன்றவையும் தற்கால குழந்தைகளுக்குக் கிடைக்கவில்லை. இதனால் கூட்டுக் குடும்பமே சிறப்பானது என்று சொல்வதாகப் புரிந்துகொள்ள வேண்டியதில்லை. அந்த அமைப்பில் இரு ந்த பழைமைவ ா த சிந்தனைகளையும் பழக்க வழக்கங்களையும் ஆணாதிக்கப் போக்கையும் உதற வேண்டியது அவசியம். அதேநேரம் அதில் இருந்த சில நல்ல விஷயங்களை வேறு வகையிலாவது தொடர வேண்டியதும் அவசியம். இன்றைய சூழலில் மனைவி – கணவன் இருவரும் வேலைக்குச் செல்லுதல் பல குடும்பங்களில் இயல்பாகிவிட்டது. வேலைவாய்ப் புக்காக நகரங்களை நோக்கி வர வேண்டிய கட்டாயத்தில் நண்பர்களையும் உறவுகளாக்கலாம்! பெற்றோரியம் தமிழினி 18 பிப்ரவரி, 2023


இருக்கிறோம். ஆனால், குழந்தைகளின் தாத்தா, பாட்டி கிராமத்தை விட்டு வரத் தயாரில்லை. அவர்களோடு இன்னும் பல உறவுகளும்தான். அதனால், அந்த உறவுகளின் வழியே கிடைக்கும் அன்பை நட்பு வட்டத்தில் இருந்தாவது பெறும் சூழலைக் குழந்தைகளுக்கு ஏற்படுத்தி த ர வேண்டும். நண்பர்கள் வீடுகளுக்குச் ச ெ ல்வதை ச ம்பிரதாயமா கக் கொண் டி ர ா ம ல் , ஓ ர் உரையாடலுக்கான களமாக அதை மாற்றிக்கொள்ளலாம். அங்கு கூடும் சிறுவர்கள் தங்களுக்குள் இணக்கமான நட்பும் தோழமையும் பரிமாறிக் கொள்ளத் தொடங்குவர். பள்ளி நட்பு என்பது பள்ளி நேர அட்டவணைப்படிதான். ஒருவேளை உங்கள் குழந்தையின் நெருங்கிய நண்பன்/தோழி வேறு பள்ளிக்குச் சென்றுவிட்டால் நட்பு அறுந்துவிடும். அப்படி நிலையற்ற உறவாக அல்லாமல், நீண்டகால தோழமை கிடைக்கும் ஒருவராகப் பழகச் செய்யும்போது குழந்தைகளுக்குள் பெரு மகிழ்ச்சியும் தன்னம்பிக்கையும் இணைந்தே வரும். இதுவெறும் குழந்தைகளுக்கான ஒன்று மட்டுமல்ல. பெற்றோருக்குமே நல்லதொரு வாய்ப்பாக மாறும். ஏனெனில், `குழந்தை வளர்ப்பு’ எனும் உ ரை ய ா டலே கடந்த இரு ப து ஆண்டு கள ா கத்தான் பொ து வ ெ ளி யி ல் நடைபெ று கிற து. அதற்கு முன்பெல்லாம் இதெல்லாம் ஒரு பொருட்டே இல்லை.’ குழந்தை வளர்ப்பு உரையாடல்களில் ப்ளஸூம் மைனஸூம் உள்ளன. இப்போதுதான் குழந்தைகளின் கல்வி குறித்து அதிக முக்கியத்தும் கொடுக்கிறார்கள். அவர்களின் தேவைகளைத் தெரிந்துகொண்டு அவற்றை நிறைவேற்ற முயல்கிறார்கள். இவை ப்ளஸ் எனும்போது, மைனஸாகத் தெரிவது, குழந்தைகள் மீது மிக அதீதமான கண்காணிப்பும் எதிர்பார்ப்பும் இப்போது இருக்கிறது. அது ஒருவகையில் குழந்தைகளுக்குப் பெரிய சுமையாக மாறி விடுகிறது. இன்னும் சில வீடுகளில் குழந்தைகளை இன்வெஸ்ட் செய்யும் ஷேர்களாக நினைக்கின்றனர். கு ழந்தைக ள் மீதான க வனத்து க் கு ம் கண்காணிப்புக்கும் மிக மெல்லிய வித்தியாசம்தான் உள்ளது. அந்த மெல்லிய நூலை பெற்றோரால் ஒருபோதும் பார்க்க முடியாது. அந்தக் குழந்தையோடு பழ கும் ம ற ்ற உ ற வு க ளி ன் வழி யே த ா ன் தெரிந்துகொள்ள முடியும். `அப்பா, இ தையெல்லா ம் ச ெ ய ்ய ச் சொல்கிறார்… இந்த வகுப்புக்கெல்லாம் அனுப்புகிறார். அவையெல்லாம் எனக்குப் பிடிக்கவில்லை’ என்று அம்மா – அப்பா தவிர்த்த வேறு ஒருவரி ட ம் கு ழந்தை ப் பகிர்ந்துகொள்ளும். அந்த வேறு ஒருவராக நம் உறவுகளை ஏற்படுத்தித் தர வேண்டும். ந ட் பு க்கள ை உ ற வு கள ா க மாற்றிக்கொள்வதில் சில வசதிகள் உள்ளன. ரத்த சொந்த உறவுகள் மீது நேரடியாகவோ மறைமுகமாகவோ ஓர் எதிர்பார்ப்பு இருக்கும். மரியாதையைக் கொடுக்க வேண்டும் அல்லது மரியாதையைப் பெற வேண்டும் என்ற நிர்பந்தம் நம் மனத்துக்குள் இருக்கும். பல தலைமுறைகளாக நமக்கு அளிக்கப்பட்ட நிர்பந்தம் இது. அதைச் சட்டென்று உதறிவிட முடியாது . ஆனால் , நண்பர்களை உறவுகளைப்போல மாற்றிக் கொள்ளும்போது அம்மாதிரியான நிர்பந்தங்கள் இருக்காது. மேலும், தங்கள் கொள்கை சார்ந்து, பழகுவதற்கு ஏற்ற நட்புகளைத் தேர்ந்தெடுக்கவும் பெரு வாய்ப்பும் நமக்கு உள்ளது. வீட்டுக்கு நம் நண்பர் ஒருவர் வந்தால் குழந்தைகளிடம், ‘மாமா வந்திருக்காங்க பாரு’ என்று சொல்வதே வழக்கங்களில் ஒன்றாக மாறிவிட்டது. ‘சித்தப்பா வந்திருக்கிறார் என்று சொல்வதில்லையே ஏன்? இதில் பாஸிட்டிவாகவும் நெகட்டிவாகவும் இரு கோணங்கள் கூறப்படுகின்றன. பாஸிட்டிவாக எனும்போது, உறவுகளில் ஆக நெருக்கமானதாகச் சொல்லப்படுவது தாய்மாமா. அதனால்தான் வீட்டிற்கு வரும் ஒருவரை மாமா என்று அழைக்க வைக்கிறோம் என்கிறார்கள். இப்படியெனில் நல்லதுதான். ஆன ால் , இன்னொரு பக்கம், வீட்டுக்கு வருபவர் மாமா என்று சொல்லிவிடுவதன் மூலம், அக்குழந்தையின் அம்மாவுக்கு அவரை சகோதரராக்கி விடுவதும் நடந்து விடுகிறது. இது ஒருவகையில் ஒழுக்கம் சார்ந்த ஒன்றாக உள்ளது என்ற நெகட்டிவ் பக்கமும் கூ றப்ப டு கி ற து. எ ந்தக் க ருத்தில் நீ ங்க ள் உடன்படுகிறீர்கள் என்பது தெரியாது. ஆனால், நண்பர்களின் வழியே அடைகிற உறவுகளுக்கு பல்வேறு உறவு முறைகளைச் சூட்டி குழந்தைகளுக்கு அறிமுகப்படுத்துங்கள். பிப்ரவரி, 2023 19


அந்த இரவில் நட்சத்திரங்களின் முடிவற்ற புதிர்வெளியில் சிறுகரடி விண்மீன் கூட்டத்தைத் (ursa minor) தேடுவது எனக்குக் கடினமாக இருந்தது. இத்தனை விண்மீன்களை நான் பார்த்தது இல்லை. இரவு வானத்தின் முடிவில்லா நீட்சியில் சிறிய வெற்றிடத்தைகூட என்னால் காண முடியவில்லை. சி று க ரடி வி ண் மீ ன் கூட ்டத்தை நா ன் கண்டறிந்தவுடன் அதை விட்டு என் பார்வையை அகற்றவே இல்லை. ஏனோ அந்த விண்மீன் கூட்டத்தை தரிசிக்கும்போது எனக்குள் இருந்த தனிமை விலகிச் செல்கிறது. கார்டகெனாவில் நாங்கள் விடுமுறையைக் கழிக்கும்போது, அங்கிருக்கும் மாங்கா பாலத்தில் நள்ளிரவுக்கு மேல் ஒன்றுகூடுவோம். ரமோன் ஹெரேரா புகழ்பெற்ற கரீபிய பாடகரான டேனியல் சான்டோஸைப் பின்பற்றி, அவரைப் போன்ற குரலிலேயே பாடுவார். எங்களில் ஒருவர் கிதார் இசைத்துக்கொண்டே அவரது பாடலை பின்தொடர்வோம். கற்களால் கட்டப்பட்ட அந்தப் பாலத்தின் சுவற்றில் அமர்ந்திருக்கும்போது நான் எப்போதும் சிறுகரடி விண்மீன் கூட்டத்தையே செரோ டி லா போபா (Cerro de la popa) கடற்கரையின் பக்கத்தில் காணுவேன். அந்த இரவில் மிதவையின்பக்கமேல்முனையில் அமர்ந்திருக்கும்போது நான் மாங்கா பாலத்தின் நினைவுகளை எதிர்கொண்டேன். ரமோன் ஹெரேரா கிதாரின் இசைக்கேற்ப பாடும் பாடலின் வசீகரத்தில், சிறுகரடி விண்மீன் கூட்டம் நம் பூமியில் இருந்து இருநூறு மைல்கள் தள்ளி இருப்பதுபோல தோன்றாது, செரோ டி லா போப ா கடற்கரை யி ன் மேலேயே அமைந்திருப்பதுபோல தோன்றும். நான் கடலில் தன்னந்தனியாக அமர்ந்து சிறுகரடி விண்மீன் கூட்டத்தை தரிசிக்கும் அதே தருணத்தில் , யாராவது ஒருவர் கார்டகெனாவில் அமர்ந்து அ தே நட ்ச த்திர க் கூட ்ட த் தி ல் ஆழ்ந்துகொண்டிருப்பார். இதை நினைக்கும்போது என் தனிமை விலகி ஓடுகிறது. கடலுடனான எனது முதல் இரவு நீண்ட நெடியதாக இருந்தது, காரணம் முற்றிலுமாக எதுவும் நடைபெறவில்லை. நாம் எதிர்பார்த்த எதுவும் நடக்காதபோதும், கடலில் உள்ள உயிரினங்களுக்கு பய ந்து இரவு முழுவதும் மிதவையில் தவித்தது பற்றியும் எதையுமே விவரிக்க சாத்தியம் இல்லை. ஓடும் கடிகார முட்களை ஒரு நிமிடம் கூட பார்க்க தவறிவிடக்கூடாத நிலைதான் இருந்தது. பிப்ரவரி 28ம் தேதி - கடலில் என்னுடைய முதல் இரவில் - ஒவ்வொரு நிமிடத்திற்கும் நான் கைக் கடிகாரத்தைப் பார்த்தேன். அது நரக வேதனையாக இருந்தது. பதற்றத்தில், மீண்டும் கடிகாரத்தைப் பார்க்கக் கூடாது என எண்ணி, அவற்றை என் சட்டைப் பையில் திணிக்க எண்ணினேன். நேரத்தைச் சார்ந்து இருக்கக் கூடாது என்பதில் கவனமாக இருந்தேன். எனக்குப் பசியோ, தாகமோ இல்லை. என்னால் இதே நிலையில், நாளை விமானம் வரும் வரை தாக்குப்பிடிக்க முடியும் என உறுதியாக இருந்தேன். ஆனால், கடிகாரத்தின் சத்தம் என்னைப் பைத்தியமாக்கியது. நள்ளிரவுக்குப் பிறகு எனக்கு அழ வேண்டும் என்பதுபோல இருந்தது. ஒரு நொடிக்கூட நான் உறங்கவே இல்லை. உறங்க வேண்டும் என்று விரும்பினால் கூட என்னால் உறங்க முடியவில்லை. நண்பகலில் இருந்த அதே நம்பிக்கையுடன் நான் மீண்டும் விமானத்தை எதிர்நோக்கியும், கப்பலில் இருந்து வீசும் ஒளிக்காகவும் காத்திருந்தேன். சில மணி நே ரமா க நா ன் கட ல் மு ழு வ து ம் சல்லடையாகத் தேடினேன், கடல் அமைதியாகவும், ஆழ்ந்தும் இருந்தது. ஆனால், விண்மீன்களின் மின்மினியைத் தவிர வேறு எந்த ஒரு ஒளியையும் நான் காணவில்லை. முதல் நாளின் வெளிச்சம் அதிகாலையின் முன்பொழுதில் குளிர் மிகக் கடலில் தொலைந்த மாலுமியின் கதை -7 தமிழில்: நன்மாறன் திருநாவுக்கரசு கேப்ரியல்கார்சியா மார்க்வெஸ் 20 பிப்ரவரி, 2023


பிப்ரவரி, 2023 21


கடுமையாக இருந்தது. மதியம் முழுவதும் சூரிய ஒளி என் சருமத்தை ஊடுரு இருந்ததால், என் உடல் ஜொலிப்பதைப் போன்று தோன்றியது. குளிரும் சேர்ந்து கொண்ட தால் எரி ச்ச ல் கடுமையாக இருந்தது. நள்ளிரவிலிருந்து, என் வ ல து முழங்கா ல் க டு மை ய ா க வலி க்கத் தொடங்கியது. கடலின் உ ப் பு நீர் , எனது எலும்புகளுக்குள் ஊடுருவிச் செல்வதை என்னால் உணர முடிந்தது. ஆனால், அந்த உணர்வு தூரமாக இருந்தது. என் உடலை விட, கப்பலிலிருந்து வெளிப்படும் வெளிச்சத்தைப் பற்றிதான் நான் அதிகம் சிந்தித்துக்கொண்டிருந்தேன். எல்லையற்ற தனிமைக்கு மத்தியில், கடலின் இருள் சூழ்ந்த முணுமுணுப்புகளுக்கு நடுவில், ஒரே ஒரு கப்பலின் கடிகாரத்தைப் பார்க்கும்போதும் பகலை விட இரவு அளவிடமுடியாத அளவுக்கு நீண்டுள்ளதாக உணர்வீர்கள். ஆனால் விடிந்தவுடனேயே, மற்றொரு நாள் தொடங்கிவிட்டது என்பதற்கான சோர்வு உங்களுக்கு வந்துவிடும். அந்தச் சோர்வு எனக்கு மிதவையின் முதல் இரவில் ஏற்பட்டது. விடிந்தவுடன் எனக்கு வேறு எதுவும் நினைப்பில் இல்லை. நான் உணவையோ, நீரையோ நினைக்கவில்லை. நான் எதைப் பற்றியும் நினைக்கவில்லை. காற்று வெதுவெதுப்பாக மாறி இ ரு ந்த து, கட லி ன் மட ்ட ம் வ ள ர் ந் து , மென்மையாகவும், தங்க நிறத்திலும் காட்சி தந்தது. நான் இரவில் ஒரு நொடி கூட தூங்கவில்லை. ஆனால், அந்த கணத்தில் நான் அப்போதுதான் விழித்தெழுந்தது போன்ற தோற்றம் உண்டானது. நான் என் உடலை நீட்டியபோது எலும்பில் கடுமையான வலி ஏற்பட்டது. என் சருமம் பற்றி எரிந்தது. ஆனால் அந்தப் பொழுது, பிரகாசமாக வெதுவெதுப்பாக இருந்தது. காற்றின் சடசடப்பு எனக்குத் தொடர்ந்து காத்திருப்பதற்கான புதிய வலிமையை அளித்தது. நான் உயிர் காக்கும் மிதப்பானில் உள்ளூர அமைதியுற்று இருந்தேன். எனது இரு ப து வரு ட வாழ்க்கை யி ல் முதன்முறையாக நான் பூரண மகிழ்ச்சியாக உணர்ந்தேன். மிதவை தொடர்ந்து முன்னால் நகர்ந்து கொண்டிருந்தது. அது இரவில் எத்தனை தூரத்துக்கு நகர்ந்திருக்கும் என்பதை என்னால் கணிக்க முடியவில்லை. கடலில் தொடுவானம் பார்ப்பதற்கு அசையாமல் இருப்பதுபோல இருந்தது. ஒரு சென்டிமீட்டர் கூட நான் நகரவில்லை என்ற தோற்றத்தை அளித்தது. ஏழு மணிக்கு நான் டெஸ்ட்ராயர் கப்பல் குறித்த நினைவலைகளில் மீண்டும் மூழ்கினேன். இது எங்களுக்கு காலை உணவுக்கான நேரம். நாங்கள், கப்பல் தோழர்கள் மேஜையைச் சுற்றி ஒன்றாக அமர்ந்து ஆப்பிள் பழங்களை உண்பதை நினைத்துப் பார்த்தேன். அதன் பிறகு எங்களுக்கு முட்டை தரப்படும், பிறகு இறைச்சி, இறுதியாக ரொட்டியும், காபியும் வழங்கப்படும். என் வாய் எச்சிலால் நிரம்பியது. எனது வயிற்றில் சற்று சுழற்சி ஏற்படுவதை உணர்ந்தேன். உணவிலிருந்து என் மனதை திசைதிருப்புவதற்காக நான் கடலில் குதித்து கழுத்து வரை மூழ்கினேன். சூரியனால் வெந்திருந்த என் முதுகில் குளுமையான நீர் படும்போது இதமாக இருந்தது. என்னை மேலும் வலுவாக உணர வைத்தது. ஒளி எனக்குத் தென்பட்டால் கூட, நான் கத்தப்போகும் சத்தம், எவ்வளவு தூரத்தில் நீங்கள் இருந்தாலும் உங்களுக்கு கேட்டுவிடும். விடியல், நிலத்தில் நடைபெறுவதைப் போன்று நிதானமாக அமையவில்லை. வானம் பழுப்பு நிறத்துக்கு உருமாறியவுடன் சில நட்சத்திரங்கள் மறைந்தன, நான் முதலில் என் கடிகாரத்தையும், பிறகு தொடுவானத்தையும் பார்த்தேன். கடலின் வரைகோடு தோன்றத் தொடங்கியது. பன்னிரண்டு மணி நே ரம் கடந்த து . ஆ ன ா ல் , அ து சாத்தியமாகியதை என்னால் நம்ப முடியவில்லை. இரவு பகலைப்போல நீண்டதாக இருக்க முடியாது. நீங்கள் கடலில் மிதவையில் அமர்ந்து இரவை கழித்துப் பாருங்கள். ஒவ்வொரு முறையும் நீங்கள் 22 பிப்ரவரி, 2023


நாம் மூழ்கியபடியே நீண்ட நேரம் இருந்தேன். எனக்குள் மீண்டும் கப்பல் பற்றிய எண்ணம் பற்றி எரிந்தது. நான் படுக்கையில் ஓய்வெடுக்காமல், ஏன் ரமோன் ஹெரேராவுடன் கப்பலின் பின்புறத்துக்கு வந்தேன் என்ற கேள்வியை என்னை நானே கேட்டுக்கொண்டேன். அந்த துர்சம்பவத்தை நாம் என் மனதுக்குள் நொடிக்கு நொடி மறுகட்டமைப்பு செய்து, என் முட்டாள்தனத்தை நொந்து கொண்டேன். நான் பாதிக்கப்பட்டதற்கான ஒரு காரணமும் உண்மையில் கிடைக்கவில்லை. நான் பாதுகாப்புப் பணியிலும் இல்லை, நான் கப்பல் மேல் தளத்தில் இருந்திருக்க வேண்டிய அவசியமும் இல்லை. எனக்கு நடைபெற்றது அனைத்தும் துரதிர்ஷ்டத்தின் பயனால் விளைந்தது என்ற முடிவுக்கு வந்தபோது, அது மேலும் எனக்கு சங்கடத்தை உண்டு பண்ணியது. ஆனால், நான் என் கடிகாரத்தைப் பார்த்துக்கொண்டு சாந்தம் அ டைந ்தேன் . நே ரம் வ ெ கு வி ரை வ ா க நகர்ந்துகோண்டிருந்தது. அப்போது மணி காலை பதினோறு மணி முப்பது நிமிடங்கள். தொடுவானில் தோன்றிய கறுப்பு புள்ளி நண்பகல் என்னை நெருங்கிக் கொண்டிருப்பது எனக்கு கார்டகெனாவை நினைவூட்டியது. நான் தொ லைந்து போ யி ரு ந்ததை அவ ர்க ள் கவனிக்காமல் இருப்பதற்கு துளியும் வாய்ப்புகளே இல்லை. நான் மட்டும் உயிர்காக்கும் மிதவையில் விடப்பட்டதை எண்ணி வேதனை கொண்டேன். என்கப்பல் தோழர்கள் அனைவரும் மீட்கப்பட்டும், நான் மட்டும் காற்றில் வீசியெறியப்பட்டதால் மிதவையில் தனிமையில் நீந்திக்கொண்டிருக்கிறேன். மிதவையில் ஏறியதைக் கூட ஒரு கெட்ட அதிர்ஷ்டத்துடன் பொருத்திப் பார்த்தேன். அந்தக்கருத்து என் மனதில் முழுமையடைவதற்கு முன்னரே தொடுவானத்தில் ஏதோ ஒரு புள்ளி தோன்றுவதுபோல எனக்குத் தெரிந்தது. நான் என் பார்வையை விலக்காமல் என்னை நோக்கி வரும் அந்த கறுப்பு புள்ளியின் மீதே நிலை நிறுத்தினேன். அப்போது நேரம் பதினொன்று மணி, ஐம்பது நிமிடங்கள். அந்த வானம் கூடிய விரைவில் மின்னும் புள்ளிகளாக மாறுவதைத் தீவிரமாக கவனித்துக்கொண்டிருந்தேன். ஆனால், அந்தக் கறுப்புப் புள்ளி தொடர்ந்து அருகில் நகர்ந்து கொண்டிருந்தது, என் மிதவையை நோக்கி நேரடியாக வந்தது. அதைக் கவனித்த அடுத்த இ ரண்டு நிமி ட த்தில், அதன் வடிவ த்தை முழுமை ய ா க என்னா ல் புரிந்து கொள்ள முடியவில்லை. நீல நிறத்தில் வெளிச்சமான வானத்திலிருந்து அது நெருங்கியபோது, கண்களைக் குருடாக்கும் உலோக வெளிச்சத்தை வெளிப்படுத்தியது . கொஞ்சம் கொஞ்சமாக மற்ற பிரகாசமான புள்ளிகளிலிருந்து அதை வேறுபடுத்திப் பார்க்க முடிந்தது. என் கழுத்தில் வேதனை ஏற்பட்டது. என் கண்கள ால் அதற்கு மே ல் வானின் பிரகாசத்தைக் காண முடியவில்லை. ஆனால், நான் தொடர்ந்து என் பார்வையை அதில் வை த்திரு ந ்தேன் . அது அதி வேக ம ா க , ஒளிர்ந்துகொண்டே, என் மிதவையை நோக்கி நேர்திசையில் வந்தது. அந்த நொடியில் எனக்கு மகிழ்ச்சி ஏற்படவில்லை. எனக்குள் எந்த ஒரு உணர்ச்சியும் நிரம்பவில்லை. என்னுடைய சி ந்தனை தெ ளிவா க இரு ந்த து. நா ன் அசாதரணமான அமைதியுடன் என் மிதவையின் மீது ஏறி நின்றேன். விமானம் என்னை நெருங்கியது. நான் மெதுவாக மேற்சட்டையை கழற்றினேன். எந்த மிகச்சரியான நொடியில் நான் சட்டையை அசைத்து சமிக்ஞை தர வேண்டும் என்பதை தெரிந்து வைத்திருந்தேன். நான் ஒரு நிமிடம், இரண்டு நிமிடங்கள் என் சட்டையை கையில் ஏந்தியபடி, விமானம் என்னை நெருங்குவதற்காக காத்திருந்தேன். அது மிதவையை நோக்கி நேரடியாக வந்தது. நான் என் கைகளை உயர்த்தி, சட்டையை அசைத்தபோது, அதன் இரைச்சல் கடல் அலைகளின் இரைச்சலை விட மிகுதியாக எழுந்தது. விமான என்ஜினின் அதிர்வு பெரும் சத்தமாக அதிகரித்தது. (தொடரும்) ஓவியம்: லலிதா பிப்ரவரி, 2023 23


2016 ஆம் ஆண்டு “Arrival” என்றொரு ஹாலிவுட் திரைப்படம் வெளிவந்தது. கிட்டத்தட்ட அறிவியல் புனைகதை தான். இருப்பினும், அது இன்னும் நிரூபிக்கப்படாத 'மொழியின் சார்பியல்' (Linguistic Relativity) என்னும் பதினெட்டாம் நூற்றாண்டு கருதுகோளை மிக நெருக்கமாகத் தொட்டுச்சென்றது ஓர் அழகான ஆச்சரியம். அதன் பின்னரே பதினெட்டாம் நூற்றாண்டில் மிகப் பரவலாக விவாதிக்கபட்ட, பின்பு 'சாபிர்- உர்ஃப்' கொள்கை என இருபதாம் நூற்றாண்டில் அறியப்பட்ட கருதுகோளான 'மொழி சார்பியல்' அனைவரின் கவனத்தையும் திரும்பவும் ஈர்த்தது எனலாம். முதலில் கருதுகோள் என்பது என்ன? அறிவியல் என்று அறியப்பட வேண்டுமானால், முதலில் நிரூபிக்கப்பட வேண்டும். ஆனால், அதற்கு முன் இருக்கும் நிலையான தரவுகள் அனுமானங்கள், ப குதியாக நிரூபித்திரு த்த ல் போன ்றவை , கருதுகோள்கள் அல்லது ஆங்கிலத்தில், “Hypothesis” என அறியப்படும். அப்படிப்பட்ட நிறைய தரவுகளுடன் விவாதிக்கப்பட்ட, ஆனால், நிரூபிக்கப் பட இயலாமல் போன மிக முக்கியம ான கருதுகோள்களில் ஒன்று, இந்த `Linguistic Relativity' என அறியப்படும் மொழி சார்பியல். அரைவல் (Arrival) திரைப்படத்தின் கதாநாயகி ஒரு மொழியியல் வல்லுனர். அவர் மூலமாக, மொழி சார்பியல் இந்தத் திரைப்படத்தில் விவாதிக்கப்படும். உதாரணத்துக்கு, `போர்' என்பதற்கு சமஸ்கிருதத்தில் என்ன வார்த்தை, மேலும் அதன் மொழிப்பெயர்ப்பு என்ன என்ற கேள்வி முன்வைக்கப்படும்போது. `காவிஸ்தி' என்பதே பழைய சம்ஸ்கிருதத்தில், போருக்கான வார்த்தையாக உபயோகப்படுத்தப் பட்டிருக்கிறது என்பது தெரியவருகிறது. ஆனால், அதன் அர்த்தம்தான் வெகு சுவாரஸ்யமானது. காவிஸ்த்தியின் பொருள் `ஆநிரைகளைக் கவர்வதில் உள்ள நாட்டம்', அதாவது கால்நடைகளை கைப்பற்றுதல் என்பதாகும். போருக்கும் அதற்கும் என்ன சம்பந்தம் என்று பார்த்தோமானால், `போர்' என்பதே அக்காலத்தில் எதிரி நாட்டினரின் கால்நடைகளை கவர்வதுதான் என்பதாகப் புரிந்துகொள்ளலாம். ஆக, மொழி என்பது பண்பாட்டுச் சார்பு கொண்டது. ஒரு மொழியிலிருந்து இன்னொரு மொழியை அப்படியே மொழி பெயர்த்து விட முடியாது என்பதெல்லாம் நமக்குத் தெரிந்த காரணிகள்தான். ஆனால், மொழி சார்பியல் என்பது முக்கியமான ஒன்றைக் குறிப்பிட்டுச் சொல்ல விழைகிறது. அதாவது, நாம் பேசும் மொழி நம் உள்ளார்ந்த அறிவு வளர்ச்சியை தனித்தன்மையாக்குகிறது. அதாவது பேசும் மொழியைப் பொறுத்து, நாம் வெளி உலகை கருதுகோள் - 1 சுஜாதா நடராஜன் மனித நாகரிகத்தை ஆராயும் மொழியின் சார்பியல்! 24 பிப்ரவரி, 2023


மற்ற நண்பர்களிடம் எப்படி உருவகப்படுத்துவார்? சரி அந்த மீனவர் ஓர் ஆங்கில மீனவர் என வைத்துக்கொள்வோம். அவருக்கு, மீன் `பளபள' வென்று பிளாஸ்டிக் பொம்மை போன்று அழகாகத் தெரிகிறது. உடனே கரையில் இருக்கும் நண்பர்களிடம், அழகியலாக அதை வர்ணிக்கும் பொருளில், Dolphin என்கிறார். அதாவது, பொம்மை போன்ற துடுப்பு உடைய மீன் என்கிறான். இதில் இவனது சிந்தனை, அழகியலாக வெளிப்படுகிறது. அவனைத் தொடரும் அவன் நண்பர்களுமே அதே அ ழ கியல் சி ந்தனையை த் தொட ர ச் ச ெ ய் கி ற ா ர்க ள். ஆங்கி ல மொ ழி யி ல் டால்பினுக்கு இந்த அழகியல் உருவக சிந்தனையின் அடிப்படையில் பெயர் வந்து விடுகிறது. சரி இப்போது இதே மீனை ஒரு தமிழ் மீனவர் பார்க்கிறார் என்று வைத்துக்கொள்வோம். கட லி ன் மேற்ப ர ப் பி ல் ஓ ங் கி ஓ ங் கி குதித்துக்கொண்டிருந்த இந்த மீனை, கரையில் இருக்கும் அவன் நண்பர்களிடம், “அந்த மீன் ஓங்கி ஓங்கி குதித்தது”, என்று அதன் அசைவின் அடிப்படையில் விவரிக்கிறார். ஏனென்றால் , பெரும்பாலான மீன்கள் அப்படிக் குதிப்பதில்லை. அதன் அசைவின் அடிப்படையில் அதற்கு அவர் வைத்த பெயர் `ஓங்கல்' . அவரது நண்பர்கள் டால்பின் குதிப்பதை மட்டுமே கற்பனை செய்து, அதே வார்த்தையைப் பின் தொடர்கிறார்கள். ஆக இங்கே ஒரே மீனுக்கு, வேறு வேறு சிந்தனையின் அடிப்படையில் பெயர்கள். அந்தந்த மொழிகளைப் பேசும் ஒவ்வொருவருக்கும் இதே சிந்தனைப் போக்கு தொடர்கிறது. இதைதான் மொழி சார்பியல் தத்துவத்தில் வரையறுக்கிறார்கள். ஒரு மொழியை கற்கும்போதும் பேசும்போதும் நம் சிந்தனையோட்டத்துடன் நம் அறிவாற்றலும் ஒவ்வொருவரிடம் இருந்து வேறுபடுகிறது என்பதே அது. இருபதாம் நூற்றாண்டின் எட்வர்ட் சாபிர் மற்றும் பெஞ்சமின் லீ வுர்ஃப் இருவரும் இணைந்து எழுப்பிய இந்தக் கருதுகோள் இன்றும் மொழி சார்பியலாக அறியப்படுகிறது. என்னதான் மொழி பெயர்த்தாலும், இரண்டு மொழிகளும், ஒரேபோல் அர்த்தத்தை தருவதில்லை. அது சமூகத்தை, பண்பாட்டைப் பொறுத்த விஷயம் என்றார் சபீர். பேசு மொழி மட்டுமல்லாமல், குறியீட்டு எழுத்துகளும் (Semasiographic writing) வகைகளையும் மொழி சார்பியலில் பெரும் பங்கு வகிக்கிறது. மாயன் கேலண்டர் மற்றும் சில பழைமையான சீன எழுத்துகளையும் இங்கே குறிப்பிடலாம். அவற்றைக் கொண்டே மாயன்களின் சிந்தனையோட்டம், அறிவாற்றல், நாகரி கம் போன்றவையும் தோன்றலாம். ஆனாலும் இன்னும் சிந்து சமவெளி எழுத்துகளையே நம்மால் இன்னும் டீகோட் செய்ய முடியவில்லை. ஆனாலும், சிந்து வெளி பண்பாட்டின் திராவிட அடித்தளம் என்ற நூலில், ஆசிரியர் பாலகிருஷ்ணன் மொழி சார்பியலை உபயோகப்படுத்தி இருப்பார். அதில் கிழக்கு என்பதை கீழ் என்றும் மேற்கு என்பதை மேல் என்றும் தமிழர்கள் உபயோகப்படுத்தி இருப்பார்கள் என்று அவற்றை சிந்து சமவெளி நாகரிகத்துடன்  இணைத்து நிறைய சான்றுகளுடன் விவரித்திருப்பார். பழங்காலத்தில் பெரிதாக திசைகள் குறிப்பிடப்படவில்லை. எனினும், கீழிருந்து சூரியன் மேலே வருவதால், `கீழ்' (கிழக்கு) என்றும் மேலிருந்து கீழ் நோக்கி மறைவதால் `மேல்' (மேற்கு) என்றும் கூட குறிப்பிட்டிருக்கலாம். எது எப்படியோ, கிட்டத்தட்ட ஓர் அகழ்வாராய்ச்சிக்கு இணையாக ஒரு பண்டைய நாகரிகத்தையோ மனித சிந்தனையையோ இந்த மொழி சார்பியலால் ஆராயமுடியும் என்பதே மிகப்பெரும் சிறப்பு. (தொடரும்) நோக்கும் விதம் தனித்தன்மையுடன் இருக்கும்.. உதாரணத்துக்கு, டால்பின் மீனை இதுவரை யாருமே பார்த்ததில்லை என்று வைத்துக் கொள்வோம். யாருமே அதற்கு முன்பார்த்திராத, ஆழ்கடலிலிருந்து மேல் மட்டத்துக்கு, ஓங்கி ஓங்கி குதித்துக்கொண்டிருக்கும் டால்பின் மீனை, மீன் பிடித்துக் கொண்டிருக்கும் ஒரு மீனவர் பா ர்க்கிறார் என்று வைத்துக் கொள்வோம். அதைக் கரையில் இருக்கும் தன் பிப்ரவரி, 2023 25


வாலண்டைன்ஸ் டே சுவாரஸ்ய தகவல்கள்! காதலர் தினம் எப்படி வந்தது? பெரும்பாலானவர்களால் சொல்லப்படும் கதை இதுதான்! கி.பி 270-களில், ரோம் நகரை ஆண்ட பேரரசர் இரண்டாம் கிளாடியஸ், `ஆண்கள் திருமணம் செய்துகொண்டால் வீரம் குறைந்துவிடும். அப்படி வீரம் குறைந்துவிட்டால் போர் செய்ய முடியாது' எனக் கூறி திருமணத்திற்குத் தடை விதித்திருந்தார். பல வருடமாக சிங்கிளாக இருந்த ஆண்கள் பலர் காதலில் விழுந்து, திருமணம் செய்துகொள்ளவும் ஆசைப்பட்டனர். அப்படி ஆசைப்பட்ட காதல் ஜோடிகளுக்கு அரச கட்டளையை மீறி பாதிரியார் வாலன்டைன் திருமணம் செய்துவைத்திருக்கிறார். இதைக் கண்டுபிடித்த பேரரசர், பாதிரியாருக்கு மரண தண்டனை கொடுக்கவே, சரியாக கி.பி.270, பிப்ரவரி 14-ம் தேதி பாதிரியார் வாலன்டைன் தூக்கிலிடப்படுகிறார். அவரின் நினைவாகவே இன்றுவரை பிப்ரவரி 14-ம் தேதி வாலன்டைன் தினமாக கொண்டாடப்பட்டு வருவதாகச் சொல்லப்பட்டு வருகிறது. இதற்கான வரலாற்றுச் சான்றுகள் இதுவரை சரிவர கிடைக்கவில்லை. பிஜு ரோஷன் கொண்டாட்டம் 26 பிப்ரவரி, 2023


100-ல் 78 பேர் காதலர் தினத்தன்று I Love You சொல்லி ப்ரப்போஸ் செய்கிறார்கள் காதல் கடவுளாக ரோமன் நாட்டில் வணங்கப்படும் வீனஸின் மகன்தான் `ரெமோ' படத்தில் சொல்லப்படும் குப்பிட்'. காதலைச் சொல்ல சிறந்த இடங்கள்: உலக அளவில் - பாரிஸ் (பிரான்ஸ்), இந்திய அளவில் - ஷில்லாங் (மேகாலயா), மல்வான் (மகாராஷ்டிரா) ஷேக்ஸ்பியர் எழுதிய ரோமியோ ஜூலியட் நாடகம் காதலர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானது பிப்ரவரி 14 அன்று ரோமியோ ஜூலியட் கதை நடந்த இத்தாலியின் வெரோனாவுக்கு ஜூலியட் பெயரிட்ட ஆயிரத்துக்கும் அதிகமான காதல் கடிதங்கள் வருமாம். உலக அளவில், காதலர் தினத்தன்று அதிக காதல் வாழ்த்து அட்டைகளைப் பெறுவது ஆசிரியர்கள்தான். 19-ம் நூற்றாண்டில், காதலர் தின ஸ்பெஷலாக ஹார்ட் வடிவ சாக்லெட் பாக்ஸ்களை அறிமுகப்படுத்தினார் ரிச்சர்ட் கேட்பரி. பிப்ரவரி 14 அன்று, தாஜ்மஹால் வாசலில் மட்டும் சுமார் 3.5 லட்சம் ரோஜாக்கள் விற்பனையாகும் 1415-ல் சார்லஸ் டக் ஆப் ஓர்லன்ஸ் தன் மனைவிக்கு சிறைச் சாலையிலிருந்து முதல் காதல் கவிதையை எழுதினார். அந்தக் கவிதை இன்றும் பிரிட்டிஷ் நூலகத்தில் பாதுகாக்கப்பட்டு வருகிறது. இதுவே உலகின் மிகவும் பழைமையான காதல் கவிதை. காதல் கடவுள் வீனஸுக்குப் பிடித்த பூ ரோஜா. காதலர் தினத்தன்று ஆண்கள் 73% பேரும், பெண்கள் 27% பேரும் பூக்கள் வாங்குகிறார்கள். உலக அளவில், 3% பேர் தன் காதலன்/காதலிக்கு நாய்க் குட்டிகளை காதலர் தினப் பரிசாக வழங்குகின்றனர். ஆண்டுதோறும் 3.6 கோடி ஹார்ட் வடிவ சாக்லெட் பாக்ஸ்கள் காதலர் தினத்தன்று மட்டும் விற்பனையாகின்றன பிப்ரவரி, 2023 27


2021 ம் ஆண்டு ஜன வ ரி ம ா த ம் , இணையத்தில் வெளியான காட்சி ஒன்று பார்ப்போர் நெஞ்சை பதைபதைக்க வைத்தது. நீலகிரி மாவட்டம் மசினக்குடியில் எடுக்கப்பட்ட அந்தக் காட்சியில், காட்டு யானை ஒன்று உடல் முழுவதும் தீப்பற்றி எரிந்து, அலறியடித்து ஓடுகிறது. பின் அதன் காது மற்றும் முதுகுப் பகுதிகளில் தீவிர காயங்கள் ஏற்பட்ட நிலையில் சுருண்டு விழுந்து இறந்துவிடுகிறது. விசாரணையில், யானை ஊருக்குள் வந்தபோது அதை விரட்டுவதற்காக சிலர் அதன் மீது பெட்ரோல் ஊற்றிய சாக்கை தூக்கி எரிந்து தீ வைத்தது தெரியவந்தது. ஆசிட் திரவங்களையும் அதன்மீது சிலர் ஊற்றியதாக கூறப்படுகிறது. மனிதர்களின் இந்தக் கொடூர செயலால் கம்பீரமான அந்தக் காட்டு விலங்கு தீயில் வெந்து, வேதனையில் உயிர் துறந்தது. இந்தச் சம்பவம் மட்டுமல்ல சமீப காலமாகவே யானைகள் ரயிலில் அடிப்பட்டு இறப்பதையும், மின்சாரம் தாக்கி மாண்டு போ வதையு ம் , கிணறுக்குள் விழுந்து இறந்த செய்தியையும் தொடர்ந்து படித்து வருகிறோம். இவையெல்லாம் ய ானைகள் காடுகளை விட்டு மனிதர்கள் நடமாடும் இடத்திற்கு வரும்போது ஏற்படும் விபத்துகள் என்றே ஊடகங்கள் பதிவு செய்கின்றன. அப்படி வரும் சில யானைகள் மனிதர்களைக் கொ ன்றதா க வும், ப யி ர்கள ைச் சே த ப் ப டுத்துவதா க வும் கூ ட ஊ டகங்க ளி ல் காட்டப்படுகிறது. ஊடகங்கள் ‘யானைகள் அட்டகாசம்’ என்றே இதுபோன்ற செய்திகளை வெளியிடுகின்றன. ஆனால், உண்மையோ அதற்கு நேர் எதிராக இருக்கிறது. உண்மையில் யானைகள் ஏன் காடுகளில் இருந்து ஊருக்குள் வர வேண்டும்? தேவையில்லாமல் மக்களைத் தாக்க வேண்டும்? மனிதர்களுக்கும் - ய ா னைகளுக் கும் இ டையே என ்ன த ா ன் யானைகளை அழிக்கும் மனிதர்களின் அட்டகாசம் சூழலியல் நன்மாறன் திருநாவுக்கரசு 28 பிப்ரவரி, 2023


பிரச்சனை? இதை எப்படி புரிந்துகொள்வது? இதற்கான விடை நாம் யானைகளை உற்று நோக்குவதன் மூலம் தெரிந்துகொள்ளலாம்.. வலசை ப�ோகும் யானைகள் உணவிற்காகவும் காலநிலையைப் பொறுத்தும் யானைகள் ஒரு வனப்பகுதியிலிருந்து வேறு ஒரு பி ரச்சனைகள் செ ய்வதி ல்லை . நாம்தான் யானைகளின் எல்லைகளுக்குள் நுழைகிறோம். தங்களது முன்னோர் காட்டிய பாதையில் காலம்காலமாக வலசை செல்லும் யானைகள், அவற்றின் வழித்தடம் மறிக்கப்பட்டாலோ அல்லது இடையூறு ஏற்படுத்தினாலோ குழப்பமடைந்து, வழிதவறி வனத்தையொட்டியுள்ள ஊர்களுக்குள் புகுந்துவிடும். இதனால் யானை-மனித மோதல்கள் அதிகரித்து, பயிர் மற்றும் உயிர் சேதங்கள் தவிர்க்க இயலாததாகி வருகிறது. யானைகளின் வாழ்விடம் ஒரே மாதிரியான காடுகளை மட்டும் உள்ளடக்கியது கிடையாது. ய ா னைக ளி ன் வா ழ் வி டங்க ள் பல ்வே று வனப்பகுதிகளைச் சேர்த்து பரந்து விரிந்திருக்கும். ஆனால், காலப்போக்கில் மனித ஆக்கிரமிப்புகளால் இந்த வனப்பகுதிகள் சுருங்கிவிட்டன, வனத்திற்கு அருகிலுள்ள நிலங்கள் பட்டா நிலங்களாக ம ாற்றப்பட்டு பின்னர் விளை நிலங்களாக மாற்றப்பட்டுவிட்டன. பட்டா நிலம், விளைநிலம் யானைகளை அழிக்கும் மனிதர்களின் அட்டகாசம் வனப்பகுதிக்குச் செல்கின்றன. அவற்றைதான் நாம் வலசை செல்லுதல் என்கிறோம். ஒவ்வொரு இடமாக நகரும் யானைகள் வழக்கமாக ஒரே வழியையே பின்பற்றுகின்றன. ஒரு யானையை இந்த ஆண்டு ஓரிடத்தில் பார்த்தால் அடுத்த ஆண்டும் அதே யானையை அதே இடத்தில் பார்க்கலாம். அந்த அளவுக்கு யானைகள் துல்லியமாக தனது வழித்தடத்தைப் பேணுவதுண்டு. இவ்வாறு யானைகள் பயணம் மேற்கொள்ளும் வழித்தடங்களைதான் வலசை பாதைகள் என நாம் கூறுகிறோம். ஆறு மாத குட்டியாக யானைகள் கூட்டத்தோடு வலசை மேற்கொள்ள தொடங்கும், அந்தப் பாதைகளை 70 வயதுகள் ஆனாலும் மறக்காமல் நினைவில் வைத்திருக்கும். இந்தப் ப ா தைகள ை இ ப ்போ து மனித ர்க ள் ஆக் கிரமி ப்ப த ா ல்தான் யா னைகளுக் கு ம் மனிதர்களுக்கு இடையேயான மோதல்கள் தொடங்குகின்றன. யானை - மனிதர்கள் மோதல் ய ானைகள் மனிதர்களைத் தேடி வ ந்து எ ன ்பதெல்லா ம் மனித ர்க ளு க் குதா ன் , ய ானைகளுக் கு க் கிடையாது. யானைகள் என்றைக் கும் அடு த்த வ ர்க ள் சொத் து க் கு ஆசைப்படாதவை. அதேபோல தன்னுடைய பரம்பரைச் சொத்தை விட்டுக்கொடுக்காதவை, இதனால்தான் இழந்த பாதைகளை மீட்டு எ டு க்கவே யா னைக ள் இவ ்வள வு போராட்டங்களைச் செய்துவருகிறது. இந்த வலசைப் பாதைகள் ஆக்கிரமிப்புகளால் யானைகளின் இறப்பு இந்தியாவில் அதிகரித்து வருகிறது. கடந்த 10 ஆண்டுகளில் மட்டும் இந்தியாவில் ரயில்கள் மோதி 186 யானைகள் உயிரிழந்துள்ளன. இந்த ரயில் பாதைகள் ஒரு காலத்தில் யானைகளின் வலசைப் பாதைகளாக இருந்தவை. அந்த நினைவில் யானைகள் ரயில் பாதைகளைக் கடக்கும்போது ரயில்கள் மோதி இறக்கின்றன. இந்தியாவில் கடந்த 2020 டிசம்பர் வரையிலான 11 ஆண்டுகளில் 1,160 யானைகள் உயிரிழந்துள்ளன. கடந்த எட்டு ஆண்டுகளில் பிப்ரவரி, 2023 29


யானைகளால் தாக்கப்பட்டு 3,767 மக்கள் உயிரிழந்துள்ளனர். Wildlife Trust of India என்ற அமைப்பு நடத்திய ஆய்வில் இந்தியா முழுவதும் 101 யானை வழித்தடங்கள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதில் பத்துக்கும் மேற்பட்ட வழித்தடங்கள் தமிழ்நாட்டில் இருக்கின்றன. Wildlife Trust of India பட்டியலில் உள்ளதைவிடவும் தமிழ்நாட்டில் கூடுதலான யானை வழித்தடங்கள் உள்ளதாக `ஓசை' என்கிற சுற்றுச்சூழல் அமைப்பைச் சேர்ந்த ஆர்வலரான காளிதாஸ் என்பவர் சொல்கிறார். அதற்கான ஆய்வுகளும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. மசினகுடியில் யானைகளின் பிரதானமான மூன்று வலசைப் பாதைகள் உள்ளன. தற்போது அந்தப் பாதைகளை சமவெளி பகுதியைச் சேர்ந்த பழங்குடி அல்லாத மக்கள் வணிக நோக்கில் ஆக்கிரமித்து வருகின்றனர். தங்கும் விடுதிகள், கடைகள் என ஏராளமான வணிக வளாகக் கட்டடங்கள் யானைகளின் வலசைப் பாதைகளில் முளைத்துள்ளன. இங்கே நுழைந்ததற்காகத்தான் நாம் மேலே பார்த்த ஒரு யானை எரித்து கொல்லப்பட்டது. இதேபோன்ற சம்பவம் சில ஆண்டுகளுக்கு முன் கேரளாவிலும் நடைபெற்றது. யானை தனது வழக்கமான பாதையில் வந்துகொண்டிருக்கும் போது, வழியில் ஒரு அன்னாசிப்பழத்தை பார்த்துள்ளது. பசியில் இருந்த யானை அதனை உண்டபோது, அது வெடித்து அதன் வாய்ப்பகுதி பலத்த சேதத்திற்கு உள்ளானது. பின்னர் வலி தாங்க முடியாமல் என்ன செய்வதென அறியாது அருகில் இருந்த ஆற்றில் நின்றவாறு தனது உயிரை விடுத்தது. யானை பசியில் மட்டும் இல்லை, கர்ப்பமாகவும் இருந்ததுதான் பெரும் சோகம். சட்டத்திற்கு புறம்பாக விடுதிகள், வீடுகள், தேயிலைத் தோட்டம், சொகுசு ரிசார்ட்டுகள் என மனிதர்கள் தங்கள் தேவைகளுக்காக யானைகளின் வாழ்விடங்களை அழித்துக் குடியேறுகின்றனர். பின்னர் விலங்குகள் மனித வசிப்பிடத்திற்குள் புகுந்து அட்டூழியம் செய்கிறது எனப் புகார் செய்கின்றனர். வனவில ங் கு கள் தங்களது தேவைக்காக வலசை போகும்போது, அங்குள்ள தடைகளைக்கடக்க முற்படுகையில் மனிதர்களுடன் மோதல் ஏற்பட்டால் காட்டு விலங்குகள் தீயவ கைகள ா க ஊ டகங்க ளி ல் சித்தரிக்கப்படுகின்றன. கோவை மாவட்டத்தில் மட்டும் யானைகள் வழித்தடங்களை மத நிறுவனங்களும், ஆன்மிக குருக்களின் மடங்களும், கல்வி நிறுவனங்களும், 30 பிப்ரவரி, 2023


ரியல் எஸ்டேட் நிறுவனங்களும் ஆக்கிரமித்துள்ளன. அரசாங்கத்தின் முன்னெடுப்புகள் யானைகள், மனித மோதலைத் தடுப்பதற்கு அரசாங்கம் என்ன முன்னெடுப்புகளை எடுக்கிறது? யானைகளின் வலசைக் காலங்களில் ஏற்படும் பிரச்சனைகளைத் தடுக்க, வனத்துறை யானைத் தடுப்பு அகழிகள், சோலார் மின் வேலிகள் என பல்வேறு முயற்சிகளை மேற்கொள்கிறது. ஆனால், அவை முழுமையான பலனைத் தரவில்லை. சோலார் மின் வேலிகளை காட்டு யானைகள் எப்படி கையாளும் தெரியுமா ? மின் வேலிகளில் மின்சாரம் தொடர்ந்து பாய்ச்சப்படாது . 3 நொடிக்கு மின்சாரம் வரும், பின் 5 நொடிகளுக்கு மின்சாரம் நிறுத்தப்படும். இதுவே சுழற்சியாக நடைபெறும். மின்சாரம் வரும்போது எழும்பும் சத்தத்தை யானைகள் புரிந்துகொள்கின்றன. சத்தம் கேட்காத (மின்சாரம் வராத) 5 நொடிகளில் வேலியை ஒரே மிதி மிதித்துவிட்டு தாண்டிச் செல்கின்றன. சில நேரங்களில் காய்ந்த மரங்களைத் தூக்கி வேலிகளைச் சேதப்படுத்துவதும் உண்டு. 10, 15 யானைகள் கூட்டமாக வந்தாலும் ஒரே இடத்தை மட்டும் தாக்கி, அதன் வழியாக மட்டுமே எல்லா யானைகளும் கடந்து செல்லும். பலம் இருக்கிறது என்பதற்காக தேவையில்லாத சே த ங்கள ை யா னைக ள் ச ெ ய ்யா து . தேவையில்லாமல் தன்னுடைய ஆற்றலை ஒரு ய ா னை வீணடி க்கா து. வனத்து றை பல தொழில்நுட்பங்களைக் கையாண்டாலும், காட்டு யானைகளிடம் அவை செல்லுபடியாகவில்லை. அக ழி கள ைத் தோண்டினால் கூ ட சர்வ ச ாதாரணமா க மூடிவி ட் டு, தா ண் டி சென்றுவிடுகின்றன. வேலியோரங்களில் தேனீக்கள் வளர்ப்பு, சுரைமுள் வேலி ஆகியவை மட்டும்தான் ஓரளவுக்கு யானைகளைத் தடுக்க பயன் தருகிறது. யானைகள் - மனிதர்களுக்கு இடையேயான மோதலை எப்படி தடுப்பது? யானை வழித்தடத்தை அதிகாரபூர்வமாக அங்கீகரித்தால்தான் அதற்கு சட்டப் பாதுகாப்பு கிடைக்கும் என்பதுதான் நிபுணர்களின் கருத்து. யானை வழித்தடங்களில் உள்ள கட்டுமானங்களை அகற்றி யானை பயணத்திற்குத் தடை இல்லாத சூழலை அரசாங்கம் உருவாக்க வேண்டும் . தமிழ்நாடு அரசு நீலகிரி மாவட்டத்தில் உள்ள சிகுர் வழித்தடத்தை யானைகளின் வழித்தடமாக அறிவித்துள்ளது. தமிழ்நாட்டில் அரசா ல் அங்கீகரிக்கப்பட்ட முதல் யானை வழித்தடம் இதுதான். இது ஒரு முக்கி ய ம ான முடிவு . அதைப்போலவே மற்ற யானை வழித்தடங்களையும் மீ ட் டு ப ா து க ா ப்ப த ற்கா ன ப ணி க ள் மேற்கொள்ளப்படும்போது இந்த மோதல்கள் நிறுத்தப்படும். இங்கே யானை வழித்தடத்தை சட்டப்பூர்வமாக அங்கீகரிக்கின்றபோது, தனியார் கட்டடங்களோ அரசு க் க ட ்டடங்களோ எ வை யா னை வழித்தடத்தில் அமைந்திருந்தாலும் அதனை பாரபட்சம் இல்லாமல் அகற்ற வேண்டும். மேலும், யானை வழித்தடம் அமைந்துள்ள இடங்களில் புதிய கட்டுமானங்களை அனுமதிக்கக் கூடாது என்கின்றனர் சுற்றுச்சூழல் பாதுகாவலர்கள். ஆக்கிரமிப்பு மட்டும் பிரச்சனை இல்லை மனிதர்கள் காடுகளை ஆக்கிரமிப்பது மட்டும் ய ா னைக ளு க் குப் பிர ச்சனை இ ல்லை . கோயிலுக்காக அவை காடுகளில் இருந்து அழைத்து வரப்படுவதும் பிரச்சனைதான். கோயில்களில் வளர்க்கப்படும் யானைகளுக்கு உடல் ரீதியாகவும், உளவியல் ரீதியாகவும் பல்வேறு சிக்கல்கள் ஏற்ப டுகின்றன. பெ ரு ம்பால ான கோயி ல் யானைகளுக்கு நீரிழிவு நோய் இருக்கிறது. அதன் க ா ல்க ளில் புண்க ள் வ ந்தா ல் எ ளி தி ல் குணமாவதில்லை. சமீபத்தில் புதுச்சேரி கோயில் யானை ஒன்று மாரடைப்பால் சாலையில் விழுந்து இ றந்ததை யும் நாம் ப ார்த்திரு ப ்போ ம் . இதுவெல்லாம் யானைகளுக்கு மனிதனால் ஏற்படும் வேறு வகையான பிரச்சனைகள். இதற்கு தற்காலிக தீர்வாக ஆண்டுக்கு ஒருமுறை கோயில் யானைகளை பக்கத்தில் இருக்கிற காடுகளுக்கு அழைத்துச் சென்று ஒரு மாதம் விட்டாலே போதும் யானைகள் குணமாகிவிடும். இதைச் செய்வதற்கு அரசு முதுமலையில் சிறப்பு முகாம்களை நடத்துகிறது. ஆனால், இதுவும் நிரந்தரத் தீர்வு கிடையாது அல்லவே. யானைகளை காடுகளில் இருந்து பிடித்து வருவது நிறுத்தப்பட வேண்டும். ஆக்கிரமிக்கப்பட்டுள்ள வழிதடங்கள் மீட்கப்பட வேண்டும். இந்தப் பரந்த உலகம் மனித இனத்துக்கு மட்டும் சொந்தமல்ல என்பதை ஒவ்வொருவரும் உணர வேண்டும். இங்கு பிற உயிரினங்களின் வளர்ச்சியைத் தடுத்து மனிதனால் சுயநலமாகத் தனித்து வாழ முடியாது. அவ்வாறு செ ய்தா ல் இயற்கை நம் நடவடிக்கைகள் எல்லாவற்றுக்கும் ஒரு முடிவு கட்டும். அப்போது அதை உணரவோ பார்க்கவோ மனித இனம் இருக்குமா என்பது கூட தெரியாது. பிப்ரவரி, 2023 31


கால்பந்தாட்டத்தின் கடவுள் பீலே சாதனை பிஜு ரோஷன் 32 பிப்ரவரி, 2023


தமிழில் ஐஷ்வர்யா ராஜேஷ் நடிப்பில் கனா என்றொரு படம் வெளிவந்தது. அதில் நாயகி கிரிக்கெட் வீராங்கனையாக இருப்பார். அவர் கிரிக்கெட்டரானதற்குப் பின்புலமாக அவருடைய அப்பா இருந்திருப்பார். கிரிக்கெட்டில் ஆர்வம் அதிகமுடைய அந்த அப்பா, நாயகி சிறுமியாக இருந்தபோது இந்தியா கிரிக்கெட்டில் தோற்றுப் போவதைக் கண்டு அழுதிருப்பார். அதைப் பார்த்த சிறுமிக்குள், `எங்க அப்பா அழக் கூடாது. நான் பெரியவளானதும், இந்தியாவை ஜெயிக்க வைப்பேன்’ என்ற எண்ணம் எழும். வளர்ந்து கிரிக்கெட் வீராங்கனையானப் பின், `என் அப்பா கண்ணுலதான் நான் முதன்முதலா கிரிக்கெட் பார்த்தேன்’ என்பார் நாயகி. இந்தக் கதையில், சிறுமியை ஒரு சிறுவனாக நினைத்துக் கொள்ளுங்கள். கிரிக்கெட்டை கால்பந்து என நினைத்துக் கொள்ளுங்கள் . இந்தியாவுக்கு பதில், பிரேசில். ஆண்டு, 1950. அந்த ஆண்டு நடந்த உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் மேற்குறிப்பிட்ட படத்தில் வரும் சீன் போலத்தான் நிஜத்தில் நடந்தது. அன்று பிரேசில் அணி போட்டியில் தோற்றது. அதை பிரேசிலின் ஒரு மூலையிலுள்ள கடையொன்றில் ரேடியோ கமெண்ட்ரியில் கேட்டுக் கொண்டிருந்தார் டான் டி ன ்ஹோ என்ற தொ ழி ல ா ளி . இ வ ரு ம் அடிப்படையில் ஒரு கால் பந்தாட்ட வீரர்தான். பிரேசிலின் பல க்ளப்களுக்காக விளையாடிய டின்ஹோ, ஒரு விபத்தொன்றில் காலில் ஏற்பட்ட பிரச்னையால் கால்பந்தை விட்டு விலக வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டிருந்தார். தான் விளையாடாவிட்டாலும், தன் அணி ஜெயிக்க வேண்டும் என்றிருந்தவர் டான்ஹோ. அப்படியானவர், தன் நாடு உலகக் கோப்பையில் தோற்றுவிட்டது என்ற செய்தியைக் கேட்டவுடன் கதறி அழத் தொடங்கினார். அதைக் கண்ட அவரின் 9 வயது மகன், ‘கவலைப்படாதீங்கப்பா... நான் பெரியவனானதும் பிரேசிலுக்கு உலகக் கோப்பை வாங்கித் தருவேன்’ என்றான். சொன்ன படியே செய்தான் அந்தச் சிறுவன். அவன் வேறு யாருமில்லை. பிரேசில் நாட்டின் அடையாளமான கால்பந்தாட்ட வீரர் எடிசன் அரான்டஸ் டி நாசிமண்டே என்ற இயற்பெயரை கொண்ட பீலே. பீலே, கால்பந்தாட்டத்தில் தன் நாட்டின் தோல்வியை நேரில் பார்க்கவில்லை; தன் தந்தையின் கண்களில் பார்த்தார். தன் தந்தையிடம் பீலே வாக்கு கொடுத்த ஆண்டு, 1950. அதன் பிறகு சரியாக 8 வருடங்களில், அதாவது 1958-ல் தன்னுடைய 17-ம் வயதில் முதல் உலகக் கோப்பையில் களம் இறங்குகின்றார் பீலே. இறுதிப்போட்டி வரை அணிக்காகச் சென்ற பீலே, அ ந்த ப் போட் டியில் ஸ் வீ டனை எதிர்கொண்டிருந்தார் . 55 மற்றும் 89 -வது நிமிடங்கள் என பீலே 2 கோல்களை அடித்தார். அந்த இரண்டு கோல்களின் காரணமாக, பிரேசில் அன்று வெற்றிபெற்றது; உலகக்கோப்பையை முத்தமிட்டது. சுமார் 8 வருடங்கள் கழித்து, தன் தந்தையின் கண்ணீரை தன் உலக சாதனையால் துடைத்த பீலே, பிரேசில் நாட்டின் ஒட்டுமொத்த மக்களையும் ஆனந்தக் கண்ணீருக்கு உள்ளாக்கினார் என்றே சொல்ல வேண்டும். அதனாலேயே, அன்று முதல் பிரேசில் மக்கள் அவரை கால்பந்து கடவுளாகவே நினைத்தனர். 1958-ம் ஆண்டுடன் பீ லே நின்றுபோய்விடவில்லை. அதன் பிறகும் சொல்லி வைத்தார்போல 1962, 1970 ஆகிய ஆண்டுகளிலும் தன் அணிக்காக உலகக் கோப்பையைப் பெற்றுக் கொடுத்தார். இதனால் பிரேசில் மக்களுக்கு மட்டுமன்றி, உலகம் முழுவதுமுள்ள அனைத்துக் கால்பந்தாட்ட ரசிகர்களுக்கும், பீலே கால்பந்தாட்ட கடவுளாகவே மாறினார். கறுப்பு முத்து என்று தன் ரசிகப் பெருமக்களால் ஆராதிக்கப்பட்டார். பீலேவை கால்பந்தாட்ட க்ளப் ஒன்றில் முதன்முதலாகச் சேர்த்துவிட்டவர், பிரேசில் கால்பந்தாட்ட அணியின் முன்னாள் வீரர் பிரிட்டோ என்பவர். இந்த பிரிட்டோ, பீலேவை பிப்ரவரி, 2023 33


`கோல் மெஷின்’ என்றே குறிப்பிடுவாராம். இவர்தான் பீலேவை சாண்டோஸ் கால்பந்தாட்ட கிளப்பில் இணைத்துவிட்டவர். சாண்டோஸ் கிளப்புக்காக, பீலே 1956-ல் முதன்முறையாக விளையாடினார். அதன் பிறகு கிட்டத்தட்ட ஓராண்டிலேயே பீலேவுக்கு பிரேசில் தேசிய அணியிடமிருந்து அழைப்பு வந்துவிட்டது. அதை ஏற்று 1957-ல் தேசிய அணிக்குச் சென்ற பீலேவுக்கு, 1958-ல் உலகக் கோப்பையில் பங்குபெறும் வ ா ய் ப்பும் கி டைத்த து. இதில் பீ லே இறுதிப்போட்டியில் 2 கோல்கள் அடித்திருந்தார் என்று சொன்னோமே... அதற்கு முன்னரேவும் அவர் சில வரலாறுகளைப் படைத்திருந்தார். அதில் முக்கியமானது கால் இறுதி ஆட்டத்திலும், அரையிறுதி ஆட்டத்திலும் அவர் நிகழ்த்திய சாதனைகள். கால் இறுதி ஆட்டத்தில், வேல்ஸ் அணிக்கு எதிராகக் களமிறங்கினார். அதில்தான் அவருடைய முதல் கோலை அவர் அடித்திருந்தார். அதை அவர் அடித்தபோது, அவருக்கு வயது 17 மட்டுமே. இதன்மூலம் உலகக்கோப்பை வரலாற்றில் மிக இளம் வயதில் கோ ல் அடித்த வ ர் என ்ற பெருமையை பீலே பெற்றார்! இதன்பின் அரையிறுதி ஆட்டத்தில் பிரான்ஸுக்கு எதிராகக் களமிறங்கினார் பீலே. அந்த ஆட்டத்தில் ஹாட்ரிக் கோல் அடித்தார் மனிதர்! இதன்மூலம் இளம் வயதில் ஹாட்ரிக் கோல் அடித்த வீரர் என்ற பெருமைக்கும் அவர் சொந்தக்காரரானார். இந்த இரண்டு சம்பவங்களுக்குப் பிறகு நடந்த இறுதிப் போட்டியிலும் இரு கோல்கள் அடித்து, அணிக்கு உலகக் கோப்பையையும் பெற்றுக்கொடுத்தார். அந்த நொடிதான்... பீலே என்ற மந்திரப் பெயர் உலகம் முழுவதும் பரவத் தொடங்கிய நொடி! கனாவில் வரும் சிறுமி கதாபாத்திரத்துடன், பீலேவின் வாழ்வை ஒப்புமைப்படுத்திக் கூற இன்னொரு காரணமும் உண்டு. அது, அவரின் வறுமை. பீலேவின் தந்தை டான்ஹோ, ஒரு தொ ழில்மு றை க ா ல்பந்தா ட ்ட வீரரா க இ ரு ந்தபோ திலும்கூ ட , அவ ரை வறு மை விடவில்லை. அதிலும் கால்பந்தாட்டத்தில் இருந்து அவர் வெளியேறிய பிறகு வறுமை அவரை விடாமல் துரத்தியது. வறுமையைப் போக்க ஷூ 34 பிப்ரவரி, 2023


பாலிஷ் போடுவது, வீட்டு வேலைகளுக்குச் செல்வது, டீக்கடைகளில் வேலை செய்வது என்றே இருந்திருக்கிறார் பீலே. பிறகு தந்தையின் உந்துதலினால், பிரேசிலின் அடையாளமாக மாறினார். பீலே, பிரேசிலின் அடையாளம் மட்டுமல்ல. அந்த நாட்டின் சொத்தும்கூட. கோல் மெஷின் பீலேவை, 1962-ம் ஆண்டு உலகக் கோப்பை போட்டி முடிந்ததும் ஜுவான்டஸ், ரியல் மாட்ரிட், மான்செஸ்டர் யுனைடெட் போன்ற அணிகள் ஒப்பந்தம் செய்ய முயன்றன. இன்றும்கூட 17 வயதுக்குப்பட்டோருக்கான உலகக் கோப்பையில் விளையாடுபவர்களிடம் போய் ``உங்களின் கனவு என்ன?'' எனக் கேட்டால், “ரியல் மாட்ரிட், மான்செஸ்டர் யுனைடெட், யுவண்டஸ் போன்ற அணிகளில் விளையாட வேண்டும்'' என்பார்கள். அந்த அளவுக்கு, கால்பந்தை உதைக்கத் தொடங்கிய கா ல ம் தொ ட ்டே கா ல்ப ந்து வீரர்கள ை ஆடம்பரமாக நடத்தக்கூடிய அணிகள் அவை! ஆனால் அவையே, பீலேவின் கையெழுத்துக்காகக் காத்துக் கிடந்தன. இதை முன்கூட்டியே அறிந்திருந்தனரோ என்னவோ ... அதற்கு ஒரு வரு ட த் து க் கு முன்னர்தான் அப்போதைய பிரேசில் அதிபர் ஜேனியோ குவாட்ரோஸ், பீலேவை `தேசத்தின் அதிகாரபூர்வமான சொத்து' என அறிவித்திருந்தார். பீலேவும், `பணத்துக்காகவோ புகழுக்காகாவோ தன் நாட்டைவிட்டு வேறொருவருக்கு விளையாடப் போவதில்லை’ என்று கொள்கை வைத்திருந்தார். பீ லே செ ய ்த மற்று மொ ரு அசா த் தி ய சா தனையென்றா ல், அது மூன்று உ லகக் கோப்பையை வென்ற ஒரே வீரர் என்பது . இதுவரை எந்தவொரு வீரருக்கும் இப்பெருமை கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது. 1970-ல் தன் அணிக்காக மூன்றாவது உலகக் கோப்பையை வென்று கொடுத்த பீலே, 1971-ல் சர்வதேச கால்பந்தாட்டத்தில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். சர்வதேச கால்பந்திலிருந்து ஓய்வு பெற்ற பிறகு, தொடர்ந்து சான்டோஸ் அணிக்காக பீலே விளையாடினார். பின்னர் 1975-ம் ஆண்டு சொந்த விருப்பத்தின் பேரில், அமெரிக்காவின் நியூயார்க் காஸ்மோஸ் அணியில் இணைந்தார். இந்த அணிக்காக 3 சீசன்கள் விளையாடிய பீலே, 1977- ம் ஆண்டு, அக்டோபர் 1-ம் தேதி கால்பந்திலிருந்து முற்றிலும் ஓய்வு பெற்றார். இத்தனை சாதனைகளுடன், இன்னுமொரு முக்கியமான சாதனையையும் செய்திருக்கிறார் பீலே. அது என்னவெனில், தனது கால்பந்து வாழ்க்கையில் ஆயிரம் கோல்களுக்கு மேல் அடித்தது. ரியோடி ஜெனிரோவிலுள்ள மரக்கானா மைதானத்தில் 1969-ம் ஆண்டு, நவம்பர் 19-ம் தேதி பீ லே தனது ஆயிரமாவது கோ லி னை வாஸ்கோடாகாமா அணிக்கு எதிராக அடித்தார். உலகக் கால்பந்து வரலாற்றில் 1120 போட்டிகளில் விளையாடி, 1087 கோல்களை அடித்து பீலே சாதனை புரிந்திருக்கிறார். 1940 இல் அக்டோபர் 23-ம் தேதி Tres Coracoes நகரில் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்த பீலே, தன் 82-வது வயதில் 22.12.2022 இல் புற்றுநோய் காரணமாக உயிரிழந்திருந்தார். பிரேசிலின் ரியோ டி ஜெனிரோ நகரிலுள்ள இயேசு சிலைக்கு நிகராக பிரேசிலின் அடையாளமாகத் திகழ்ந்தவர் , இனியும் திகழ்பவர் பீலே! `என்னது பீலே இ யே சு வி ன் அ டை ய ா ளத்தை எடுத்து க் கொள்வாரா?’ என்று சிலருக்குத் தோன்றலாம். பீலே என்ற வார்த்தை, பைபிளில் உண்டு. ஹீப்ரு மொழியில், அதற்கு `மிராக்கிள் ’அ த ாவது ஆச்சரியம் என்று பொருள். இந்த கறுப்பு முத்து செய்துவிட்டுச் சென்ற ஆச்சரியங்களில் இதுவும் ஒன்று! காலம் அவரை ரசிகர்களிடமிருந்து உடலால் பிரித்திருந்தாலும், வரலாற்றாலும் உணர்வாலும் பிரிக்கவே முடியாது! ஏனெனில் காலங்களை எல்லாம் கடந்த கடவுள் இந்த பீலே. பிப்ரவரி, 2023 35


If undelivered kindly return to: ARUMBU, Bosco illam, 26/17 Ranganathan Avenue, Sylvan Lodge Colony, Kellys, Chennai - 600 010. Date of publication: 1st week of every month. Regd. No. TN/CCN/ & WPP No. TN/PMG (CCR) WPP Registrar of Newspaper for India NO. 11807/66 Posted at Egmore R.M.S - Pathirikai Channel. இடமிருந்து வலம் 1. அரசனின் மகன் (5) 4. ……………… பிறைசூடி! பெருமானே! – தேவாரப் பாடல் 6. 60 நிமிடங்கள் சேர்ந்தது (2) 7. முக்கனியின் பெயர்கள் (1,2,2) 8. ஆல்பா, பீட்டா, ……………… கதிர்கள் என அறிவியலில் படித்திருப்போம் (2) 9. உலகம் – வேறு சொல் (4) 10. துள்ளி ஓடும் விலங்கு (2) 11. தினமும் என்னை ……………… என லாரியில் எழுதி வைத்திருப்பார்கள் (3) 15. ………….க்கு அரசி கண்ணகி என்பார்கள் (3) 16. முதன் முதலாக இந்தியாவிலிருந்து ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட படம் ……………..இந்தியா (3) 17. காவல் நிலையத்தில் வெளியே நின்றிருக்கும் காவலர்கள் கையில் வைத்திருப்பது (3) 18. சிலப்பதிகாரத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்ட பழைய தமிழ்ப்படம் (5) 21. தவளை இனத்தை சேர்ந்தது – வலமிருந்து இடமாக இருக்கிறது (2) 23. ஒன்பது விதமான பருப்பினை சேர்த்து நவ…………………. என்பார்கள் (4) 25. தேர் இழுக்கப் பயன்படுவது …………….. (3) 26. சென்னையில் ’இடியாப்பம், ஆட்டுக்கால் ………….’ ரொம்ப பிரபலம் (2) 27. மகன் – வேறு சொல் (5) மேலிருந்து கீழ் 1. விஷால் – அர்ஜுன் இணைந்து நடித்த திரைப்படத்தின் பெயர் (7) 2. சம்பளம், ஊதியம் – வேறு சொல் (5) 3. இந்தி மொழியில் வணக்கம் என்பதை இப்படி சொல்வார்கள். கலைந்துள்ளது (3) 4. நோய் – வேறு சொல் (2) 5. எல்லோரும் இன்புற்றிருப்பதை அன்றி வேறொன்றும் அறியேன் என்றவர் (6) 6. மழையை அளவிடும் கருவி (4) 11. சளி பிடித்தால் ………………வல்லி இலையை கசக்கி சாறெடுத்து கொடுப்பார்கள் (4) 12. …………..தும்புக்கு போகக் கூடாது என்பார்கள். கலைந்துள்ளது (3) 13. நெல்லுக்குள் அரிசி இல்லாது போனால் அதற்கு பெயர் …………. (3) 14. பழங்காலத்தின் பாபிலோனை தலைநகராக கொண்டிருந்தது ………………………. (5) 16. சகாதேவன் ………………………….. – தமிழ்த் திரைப்படம் (5) 19. கண்ணில் சதை வளர்ந்தால் அதை கண் …………… என்று சொல்வார்கள் (2) 20. சட்டை உரிக்கும் ஊர்வன உயிரி (3) 22. குழந்தையின் கையில் விளையாடக் கொடுப்பது ………………… (3) 23. ……வில் பஞ்சாபி உணவு வகைகள் கிடைக்கும் (2) 24. ஆறு – வேறு சொல் (2) விடை 2ஆம் பக்கம் பார்க்க ஆக்கம்: மோ.கணேசன் குறுக்கெழுத்து - 15 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 36 பிப்ரவரி, 2023


Get in touch

Social

© Copyright 2013 - 2024 MYDOKUMENT.COM - All rights reserved.