Minmini_JAN_2023_Web_FF Flipbook PDF

Minmini_JAN_2023_Web_FF

73 downloads 118 Views 5MB Size

Recommend Stories


Porque. PDF Created with deskpdf PDF Writer - Trial ::
Porque tu hogar empieza desde adentro. www.avilainteriores.com PDF Created with deskPDF PDF Writer - Trial :: http://www.docudesk.com Avila Interi

EMPRESAS HEADHUNTERS CHILE PDF
Get Instant Access to eBook Empresas Headhunters Chile PDF at Our Huge Library EMPRESAS HEADHUNTERS CHILE PDF ==> Download: EMPRESAS HEADHUNTERS CHIL

Story Transcript

I¡IQ | 1

2 | I¡IQ

வணக்கம். அனைவருக்கும் தமிழர் திருநாள் வாழ்த்துகள். தை மாத இதமான குளிருடன் சென்னை புத்தகத் திருவிழா அமர்க்களமாக நிகழ்ந்துக�ொண்டிருக்கும் சமயம் இது. இந்த முறை முதல்முறையாக அரசு நடத்தும் மூன்று நாட்கள் சர்வதேசப் புத்தகக் கண்காட்சியும் இணைந்துள்ளது கூடுதல் சிறப்பு. இப்போதெல்லாம் எல்லா மாவட்டங்களிலும் முக்கிய நகரங்களிலும் த�ொடர்ந்து புத்தகத் திருவிழாக்கள் நடைபெறுகின்றன. புத்தகம் வாசிக்கும் வழக்கம் இல்லாதவர்களையும் ஈர்க்கும் விதமாகச் சிறப்பான பேச்சாளர்களைக் க�ொண்டு பேச்சரங்கங்களும், இலக்கிய நிகழ்வுகளும், புத்தக வெளியீட்டு விழாக்களும் இணைந்து நடக்கின்றன. அதிலும் ஆர்வம் இல்லாதவர்களை ஈர்ப்பதற்காக உணவுக் கூடங்களும் குழந்தைகளுக்கான ப�ொம்மைகள், மாங்காய், ச�ோளம், டெல்லி அப்பளம் விற்கும் கடைகளும் உண்டு. குழந்தைகளிடம் வாசிக்கும் ஆர்வத்தை வேண்டியது பெற்றோரின் கடமை என்பேன்.

வளர்க்க

I¡IQ | 3 அவர்களுக்கு வாசிப்பில் ஆர்வம் இல்லையென்றாலும் அவர்களின் குழந்தைகளுக்குப் புத்தக உலகத்தை அறிமுகப்படுத்த வேண்டியது அவசியம். முதலில் உங்கள் குழந்தைகளிடம் புத்தகம் வாசித்தலின் அவசியம் என்ன என்பதை ஒரு நண்பனைப் ப�ோல உரையாடிப் புரியவையுங்கள். பல தலைவர்களின் வாழ்க்கை வரலாறுகளும், நாட்டின் வரலாறும், சாதனையாளர்களின் அனுபவங்களும், பல வகை மனித மனங்களையும் வாழ்க்கை முறைகளையும் ஆவணப்படுத்தும் நாவல்களும், சிந்தனையை விதைக்கும், தூண்டும் கட்டுரைகளும் ஒரு மனிதனின் மனதை எப்படியெல்லாம் பக்குவப்படுத்தும், எப்படி அறிவை வளர்க்கும் என்றெல்லாம் எடுத்துச் ச�ொல்லுங்கள். அதன் பிறகு அவர்களை இதுப�ோன்ற புத்தகத் திருவிழாக்களுக்கு அழைத்துச் செல்லுங்கள். முதலில் இத்தனை புத்தகக் கடைகளா, இத்தனை புத்தகங்களா என்று பார்த்து பிரமிக்கட்டும். அடுத்து அவர்கள் கையில் ஒரு த�ொகை க�ொடுங்கள். அவர்கள் என்ன புத்தகம் தேர்வு செய்ய வேண்டும் என்று நீங்கள் சிபாரிசு செய்யாதீர்கள். வழிகாட்டுவத�ோடு நிறுத்திக்கொள்ளுங்கள். அவர்களின் ரசனைக்கேற்ற புத்தகங்களைத் தேர்வுசெய்ய முதலில் அனுமதியுங்கள். நீங்களே அவர்களுக்காக இதுதான் சிறந்தது என்று தேர்வு செய்தால் அந்தப் புத்தகங்களின் மீது அவர்களுக்கு ஆர்வமில்லாமல்கூடப் ப�ோகலாம். அதனாலேயே வாங்கித் தந்த புத்தகத்தைப் படிக்கப் பிரியப்படாமலும் ப�ோகலாம்.

4 | I¡IQ

வாசிப்பைத் துவங்க இருக்கும் புதிய குழந்தைகளுக்கு சித்திரக் கதைப் புத்தகங்களே சிறந்தவை. இன்று பலவகையான கதைகள் எழுதும் பல எழுத்தாளர்களையும் கேட்டுப் பாருங்கள். அவர்கள் எல்லோருமே முத்து காமிக்ஸ், அம்புலி மாமா புத்தகங்களில் இருந்துதான் வாசிப்பைத் துவங்கியிருப்பார்கள். அதேப�ோல வழக்கமாகப் புத்தகங்களைத் தேடித் தேடி வாங்குபவர்களுக்கு சில வார்த்தைகள். வாங்கும் புத்தகங்களை அடுத்த புத்தகத் திருவிழாவுக்குள்ளாவது படித்து முடித்து விடுவேன் என்று சபதம் எடுத்துக் க�ொள்ளுங்கள். (ஒரு நிமிஷம்.. அப்படியான சபதத்தை முதலில் நான் எடுத்துவிடுகிறேன்) நீங்கள் வாங்கிய புத்தகங்களைப் பற்றி, அவற்றைப் பற்றிய உங்கள் விமர்சனங்களுடன் அவசியம் சமூக வலைதளங்களில் பகிர்ந்து க�ொள்ளுங்கள். அவை மற்றவர்களை வாங்கலாம் என்றோ, வாங்க வேண்டாம் என்றோ முடிவெடுக்க உதவும். இரண்டுமே நல்லதுதான். ஒன்று பதிப்பாளருக்கும், படைப்பாளருக்கும் நன்மை பயக்கும். இன்னொன்று படிப்பாளரின் பர்சுக்கு நன்மைப் பயக்கும். மின்மினி அடுத்த இதழ் முதல் அச்சிதழாகவும் வரவிருக்கிறது. கூடுதலாக பல அம்சங்களும் இடம் பெற இருக்கின்றன. த�ொடர்ந்து ஆதரவு தருவதில் மகிழ்ச்சி. நன்றி.

6 | I¡IQ

I¡IQ | 7

தேவதைகள் எப்போதும் தேவதைகளாக இருந்துவிடுவதில்லை. பல பெண்களும் ஒரு குறிப்பிட்ட வயதில் மட்டுமே தேவதையாகத் த�ோற்றமளிப்பார்கள். சில தேவதைகள், மழைக்காலத்தில் மண்ணில் சிதறிக் கிடக்கும் செம்பருத்திப் பூக்களை எடுத்தபடி அரைக்கண்ணில் மட்டும் காதல் ப�ொங்க, “ஏம்ப்பா நேத்து நீ ஸ்கூலுக்கு வரல? என்னம�ோ மாதிரியே இருந்துச்சு…” என்று ச�ொல்லும் 16 வயது பள்ளிக்காலத்தில் மட்டும் தேவதைகளாக இருக்கிறார்கள். சிலர் ஃப்ரிட்ஜில் வைத்த வானவில் ப�ோன்ற அதி இளமையான த�ோற்றத்துடன் காலேஜ் பஸ்சில் நம்மைக் கடைக்கண்ணால் பார்த்துக்கொண்டே த�ோழியிடம் உரையாடும் கல்லூரிக் காலத்தில் மட்டும் தேவதைகளாக இருக்கிறார்கள். வேறு சிலர் இளமையின் உச்சமான 25 வயதில் சற்றே முதிர்ச்சியான முகத்துடன் தேவதைகளாக த�ோற்றமளிப்பார்கள்.

8 | I¡IQ

ஆனால் அழகின் தெய்வம் சில சமயங்களில் சிலரை தேர்வு செய்து, அவர்களை நீண்ட காலம் அழகியாக வைத்திருக்கிறது. அவ்வாறு அழகின் தெய்வத்தால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களில் ஒருவர் நடிகை த்ரிஷா. இன்று 40 வயதிலும் தேவதையாக ஜ�ொலிக்கிறார். “40 வயது பெண் தேவதையா?” என்று கேட்கும் கல்நெஞ்சக்காரர்கள் ‘ப�ொன்னியின் செல்வன்’ திரைப்பட ப்ரம�ோஷன் நிகழ்வுகளில் த்ரிஷா த�ோன்றிய புகைப்படங்களை கவனியுங்கள். “அதெல்லாம் மேக்கப் சார்…” என்பவர்களுக்காக : மேக்கப் ப�ோட்டாலும் அழகாகத் த�ோற்றமளிக்க வேண்டுமல்லவா? நானே த்ரிஷாவிற்கு வயதாகிவிட்டது என்று நடுவில் சற்று அலட்சியமாக அவரை கவனிக்காமல் விட்டதற்காக இந்தக் கட்டுரையை எழுதும் ப�ொன்னான தருணத்தில் தமிழ்ச் சமூகத்திடம் மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன். சினிமாவில் த�ொடர்ந்து 20 ஆண்டுகளாக 60-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் கதாநாயகியாக நீடிப்பது என்பது மிகவும் அபூர்வமாக நிகழும் நிகழ்வு. அற்புதமான அழகியான நடிகை ÿவித்யாவை எல்லாம் 36 வயதிலேயே அம்மா நடிகையாக மாற்றிய தமிழ் சினிமாவில் த்ரிஷா 40 வயது வரை முன்னணி நடிகையாக நீடிப்பதெல்லாம் மாபெரும் சாதனை. 1983 மே நான்காம் தேதி பிறந்த த்ரிஷா பள்ளிப் படிப்பை சர்ச் பார்க்கில் முடித்துவிட்டு, எத்திராஜ் காலேஜில் பிபிஏ படித்தார். 1999-ல் ‘மிஸ் சென்னை’ப் பட்டத்தை வென்ற த்ரிஷா, 2001ல் நடைபெற்ற ‘மிஸ் இந்தியா’ ப�ோட்டியில் “Beautiful Smile” விருதைப் பெற்றப�ோது த்ரிஷாவிற்கு தெரியாது… அந்தப் புன்னகை பல ஆண்டு காலம் திரையில் மின்னும் என்று. த்ரிஷாவின் உதடுகள் சிரிப்பதற்கு முன்பே அவருடைய முகம் சிரித்துவிடும். வின�ோதமான புன்னகை அது. அவர் சிரிக்கும்போது மட்டுமல்ல... சிரிக்கவேண்டும் என்று நினைக்கும்போதே த்ரிஷாவின் முகம் அழகாகிவிடுகிறது.

I¡IQ | 9 2002-ல் ‘ம�ௌனம் பேசியதே’ படத்தில் த்ரிஷா அறிமுகமாகிவிட்டாலும், நான் முதலில் பார்த்த த்ரிஷா நடித்த திரைப்படம் 2003-ல் வெளியான ‘சாமி’. இந்தப் படம் அதிரடி ஹிட்டாக… த்ரிஷா கவனிக்கப்பட்டார். கவனித்த நெஞ்சங்களை தனது அழகாலும், நடிப்பாலும் டக்கென்று கவர்ந்துவிட்டார் த்ரிஷா. இப்படத்தில் வயலட் நிறத் தாவணியில் த்ரிஷா அறிமுகமாகும் காட்சியிலேயே ரசிகர்களைக் கவர ஒரு காரணம் இருக்கிறது. வெறும் கையை வீசிக்கொண்டு நடக்கும் கல்லூரிப் பெண்ணை விட, மல்லிகைப்பூ ஜடையை முன்னால் ப�ோட்டுக்கொண்டு பெரிய ரிகார்ட் ந�ோட்புக்கையும் டிஃபன் பாக்ஸையும் நெஞ்சில் அணைத்தபடி நடக்கும் பெண் எப்போதும் கூடுதல் அழகுதானே? எனவே த்ரிஷா அவ்வாறு த�ோன்றிய முதல் காட்சியிலேயே “யார்ரா இந்தப் ப�ொண்ணு?” என்று கூர்ந்து பார்க்க வைத்துவிட்டார். பின்னர் இடுப்புக்கு கீழ் நீளும் சட்டை மற்றும் பாவாடையுடன் த்ரிஷா விக்ரமை திருடன் என்று நினைத்து அறையில் அடைத்துவிடுவார். பின்னர் உண்மை தெரிந்து ஒரு மாதிரியான தவிப்புணர்வுடன் முகத்தை சுழித்தபடி மிக அழகாக த்ரிஷா ‘ஸாரி’ என்று உச்சரித்தப�ோது உலகின் மிக அழகிய வார்த்தை ‘ஸாரி’ என்ற முடிவுக்கு வந்தேன். த�ொடர்ந்து இப்படத்தில் இயக்குனர் ஹரி சித்தரித்திருந்த தனித்துவமான காதல் காட்சிகளால் த்ரிஷா தமிழ் சினிமாவில் தனக்கான நாற்காலியை ப�ோட்டு அமர்ந்தார். ஒரு அழகிய நடிகை ரசிகர்களைக் கவர்வதற்குத் தேவையான விஷயங்களில் ஒன்று... அவர் அறிமுகமான காலகட்டத்தில் ஒரு ஹிட் பாடலில் அவரின் அழகு விதம் விதமாக வெளிப்படுத்தப்படவேண்டும். அப்பாடலை மீண்டும் மீண்டும் காணும் ரசிகர்களின் நெஞ்சில் அவர் குடியேறிவிடுவார்.

10 | I¡IQ

அவ்வாறான பாடலாக த்ரிஷாவிற்கு அமைந்தது, ‘சாமி’ படத்தில் இடம்பெற்ற, ‘இதுதானா?” பாடல். இப்பாடல் விக்ரம் - த்ரிஷா நிச்சயதார்த்த காட்சியில் துவங்கும். விசேஷ வீட்டு இளம்பெண்களுக்கு என்று ஒரு தனி அழகு உள்ளது. பட்டுப்புடைவை, நகைகள், தலை நிறைய பூ… என்று பெண்கள் அழகு மலையின் அடிவாரத்திலிருந்து சட்டென்று மலையுச்சிக்கு தாவும் தருணம் அது. அது ப�ோல் இந்தப் படத்தில் த்ரிஷாவும் மேற்கூறிய அலங்காரத்துடன் தனது த�ோழியின் த�ோளில் சாய்ந்தபடி, கண்களில் குறும்புடன் விக்ரமைச் செல்ல முணுமுணுப்புடன் திட்டியப�ோது விக்ரம் மட்டும் அல்லாமல் தமிழர்களும் த்ரிஷாவைக் கூர்ந்து கவனிக்க ஆரம்பித்தனர். பின்னர் கண்களை மூடி கடவுளை வேண்டிக்கொண்டிருக்கும்போது த்ரிஷா ஒற்றைக் கண்ணை மட்டும் திறந்து விக்ரமைப் பார்த்துவிட்டு, விக்ரம் அதைப் பார்த்துவிட்டதை அறிந்தவுடன் த்ரிஷா மிக அழகாக கண்களை மூட… தமிழ் ரசிகர்கள் கண்களை மூடவேயில்லை. த�ொடர்ந்து அப்பாடலில் ஊரார் விக்ரமிடம் மரியாதையாக பேசுவதை பெருமிதத்துடன் பார்ப்பதிலிருந்து… சமையலறையில் விக்ரமுக்கு உணவூட்டிய அழகு வரை அழகின் அத்தனை சாத்தியங்களையும் வெளிப்படுத்த…. த்ரிஷா ஸ்ட்ராங்காக ரசிகர்களின் மனதில் உட்கார்ந்துவிட்டார். பின்னர் த்ரிஷா தெலுங்குப் படங்களிலும் நடித்து ஹிட்டாக… ஆந்திரா வரையிலும் தனது எல்லையை விரிவுபடுத்தினார். 2004-ல் விஜய்யுடன் நடித்த ‘கில்லி’ படத்தின் மாபெரும் வெற்றி த்ரிஷாவை தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்களுள் ஒருவராக்கியது. அதே ஆண்டு வெளிவந்த மணிரத்னத்தின் ‘ஆயுத எழுத்திலும்’ த்ரிஷா நடித்திருந்தார். தனது வித்தியாசமான தனித்துவமான காட்சி

I¡IQ | 11 ரசனை காரணமாக எ ல்லாவ ற ்றை யு ம் திரையில் இரண்டு மடங்கு அழகாக காண்பிக்கும் மணி ரத்னம், த்ரிஷாவை திரையில் நான்கு மடங்கு அழகாக க ா ண் பி க ்க … இன்னும் இன்னும் என்று த்ரிஷாவின் க்ராஃப் ஏறியது. த �ொட ர் ந் து வி ஜய் யு ட ன் திருப்பாச்சி, குருவி அஜித்துடன் ஜி, கிரீடம், சூர்யாவுடன் ஆறு… என்று த�ொடர்ந்த த்ரிஷாவின் கேரியர் தமிழில் க�ொஞ்சம் தடுமாற… ஆந்திரா அவரை முழுமையாகத் தன் பக்கம் எடுத்துக் க�ொண்டது. இக்காலகட்டத்தில் த்ரிஷா ஏராளமான தெலுங்குப் படங்களில் நடித்தார். பின்னர் 2018-ல் வெளிவந்த ‘96’ படத்தில் தனது அற்புதமான நடிப்பு மூலமாக த்ரிஷா தமிழ்நாட்டின் 2கே கிட்ஸ் மனத்திலும் இடம்பெற… இன்று ‘ராங்கி’ வரை த்ரிஷாவின் அழகுப் பயணம் நாற்பது வயதிலும் நாயகியாக த�ொடர்கிறது. முத்தாய்ப்பாக… ‘ப�ொன்னியின் செல்வ’னில் ஒரு காட்சியில் உலக அழகி ஐஸ்வர்யா ராயைத் தாண்டி நம் கண்கள் த்ரிஷாவின் மீதே தங்கியிருந்ததைப் பகிரங்கமாக ஒப்புக் க�ொண்டீர்கள் என்றால், இந்த என் கட்டுரையை நீங்கள் ஆதரிக்கிறீர்கள் என்று அர்த்தம்!

m

ஜி.ஆர்.சுரேந்தர்நாத்

12 | I¡IQ

îI› ‘Ç¡’

ப�ொங்கல் பரிசு எதுவும் வேண்டாம் அங்கிள்..... மூணு நாளைக்கு டாஸ்மாக்கை மூடுனா அதைவிட இனிப்பான ப�ொங்கல் பரிசு எதுவுமே இருக்க முடியாது.....

I¡IQ | 13

நான் இவரைக் காதலித்தேன். காதலிக்கிறேன், காதலிப்பேன்! ஏனென்றால், திரைப்படத் துறையின் ‘ஒரே பின்னணிப் பாடகர்’ டி.எம்.எஸ்தான்! குழம்ப வேண்டாம். ‘பின்னணிப் பாடகர்’ என்பதற்கான அர்த்தத்துக்கு முழுத் தகுதியுடையவராகத் தன்னைச் செதுக்கிக்கொண்டவர் அவர் மட்டும்தான் என்பதாலேயே அப்படிச் ச�ொல்கிறேன்.

பாடத் தெரிந்தவர்கள் மட்டுமே நடிகர்களாகவும் ச�ோபிக்க முடியும் என்றிருந்த காலகட்டத்தில், எம்.ஜி.ஆர். கதாநாயகனாகத் த�ோன்றிய முதல் படமான ‘ராஜகுமாரி’யிலிருந்துதான் ‘பின்னணிப் பாடகர்கள்’ என்கிற ஒரு த�ொழில்முறைப் பிரிவே உருவாயிற்று. தமிழ்த் திரையின் முதல் பின்னணிப் பாடகராக அறியப்படுபவர் திருச்சி ல�ோகநாதன். பாடகர்கள் ஒவ்வொருவருமே தனித்திறமை மிக்கவர்கள்தான். ஆனால், திரையில் எந்த நட்சத்திரம் த�ோன்றி நடித்தாலும், அந்தப் பாடகர்கள் தங்கள் குரலில்தான் பாடுவார்கள். எந்த நடிகருக்கு எந்தப் பாடகரின் குரல் ப�ொருத்தமாக இருக்கும் என்று இசையமைப்பாளர்கள்தான் பார்த்துத் தக்கபடி பயன்படுத்திக் க�ொள்ள வேண்டும். ஜெமினி கணேசன் என்றால் ஏ.எம்.ராஜா அல்லது பி.பி. ÿனிவாஸ், தங்கவேலு என்றால் எஸ்.சி.கிருஷ்ணன், நாகேஷ் என்றால் ஏ.எல்.ராகவன் என்று வகை பிரித்துக் க�ொள்வார்கள். அப்படித்தான் எம்.ஜி.ஆருக்கும் சிவாஜிகணேசனுக்கும் திருச்சி ல�ோகநாதன், சி.எஸ். ஜெயராமன் எனச் சிலர் பாடிக்கொண்டிருந்தார்கள். அப்போது வந்தாரய்யா எங்கள் ஏழிசை மன்னன் டி.எம்.

14 | I¡IQ

ச�ௌந்தர்ராஜன்! ‘பின்னணிப் பாடல்’ என்றால், இசையமைப்பாளர் க�ொடுத்த மெட்டை மட்டும் வைத்துக்கொண்டு தன் ப�ோக்கில் பாடுவதன்று; திரையில் த�ோன்றி நடிக்கும் கதாநாயகனே பாடுவதாகப் படம் பார்க்கும் ரசிகர்கள் உணர வேண்டும் என்பதை மனதில் இருத்திக்கொண்டு, அந்தந்த நாயகர்களின் குரல் தன்மையை, பேசும் பாணியை முழுமையாக உள்வாங்கி, அதற்கேற்ப தன் குரலை அடி வயிற்றிலிருந்தும், மார்புப் பகுதியிலிருந்தும், த�ொண்டைக் குழியிலிருந்தும், உதட்டிலிருந்தும் வெளிப்படுத்திப் பாடியவர் டி.எம்.எஸ் மட்டுமே! அவருக்கு முன்னும் யாரும் இல்லை; அவருக்குப் பின்னும் யாரும் இல்லை. அதனால்தான், ஆரம்பத்தில் ச�ொன்னேன், திரைப்படத் துறையின் ‘ஒரே பின்னணிப் பாடகர்’ டி.எம்.எஸ் என்று. நாயகர்களுக்கேற்ப மட்டுமா டி.எம்.எஸ். பாடினார்? இல்லை; அவர்கள் என்ன கதாபாத்திரம் ஏற்றிருந்தார்கள�ோ, அதற்கேற்பவும் பாடினார். ‘அன்னை என்னும் கடல் தந்தது, தந்தை என்னும் நிழல் க�ொண்டது, பிள்ளைச் செல்வம் என்னும் வண்ணம் கண்ணன் பிறந்தான்’ என்று பாடும்போது காவல்துறை அதிகாரிக்கே உரிய கம்பீரம், ‘உள்ளதைச் ச�ொல்வேன், ச�ொன்னதைச் செய்வேன், வேற�ொன்றும் தெரியாது’ என்று பாடும்போது விசுவாசம் மிக்க வேலையாளின் அப்பாவித்தனம், ‘தரவும் பெறவும் உதவட்டுமே, நம் தனிமை சுகங்கள் பெருகட்டுமே’ என்று பாடும்போது மன்னனுக்குண்டான மிடுக்கு, ‘மண்ண நம்பி உழுது வச்சி, மழைய நம்பி வெத வெதச்சி, வயல நம்பி வாழ்ந்திருந்தா கண்ணம்மா, ஒரு பயல நம்பத் தேவையில்லே சின்னம்மா…’ என்று பாடும்போது ஒரு விவசாயியின் மண் மீதான பாசம், ‘பக்திப் பெருக்கில் எந்தன் ஊன் உருக, அந்தப் பரவசத்தில் உள்ளே உயிர் உருக…’ என்று பாடும்போது தெய்வீகச் சிலிர்ப்பு… ச�ொல்லிக்கொண்டே ப�ோகலாம். நாயகர்களுக்கும் அவர்கள் தரித்த கதாபாத்திரங்களுக்கும் மட்டுமின்றி, அந்தக் கதாபாத்திரங்கள் எந்தப் பகுதியை, இனத்தைச் சேர்ந்தவர்கள�ோ, அதற்குப் ப�ொருத்தமான குரலிலும் பாடியிருக்கிறார் டி.எம்.எஸ். ‘விருதுநகர் வியாபாரிக்கு சின்னக்கண்ணு, நீயும் வித்துப் ப�ோட்டுப் பணத்தை எண்ணு செல்லக்கண்ணு’ என்பதில்

I¡IQ | 15

க�ோயமுத்தூர் குரல்; ‘ஏளா முத்தம்மா எம் மனசு எம்புட்டு, எங்கிட்டதான் ச�ொல்லுடீயம்மா…’ என்பதில் தூத்துக்குடிக் குரல்; ‘ஆலம் விழுதுகள் ப�ோல் உறவு ஆயிரம் வந்துமென்ன… வேரென நீ இருந்தாய், அதில் நான் வீழ்ந்துவிடாதிருந்தேன்…’ என்பதில் பிராமண இனத்துக்கான குரல்; ‘நீலமலைக் காத்தாக நான் பெத்த புள்ளே, மண்ணாளப் ப�ொறந்தானடி…’ என்பதில் க�ொங்கு கவுண்டர்களுக்குரிய குதூகலக் குரல்… எனப் பட்டியல் நீளும்! அது மட்டுமில்லை த�ோழர்களே… யாருக்கு, எப்படிப் பாடினாலும் தமிழைத் தமிழாக, அதன் இனிமையும் கம்பீரமும் அழகும் கெடாமல் உச்சரித்துப் பாடியவர் டி.எம்.எஸ். ‘கன்னி இளமை என்னை அணைத்தால்...’ என்று அவர் பாடும்போது அணைப்பின் சுகம் தெரியும்; ‘நதியில் விளையாடி க�ொடியில் தலை சீவி நடந்த இளந்தென்றலே…’ என்று பாடும்போது தென்றலின் இதம் தெரியும்; ‘பட்டம் மட்டும் வாங்கி வந்து பாய்ந்து செல்லப் பார்க்குதடி…’ என்று பாடும்போது பாரிஸ்டரின் பதற்றம் தெரியும்; ‘இமயத்தில் வட எல்லை, குமரியில் தென் எல்லை; வீட்டுக்கு ஒரு பிள்ளை, அடிமைகள் இனி இல்லை’ என்று பாடும்போது விடுதலைப் ப�ோராட்ட வீரம் தெரியும். ‘தமிழ் சினிமாவின் ஒரே ஒரு ஆண் குரல்’ என்று இளையராஜா சும்மாவா ச�ொன்னார்?! அம்மாவுக்குப் பாடினால் ஒரு குரல்; காதலிக்குப் பாடினால் ஒரு

16 | I¡IQ

குரல்; தங்கைக்குப் பாடினால் ஒரு குரல். அதென்ன மாயம் செய்வார�ோ தெரியவில்லை… ‘மல்லிகை முல்லை…’ என்று பாடும்போதும், ‘எந்தன் ப�ொன் வண்ணமே, அன்பு பூ வண்ணமே…’ என்று பாடும்போதும் அது காதலிக்காக தூக்கிலிடப்படும் ஒரு நிமிடம் இல்லை, தங்கைக்காகப் பாடுகிறார் முன்பு வரைக்கும் புத்தகம் என்று டி.எம்.எஸ்ஸின் குரலே படித்தவர் பகத்சிங்! ச�ொல்லிவிடுகிறது. ‘நான் கடவுளைக் கண்டேன்…’ பாட்டில், ‘உனக்கொரு தாய் ப�ோல் தனக்கில்லையே என்று இறைவன் நினைத்தான�ோ… எனக்கென உன்னை க�ொடுத்து உன் அன்னை அங்கே ப�ோனாள�ோ…’ என்று டி.எம்.எஸ் பாடுகிறப�ோது, அந்தக் குரலில் இழைய�ோடும் ச�ோகம் நம் மனத்தை அழுத்துகிறது. ‘பார் மகளே பார்…’ பாடலில், ‘உண்பதென்று உணவை வைத்தால் உன் முகத்தைக் காட்டுகிறாய்… உறக்கம் என்று படுக்கை ப�ோட்டால் ஓடி வந்து எழுப்புகிறாய்… கண்மணியில் ஆடுகிறாய், புன்னகையில் வாட்டுகிறாய், கண்ணிழந்த தந்தைதனையே என்ன செய்ய எண்ணுகிறாய்…’ என்கிற வரிகளை டி.எம்.எஸ் பாடும்போது உங்கள் கண்கள் கண்ணீரைச் ச�ொரியவில்லையென்றால் என் பெயரை மாற்றிக்கொள்கிறேன். எந்தப் பாடலானாலும் அதன் ப�ொருளை முழுமையாக உள்வாங்கிக் க�ொண்டு பாடுவதால்தான், அவர் உச்சரிக்கும் வரிகளில் உயிர�ோட்டம் இழைய�ோடுகிறது. ‘முத்தைத்தரு பத்தித் திருநகை’ பாடலைப் பாடுவதற்கு முன்பாக வாரியாரிடம் ப�ோய் அதற்குப் ப�ொருள் கேட்டு அறிந்துக�ொண்டு வந்து பாடியவராயிற்றே… அந்த மெனக்கிடல்தான் என்னை அவரின் ரசிகனாக்கியது. பிறக்கப்போகும் ஜீவனுக்கு ஒரு பாட்டு; ப�ோகப்போகிற உயிருக்கு ஒரு பாட்டு; திருமணத்துக்கு ஒரு பாட்டு; மரணத்துக்கு ஒரு பாட்டு; காதல் வெற்றிக்கு ஒரு பாட்டு; காதல் த�ோல்விக்கும் ஒரு பாட்டு; நட்புக்கு ஒரு பாட்டு; துர�ோகத்துக்கும் ஒரு பாட்டு; ஆத்திகத்துக்கு ஒரு பாட்டு; நாத்திகத்துக்கும் ஒரு பாட்டு என டி.எம்.எஸ். பாடாத விஷயமே இல்லை.

ம் புத்தக .. . என்பது

I¡IQ | 17 சினிமாப் பாடல்கள் தவிர,, டி.எம்.எஸ்ஸின் இசையமைப்பில் உருவான முருக பக்திப் பாடல்கள் அந்த முருகனையே அழைத்து வந்து நம் எதிரே நிறுத்தும் ஆற்றல் க�ொண்டவை. பிரமுகர்கள் பலருக்கு மிக வேண்டியவராக இருந்தும், உதவி என்று ஒரு நாளும் யாரிடமும் ப�ோய் நின்றதில்லை டி.எம்.எஸ். தன் மகன்கள் சிறந்த பாடகர்களாக இருந்தும் ‘வாய்ப்பு க�ொடு’ என்று எந்தத் தயாரிப்பாளரிடமும் கையேந்தி நின்றதில்லை. தனக்கு இன்ன விருது க�ொடுக்கவில்லை என்று புலம்பியதில்லை ஒருநாளும். பிரபலங்களைவிட அவர் அதிகம் நேசித்தது தன் ரசிகர்களைத்தான். ‘ஏன் பிறந்தாய் மகனே, ஏன் பிறந்தாய�ோ?’ பாடல் ஒலிப்பதிவு நாளில்தான், டி.எம்.எஸ்ஸின் மூத்த மகன் 16 வயதில் இறந்துப�ோனான். எனவே, மேடைக் கச்சேரிகளிலும் அல்லது வேறெந்த நிகழ்விலும் அந்தப் பாடலைப் பாடுவதைத் தவிர்த்துவிடுவார் டி.எம்.எஸ். ஆனால், உடல் நலிவுற்றுப் படுக்கையில் இருந்த வயது முதிர்ந்த ஒரு ரசிகையின் விருப்பத்துக்காகத் தன் க�ொள்கையைத் தளர்த்திக்கொண்டு, அந்தப் பாடலைப் பாடினார். அந்த ரசிகை வேறு யாருமல்ல, கவிஞர் வாலியின் தாயார்தான். கடும் காய்ச்சல் கண்டிருந்த நேரத்திலும் அதைப் ப�ொருட்படுத்தாமல் பல மைல்கள் பயணம் செய்து, திண்டுக்கல் சென்று, தன் ரசிகரின் திருமணத்தை நடத்திவைத்தது, மற்றொரு ரசிகரின் வீட்டு விசேஷத்தில் கலந்துக�ொள்வதற்காக ‘ஆல் இண்டியா ரேடிய�ோ’ நிகழ்ச்சியைத் தவிர்த்தது என ரசிகர்களுக்காகவே உருகியவர் டி.எம்.எஸ். “ரசிகர்களின் அன்புதான் என்னை ஆர�ோக்கியமா வெச்சிருக்கு; அவர்களின் வாழ்த்துதான் என்னைக் காப்பாத்திக்கிட்டு வருது!” என்றுதான் அவர் தன் பேட்டிகளிலும் மேடைக் கச்சேரிகளிலும் கடைசி வரை ச�ொல்லிக் க�ொண்டிருந்தார். அப்படிப்பட்ட மகா கலைஞனை எந்த ரசிகருக்குத்தான் பிடிக்காது?!

(குறிப்பு: வருகிற 24.03.2023 அன்று டி.எம்.எஸ்ஸுக்கு நூறு வயது.)

ரவிபிரகாஷ்

18 | I¡IQ

I¡IQ | 19



டந்த செப்டம்பர் 29ம் தேதி 2022 உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி இனி ‘கருக்கலைப்பிற்காக வரும் கர்ப்பிணிகளை அவர் திருமணமானவரா ஆகாதவரா எனப் பாகுபாடுகள் பார்க்கக் கூடாது. சம்பந்தப்பட்ட பெண்ணின் சம்மதம் ஒன்று இருந்தாலே ப�ோதும் ; பாதுகாப்பான கருக்கலைப்பை முறையான இடத்தில் செய்துக�ொள்ள அவளுக்கு முழு உரிமையும் இருக்கிறது’ என உச்ச நீதிமன்றம் வரையறுத்திருக்கிறது. வரவேற்கத்தக்க தீர்ப்பு இது. விருப்பப்பட்டோ விருப்பமின்றிய�ோ வலுக்கட்டாயமாகவ�ோ ஒரு கருவைச் சுமக்கும் பட்சத்தில் சம்பந்தப்பட்ட ஆண் அடையாளம் காணப்படாமலேயே காட்சியில் இருந்து இச்சமூகத்தால் விலக்களிக்கப்படுகையில் / பாதுகாக்கப்படுகையில் பெண் மட்டும் வாழ்நாளைக்கும் தண்டிக்கப்படுவது நியாயமல்ல. அத்தனை விதிமுறைகளைத் தாண்டி கடந்து ஒரு அபார்ஷனை முடிப்பதற்குள், ‘தகவல் குறித்த ரகசியம் காக்கப்படுமா ?அவங்க பாத்தாங்கள�ோ இவங்க பாத்தாங்கள�ோ தெரிஞ்சுடும�ோ?’ என்கிற சந்தேகம் சம்பந்தப்பட்ட பெண்களுக்கோ அவர்களின் குடும்பத்தினருக்கோ எழுவதும், அதனாலேயே அவர்கள் அரசினால் அங்கீகரிக்கப்படாத முறையாக மருத்துவப் பயிற்சி பெறாதவர்களிடத்தில் உயிரைப் பணயம் வைத்து காதும் காதும் வைத்தமாதிரி கருக்கலைப்பு செய்ய முற்படுவதும், அதனால் அங்கொன்றும் இங்கொன்றுமாக அப்பாவிக் கர்ப்பிணிகள் உயிர்விடுவதுமான அவலம் ஒன்றிரண்டு நடந்துக�ொண்டுதான் வருகிறது. கருக்கலைப்பு ஒன்றும் அத்தனை எளிதான செயல் அல்ல. ப�ோகிற ப�ோக்கில் எங்கேனும் எவரிடத்திலேனும் வயிற்றை சுத்தம் செய்து தா என கர்ப்பப்பையைக் கழற்றித் தந்துவிட்டுப் ப�ோகிற விஷயமல்ல என்பதை மக்களும் உணர வேண்டும். 12 வாரம் முதல் 14 வாரத்திற்கும் குறைந்த கருவைக் கலைப்பதற்கான முறைகள் இரண்டு உண்டு. மருந்து மாத்திரைகள் (Medical abortion) மூலம் செய்யப்படுவது, (VacuumAspiration) சிரிஞ்சுகள் மூலம் செய்யப்படுவது.

20 | I¡IQ

மெடிக்கல் (மாத்திரைகள் மூலம்) அபார்ஷன்! * இதில் அறுவை சிகிச்சை முறைகள் எதுவும் தேவையில்லை. இவ்வளவு நேரத்திற்குள் முடிந்துவிடும் என டைம் குறிப்பிட்டு ச�ொல்ல முடியாது. ஆனாலும் மாத்திரை உட்கொண்ட சில மணிகளில் இருந்து குறிப்பிட்ட நாட்களுக்குள் வீட்டிலேயே அபார்ஷன் ஆகிவிடும். * த�ொடர் கண்காணிப்பிற்காக அடிக்கடி மருத்துவமனை வந்துப�ோக வேண்டியி ருக்கும். * கருக்கலைப்பின் பின்பாக உதிரப்போக்கு, வலி, வாந்தி, குமட்டல் ப�ோன்ற த�ொந்தரவுகள் இருக்கலாம். * அதீத உடல் பருமன் உள்ள பெண்கள், அறுவை சிகிச்சை முறைகளுக்குத் தயங்கும் பெண்கள், கருப்பையில் அமைப்பு ரீதியிலான குறைபாடுகள் fibroid சதைக் கட்டி உள்ளவர்கள் , வாக்யூம் முறை விருப்பமில்லாதவர்களுக்கு இந்த முறையை அறிவுறுத்தலாம். * இந்த மாத்திரைகளுக்கு ஒவ்வாமை உள்ளவர்கள், Inherited porphyria, அட்ரீனல் பாதிப்பு.. உள்ளவர்களுக்கும், கருவானது கர்ப்பப்பையை விட்டு கருக்குழாயில் அல்லது வெளியில் தங்கி இருந்தாலும் மெடிக்கல் அபார்ஷன் சாத்தியம் இல்லை. * கருத்தடை சாதனங்கள் ப�ொருத்தி இருப்பின் எடுத்தபின் செய்வதே நல்லது. வாக்யூம் அஸ்ப்பிரேஷன் (VA) * சில நிமிடங்களுக்குள் செய்து விடலாம். * முடித்த உடனேயே முழுவதுமாக கரு வெளியானதா என்பதை ஊர்ஜிதம் செய்து க�ொள்ளலாம். * மருத்துமனையில் மட்டுமே சாத்தியம். * கருக்கலைப்பு செய்த கைய�ோடு குடும்பநல அறுவை சிகிச்சை செய்வத�ோ கருத்தடை சாதனங்கள் ப�ொருத்திக் க�ொள்வத�ோ எளிது. * சிறு காயங்கள் எப்போதாவது மிக அரிதாக ஏற்படலாம். * கருத்தடை சாதனங்கள் இருப்பின் எடுத்தபின் அபார்ஷன் செய்வதே நல்லது. 12வாரம் முதல் 14 வாரத்திற்கும் மேற்பட்ட கருக்கலைப்பு முன்சொன்ன மெடிக்கல் (மருந்து மாத்திரைகள்) மூலமும் அபார்ஷன் செய்து க�ொள்ளலாம். ஆனால் இம்முறை மருத்துவமனையில் மட்டுமே

I¡IQ | 21 செய்ய அனுமதி. கரு வெளியான பின்தான் வீட்டிற்குச் செல்லலாம். கருப்பையில் வெடிப்போ விரிசல�ோ வர வாய்ப்புண்டு என்பதால் அதையும் கண்காணிக்க வேண்டும். மற்றொரு நடைமுறை இது : Dilatation and Evacuation (D&E) (கர்ப்பப்பை வாய் விரிவடையச் செய்து கருவை அகற்றுதல்) விரைந்து செய்து முடிக்கக் கூடிய பாதுகாப்பான முறை. அங்கீகரிக்கப்பட்ட மருத்துவமனையில் மட்டுமே சாத்தியம். ப�ொதுவாக கருக்கலைப்பிற்கான காரணங்களாக அறியப்படுபவை : * இரண்டு குழந்தைகள் ப�ோதும் என்று நினைத்த பின்னரும் எதேச்சையாக அல்லது எதிர்பாராத விதமாகக் கருவுறுதல். * முதல் குழந்தைக்குப் பின் ப�ோதுமான இடைவெளி விடநினைத்து ஆனால் விடாமல் .. எதிர்பாராத விதமாக கருவுறுதல் * ஆண் குழந்தை ம�ோகம். தமிழ்நாட்டில் மட்டுமே த�ொன்றுத�ொட்டு இருந்து வரும் இந்த ஆண்குழந்தை ம�ோகத்தினால் பதிமூன்றாம் குழந்தை வரை பெற்றெடுத்தவர்களும் உண்டு. * பாலியல் வன்முறையால் கருவுறுவது. * மென�ோபாஸ் நெருங்கும் நிலையில் இனி கருத்தரிக்க ப�ோவதில்லை என நம்பியிருக்கும் நிலையில் 40 வயதுகளுக்கும் மேல் கருத்தரிப்பதும், வளர்ந்த குழந்தைகளுக்கு மத்தியில் குழந்தை பெற்றுக் க�ொள்வதை அவமானமாகக் கருதும் சமூகம். ‘நவீன வாசக்டமி’ ஆண் குடும்பநல அறுவை சிகிச்சைக்கு அறவே ஒத்துழைக்காத ஆண்களின் மனப்பாங்கு ஒருபுறம் ; ஆண்கள் மட்டு மல்ல பெண்களுமே தன் கணவரை இதற்கு அனுமதிக்காததும் பயந்து மறுப்பதும் ஆச்சர்யம். வேதனை! கத்தியின்றி ரத்தமின்றி நேர விரயமின்றி செய்யப்படும் நவீன வாசக்டமி ஆண்களுக்குக் கசக்கத்தான் செய்கிறது. திருமணமாகாத பெண்களும் தன் சுயவிருப்பத்தின் பேரில் கருக்கலைப்பு செய்யலாம் என்கிற உச்சநீதி மன்ற தீர்ப்பின் பிறகு, இதுவரையில் தயக்கத்தோடு முறையற்ற பாதுகாப்பற்ற கருக்கலைப்பிற்குப் ப�ோனவர்கள் இனி அதைத்தவிர்த்து அரசு மருத்துவமனைகளையும் அங்கீகரிக்கப்பட்ட மருத்துவமனைகளையும் தைரியமாக அணுகுவார்கள் என்பதில் சந்தேகமில்லை; இதனால் பல அபலைப் பெண்களின் வாழ்வும் உயிரும் பாதுகாக்கப்படும் என்பதே பெரும் நிம்மதி.

m

டாக்டர் ரேவதி மணிபாலன்

22 | I¡IQ

ஏற்றுக்கொள்ள முடியாத மன்னிப்பு? -மதுரை முருகேசன், தஞ்சாவூர்.

ஒரு

அலட்சியச் செயலால் அல்லது அமிலம் ப�ோன்ற ச�ொல் வீச்சால் விளைந்த உயிரிழப்பிற்கு யாரிடம் எத்தனை முறை மன்னிப்பு கேட்டாலும் என்ன பிரய�ோஜனம்? மன்னிப்பு என்பது உயிருடன் இருப்பவரிடம்தானே கேட்க இயலும்?

சமீபத்தில் உங்கள் மனதைப் பாதித்த சம்பவம் எது? -மல்லிகா தேவி, ஹ�ோசூர்.



ரு கிராமத்தின் குடிநீர்த் த�ொட்டியில் சில விஷமிகள் அசிங்கம் கலந்ததால் ஏற்பட்ட பாதிப்புகளும், விளைவுகளும்! எத்தனை வன்மம் இருந்தாலும் இப்படி ஒரு வக்கிரத்தனமான, ஈனத்தனமான செயல் செய்ய அந்த விஷமிகளுக்கு எப்படி மனம் வந்தது என்று ய�ோசித்துப் பார்க்கவே முடியவில்லை. சக மனிதனை நேசிக்க வேண்டாம். சாகடிக்காதீர்கள் பாவிகளே!

குடும்பத்துடன் நிகழும் தற்கொலைகளை எப்படிப் பார்க்கிறீர்கள்? -செங்குட்டுவன், மாகாளியூர்.

நேற்றுக்கூட

ஒரு செய்தி படித்தேன். இரண்டு சின்னக் குழந்தை களுக்கு விஷம் க�ொடுத்துவிட்டு பெற்றவர்களும் அருந்தி குடும்ப மாக இறந்திருக்கிறார்கள். அதெப்படி தற்கொலையில் சேரும்? குழந்தைகளுக்கு விஷம் க�ொடுத்துக் குடிக்கச் செய்யும்போது அது க�ொலையில் அல்லவா சேரும்? கணவன், மனைவிக்குள் ஏற்படும் பிரச்சினைகளுக்கு அவர்கள் என்ன பாவம் செய்தார்கள்? அவர்கள் உங்கள் மூலம் உலகிற்கு வந்தவர்கள். அவ்வளவே. தனி

I¡IQ | 23 உயிர்கள். அவர்களின் வாழ்வையும் சேர்த்து முடிக்க முடிவெடுக்கும் உரிமை பெற்றோருக்குக் கிடையாது.

இக்காலக் குழந்தைகள் இயல்பான பாசத்தை விடவும், அவர்களுக்கு வாங்கித் தரும் ப�ொருள்களை வைத்துத் தானே பிரியம் காட்டுகிறார்கள்? -பழனீஸ்வரி தினகரன்.

ப�ோன

தலைமுறை மனிதர்கள் ப�ொருளார ரீதியில் சிரமப்பட்ட வர்கள். ப�ோராடி ஜெயித்தவர்கள். இந்தத் தலைமுறையில் பணப் புழக்கம் நிச்சயமாக அதிகரித்திருக்கிறது. தேவைக்கும் அதிகமாகவே பல நடுத்தர வர்க்கத்தினர் இரட்டை வருமானங்களுடன் வாழ்கிறார்கள். அதனால் நாம் அனுபவிக்காததை நம் குழந்தைகள் அனுபவிக்கட்டும் என்று அவர்கள் கேட்கும்போதும், கேட்காத ப�ோதும் பரிசுப் ப�ொருள்களாக வாங்கிக் க�ொடுத்துக் க�ொடுத்து அவர்களின் மன அமைப்பையே மாற்றி விடுகிறார்கள். இப்படி வளரும் குழந்தைகளால் தான் சின்ன ஏமாற்றத்தைக்கூட தாங்க முடிவதில்லை. நினைத்தது நடந்தே தீர வேண்டும், ஆசைப்பட்டது கிடைத்தே தீர வேண்டும் என்கிற பிடிவாதங்கள் ஆழமாக வேர் விட்டு மனதில் வளர்ந்துவிடுகின்றன.

“நேரமில்லை” என்று எல்லாவற்றுக்கும் சிலர் ச�ொல்வது குறித்து? -மதுரை முருகேசன், தஞ்சாவூர்.

நே

ரத்தைத் திட்டமிடத் தெரிய வில்லை என்பதே சரியாக இருக்கும். இப்போது ஹார்ட் வ�ொர்க் ஃபார்முலா இல்லை. எங்கும் ஸ்மார்ட் வ�ொர்க் ஃபார்முலாதான்! குவாண்டிட்டி டைமுக் கும், குவாலிட்டி டைமுக்கும் உள்ள வித்தியாசம் தெரிய வேண்டும். ஒரு மேடையில் ஒரு பேச்சாளர் முப்பது

24 | I¡IQ

நிமிடம் பேசியிருப்பார். ஆடியன்ஸ் ப�ொறுமையிழந்து க�ொட்டாவி மென்று, செல்போன் ந�ோண்டும் நிலைக்கும் ப�ோயிருப்பார்கள். இன்னொரு பேச்சாளர் ஐந்தே நிமிடங்களில் பத்துக் கைத்தட்டல் வாங்கி ஆடியன்சை நிமிர்ந்து உட்காரவைத்திருப்பார். எல்லா வேலைகளையும் நாமே செய்ய வேண்டும் என்பதில்லை. சரியான நபர்களைத் தேர்வு செய்து பிரித்துக்கொடுத்து வேலை வாங்கத் தெரிந்திருந்தால் ப�ோதும். சினிமாவில் ஒரு இயக்குனருக்கு கிரியேட்டிவிட்டி கடந்து சிறந்த நிர்வாகத் திறனும் தேவைப்படுகிறது. சிலர் உடனடியாக செய்ய வேண்டிய காரியங்களுக்கும், ஒரு வாரம் கழித்து செய்ய வேண்டிய காரியங்களுக்குமே வித்தியாசம் தெரியாமல் மாங்கு மாங்கென்று உழைப்பார்கள். எதிலும் புத்திக் கூர்மையுடன் ய�ோசித்து, திட்டமிட்டு செயலாற்றினால் நேரமில்லை என்கிற வார்த்தை வரவே வராது.

முத்தத்தின் நிறம் என்ன? ச�ொல்லுங்கள் பார்க்கலாம்)

(எங்கே

-மங்கை மணாளன், சிதம்பரம்.

சிவப்பு! – பல் படும்படியாக நிகழும்போது! யார�ோடு சினிமாவுக்குப் ப�ோவீர்கள்? -கவி தென்றல், ஈர�ோடு.

பெரும்பாலும் மனைவியுடன். எப்போதாவதுதான் நண்பர்களுடன்.

இன்னொரு விஷயம். இதுவரை நான் மட்டும் தனியாகச் சென்று படம் பார்த்ததே இல்லை. நல்ல வேளையாக என் திருமதியாருக்கும் சினிமா பார்க்கும் ரசனை இருப்பதால் எந்த சினிமாவுக்கும் உற்சாகமாக எனக்கு கம்பெனி க�ொடுப்பார். (நல்லா செலக்ட் செஞ்சிங்களே இந்தப் படத்தை! என்று பிறகு அர்ச்சனை நிகழ்வதும் உண்டு. ஜனவரி ஒன்றாம் தேதி கூட வாங்கிக்கட்டிக்கொண்டேன்)

ஜல்லிக்கட்டு – நீங்கள் ஆதரவாளரா? -பிரதீப், குண்டூர்

எப்போது

எந்த மாடு யாரைக் குத்தி குடலைச் சரிக்கும�ோ

I¡IQ | 25 என்கிற பதைப்புதான் ஏற்படுகிறது. தயாராக டாக்டர்களை வைத்துக் க�ொண்டு நடத்தப்படும் இந்த வீர விளையாட்டு நம் பாரம்பரியமாக இருந்தாலும்.. இன்னொரு உயிருக்கு (சமயத்தில் வேடிக்கைப் பார்க்கப் ப�ோ கி ற வ ர ்க ளி ன் உயிருக்கும்) ஆபத்தை விளைவிக்கிற ஒரு விளையாட்டை என்னால் ஏற்க முடிவதில்லை. இதை வீரம் என்றால்.. எல்லையில் நம் இராணுவ வீரர்கள் செய்யும் சாகசங்களை என்னவென்று குறிப்பிடுவது?

சமீபத்தில் எப்போது எரிச்சலடைந்தீர்கள்? -ராஜாகண்ணு, த�ொட்டியம்.

வீ

ட்டில் டிரைனேஜ் ரிப்பேர் பணி நடந்தது.

குழாயில்

சம்மந்தப்பட்ட பிளம்பர், தனக்கு நீண்ட கால அனுபவம் என்று ச�ொல்லியவர், ஒரு பக்கத்திலிருந்து இன்னொரு பக்கத்திற்கு நான்கு இஞ்சுகள் வாட்டம் வைத்து பைப்பைப் ப�ொருத்துவதற்கு தடுமாறி திணறி தவறாகப் பதித்து பல மணி நேரங்களை வீணடித்தத�ோடு அதை ஒப்புக்கொள்ளாமல் வாதம் செய்துப�ோது ஏற்பட்டதற்கு எரிச்சல் என்றுதானே ச�ொல்லியாக வேண்டும்?

எனக்குச் சுதந்திரம் வேண்டாம், சிறையில் புத்தகம் வாசிக்க அனுமதி தந்தால் ப�ோதும்.

– நெல்சன் மண்டேலா

ம் புத்தக .. . என்பது

26 | I¡IQ



ருல நெல, புலம்... த�ோப்பு த�ொறவுன்னு வசதியாத்தா இருந்தோம். க�ொஞ்ச க�ொஞ்சமா வானம் ப�ொய்ச்சி ப�ோச்சி... சாகுபடி பண்ண வாங்குன கடன அடைக்க நெலத்த வித்தாக் கூட பத்தாது ப�ோல... படிப்பும் சுத்தமா ஏறல, ஊருக்குள்ள கெவுரதையா இருந்தாச்சி, கையக்கட்டி ஒருத்தங்கிட்ட வேல பாக்கவும் மனசு ஒப்பல. பாத்தாரு எங்க அப்பா... அங்க இங்க தேடி ஒரு ஏஜண்ட புடிச்சி இங்க அனுப்பி வுட்டுட்டாரு. ச�ொன்னதென்னம�ோ ஆபிஸுல ஹெலுப்புக்குனு... ஆனா, வந்த பெறவுதான்

தெரிஞ்சிச்சி பாலவனத்துல ஒட்டகம் மேய்க்கிறதுன்னு. க�ொண்டோயி ஒரு க�ொட்டா மாதிரி ஒண்ணு இருந்துச்சி, அதுல ப�ோயி ப�ோட்டானுவ�ோ. எதுத்துக் கேட்டா ஊரு ப�ோயிச் சேர முடியாதுன்னு புரிஞ்சிச்சி. அவன் பேசறது எனக்குப் புரில, நான் பேசறது அவனுக்குப் புரில. ஒவ்வொரு சமயம் உசிர விட்டுடலாம் ப�ோல இருக்கும். அப்றம் வாங்குன கடன் கண்ணு முன்ன வந்து ப�ோகும். எப்டிய�ோ காலத்தக் கடத்தி வந்து சேந்துடணும். ஏஜெண்டுகாரன் நல்லா ஏமாத்தி வுட்டுட்டான். அவஞ்

ச�ொன்னது ஒரு சம்பளம், இங்க வந்தா வேற. அதும் ம�ொத மூணு மாசம் சம்பளமே தர்ல, அப்றந்தா தெரியுது டூரிஸ்ட் விசாவுலதான் அனுப்பி வுட்ருக்கான்னு. சரி, தெரிஞ்ச ஆளு தானன்னு நம்பி வந்தா, நம்பள ஏமாத்தி அவன் சம்பாதிச்சிப்புட்டான். தகவல் தெரிஞ்சி வூட்லேர்ந்து கேக்கச் ச�ொன்னா, எனக்கு ஒண்ணுமே தெரியாதுன்னு பசப்புறான். அவனுக்கு... நான் ஊருக்கு ப�ோயி இருக்கு. அப்பறம் ஒரு வேலைல சேத்து வுட்டானுவ�ோ. காலைலேர்ந்து நடுராத்திரி வரைக்கும் ப�ோட்ற தட்டு, பாத்திரம்லாம் கழுவிக்கிட்டே

I¡IQ | 27 கெடக்கணும். கையெல்லாம் ஊறிப் ப�ோயி ப�ொத்து, ப�ொத்து ப�ொயிடும். என்ன ஒண்ணு... லேட்டா லேட்டா சாப்புட்டாலும் சாப்பாடு மட்டும் கெடச்சிடும். எப்ப மாட்றன�ோ தெரில. அதுவரைக்கும் ஓட்டுவ�ோம். வூட்ல அதெல்லாம் ச�ொல்லல, கட்டட வேலன்னு ச�ொல்லி வச்சிருக்கேன். படிச்சி முடிச்சோன்னேய வேலக்கி ப�ோயி சம்பாதிச்சி குடுத்தாத்தா மதிக்கிறாங்க. நானு எத்தன கம்பேனி ஏறி எறங்கிருப்ப... எல்லா எக்ஸ்பீரியன்சு இல்லன்னு சேத்துக்க மாட்டேக்குறாங்க. அப்பறம் க�ோபி மாமா மவன் ரமேசு பாரீன் ப�ோயிதா நல்லா சம்பாதிச்சி அனுப்புறதா கேள்விப்பட்டு அப்பா என்னயும் பணத்தக் கட்டி அனுப்புனாங்க. அதுக்கு எத்தன டெஸ்டு எத்தன அலச்ச... சரி பாரீன் வேலன்னு உள்ளுக்குள்ள சந்தோஷந்தான். ஆனா, இங்க வந்த பெறவுதான் தெரியுது அதுல உள்ள வலியும், வேதனயும். ஒரு பக்கம் வூட்டப் பிரிஞ்சி இருக்குற கஷ்டன்னா, இன்னோரு பக்கம் வேல. காலேலங்காட்டியும் ஏத்திட்டு ப�ோவ வண்டி வந்துடும். அதுக் குள்ள அவசர அவசரமா பாத்ரூம் ப�ோயி எல்லாத்தையும் முடிச்சிட்டு ச�ோற மட்டும் வடிச்சிட்டு, நைட்டு வச்ச க�ொழம்ப சூடு பண்ணி, எல்லாத்தையும் எடுத்துக்குட்டு ஓடணும். வண்டிய வுட்டுட்டா டாக்ஸி புடிச்சி ப�ோற காசுக்கு அந்தூரு காசுக்கு ரெண்டு டீயக் குடிச்சிட்லாம்.

வேல பாக்குற எடத்துல செத்தநேரம் ஒக்கார வுட மாட்டா னுவ�ோ, எங்கேருந்தாவது க�ொரல் குடுத்துக்குட்டே இருப் பானுவ�ோ. சாப்புட, டீ குடிக்க எப்படா வுடுவா னுவ�ோன்னு இருக்கும். அப்பதா ரெஸ்ட்டு. சாயங்காலம் வேல முடிஞ்சி ரூமுக்கு வந்தா, அடுப்பு கெடச்சி சமச்சி சாப்புட்டு, க�ொஞ்ச நேரம் டிவிய பாப்போம். அத�ோட அன்னைய ப�ொழுது ப�ோயிடும். இப்டியே மெஷினு மாரி ஓடிக்கிட்டே கடக்கோம். சம்பாதிச்சி சம்பாதிச்சி வூட்டுக்கு அனுப்பிக்கிட்டே தான் இருக்கன். ஆனா, கடன் மட்டும் அடஞ்ச பாடுல்ல. கேட்டா, நீ அனுப்புற காசு வட்டிகட்டவும், வூட்டு செலவுக்குமே சரியாப்போய்ட்டுங்கு றாங்க. வருஷந்தான் ஓடுது. ஏன் வயசு பயலுவ�ோல்லா ஊருக் குள்ள ஜாலியா சுத்திக்கிட்டு திரியி ரானுவ�ோ. எனக்கும் ஆசல்லாம் இருக்காதா. இங்க வாரத்துல ஒரு நாள், ரெண்டு நாள் லீவுருக்கு. ஆனா, அன்னிக்கும் ஓவர் டைம் பாத்து அனுப்புனாதான சீக்கிரம் கடனக் கட்ட முடியும். எப்பயாவது ஓவர் டைம் இல்லாதப்போ சும்மா டவுனுக்குள்ள சுத்திட்டு வருவ�ோம். எதும் வாங்கலான்னா எல்லா வெல அதிகம். சம்பளம் ப�ோட்றன்னிக்கி எப்பயாவது ஒரு நா மட்டும் வெளில சாப்ட்றது . திடீருனு ஊர்ல ப�ொண்ணு பாத்துருக்கோம், கல்யாண ஏற்பா டெல்லாம் ஆயிடுச்சி, லீவு ப�ோட்டு வந்து கல்யாணத்த முடிச்சிட்டுப் ப�ோன்னு லட்ரு வந்துருக்கு. கூடவே

28 | I¡IQ

ப�ொண்ணு ப�ோட்டோ இருந்துச்சி. ப�ொண்ணெல்லாம் புடிச்சிதான் இருக்கு, இப்டி திடுதிப்புன்னு ச�ொன்ன து த ா ன் ஒண்ணும் புரியல. ஒரு தடவ கூட நேர்ல பாக்காம எப்படி. கேட்டது ரெண்டு மாசம் லீவு. கெடச்சத�ோ 1½ மாசந்தான். அதுல ப�ோக்குவரத்துலயே பாதி ப�ொயிட்டு. அப்புறம் கல்யாணம், மறுவூடு, விருந்துன்னே பாதி... ப�ொண்டாட்டி கிட்ட பேசிப்பழகி புரிஞ்சிக்கறத்துக்குள்ள லீவு முடிஞ்சிட்டு. இதுக்கு முன்னாடி ஒண்ணும் பெருசாத் தெரில, இப்போ எந்த நேரமும் ஆச வந்துக்குட்டே இருக்கு. கல்யாணத்துக்கு முன்ன எவ்ளவ�ோ கட்டுப்பாடா இருந்த மனசு இப்போ கடந்து அல பாயுது. அதும் நைட்டு தூங்கப்போம் ப�ோதுதா ர�ொம்ப கஷ்டமா இருக்கு. அடுத்து எப்படா லீவு கெடச்சி ப�ோலான்னு த�ோனுது. இப்போ லீவுல ப�ோனப்பதான் க�ொஞ்சமாவது நேரம் கெடச்சிது, ஃபுல்லா ப�ொண்டாட்டி கூடவே இருக்கணுன்னு ஆசதான். ஆனா, அம்மாவும் சரி ச�ொந்தக்காரங்களும் சரி, கல்யாணத்துக்குப் பின்னாடி மாறிட்டான். ப�ொண்டாட்டி முந் தானைய புடிச்சிக்கிட்டு அலையு றான்னு ச�ொல்லிடக் கூடாதுல்ல... அது மட்டும் இல்லாம, இப்டி வரப்போ பாத்தாதான் உண்டு, அதுவும் இருக்கு. எம்பொண்டாட்டி ம�ொகத்துல க�ொஞ்சம் வாட்டந்

தெரியும். அப்றம் பேசிப் புரிய வச்சப் புறம்தான் க�ொஞ்சம் தெளிவாச்சி. லீவு முடிஞ்சி வந்து க�ொஞ்ச நாள்ள எம் ப�ொ ண ்டாட் டி உ ண் டாயிருக்கான்னு ச�ொன்ன ப ்போ எ ன்னா ல யே எ ன்ன கட் டு ப ்ப டு த்த முடியாத உணர்வு வந்துச்சி. அழவா, சிரிக்கவா ஒண்ணுந் த�ோணல... கூட இருந்தவங்கல்லா நான் கத்துனத பாத்து என்னம�ோ ஏத�ோன்னு குமிஞ்சிட்டாங்க. அப்றம் விஷயந் தெரிஞ்சி எல்லாம் பார்ட்டி வைக்க ச�ொல்லி ஒரே சத்தம். அது ஒரு பக்கம் சந்தோஷந்தான், இந்த சமயத்துல கூட இருக்க முடியாம இங்க கடக்கமேனு மனசு கடந்து தவிச்சிச்சி. அத நான் எம்பொண்டாட்டிகிட்ட காட்டிக்கல, தெரிஞ்சா இன்னும் சங்கடப்படுவா. அப்புறம் புள்ள ப�ொறக்கறப்பவும் லீவு கெடைக்கல மூணு வருஷங்கழிச்சி ப�ோனா புள்ளக்கி அடையாளமே தெரியல. ர�ொம்ப நாளுக்கப்றம் ஒடஞ்சி ப�ோயி அழுதது அப்போதா. வயசான காலத்துல அலச்சலெதுக்குன்னு பணத்த ப�ொண்டாட்டிக்கு அனுப்புனா... அம்மா, அப்பாவுக்கு க�ோவம் வந்துடுது, சரி பெரியவங்கன்னு அவங்களுக்கு அனுப்புனா, நான் ஒவ்வொரு ரூவாய்க்கும் உங்க

I¡IQ | 29 அப்பா மூஞ்ச பாத்துக்குட்டு நிக்க வேண்டியதுருக்குங்குறா அவ. நடுவுல நான் கடந்து அல்லாட்றன். ஏத�ோ நடுவுல ஓவர்டைம் பாத்து, பார்ட்டைம் வேல பாத்து, எதாவது ப�ொருள வாங்கி அனுப்புனா அதுலயும் அங்க சண்ட வந்துடுது. நம்ம நம்பி வந்த ப�ொண்ணு கூடதான் இருக்க முடில. இப்டி எதுனா வாங்கி அனுப்புனாலாவது க�ொஞ்சம் சந்தோசப்படுவான்னு பாத்தா... எங்க? அனுப்புறதெல்லாம் செலவா யிட்டே இருக்கு. எதையாவது வாங்கிப் ப�ோட்டுக்குட்டே இருக் காங்க. எனக்கும் ஊருக்கு ப�ோயி ப�ொண்டாட்டி, புள்ளங்கள�ோட இருக்கணுன்னு ஆச இருக்காதா? இந்த பாழப்போன தண்ணிப் பழக்கம் வந்து ஆட்டி வக்கிது, ஆரம்பத்துல அப்டி இல்ல. ப�ோகப்போக மனசு பாரமா இருக்கறப்போ அடிக்க ஆரம் பிச்சி, இப்போ அதுவே பழக்க மாயிட்டு. ஊருக்கு ப�ோனா மாப்ள, மாமான்னு வந்துட்றாங்க. வேணான்னு ச�ொன்னா ப�ொல் லாப்பா ப�ோயிடுது இப்டிதான் முருகன் அங்க குடிச்சி, இங்கயும் வந்து அதிக மாயி ம�ொதல்ல கீழ வுழுந்து எலும்ப முறிச்சிக்கிட்டான். அப்புறம் தேறி வந்து க�ொஞ்ச நாள்ள மஞ்சகாமால அறிகுறி இருந்தும் குடிய விட முடியாம ப�ோயி சேந்துட்டான். அவனுக்குதான் சாகுற வயசா. எல்லா சின்னச் சின்ன புள்ளைங்க. வெளிநாட்ல இருந்தப்பயாவது ஏத�ோ

க�ொஞ்சம் பணத்த அனுப்புனா. அப்பப்போ வந்து பாத்துட்டுப் ப�ோனான். இப்போ ம�ொத்தமா நட்டாத்துல வுட்டுட்டு ப�ோயிட்டான். இதப் பாத்த பெறகாவது நானும், என்னப் ப�ோல கூட்டாளிங்களும் திருந்தாட்டி அது அவங்கவங்க குடும்பத்துக்கு செய்யுற துர�ோகம். எள வயசுல வந்தப்பல்லாம் கும்மாளமா ப�ோயிட்டு. இப்போ குடும்பன்னு ஆயிட்டு ஊருலயே ப�ோயி இருந்துடுவ�ோன்னா, அங்க ப�ோயி என்ன பண்ணுவ�ோன்னு மலப்பா இருக்கு. இந்த வயசுல ப�ோயி வேல கேட்டா குடுப்பானுவளா தெரில. சரி எதும் கட கண்ணிய வச்சி ப�ொழச்சிக் கலான்னா அதும் எப்புடி ப�ோவும�ோன்னு தயக்கமா இருக்கு. மவ படிச்சி முடிக்கப் ப�ோறா, கல்யாணமே வரப் ப�ோவுது. இத�ோடயாவது முடிச்சிட்டு வந்து டுங்கன்னு ச�ொல்றா ப�ொண்டாட்டி. பாப்போம், விதி விட்ட வழி அப்டி இருந்தா நல்லதுதா... எந்தலைல என்ன எழுதியிருக்குத�ோ... யாருக்குத் தெரியும்?

m

அன்பிற்கினியவன்

30 | I¡IQ

உங்கள் ஊரிலும் உண்டா? சரியாகப் பகல் பதின�ொன்றிலிருந்து பன்னிரண்டுக்குள் பார்ஸல் டீ வாங்க எவர்ஸில்வர் தூக்குடன் டீக்கடைகளின் பார்லர்களுக்கருகே நிற்கும் வேலைக்காரப் பையன்களும் பெண்களும் கிராமங்களைத் தவிர்த்த எல்லா ஊர்களிலும் இருப்பார்களா?

அதிலும் ஒற்றைக் கையில் ஹேண்டில்பாரைப் பிடித்துக் க�ொண்டு ஒற்றைக் கையால் டீத்தூக்கைப் பிடித்த வண்ணம் ஒரு காலால் உந்திக் க�ொண்டு மறுகாலால் சைக்கிள் பெடலை மிதிக்கத் துவங்கும் அவர்கள் எனது மற்றும் அந்த வெய்யில்நேரக் கடவுளின் ஆசீர்வாதங்களைக் கட்டாயம் பெறுவார்களாக!

I¡IQ | 31

ஹ ா ய்

எவ்ரிபடி....

புது வருஷத்தை வரவேற்று க�ொண்டாடித் தீர்த்தாச்சு. சர்வதேச புத் தகத் திருவிழாவும் வந்தாச்சு. என்னைப் ப�ொறுத்தவரை ஒவ்வொரு வருஷமும் புத்தகக் கண்காட்சிக்குப் ப�ோனா இந்த ஆண்டு இத்தனை த�ொகைக்கு வாங்கணும்னு ஒரு பட்ஜெட் ப�ோட்டு வெச்சிருப்பேன். வாங்க வேண்டிய விஷ் லிஸ்ட் அதுக்குள்ள அடங்கற மாதிரி பாத்துக்குவேன். சிலசமயம் புத்தகங்களை வாங்கப் ப�ோறப்ப, ச�ோதனையா நாம ப�ோற ஸ்டால்ல, டெபிட் கார்டு ச�ொருகி பணம் எடுத்துக்கற மிஷின் வேலை செய்யாது. அப்பறம் வாங்கலாம்னு நெனைச்சு வந்துட்டு, வாங்காமலே தவறவிட்ட புத்தகங்களும் உண்டு. இந்தப் பிரச்சனை எல்லாருக்கும் ப�ொதுவானதுன்னு நினைக்கறேன். புத்தகத் திருவிழாவை நடத்தற பபாசி அமைப்பு, ரெண்டாயிரம், அஞ்சாயிரம், பத்தாயிரம்னு வெவ்வேற மதிப்புல (புத்தகக் கண்காட்சில மட்டும் செல்லுபடியாகற மாதிரி) ஒரு டெபிட் கார்ட் இஷ்யூ பண்ணா நல்லாருக்கும். நாம த�ொகையைச் செலுத்திட்டு அந்தக் கார்டை வாங்கிட்டுப் ப�ோனா, புக் வாங்கற ஒவ்வொரு ஸ்டால்லயும் ஸ்வைப் பண்ணி அத�ோட த�ொகையைக் கழிச்சுட்டே வரலாம். புத்தக ஸ்டால் வச்சிருக்கறவங்களுக்கு பபாசி கணக்குலருந்து அந்த அமவுண்ட் கிரெடிட் ஆயிடும். -இப்படி ஒரு ஏற்பாடு இருந்தா நல்லாருக்கும்ன்றது என்னோட எண்ணம். ***

32 32 || I¡IQ I¡IQ

பு

த்தகத் திருவிழா த�ொடர்பான மற்றும�ொரு சிந்தனை. இதுவும் என் பலநாள் எண்ணம்தான். ஏதேனும் ஒரு புத்தகத்தைப் பலர் நன்றாக இருக்கிறதென்று பரிந்துரைத்திருப்பார்கள். நாமும் அதை நம்பி வாங்கி விடுவ�ோம். படிக்கத் த�ொடங்கினால், யதார்த்த இலக்கியம் எழுதுகிறேன் பேர்வழி என்று சகிக்க இயலாத ஆபாச வர்ணனைகளும், வார்த்தைகளும் இறைக்கப்பட்ட நாவலாக அது இருக்கும். சினிமாக்களுக்கு ‘ஏ’ சர்ட்டிபிகேட் தருகிற மாதிரி, சைவ உணவுகளுக்கு ஒரு பச்சை வட்டம் வரைந்து குறிப்பிடுகிற மாதிரி, இப்படியான புத்தகங்களுக்கு அட்டையில் ஒரு நீலக் கத்திரிக்கோலின் படம் ப�ோடப்பட்டிருக்க வேண்டும் என்கிற விதியைக் க�ொண்டுவந்தால் என்ன..? பலரும் தப்பிவிடுவதற்கு ஒரு வாய்ப்பாக அமையுமில்லையா..? ***

சி

ல எழுத்தாளர்களின் கதைகளைப் படித்ததுமே அவற்றின் பாதிப்பு நம்மை ஏத�ோ செய்யும். வார்த்தைகளின் வலிமை அத்தகையது. லா.ச.ரா. எழுதின ‘அபிதா’ நாவலில் இருந்து, நான் படித்துப் பிரமித்த சில வரிகள்... இடியும் மின்னலும் அடுத்துத் தடதடவென மழை. சண்டை ப�ோலவே சமரஸத்திலும் அவள்தான் முதல். ஆனால், பாம்புக்குப் படம் படுத்ததால் அதன் க�ோபம் தணிந்ததென்று அர்த்தமில்லை. சீற்றத்தின் வாலில் த�ொத்தி வந்த எங்கள் சமாதானமும் மூர்க்கம்தான். உண்மையில் அது சமாதானம் அன்று. வெட்கம்கெட்ட இளமை வெறி. அப்பட்டமான சுயநலத்தின் சிகரம். சண்டை வழி நிறைவு. காணாத வஞ்சம் சதை மூலம் தேடும் வடிகால். ஊண் வெறி தணிந்ததும் மறுபடியும் தலைகாட்டுவது அவரவர் தனித்தனி என்னும் உண்மைதான். தெளிந்ததனாலாய பயன் கசப்புதான்! -சுண்டக் காய்ச்சிய பாலின் அடர்த்தி மிகச் சத்து மிக்கது என்பார்கள். வார்த்தைகளைச் சுண்டக் காய்ச்சித் தந்த வித்தகர் லா.ச.ரா. அவரது கதையில் எடிட்டிங் என்ற பெயரில் ஒரு வரியும் வெட்டவியலாது.



***

து ‘பஞ்சதந்திரம்’ படத்தின் படப்பிடிப்பில் உணவு இடைவேளை நேரம். கமல் தன் தட்டில் இருந்த சிக்கன் பீஸை முள் கரண்டியால்

I¡IQ I¡IQ || 33 33 குத்திக் க�ொண்டு இருந்தார். அருகில் இருந்த நாகேஷின் எக்ஸ்ப்ரஸ் கமெண்ட் : “க�ோழி இன்னும் சாகலையாப்பா..? இந்தக் குத்து குத்தறே.!!” -பழைய வார இதழில் படித்த துணுக்கு. ***

பு

ரட்சிக் கவிஞர் பாரதிதாசன் ‘குயில்’ என்றொரு பத்திரிகையை நடத்திக் க�ொண்டிருந்த நேரம். முத்துப்பேட்டையில் ஒரு திருமண விழாவுக்கு வந்திருந்தார். கூட்டத்தினரிடம், “இந்தப் பக்கமெல்லாம் குயில் கிடைக்குதா?” என்று கேட்டார். முதியவர் ஒருவர் சூள் க�ொட்டிவிட்டுச் ச�ொன்னார்... “எங்கேங்க கிடைக்குது? குயில் கறி எவ்வளவு டேஸ்ட்டாயிருக்கும்..? இந்தப் பக்கம் இருந்த காட்டையெல்லாம் வெட்டிப்புட்டானுங்களே... குயில் எங்கருந்து கெடைக்கும்?” என்று. -70களில் ‘குமுதம்’ வெளியிட்ட இலவச இணைப்பிலிருந்து...

நா

***

ம் யாருக்காவது க�ொடுத்து, அந்தப் பணம் திரும்பி வராவிட்டால் ‘காந்தி கணக்குதான் அது’ என்று ச�ொல்வது வழக்கம். ஏன் அப்படிச் ச�ொல்கிற�ோம்..? மகாத்மா காந்தி உப்பு சத்தியாகிரகம் மேற்கொண்டிருந்த சமயம் அது. அவருக்கு வியாபாரிகள் அத்தனை பேரும் தார்மீக ஆதரவு அளித்தார்கள். அவர்கள் காந்தியிடம் “நேரடியாக எங்களால் இந்தப் ப�ோராட்டத்தில் கலந்துக�ொள்ள முடியாது. ஆனால், உங்கள் ப�ோராட்டத்திற்கு எப்படியாவது நாங்கள் ஆதரவளிக்க விரும்புகிற�ோம். எனவே, இதில் கலந்துக�ொள்ள வரும் த�ொண்டர்களை எங்கள் கடைகளில் எது வேண்டுமானாலும் வாங்கிக் க�ொள்ள ச�ொல்லுங்கள். பணம்தர வேண்டாம். அடையாளம் தெரியாமல் பணம் கேட்க நேரும்போது, ‘காந்தி கணக்கு’ என்று எங்களுக்கு புரியும்படி ச�ொன்னால் ப�ோதும். நாங்கள் அவர்களிடம் பணம் கேட்க

34 | I¡IQ 34 | I¡IQ

மாட்டோம்” என்றார்களாம் அந்த வியாபாரிகள். அப்படி வந்ததுதான் வராத பணத்துக்குக் ‘காந்தி கணக்கு’ என்கிற ச�ொல்லாடல்.

1960

***

ம் ஆண்டில் ‘மதராஸ் டு பாண்டிச்சேரி’ என்றொரு தமிழ்ப் படம் வெளியானது. ரவிச்சந்திரன் கதாநாயகனாக நடித்திருந்தார். அந்த வெற்றிப் படத்தை இந்தியில் மஹ்மூத் என்ற காமெடி நடிகர் ‘பம்பாய் டு க�ோவா’ என்ற பெயரில் மறுஉருவாக்கம் செய்தார். அப்போதைய வளர்ந்துவந்த கதாநாயகனாகிய அமிதாப்பச்சன் கதாநாயகனாக நடித்தும் அந்தப் படம் வெற்றிக் க�ொடி பறக்க விடவில்லை. விஷயம் அதில்லை... மஹ்மூத் கதாநாயகனாக நடிக்கக் க�ோரியது ஒரு பிரபல அரசியல் தலைவரின் மகனை. அவர் நடிப்பதில் ஆர்வமில்லை என்று மறுத்துவிடவே, அந்தத் தலைவரின் த�ோழியின் மகனான அமிதாப்பச்சனுக்கு அந்த வாய்ப்பு ப�ோயிருக்கிறது. ஒருவேளை, அந்த அரசியல் தலைவரின் மகன் ஒப்புக் க�ொண்டு நடித்திருந்தால் அவரது தலையெழுத்தும், நாட்டின் தலையெழுத்தும் மாறியிருக்க வாய்ப்புண்டு. அந்த அரசியல் தலைவர் : இந்திராகாந்தி. கேட்கப்பட்ட மகன் : ராஜீவ் காந்தி. இதுபற்றி அந்நாளைய ‘இந்து’ பத்திரிகையில் வந்த துணுக்கு இங்கே...

வாட்ஸப்ல

இது.

*** என்னோட நண்பர் ஒருவர் அனுப்பியிருந்த மெசேஜ்

2 friends named Mr. See & Mr. Saw did not see sea. 1 day Mr.See saw sea mr. Saw didnt see sea. see saw sea jumped in sea. see saw in sea saw saw see in sea. see saw both saw sea & both saw & see were happy to see sea. --தலை சுத்துதா..? எனக்கும் சுத்திருச்சு. ஒரு காரியம் செஞ்சேன், சரியாகிடுச்சு. நூறு பேர் இருக்கற ஒரு குரூப்ல ப�ோட்டு விட்டேன். நீங்களும் இதையே செஞ்சு பழி வாங்கிக்கலாம்.



I¡IQ | 35

‘முடிந்தால் என் முகத்தைக் கண்டுபிடி’ என ஷெர்லாக் ஹ�ோம்சிற்கு / பரத் - சுசிலாவிற்கு சவால்விடும் புஷ்டியான ர�ோமம்… துள்ளி விளையாடும் ஃபர் ப�ொம்மைகளாய் அழகிய ஷிட்சு நாய்க்குட்டிகள். அருகில் ‘பெஸ்ட் ஃப்ரண்ட்ஸ்’ வாசகம் ஏந்திய ஜ�ோடி டி-ஷர்ட்களில், சைட் ஃப்ரெஞ்ச் ப்ரெய்ட் ஹேர்ஸ்டைலில் தாராவும், ஸ்வாராவும் செல்ஃபிக்கு உறைந்து நின்றனர். இவர்களின் வருகையால் சென்னை காதர்நவாஸ்கானில் உள்ள ‘ட்விஸ்ட்டி டெய்ல்ஸ்’ பெட்ஸ் தீம் உணவகம் அன்று மேலும் ப�ொலிவுற்றிருந்தது. சில செல்ஃபிக்களை க்ளிக்கிய பின்… தாரா: (வெய்ட்டரிடம்) டூ ப�ோர்ஷன்ஸ் ஆஃப் ஃப்ரைட் மேக் அண்ட் சீஸ்.. ஒன் ப�ோர்ஷன் ஆஃப் கார்லிக் ப்ரெட். ஸ்வாரா: இந்த இடம் செம க்யூட்டா இருக்குல்ல தாரா? தாரா: யெஸ்டா. சப்போஸ் நாம பெட்ஸ் வச்சிருந்தோம்னா.. நம்ம பெட்ஸோட சேர்ந்தே நாம சாப்பிடலாம். அதுக்கு இன்னொரு டைனிங் செக்‌ஷன் இருக்கு. பெட்ஸுக்கும் தனி மெனு இருக்கு. அதுக்குத் தனி ப்ளேட்ஸ்.. தனியான கிச்சன்னு நல்லா சுத்தமா மெய்ண்டெய்ன் பண்றாங்க. ஸ்வாரா: நல்ல கான்செப்ட். கான்செப்ட் ரெஸ்டாரண்ட்ஸ் மாதிரி கான்செப்ட் ஹ�ோட்டல்சும் வர ஆரம்பிச்சிருச்சு. ‘பபிள் ஹ�ோட்டல்ஸ்’ன்னு பேரு. தாரா: அப்படின்னா வழக்கமான ஹ�ோட்டல் மாதிரி இல்லாம பபிள் மாதிரி ரவுண்டா இருக்குமா என்ன? ஸ்வாரா: எக்ஸாக்ட்லி. ஒவ்வொரு ரூமும் ஒரு பபிள் மாதிரி இருக்கும். ட்ரான்ஸ் பேரண்டாவும் இருக்கும்.

36 | I¡IQ

தாரா: அப்ப தங்கியிருக்கற கெஸ்ட்டோட ப்ரைவசி? ஸ்வாரா: லிவ்விங் ரூம் மட்டும் வெளியிலேர்ந்து தெரியற மாதிரி இருக்கும். அதனால பயம் இல்லை. மலைகள், அருவிகள், பாலைவனம், காடுகள்னு நம்மை சுத்தி இருக்கற நேச்சுரல் அட்மாஸ்ஃபியரை ரூம்லேர்ந்தே ரசிக்கலாம். அதுக்காகத்தான் இந்த கான்செப்ட். இந்த மாதிரி ரூம்ஸ்ல டெலஸ்கோப்கூட இருக்கு. தாரா: வித்தியாசமா இருக்கு. இடங்கள் மட்டுமில்ல.. இப்பல்லாம் மனுஷங்களும் வித்தியாசமா, யுனிக்கா இருக்கணும்னு நினைக்கிறாங்க. நம்ம பெங்களூர்ல இருக்கற ஒரு ரியல் எஸ்டேட் ஏஜெண்ட். அவர் பேர் செவன்ராஜ். ஸ்வாரா: வாட்? தாரா: அவர் ஏழாவது குழந்தையா ப�ொறந்ததால, அவர் அப்பா, அம்மா அவருக்கு ‘செவன்’னு பேர் வெச்சாங்க. அதையே அவர் தன்னோட அடையாளமா மாத்தியிருக்காரு. அவர் கார் நம்பர் 7777.

ப�ோன் நம்பர�ோட கடைசி நாலு டிஜிட்ஸ் 7777. அவர�ோட எல்லா க�ோட்சூட்டுக்கும் ஏழு பட்டன்ஸ்தான் இருக்கும். ஏழு பாக்கெட்ஸ் இருக்கும். அவருக்கு இன்னொரு அப்சஷன் இருக்கு. ரெட் அண்ட்

I¡IQ | 37 வைட். அவர் யூஸ் பண்ற தினசரி ப�ொருட்கள்ல ஆரம்பிச்சு, வீட்டு ஃபர்னிச்சர், வால் டெக்கரேஷன்ஸ், டிரஸ், கார், ஸ்கூட்டர் எல்லாத்தோட கலருமே ரெட் அண்ட் வைட்தான். ஸ�ோ வியர்ட். ஸ்வாரா: பெங்களூர்ல இந்த ஒருத்தர்தானே வியர்ட்.. ஃபிலிப்பைன்ஸ்ல ஒரு தீவையே வியர்ட்னு ச�ொல்றாங்க. அதுதான் அலபாத் தீவு. ப�ொறந்த குழந்தைலேர்ந்து 89 வயசு பாட்டிங்க வரைக்கும் இந்த தீவுல 78 ஜ�ோடி ‘நான் ஐடெண்டிக்கல்’ இரட்டையர்களும், 22 ஜ�ோடி ஐடெண்டிக்கல் இ ர ட ்டை ய ர ்க ளு ம் இ ரு க்கா ங ்க . அதாவது மூணுல ஒரு குடும்பத்துல இ ர ட ்டை ய ர ்க ள் பிறக்குறாங்க. இதுல என்ன மிஸ்ட்டரின்னா யாருக்குமே இத�ோட காரணம் தெரியலை. சில பேர் அங்க இருக்கற தண்ணில ஏத�ோ இருக்குன்றாங்க. ஒட்டியிருக்கற வாழைப்பழம் அங்க நிறைய இருக்கறதாலன்னு சில பேர் ச�ொல்றாங்க. அவர்கள் ஆர்டர் செய்த உணவுகள் வர.. அவற்றை ருசித்தபடி.. தாரா: ம்.. க்ராஃபிக்ஸ் செலவில்லாம ட்வின்ஸ் சப்ஜெக்ட் படம் எடுக்கணும்னா அலபாத் தீவுக்கு ப�ோனாப் ப�ோதும். ஒரு பைசாக்கூட செலவில்லாம மூவி ஸ்டார்சையும் செலிப்ரிட்டீசையும் பாக்கணும்னா லாஸ் ஏஞ்சல்ஸ் ப�ோனாப் ப�ோதும். அங்க நடக்கற ‘க்ராஸ்வாக் கான்சர்ட்ஸ்’ பத்தி நீ கேள்விப்பட்டிருக்கியா? ஸ்வாரா: ‘க்ராஸ்வாக்’ன்னா ஜீப்ரா க்ராசிங்தானே? அப்ப நடுர�ோட்ல கான்சர்ட்டா? ச�ௌண்ட்ஸ் இண்ட்ரஸ்ட்டிங். தாரா: ஆமா. CBS டி.வி. சேனல்ல ‘தி லேட் லேட் நைட் ஷ�ோ வித் ஜேம்ஸ் கார்டன்’ அப்படிங்கற ரியாலிட்டி சாட் ஷ�ோவ�ோட ஒரு பகுதிதான் இந்த க்ராஸ்வாக் கான்சர்ட். ப�ொதுவா இவங்க ஸ்டூடிய�ோ இருக்கற ஜெனசி அவென்யூங்கற இடத்துல இருக்கற க்ராஸ்வாக்லதான் இதை ஷூட் பண்றாங்க. அந்த ர�ோட் சிக்னல் ரெட்லேர்ந்து க்ரீன்க்கு சேஞ்ச் ஆகற அந்த ஃப்யூ மினிட்ஸ்குள்ள ஒரு பெர்ஃபார்மென்சை பண்ணணும். அதுவும் பிரம்மாண்டமான பேக்ட்ராப்ஸ் அண்ட் டான்சர்சோட. இதுக்கு

38 | I¡IQ

ஒரு பெரிய டீமே வேலை செய்யுது. இதுல என்ன ப்யூட்டின்னா டாப் மூவி ஸ்டார்ஸ்கூட இதை ர�ொம்ப ஸ்போர்ட்டிவ்வா பண்றாங்க. ஹாலிவுட் ப்ளாக்பஸ்டர் ‘அலாதீன்’ படத்தோட ஹீர�ோ மேனா மச�ௌத், ஹீர�ோயின் நவ�ோமி ஸ்காட், டாப் ஸ்டார் வில் ஸ்மித் இவங்க மூணு பேரும் அந்தப் படத்தோட சாங்சுக்கு இந்த மாதிரி லைவ்வா பெர்ஃபார்ம் பண்ணியிருக்காங்க. அப்பறம் நம்ம 2K கிட்சோட சென்சேஷன் ‘BTS’..அவங்களும் இந்த க்ராஸ்வாக் கான்சர்ட்டை செஞ்சிருக்காங்க. ஸ்வாரா: ‘BTS’? யூ மீன் தி பாப்புலர் க�ொரியன் பாப் மியூசிக் பேண்ட்? அவங்க ஏழு பசங்க. அவங்களுக்கு பயம்னா என்னன்னு தெரியாதுன்னு ச�ொல்லலாம். இது வரைக்கும் 25 கின்னஸ் வெர்ல்ட் ரெக்கார்ட்ஸ் பண்ணியிருக்காங்க. உலகம் பூரா இவங்கள�ோட வெறித்தனமான ரசிகர்கள் ‘BTS ஆர்மி’ங்கிற பேர்ல இருக்காங்க. ப�ொதுநல விஷயங்களுக்காக உலகளவுல இதுவரைக்கும் முப்பது க�ோடிக்கும் மேல நன்கொடையா க�ொடுத்திருக்காங்க. சமீபத்துல அமெரிக்க அதிபர் ஜ�ோ பைடனை வைட் ஹவுஸ்ல சந்திச்சிருக்காங்க. அமெரிக்கால சமீபகாலமா ஆசியர்களுக்கு எதிரா நடந்துட்டிருக்கற ஹேட் க்ரைம்சை கண்டிக்கத்தான் இந்த மீட்டிங்னு ச�ொல்றாங்க. தாரா: ம்.. நல்ல பசங்க. ஸ்வாரா: யெஸ்டா. அதுல ‘ஜின்’ அப்படிங்கற பையனுக்கு இப்ப கல்யாண வயசுதான் வந்துடுச்சுடி. பேசாம அவனை கல்யாணம் பண்ணிக்கிட்டு செட்டில் ஆகிடலாம்னு ஒரு ஃப்ரீக்கி தாட். தாரா: ஆகலாம்... ஆகலாம். முதல்ல இந்த பில்லை செட்டில் பண்லாம் பேபி. -பெஸ்ட்டிஸ் அரட்டைகள் த�ொடரும்…

ஸ்வர்ண ரம்யா

I¡IQ | 39

“சா

ர்.. மேனேஜர் ப�ோஸ்டுக்கு நடந்த இன்டர்வியூல க்ரீஷ், ப்ரதாப் ரெண்டு பேர் ஃபைனல் லிஸ்டுல இருக்காங்க.. யாரை செலக்ட் பண்றதுனு குழப்பமா இருக்கு..” என்றார் ஜி.எம்., கம்பெனி எம்.டி.யிடம்.. “ஏன்?..என்ன விஷயம்?..” “ரெண்டு பேருக்கும் அனுபவம், வயசு, படிப்பு, நாம எதிர்பார்க்கற தகுதிகள் எல்லாம் சமமா இருக்கு.. என்ன வித்தியாசம்னா க்ரீஷ் ஒரே கம்பெனில பத்து வருஷமா இருக்கார்.. ப்ரதாப் ஆறு கம்பெனி மாறிட்டார் இந்த பத்து வருஷத்துல.. க்ரீஷ்கிட்ட திறமை இருக்கறதாலதான ஒரே கம்பெனில இருக்கார்.. அப்ப அவரையே செலக்ட் பண்ணிடலாமானு பார்க்கிறேன்..” “வேணாம்.. ப்ரதாப்பை செலக்ட் பண்ணலாம்..” “சார்.. அவர் ஆறு கம்பெனி மாறினவர்..” “அதனாலதான் ச�ொல்றேன்.. ஒருத்தர் பத்து வருஷமா ஒரே இடத்துல இருக்கார்னா இதுவே ப�ோதும்ங்கற மன�ோபாவத்துல இருப்பவரா இருப்பார்.. திறமை இருக்கறவங்க ஒரே இடத்துல இருக்கறதெல்லாம் அந்த காலம்.. ஆனா ப்ரதாப் ஆறு கம்பெனி மாறி இருக்கார்னா முன்னேறணும்கற துடிப்பும்,ஆர்வமும் அவர்ட்ட இருக்கு.. ரெண்டாவது க்ரீஷ் ஒரே கம்பெனில இருக்கறதால ஒரு கம்பெனி பயன்படுத்தற த�ொழில் நுட்பம் மட்டும்தான் தெரியும்.. ப்ரதீப்க்கோ ஆறு கம்பெனில பயன்படுத்தற த�ொழில் நுட்பமும் தெரியும்.. அது நமக்கு பயன்படும்.. அதனால..” எம்டி முடிக்கும் முன்பே “ஓகே சார்..” என்றபடி எழுந்தார் ஜிஎம்..

40 | I¡IQ

சு

ற்றுச்சூழலுக்குப் பாதிப்பு ஏற்படுத்தும் பல விஷயங்கள் நம்மைச் சுற்றி நடந்தாலும், அதை சரிசெய்யும் விதமாக சிந்தித்துச் செயல்படும் சிலரும் நம்மிடையே இருக்கின்றனர். அவர்களைப் பற்றி அறியும்போது நமக்கும் வீரமும் விழிப்புணர்வும் பிறக்கும். துணிந்து செயல்பட்டு வெற்றி கண்ட இருவர் இவர்கள்!

அண்ணா ஹசாரே :



லிகன் சித்தி, பூனேவிலிருந்து 80 கில�ோமீட்டர் த�ொலைவில் அமைந்திருக்கும் ஒரு வானம் பார்த்த பூமி. நீரின்றி வறண்டு ப�ோன நிலமாக காட்சியளித்த ஒரு ஊர். இதனால் விவசாயம் வெகுவாகப் பாதிக்கப்பட்டு, வேலையில்லாத் திண்டாட்டம் அதிகமாகி, வறுமையின் காரண மாக பல இளைஞர்களும், பெரியவர்களும் அருகில் உள்ள ஊர்களுக்கு வேலை தேடிச் சென்ற காலம் அது. தளர்ந்து ப�ோக வேண்டிய சூழலில் எழுந்து நின்றார், அண்ணா ஹசாரே. 1937 ஆம் ஆண்டு பிறந்த கிசான் பாபு ராவ் ஹசாரே, பிற்காலத்தில் அண்ணா என்ற பெயரை சேர்த்துக் க�ொண்டார்.

அண்ணா என்பது மராத்தியில் மூத்தவர் அல்லது தந்தை எனப் ப�ொருள்படும். இந்திய ராணுவத்தில் 1960ம் ஆண்டு தன்னை இணைத்துக் க�ொண்டு ஓட்டுனராகவும், பின்னர் சிப்பாயாகவும் பணியாற்றி 1975 ஆம் ஆண்டு தன்னுடைய கிராமத் திற்குத் திரும்புகிறார். பல கிராமவாசிகள் சிறிதளவு நிலம் வைத்திருந்தாலும், விவ சாயம் செய்ய முடியாமல் ஒரு பிரச்சனையான சூழ்நிலையில் இருந்தப�ோது, தான் ராணுவத்தில் பணியாற்றி சம்பாதித்து வந்த சிறிதளவு பணத்தைக் க�ொண்டு மிகப்பெரிய காரியத்தைச் செய்யத் த�ொடங்கினார். முதலில் அவர் செய்தது, மரக் கன்று நடுதல் ஆகும். அன்றைய இளைஞர்களை சேர்த்துக்கொண்டு

I¡IQ | 41

அவர் உருவாக்கிய அமைப்பின் பெயர் ‘தருண் மண்டல்’. அந்த கிராமத்தைச் சுற்றி பெரிய அளவில் மரக்கன்றுகளை நட்டு, கால்வாய்கள் அமைத்து, ப�ொழியும் மழை நீரைச் சேமிக்க ஆரம்பித்தார். டெரேசிங் (Terracing) எனப்படும் ஒரு திட்டத்தை க�ொண்டு வந்து மண் அரித்தலை குறைத்து மண்ணையும் வளமாக்கினார். சூரிய ஒளி, காற்றாலை மற்றும் சாண எரிவாயு ஆகியவற்றை உபய�ோகிக்க மக்களைப் பயிற்றுவித்தார். தண்ணீர் அதிகமாக தேவைப் படும் கரும்பை பயிரிடாமல், நீர் குறைவாகத் தேவைப்படும் பருப்பு வகைகள் மற்றும் க�ோதுமை, பார்லி, ச�ோளம் ஆகியவற்றைப்

பயன்படுத்தி பயிராக் கினார். அந்தக் கிராமம் வளமான கிராமமாக மாறியது. அவர் 1975ஆம் ஆண்டு அங்கு வந்த ப�ோது 70 ஏக்கர் நிலம் மட்டுமே விவசா யத்திற்கு உகந்ததாக இருந்தது. அதுவே அவரின் செயல்பாடு களுக்குப் பிறகு 2500 ஏக்கராக மாறியது. இந்த அவரது செயலைக் க�ௌரவிக்கும் ப�ொருட்டு 1992ம் ஆண்டு இந்திய அரசு அவருக்கு ‘பத்மபூஷன்’ விருதை வழங்கியது. இன்று உலகெங்கும் உள்ள பல நாடுகள் இவரது செயலைப் பாராட்டுகிறார்கள்.



ரு செயலைச் செய்ய எண்ணம் எழும்போது, அதைச் செய்வதும் செய்யாததும் நம் மனசாட்சியுடன் சிறிது த�ொடர் புடைய ஒன்றாகக் கருதுகிறேன். ஆம். உணர்வுப்பூர்வமான மாற்றம் நமக்குள் வரவில்லை எனில் எந்த நல்ல செயல்களும் சாத்தியமே இல்லை. இதற்கு ஓர் உதாரணம்...

42 | I¡IQ

மஹேஷ் சந்திர மேத்தா:



கேஷ் சந்திர மேத்தா 1944 ஆம் ஆண்டு ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில், ராஜாவுரி என்ற

மாவட்டத்தில், உள்ள டாங்கிரி எனும் கிராமத்தில் பிறந்தார். சிறு வயது முதலே, இயற்கையின் மீது மிகவும் அன்பும், ஈடுபாடும் க�ொண்டவராக இருந்துள்ளார். படித்து வக்கீலாக மாறினாலும் இவர் சுற்றுச்சூழலுக்காகப் பாடுபடு வதில் முன்னிலை வகித்தார். இவர் 1991 ஆம் ஆண்டு ஒரு பப்ளிக் இன்ட்ரஸ்ட் லிடி கேஷன் (PIL) என்பதை சுப்ரீம் க�ோர்ட்டில் பதிவு செய்து சுற்றுச்சூழல் கல்வியை எல்லா கல்லூரிகளிலும், இளங்கலை பயிலும் மாணவர்களுக்கு இரண் டாம் பருவத்தில் கற்பிக்க வேண்டும் என்பதைக் கட்டாயமாக்கினார். இதைத் த�ொடர்ந்து 2003

ஆம் ஆண்டு முதல் யுஜிசி இன் வழிகாட்டுதல் படி ஒரு பாடத்திட்டத்தினை உருவாக்கி, சுற்றுச்சூழல் பற்றி இளங்கலை மாணவர்களுக்கு, அவர்கள் எந்தத் துறை சார்ந்த மாணவர்களாக இருந்தாலும், இரண்டாம் பருவத்தில் இக்கல்வியை கற்று வருகின்றனர். அடுத்த தலை முறையைக் கையாளப் ப�ோகிற இளைஞர்களுக்கு சுற்றுச்சூழல் விழிப்புணர்வைக் க�ொண்டு சேர்த்த இவரின் சேவை ப�ோற்றத்தக்கது. இவர் வாங்கிய பல விருதுகளில் சில: க�ோல்ட்மேன் என்விரான்மென்டல் விருது 1996, ராமன் மேக்ஸ் சே சே விருது 1997, சிவஸ்ரீ சமன் 1997, இது சமுதாய மற்றும் சூழல் சம்பந்தமான செயலுக்கானது. அமெரிக்காவின் கேரி ரெட் பக் அவார்டு 1998 யில் இவருக்கு வழங்கப்பட்டுள்ளது. சுற்றுச்சூழலுக்கான பல்வேறு சர்வதேச மாநாடுகளில் பல நாடுகளில் சென்று உரையாற்றி யுள்ளார்.

டாக்டர் வசந்தி சுற்றுச்சூழல் துறை, பாரதிதாசன் பல்கலைக்கழகம்.

I¡IQ | 43

ஹேய்

பூக்கி.. என்று நீ அழைக்கும் ப�ோதெல்லாம் தேனாகிவிடுகிறேன் ;

தட்டுவதற்கு குதிக்கும்போது.. சில நேரம் என் குளியலறையில் ச�ோப்பு முட்டை ஊதும்போது..

உன் குரலின் ஸ்பரிசம் உனது நீண்ட அணைப்பை நினைவில் மூட்டுகிறது ;

அம்மாவுடன் சாண்ட்விச் சண்டை ப�ோடும்போது.. ரிப்பீட் ம�ோடில் சித் ஸ்ரீராம் கேட்கும்போது.. ச�ோஷியல் மீடியா ப்ரஷரிலும் ஆன்லைன் screen வயலன்ஸிலும் வீரச்சியாய் பயப்படும்போது..

உன் மீது Over Love என்பதை எப்படியெல்லாம் ச�ொல்லவேண்டும் என பலவிதமாய் Phone ரிகர்ஸல் பார்ப்பேன் ; ஆனால் பூபி.. உன் அழைப்பொலி கேட்டதும் பூபி calling என்பதை பார்த்ததும் இதயம் ஆடும் ஸ்கிப்பிங் ஆட்டத்தில் “காத்துதாங்க வருது” ரேவதியாய் ஆகிவிடுகிறேன்; சில நேரம் Disconnect தூக்கத்தோடு படுத்திருக்கும்போது.. சில நேரம் டென்னிஸ் பந்தை

இரவு 12.30க்கு இரவு 2.40க்கு இரவு ....க்கு எங்கு,எப்பொழுது,எந்நிலையில் உன் ரிங்டோன் கேட்டாலும் நான் இன்பநிலை எய்துகிறேன் ; லிட்டில் லிட்டில் உம் க�ொட்டல்கள் ; லிட்டில் லிட்டில் ஸ்வீட் நத்திங்ஸ் ; லிட்டில் லிட்டில் களிமயக்குற்ற சிணுங்கல்கள் ; ஓ..வ்.. இந்த இளஞ்சிவப்பு சுகங்களை கண்தர வந்த காமம் அல்ல என்பேனா ?! யானாகியர் நின்நெஞ்சு என்பேனா?! அறத்தொடு நிற்றல் என்பேனா ?! 2 ந�ொடி ம�ௌனமாக இருந்தால்

44 | I¡IQ

கூட நீ தாங்க மாட்டாய்.. you there ? என்பாய் ; Phoneல் தான் இருப்பேன். ஆனால்.. உன் வாசம் லிச்சிப் பழம்போல் கிறங்கடிக்கிறது என்பாய்; எப்போது அந்த Kissenger முத்தம் தருவாய் என ஒவ்வொரு ஃப�ோனிலும் என்னை ஏங்க வைத்தவனே.. Love better என காதலின் அங்கச்சுழி அறிய வைத்தவனே.. எனது நெர்வஸ் சிஸ்டமும் எனது எம�ோஷனல் சுரப்பியும் எனது வைப்ரேஷன்களும்.. நீதானடா ; என் காயத்தொகுப்புகளின் மேலிட்ட காதல் சாறு நீ ; Feelings Feelings Busyyyyy.. feelings உன்னை மறக்க நேரமில்லை ; உன்னைப் பார்க்கும் முன் நான் வேறு version ; உன்னைப் பார்த்த பின் நான் உன் version ; ஹாஹா ஹாஹா ஹா.. yesssssss ! உனது copyயாகவே என்னைக் காதலிக்கிறேன் ; நீ குடித்த Rose wine என்னைத்தானே

ஏ.ஆர்.பி.ஜெயராம் ப�ோதையூட்டியது; என் காதல் Perfect ஆனது அல்ல.. ஆனால் Original ; ஆனால்.. ஏன் அப்படி ச�ொன்னாய்? அதிகக் காதல் மனம் உடைக்குமா? நான் உடையவில்லை; அதிகக் காதல் ஐயம் தருமா? நான் ஐயப்படவில்லை; எனக்குள்ளிருந்து ஒரு ச�ொட்டு கண்ணீரில் நீ வெளியேறிவிட முடியாது ; “இனிமே கூப்புட மாட்டேன்..” நீ ச�ொன்ன அந்த வார்த்தைகள் எனக்கு வலிக்கவில்லை.. ஆனால், நீ தந்த Flash backs?? வலி.. காதலின் அட்டாச்மென்ட்!

I¡IQ | 45

46 | I¡IQ

“உட்காரேன்டி!

ப�ோகலாம். என்ன அவசரம்?” என்று சாவித்திரி புரண்டு படுத்துக்கொண்டு ச�ொன்னாள். “இல்லை. அவர் வருகிற நேரமாகிவிட்டது. ப�ோய் காபிக்கு ஜலம் ப�ோட்டால் சரியாயிருக்கும்!” என்று எழுந்து நின்றாள் கமலா. “ஆமாம், காபி ப�ோடுவதற்கு எத்தனை நாழியாகும்? வந்த பிறகு கூடப் ப�ோகலாம். உட்கார் எனக்குப் ப�ொழுதே ப�ோகவில்லை.” அப்பொழுது “கமலா” என்று கூப்பிட்டுக் க�ொண்டே ராகவன் வந்துவிட்டான். “பார்த்தாயா, வந்துவிட்டார்!” என்று ச�ொல்லிவிட்டு கமலா தன் அறைப்பக்கம் ஓடினாள். சாவித்திரி படுத்தபடியே தலைநிமிர்ந்து பார்த்தாள்; ராகவன் மனைவியைப் பார்த்து சிரித்துக் க�ொண்டே உள்ளே நுழைந்தான். கமலா, “அதற்குள் நாழியாகிவிட்டதா?” என்று கேட்டுக் க�ொண்டே பின்னால் ப�ோனாள். அறை சற்று தூரத்திலிருந்த ப�ோதிலும் க�ொஞ்சம் சாதாரண மாகப் பேசினால் காதில் விழாத தூரத்தில் இல்லை. இளம் தம்பதி களுக்கு அக்கம் பக்கம் ஞாபகம் சில சமயங்களில் இருக்கிறதே இல்லையல்லவா? “ப�ோங்கள்; இதென்ன விளையாட்டு. யாராவது வரப் ப�ோகிறார்கள்!” என்று கமலா

மகிழ்ச்சியுடன் ச�ொன்னது அரைகுறையாக சாவித்திரி காதில் பட்டது. அந்த அறையில் ப�ொங்கிய இன்பம் ஏறிய காற்று சாவித்திரியிடம் வந்தப�ொழுது அவள் மூச்சு திணறிற்று. வேதனை உள்ளத்தையும், உடலையும் ஏத�ோ செய்ய, பெருமூச்சு விட்டுக் க�ொண்டு குப்புறப் படுத்துக் க�ொண்டாள். சாவித்திரியின் புருஷன் வடக்கே எங்கோ மிலிடரி சர்வீஸில் இருந்தான். சாஸ்திரத்துக்காக சாந்தி முகூர்த்தம் நடந்த மூன்று நாள் இருந்துவிட்டு அவசர அவச ரமாகப் ப�ோய் விட்டான். வருஷம் இரண்டாயிற்று. கடிதங்கள் வந்தன. ஆள் வரக்காண�ோம். சாந்தி முகூர்த்தம் ஆகாமல் வைத்திருந்தால் நாலு பேர் ஏதாவது ச�ொல்லுவார்கள் அல்லவா? அதற்காக சம்பந்திகள் இருவரும் சேர்ந்து முகூர்த்தத்தை நடத்தி விட்டார்கள். பிறகு பெண்ணை விட்டுவிட்டுப் பையன் எவ்வளவு காலம் இருந்தாலும் பாதகமில்லை. நாலு பேர் பிறகு வாயைத் திறக்கமாட்டார்கள். ஆனால் அந்த சாந்தி முகூர்த்தம் சாவித்திரிக்கு யமனாகத்தான் பட்டது. உள்ளத்தை அவள் ஒரு விதமாக முன்போலவே அடக்கி ஒடுக்கிவிட்டாள். உடல்தான் ஒடுங்க மறுத்தது. ஒடுங்கின உள்ளத்தையும் தூண்டிவிட்டது. அந்த மூன்று நாள் அனுபவித்த ஸ்பரிச சுகத்தை அதனால் மறக்க

I¡IQ | 47 முடியவில்லை. வாய்விட்டு அலறிற்று. சாவித்திரி நல்ல சரீரக்கட்டு படைத்த யுவதி. இளமைச் செருக்கு அவள் உடலில் மதாரித்து நின்றது. அதன் இடைவிடாத வேட்கையை அவளால் சகிக்க முடியவில்லை.

படுத்திருந்தாள்.

கு.ப.ரா.

“இந்தக் கமலாவுக்கு எவ்வளவு க�ொழுப்பு! அகமுடையான் அருகில் இருந்தால் இப்படியெல்லாம் குதிக்கச் ச�ொல்லும். என்னிடம் வந்து என்ன பீத்திக்கொள்ள வேண்டியிருக்கிறது? நான் வாழா வெட்டிப�ோல, என்னிடம் வந்து என்ன கும்மாளம்! இல்லை, வேண்டுமென்றுதான். நான் பார்த்து வேதனைப்படவேண்டும் என்றுதான் இப்படியெல்லாம் செய்கிறாள் ப�ோலிருக்கிறது! “சதா இவள் அகமுடையான் ச�ொன்னது என்ன பரிதாபம்! இவள்தான் அகமுடையானைப் படைத்தவள�ோ?... ஏன் தலை கீழாக நிற்கமாட்டாள்.? நான் தனியாகக் கிடந்து சாவதைப் பார்த்து நாம் இவ்வளவு சந்தோஷமாக இருக்கிற�ோமே என்று அவளுக்குப் பெருமை! நான் ந�ொந்து கிடக்கிறேன், ந�ொந்து ப�ோயிருப்பேன் என்று க�ொஞ்சமாவது அவளுக்குத் த�ோன்றினால் – எப்படித் த�ோன் றும்? பட்டால் அல்லவா தெரியும் அவளுக்கு.” சாவித்திரி ப�ொருமிக்கொண்டே

பெத்தே ப�ோ!”

“ஏண்டி, ஏந்து குழாய் ஜலம் எடுத்துக் க�ொண்டு வந்து வைக் கப்படாத�ோ, இந்தா காபி!” என்று அவள் தாயார் வந்தாள். “எல்லாம் ஆகட்டும். அ தற் கு த்தானே என்னை. செய்கிறேன்,

“இத�ோ இருக்கு காபி. நான் அந்தத் தெருவுக்குப் ப�ோயிட்டு வரேன். ராத்திரிக்கு வரமுடியாத�ோ என்னவ�ோ…” “நீ வந்து இங்கே என்ன செய்யப்போறே.? உங்கண்ணா ஆத்துலேயே இருந்துட்டு வா!” “ராத்திரி ஜாக்கிரதையா கதவைத் தாப்பா ப�ோட்டுண்டு…” “ஆகட்டும், ஆகட்டும். ப�ோ!” அவள் தாயார் நார்மடிப் புடவையை சரிப்படுத்திக்கொண்டு விபூதி இட்டுக்கொண்டு அந்தத் தெருவுக்குப் புறப்பட்டுப் ப�ோனாள். சாவித்திரியின் பக்கத்திலிருந்து காபியின் சூடு ஆறிவிட்டது. சாவித்திரியின் உள்ளத்திலிருந்து சூடு ஆறவில்லை.

பு

ருஷன் ஆபீஸ் ப�ோனதும் கமலா வந்தாள். “அம்மாமி காபி சாப்பிடல்லயா..?” சாவித்திரி அவளை அசூயை யுடன் பார்த்துக்கொண்டு “ஆறிப்

48 | I¡IQ

ப�ோய்விட்டது. சாப்பிடவில்லை!” என்றாள். “நான் தரட்டுமா? அவருக்கு சாயந்திரத்திற்கு பிளாஸ்கில் ப�ோட்டு வைத்திருக்கிறேன். தரேனே, பிறகு ப�ோட்டால் ப�ோச்சு!” “வேண்டாம். எனக்கு வேண்டி யிருக்கவில்லை, நெஞ்சைக் கரிக்கிறது.” “இன்னிக்கு சினிமாவுக்குப் ப�ோவ�ோமான்னேன், நாளைக்கு ஆகட்டும்னார். நீங்களும் வர்ரேளா அம்மாமி?” “நன்னாயிருக்கு, நீங்க ரெண்டு பேரும் தமாஷா ப�ோகிறப�ோது நான் நடுவில்…” “ப�ோங்க அம்மாமி!” என்று சந்தோஷத்துடன் கூறினாள் கமலா. சாவித்திரிக்கு கமலாவின் பூரிப்பு விஷமாக இருந்தது. “என்ன அம்மாமி! உடம்பு ஒரு மாதிரி இருக்கேளே?” “எனக்கென்ன மில்லை.”

கேடு,

ஒன்று

“கருகிய ம�ொட்டு’ என்று ஒரு நாவல் க�ொண்டு வந்திருக்கிறார். படிக்கலாமா?” என்று ச�ொல்லி கமலா எழுந்து ப�ோய் புத்தகத்துடன் வந்து உடகார்ந்தாள். மேல் அட்டையில் சித்திரம் ஒன்று. அதை கமலா வெட்கத்து டனும் சிரிப்புடனும் சாவித்திரிக்குக் காட்டினாள்.

ஒருவன் நாற்காலியில் உட் கார்ந்து ஆழ்ந்து ய�ோசனையில் இருக்கிறான். கையிலிருந்த புத் தகம் கீழே விழுந்து கிடக்கிறது. பின்னால் மனைவி வந்து புன்ன கையுடன் நிற்கிறாள், அவனுக்கு தெரியாமல். “இதற்கு என்ன அர்த்தம் அம் மாமி?” என்று கமலா கேட்டாள். “புருஷன் ஏத�ோ கவலைப்பட்டுக் க�ொண்டு உட்காந்திருக்கிறான். தருணம் தெரியாமல் அசட்டு மனைவி சிரித்துக் க�ொண்டு வந்து நிற்கிறாள்போல் இருக்கிறது.” கமலாவின் புன்னகை மறைந்து விட்டது. “அப்படியா இருக்கும்?” “வேறென்ன ப�ோகிறது?” என்று சிரித்துக் க�ொண்டே ச�ொன்னாள்.

இருக்கப் சாவித்திரி குரூரமாகச்

“இருக்காது, அம்மாமி!” “பின் எப்படி இருக்கும்?” “வந்து – வந்து புருஷன் அவளை, நினைத்துக்கொண்டே படிக்கிறான். மெய் மறதியில் புத்தகம் கீழே விழுகிறது. அவள் வெகு நேரம் வரவில்லை. கடைசியில்…” “அதுதான் இருக்கவே இருக்கே!” “படிக்கலாமா?” “படியேன்” கமலா படித்தாள் வெகுநேரம். சாவித்திரி காதில் எவ்வளவு

I¡IQ | 49

புத்தகம்

திருடுபவர்களை நான் திருடர்கள் என்று ச�ொல்ல மாட் டேன். திருடிச்சென்று எடைக்குப் ப�ோட்டால்தான் திருட்டு. திருடிச்சென்று அந்தப் புத்தகத்தைப் படிக்கத்தான் ப�ோகிறார்கள் என்றால் அதைத் திருட்டு என்று ச�ொல்ல மாட்டேன். -ஒரு பேட்டியில்... -வேடியப்பன், டிஸ்கவரி புக் பேலஸ். விழுந்தத�ோ?

படியும் படுத்துக்கொண்டாள்.

“ஐய�ோ, நாழியாகிவிட்டதே! படித்துக்கொண்டே இருந்து விட்டேன். ப�ோகிறேன்!” என்று கமலா மாலை ஐந்து மணிக்கு எழுந்து தன் வீட்டிற்குப் ப�ோனாள். சாவித்திரி எழுந்திருக்கவில்லை. வீடு கூட்டுகிறவள் வந்தாள். “நான் ப�ோ!”

கூட்டிக்

க�ொள்கிறேன்

பூக்காரி வந்தாள். “இன்னிக்கு பூ வேண்டாம்!”



ருட்டிவிட்டது. இருட்டி வெகுநேரம் ஆகிவிட்டது. ராகவனும் கமலாவும் க�ொட்டம் அடித்தது அவளுக்குச் சகிக்கவே இல்லை. வீட்டில் அயலார் இருப்பதுகூட அவர்களுக்கு நினைவில்லையா? ஆத்திரத்துடன் எழுந்து மின்சார விளக்கைப் ப�ோட்டுவிட்டு மறு

“இலை ப�ோட்டுவிட்டேனே, வாருங்களேன்!” என்றாள் கமலா. “அதற்குள்ளா… சாப்பிட்டுவிட்டு…”

இப்பவே

“எனக்குத் தூக்கம் வருகிறது.” “தூக்கம் வருகிறதா!” என்று ராகவன் சிரித்தான், சாவித்திரி காதில் எல்லாம் விழுந்தது. கமலா இலையை வாசலில் க�ொண்டு ப�ோட்டுவிட்டு கம்பிக் கதவையும், ரேழிக் கதவையும் தாழ்ப்பாளிட்டுக் க�ொண்டு திரும் பினவள் எதிர்த்த உள்ளில் சாவித் திரி மயங்கி மயங்கிப் படுத்துக் க�ொண்டிருப்பதை பார்த்து, “அம்மாமி, சாப்பிட்டாச்சா?” என்றாள். “ஆச்சு!” கமலா

உள்ளே

ப�ோய்

50 | I¡IQ

தாளிட்டுக் க�ொண்டாள். கலியாணக் கூடம் ப�ோட்ட வீடு. இரண்டு பக்கங்களிலும் குடி. இரண்டு பக்க கூடத்து உள் ளுகளுக்கும், ரேழியிலும் கதவுகள். இரவு எட்டே மணிதான் இருக்கும். ஊர் ஓசைகூட அடங்க வில்லை. கமலாவின் பக்கத்தில் ஓசை அடங்கி விட்டது. சாவித்திரிதான் எழுந்திருக்கவே இல்லை. “ராகவன்!” என்று வாசலில் மெதுவான குரல் கேட்டது. முதலில் சாவித்திரி வாயை மூடிக்கொண்டு இருந்துவிட்டாள். பிறகு ஏத�ோ நினைத்துக்கொண்டு எழுந்து மெதுவாக ரேழிக் கதவைத் திறந்து க�ொண்டு திண்ணையண்டை ப�ோனாள். வாசலில் ராகவன் வயதுள்ள வாலிபன் ஒருவன் நின்று க�ொண்டி ருந்தான். “ராகவன் இருக்கிறாரா?” “இருக்கார்!” என்று சாவித்திரி கம்பிக் கதவைத் திறந்து விட்டு உள்ளே திரும்பினாள். வாலிபன் ரேழிக்கு வந்து தயங்கினான். சாவித்திரி சற்று மெதுவான குரலில், “அந்த ரேழிக் கதவைத் தட்டுங்கள்!” என்றாள் ஜாடையுடன். “வெறுமனே தட்டுங்கள், திறப்பார்!” என்றாள். ஒருவிதமான குரூர ஆனந்தத்துடன் ச�ொல்லி விட்டுத் தன் அறைக்குள் ப�ோய் உட்கார்ந்துக�ொண்டு, ஆவலு

டன் நடைபெறப் ப�ோவதை எதிர் பார்த்தாள். வாலிபன் ‘ராகவன்’ கதவைத் தட்டினான்.

என்று

சிறிது நேரங்கழித்து என்று உறுமல் கேட்டது.

‘யார்?’

“நான்தான்!” “நான்தான் என்றால்?” என்று சீறிக்கொண்டு ராகவன் கதவைத் திறந்து க�ொண்டு உள்ளே இருந்த படியே எட்டிப் பார்த்தான். “ஓ, வாருங்கள்!” என்று ராகவன் உள்ளக் கலவரத்தில் கதவைத் திறந்தபடியே விட்டுவிட்டு ரேழியில் நுழைந்து சீனுவை வாசலுக்கு அழைத்துக்கொண்டு ப�ோனான். ஒரு வினாடி சீனுவின் கண்களில் ஒரு காட்சி தென்பட்டது, மின்சார விளக்கு எரிந்துக�ொண்டிருந்தது. வாசற்படிக்கு எதிரே கமலா ஆடை நெகிழ்ந்த நிலையில் படுத்திருந்தவள் ராகவன் உடம்பு கதவு திறந்த இடத்திலிருந்து விலகினதும் சடாரென்று எழுந்து கட்டிலைவிட்டுக் குதித்து சுவர�ோரம் ஓடினாள். சாவித்திரி இன்னும் க�ொஞ்சம் நன்றாகப் பார்த்தாள். கமலா தலையில் கட்டுப் பூ த�ொங்கிக் க�ொண்டிருந்தது. அறையிலிருந்து மல்லிகை வாசனையும் ஊதுவத்தி வாசனையும் கம்மென்று வெளியேறின. அந்தரங்கம் திறந்து கிடந்தது ப�ோன்ற அந்த அறையை அதற்கு

I¡IQ | 51 மேல் அவளால் பார்க்க முடிய வில்லை. ஏகாந்தம் ஆடையற்று நின்றது ப�ோன்ற அந்த ஒளி அவள் கண்களுக்குக் கூச்சத்தைக் க�ொடுத்தது. சத்தப்படாமல் அறைக் கதவைச் சாத்திக் க�ொண்டாள். திடீரென்று ஒரு வருத்தமும், பச்சாதாபமும் த�ோன்றி அவளைத் தாக்கின. ‘என்ன காரியம் செய்தேன்! என்ன பாவம் செய்தோ, யாரைப் பிரித்துவைத்தோ இப்பொழுது இப்படித் தனியாகக் கிடந்து தவிக்கிறேன்.…’ அளவற்ற ஆவலில் ஒன்றை ய�ொன்று கவ்விக் க�ொண்டு கலந்து இரண்டு உள்ளங்கள் ஒரு கணத்தில் சிதறி தூரத்தில் விழுந்தன. கமலா கண்ணீர் பெருகாத த�ோஷமாக, மகா க�ோபத்துடன் ஆடையைச் சீர் திருத்திக் க�ொண்டு விளக்கை அணைத்து விட்டுப் படுக்கையில் படுத்தாள். சீனுவை அனுப்பிவிட்டு ராகவன் உள்ளே வந்தான். மெதுவாகக்

கட்டிலில்

ஏறிக்

கமலாவைத் த�ொட்டான். கமலா அவன் கையைப் பிடுங்கி உதறி எறிந்தாள். “என்ன கமலா?” “இன்னொரு நன்றாகத் திறந்து தானே!”

கதவையும் விடுகிறது

“ஓ, ஞாபகமில்லை கமலா! சின்ன விஷயத்துக்கு ஏன் பிரமாதப் படுத்துகிறாய்?” “சின்ன விஷயமா? ப�ோதும் வாயை மூடுங்கள், அண்டை அயல் இருக்கிறது!” என்று அவளும் சீறினாள். சாவித்திரியின் காதில் இதுவும் விழுந்தது. குப்புறப் படுத்துக் க�ொண்டு விம்மி விம்மி அழுதாள். “பாவியை என்ன செய்தால் என்ன?” என்று புலம்பினாள். கமலா மூக்கைச் சிந்தும் சத்தம் கேட்டது. “திருப்திதானா பேயே!” என்று சாவித்திரி தன்னைத் தானே உரக்கக் கேட்டுக் க�ொண்டாள்.

m

கு.ப.ரா. சிறுகதைகள் (முழுத் த�ொகுப்பு) நூலைப் பெற : காலச்சுவடு பதிப்பகம், தலைமை அலுவலகம் : 669, கே. பி. சாலை, நாகர்கோவில் 629 001. த�ொலைபேசி: 91-4652-278525. மின்னஞ்சல்: [email protected]. சென்னை அலுவலகம் : பழைய எண் 130, புதிய எண் 257 திருவல்லிக்கேணி நெடுஞ்சாலை, சென்னை 600 005. த�ொலைபேசி: 91-44-2844 1672, 4215 5972. மின்னஞ்சல்: [email protected]

52 | I¡IQ

முன்குறிப்பு : சென்ற இதழில் எல்லாக் கற்பனைத் துப்பறியும் கதாபாத்திரங்களும் ஒரு பார்ட்டியில் சந்திப்பதாக திரு. ஆர்னிகா நாசர் ஒரு சுவாரசியமான கட்டுரை எழுதியிருந்தார். அதனால் தூண்டப்பட்டு எழுதப்பட்டது இந்தக் கதை. -டிடெக்டிவ்தாசன்.

அத்தனை

டிடெக்டிவ்களும் மீண்டும் பார்ட்டி ஹாலுக்குள் குழுமியிருந்தனர். “வாட் மிஸ்டர் ஷாம்ப்பூ.? வ�ொய் யூ ஸ்கேர்ட் எவ்ரிபடி..?” என்றார் ஷெர்லாக் ஹ�ோம்ஸ்.

சுசிலா.

“ஷாம்ப்பூ இல்லீங்க, என் பேர் சாம்பு. சும்மாத்தான். ஹி... ஹி..” பம்மினார் சாம்பு.

“ஏய் வஸந்த்... பக்கத்துல பரத் இருக்கறதை மறந்துட்டுப் பேசற நீ..” கண்டிப்பாய் வந்தது கணேஷின் குரல்.

அப்போது, தமிழ்வாணனின் ம�ொபைல் ஏத�ோ மெசேஜ் வந்ததற்கான ட�ோனை வெளியிட எடுத்துப் படித்த அவர், சங்கர்லாலைப் பார்த்துப் புன்னகைத்தார். சங்கர்லால் மெல்ல கண்களை மூடித் திறந்து அவரைப் பார்த்துப் பதிலுக்குப் புன்னகைத்தார். “ஹாய் மிஸ் சுசிலா, உங்களை ப�ோன வாரம் தூர்தர்ஷன் இண்டர் வ்யூல பாத்தேனே... நல்லாப் பேசி னீங்க.” என்றான் வசந்த் அருகில் நெருங்கி. “சான்ஸே இல்லை. நான் எந்த டிவி இன்டர்வ்யூவுலயும் வரலை ஒரு மாசமா. அப்டியே வந்தாலும் பரத்தான் வருவார்.” என்றாள்

“ஒருவேளை... நான் பாத்தது உங்கள�ோட ஐடென்டிகல் ட்வினா இருக்கும�ோ..?” வஸந்த் விடாமல் அவள் பனியனைப் பார்த்துச் சிரித்தான்.

“அட, பேசட்டும் விடுங்க சார். இப்டில்லாம் பேசலைன்னா அவர் வஸந்த்தே இல்லை.. நான் ஒண்ணும் க�ோவிச்சுக்க மாட்டேன் இதுக்குல்லாம்” என்று சிரித்தான் பரத். “ஏன் வைஜ்... சுசிலாவின் கன்னம் உப்பலாயிருக்கிறதே. என்ன பாவிக்கிறார்கள் என்று கேட்டு நீயும் பாவியேன்...” என்று கிசுகிசுத்தான் நரேந்திரன். சுசிலாவைத் திரும்பிப் பார்த்த வைஜயந்தி வெடிக்க ஆரம்பித்தாள். “யூ ஸ்டிங்க்கிங் மங்க்கி... சுசிய�ோட கன்னம் ஒண்ணும் உப்பலாயில்லை, உன் பார்வை எங்கே ப�ோகிறது..?

I¡IQ | 53 அக்ளி ஹையன்னா, டர்ட்டி கூஸ், இன்டீசண்ட் ஃபிக்..” த�ொடர்ந்த அவளின் சரமாரியான திட்டுகளுக்கு அத்தனை வெளிநாட்டு டிடெக்டிவ்களும் காதுகளைப் ப�ொத்திக் க�ொண்டார்கள். அ த ேச ம ய ம் . . . ஷ்ஷ்ஷ் என்ற சன்னமான ஒலியைக் கேட்டு உஷாரான பரத், “நரேன், வாட்ச் அவுட்” என்று கத்த, சட்டெனச் சுதாரித்த நரேந்திரன் பாய்ந்து கிருஷ்ணப்பிரசாத்தைத் தள்ளியபடி உருண்டான். காற்றில் பாய்ந்து வந்த த�ோட்டா ஒன்று அவனை ஜஸ்ட் மிஸ் செய்தபடி சேரில் பாய்ந்து நின்றது. “லுக் வாட்சன், தி புல்லட் இஸ் ப்ரம் நார்தர்ன் சைட். அப்ராக்ஸிமேட்லி 50 ஃபீட் ப்ரம் தி சேர்” என்றார் ஷெர்லாக் ஹ�ோம்ஸ். “அடப் ப�ோய்யா, மாடஸ் ஆபரண்டி பாக்க இதுவா நேரம்..?” என்றபடி பாய்ந்தனர் பரத்தும் நரேனும் புல்லட் வந்த அறை ந�ோக்கி. ம்ஹும்... அறை காலியாக இருந்தது. சுடுவதற்குப் பயன் படுத்திய துப்பாக்கி மட்டும் அனாதையாக அறை மத்தியில் கிடந்தது. -திஸ் இஸ் தி எவிடென்ஸ். ட�ோன்ட் டச். என்றபடி அதைக் கர்ச்சீப்

சுற்றி எடுத்து தன் பாக்கெட்டில் ப�ோட்டுக் க�ொண்டார் இன்ஸ்பெக்டர் சிங். “பதட்டப்படாதீங்க. சுட்டவன் எங்கயும் வெளிய ஓடியிருக்க சான்ஸே இல்லை. இங்கருக்கற ரூம்கள்ல எதுலய�ோதான் மறைஞ் சிருக்கான். நரேன், நீங்க கி ரு ஷ்ண பி ர ச ா த் து க் கு பாதுகாப்பா இருங்க. கமான் எவ்ரிபடி, சர்ச்” என்றான் கணேஷ். அனைவரும் ஒவ்வொரு அறையாகப் புகுந்து புறப்பட்டு அலசத் த�ொடங்கினார்கள். நரேந்திரன், கிருஷ்ணப் பிர சாத்தைப் பார்த்தான். அவன் முகம் பீதியில் வெளிறியிருந்தது. திரும்பிப் பார்த்தான். திருதிரு’வென விழித்தபடி, எதைய�ோ த�ொலைத்தவர் ப�ோன்ற பதட்ட முகத்துடன் நின்றிருந்தார் சாம்பு. அவருக்கு அருகில் க�ொஞ்சமும் பதட்டமின்றி சேரில் அமர்ந்திருந்த சங்கர்லாலையும், அருகில் நின்றிருந்த தமிழ்வாண னையும் பார்த்ததும் நரேனின் பிபி எகிறியது. “என்ன மிஸ்டர் சங்கர்லால்.. நீங்களும் ப�ோய்த் தேட வேண்டியதுதானே..? இப்டி உட்காந்தபடியே இருந்தால் என்ன அர்த்தம்..?” சங்கர்லால் சிரித்தார். “அமை தியா இருங்க நரேந்திரன்.

54 | I¡IQ

குற்றவாளி தன் முயற்சி த�ோற்று விட்டதால் உடனே மற்றொரு முயற்சில இறங்க மாட்டான். தவிர, இங்கிருக்கும் அத்தனை அறைகளையும் அலசினாலும் அவன் கிடைக்க மாட்டான். இவர்களெல்லாம் வெறுங் கையுடன்தான் திரும்புவார்கள் பாருங்கள்..” “ஹ�ௌ யூ அஸ்யூம்ஸ்ட் லைக் திஸ்..?” என்று கேட்டார் பாய்ரட். “வெய்ட் அண்ட் ஸீ மிஸ்டர் பாய்ரட். சங்கர்லால் ச�ொன்னாத் தப்பாகாது. இன்ஃபாக்ட், இங்க ஒரு தாக்குதல் நடக்கப் ப�ோகுதுன்னு முன்னயே எனக்கு மெசேஜ் அனுப்பினார் அவரு...” என்று தன் அவுட்டுச் சிரிப்பை வெளியிட்டார் தமிழ்வாணனும். அப்படித்தான் ஆயிற்று. அத்தனை டிடெக்டிவ்களும் அலசி முடித்து, ஏமாற்றத்துடன் திரும்பி னார்கள். சாம்புவுக்குக் க�ொஞ்சம் மூக்குப்பொடி ப�ோட்டால் தேவலை ப�ோலிருந்தது. ‘என்னைக் கவனியேன்’ என்று மூக்கு இறைஞ்சியது. சற்றுத் தள்ளி இடதுபுறமாக ஒதுக்குப்புறமாக ஓர் அறை இருப்பதைக் கவனித்து அங்கே நகர்ந்தார். “ஸம்திங் ஸினிஸ்டர். ஏன் மிஸ்டர் கிருஷ்ணப் பிரசாத், உங்களுக்கு யாராச்சும் விர�ோதிங்க இருக்

காங்களா க�ொலை பண்ற அளவுக்கு..?” அதுவரை பேசாமலிருந்த டியாரா ராஜ்குமார் கேட்டான். “இல்லையே சார். நான் யாருக்கும் எந்தக் கெடுதலும் பண்ணினதில்லையே..” கையைப் பிசைந்தான் கிருஷ்ணப்பிரசாத். அதேசமயம் ப�ொடிமட்டையைத் திறந்து, ஒரு கைப்பிடியளவு மூக் கில் நுழைத்துக் க�ொண்ட சாம்பு, அதை மடிக்க முற்படுகையில் கை தவறிக் கீழே விழ, அத்தனை ப�ொடியும் தரையில் க�ொட்டியது. அடுத்த கணம்... ‘ஹச்.... ஹச்.... ஹச்....’ அடுக்கடுக்காகத் தும்மல் சத்தம். அங்கிருந்த எந்த டிடெக்டிவ்விடமிருந்தும் இல்லை. சாம்புவின் காலடியிலிருந்து கேட்டது அந்தச் சத்தம். கணேஷ் வேகமாக அங்கே ஓடினான். தன் ஷுவால் தரையில் தட்டினான். “மை காட். இங்க தரை இல்லை. ஏத�ோ சுரங்க அறை இருக்கு. கம் பாஸ்ட்.” என்று அலறினான். அத்தனை டிடெக்டிவ்களும் பாய்ந்து, அந்த அறையை முற்றுகையிட, சில நிமிடக் கரைசலில் அந்த அறையின் கதவைத் திறக்க முடிந்தது. உள்ளேயிருந்து பாய்ந்து வந்த ஓர் ஆசாமி இலக்கின்றி கிருஷ்ணப் பிரசாத்தைத் தாக்க முற்பட, அவனை நரேனும்,

I¡IQ | 55 பரத்தும், டியாராவுமாக கால்பந்தை பாஸ் பண்ணுவது ப�ோல மாற்றி மாற்றி பாஸ் செய்து உதைத்தார்கள். “என்னை விட்றுங்க... விட்றுங்க..” கை கூப்பியபடி சரிந்தான் அந்த ஆசாமி. அருகில் வந்து அவன் முகத்தைக் கவனித்த கிருஷ்ணப்பிரசாத் ஆச் சர்யமானான். “அட, இவனா..?” “உங்களுக்குத் தெரிஞ்ச ஆளா இவன்..?” பரத் கேட்டான். “என் அப்பாவ�ோட பிசினஸ் காம்படிட்டர். ஏன், எதுக்காக என்னைச் சுட முயற்சிக்கணும்னு தான் தெரியலை.” - க வ லைப்ப ட ா தீ ங ்க கிருஷ்ணப்பிரசாத். எங்க கஸ் டடிக்குக் க�ொண்டு ப�ோயிட்டா, எல்லா உண்மையும் தன்னால வெளிய வந்துடும். -என்றபடி அவன் விலங்கு மாட்டினார் பெக்டர் சிங்.

கையில் இன்ஸ்

“மிஸ்டர் ஷாம்ப்பூ, அட்லாஸ்ட் யூ ஒன்லி ஸால்வ்ட் திஸ் கேஸ். கிரேட் யூவார்” என்றபடி சாம்புவின் கையைப் பற்றி ஷெர்லாக் குலுக்க, சாம்பு ஒன்றும் புரியாமல் தன் டிரேட்மார்க் ‘திருதிரு’ முழியைத் த�ொடர்ந்தார். “ஓகே ப்ரண்ட்ஸ். ஐம் வெரி ஹேப்பி டு மீட் ஆல்

பாய்ரட்.

டமில் டிடெக்டிவ்ஸ் அண்ட் டேலண்ட்ஸ் ஹியர். ஐ ப்ளான்ட் டு அரேஞ்ச் எ இ ன்டர்நே ஷ ன ல் டிடெக்டிவ்ஸ் மீட் நெக்ஸ்ட் மன்த் இன் ஹாங்காங். கம் எவ்ரிபடி” என்றார்

“ ஹ ா ங ்கா ங ்ல ய ா . . ? அ ங ்க பெண்ளெல்லாம்அழகாயிருப்பார் கள்ன்னு கேள்விப்பட்டிருக்கிறேன். கரெக்டா பரத்..?” என்றபடி நரேந்திரன் பரத்திடம் திரும் பினான். முன்னெச்சரிக்கையாக பரத் அவன் பார்வையில் படாமல் நகர்ந்து க�ொள்ள, “யூ ஷேம்லெஸ் இடியட், தாஸிடம் ச�ொல்லி உன்னை மட்டும் டிடெக்டிவ் மீட்டுக்கு அனுப்பாமல் தடுத்து விடுகிறேன். மேனர்லெஸ் மன்க்கி..” என்று துவங்கி வைஜயந்தி சரமாரியாகப் ப�ொரியத் த�ொடங்க, “வைஜ்... பக்கத்து ரூமில் க�ோன் ஐஸ் ஒரு பெட்டி நிறைய இருப்பதைப் பாத்தேன். உடனே ரெண்டு க�ொண்டு வருகிறேன், இரு” என்றபடி பதறிப் பாய்ந்தோடினான் நரேந்திரன். அத்தனை டிடெக்டிவ்களின் அதிரடியான சிரிப்பில் அந்த ஹாலே அதிர்ந்தது.

டிடெக்டிவ் தாசன்

56 | I¡IQ

I¡IQ | 57 இடம் : மாலுவின் வீடு (காலிங்பெல் அடிக்கிறது. மாலு ப�ோய்த் திறக்கிறாள். சாரதி நுழைகிறார்.) மாலு : (குழப்பத்துடன்) நீங்க யாரு? சாரதி : ச�ொல்றேனே!

உள்ளே

வந்து

மாலு : (உள்ளே பார்த்து) என்னங்க... க�ொஞ்சம் அவசரமா இங்கே வாங்களேன். யார�ோ வந்திருக்காங்க. (பாலு வெளியே வருகிறான்) சாரதி : யார�ோ இல்லே. என் பேர் பார்த்தசாரதி. சுருக்கமா சாரதி! நான் மாமா முறை ஆகணும். மாலு : என்னங்க... உங்க மாமாவை உங்களுக்கே அடையாளம் தெரியலியா..? சாரதி : இவர�ோட மாமா இல்லே. உன்னோட மாமா! மாலு : என்னோட மாமாவா.? நான் பாத்ததே இல்லையே.? சாரதி : ஆமா.. நீ பார்த்ததில்ல. நான் பார்த்தசாரதியா இருந்தாலும் நீ பார்க்காத சாரதி. ஏன்னா, நான் உன் கல்யாணத்துக்கு வரல்லே. இன்ஃபாக்ட் உங்க அம்மா கல்யாணத்துக்கே நான் வரல்லே. அப்போ நான் நார்த்ல காசில இருந்தேன் பாலு : ஓ...

சாரதி : இப்போ சவுத்துக்கு வந்துட்டேன். தென்காசில இருக்கேன். வந்ததுலேர்ந்தே நிக்க வைச்சே பேசிகிட்டிருக்கியேம்மா. மாலு : சரி வாங்க நடந்துக்கிட்டே பேசலாம்

மாமா.

சாரதி : உக்காரச் ச�ொல்ல ணும்மா. (அவராக ச�ோபாவில் அமர்கிறார்) சாரதி : மாப்பிள்ளை என்ன பண்றார்..? மாலு : ஒரு ஸ்டார்ட் அப் கம்பெனி வைக்கலாம்னு ப்ளான் பண்ணினார். இப்போதைக்கு நேரம் ஸ்டார்ட்டிங் ட்ரபிள். எப்படியாச்சும் ரிப்பேர் பண்ணி ஸ்டார்ட் பண்ணுவார். சாரதி : (சுற்று முற்றும் பார்க்கிறார்) இந்த வீடு நல்லா இருக்கே... மாலு : இந்த வீட்டை என் கல்யாணத்துக்கு சீதனமா அப்பா க�ொடுத்தாரு சாரதி : அப்புறம்... வாசல்ல ப�ோர்ட் பாத்தேன். லு லு சபான்னு ப�ோட்டிருந்தது. என்ன அது? மாலு : இந்த வீட்டுக்குப் பேர் லு லு சபா. சாரதி : ர�ொம்ப ரகளையான பேரா இருக்கே! உங்க அப்பா பேர் சங்கர் இல்லைய�ோ? வீடு கிஃப்டா க�ொடுத்திருக்காரு. அவர் பேரையே வீட்டுக்கு வைச்சிருக்கலாம். சூப்பர் சங்கர்னு.

58 | I¡IQ

திருக்குறள்

படிக்க வேண்டும் என்று இளைஞர்களைத் தூண்ட வேண்டும் என்றால், அவர்களை முதலில் காமத்துப் பாலில் துவங்கச் ச�ொல்ல வேண்டும். காதல் உணர்வுகளில் ஷெல்லி, ஷேக்ஸ்பியர் எல்லோருக்கும் மேலாகப் பிரமாதப்படுத்தியிருப்பவர் நம் வள்ளுவர். -ஒரு மேடைப் பேச்சில்... -கரு.பழனியப்பன், இயக்குநர்

அதை விட்டுட்டு லு லு சபான்னு வேற பேர் வைச்சிட்டீங்களே! மாலு : காரணம் இருக்கு. எங்க அம்மா பேர் பார்வதி. அப்பாவ�ோட முதல் எழுத்தும் அம்மாவ�ோட முதல் எழுத்தும் சேர்த்தா சபா. சாரதி : சபாஷ்! பாலு : எங்க ரெண்டு பேர்ல இருக்கற கடைசி எழுத்தும் லு. எல்லாத்தையும் சேத்து லு லு சபான்னு வைச்சிட்டோம். சாரதி : நாளைக்குக் குழந்தை பிறந்தா அவ பேரையும் சேத்தணுமே? பாலு : அப்போ லு லு சபா ஜூனியர்ன்னு பேர் வைச்சிடுவ�ோம் சாரதி : என் வீட்டுக்குப் பேர் என்னன்னு தெரியும�ோ.? ஸ்டைலா இருக்கட்டும்ன்னு ‘பார்த்தா பவன்’னு பேர் வைச்சிட்டேன்.

ஹ�ோட்டல் பேர் மாதிரி அமைஞ்சு ப�ோயிடுச்சா.? வீட்டு வாசல்ல சிவப்பு சட்டை ப�ோட்டுகிட்டு நாலு டெலிவரி பாய்ஸ் எப்பவும் நின்னுகிட்டே இருக்காங்க. Swiggy boys. மாலு : பேர் சரியில்லே மாமா. மாத்திடுங்க சாரதி : Swiggyங்கறது கம்பெனி வைச்ச பேர். நான் மாத்த முடியாது. எனக்கு ஒரு சந்தேகம்! லு லு சபால முதல் லு யாரு? பாலுவா.? மாலுவா.? பாலு : சந்தேகம் என்ன? பாலு தான். மாலு : இல்லே. மாலு தான். பாலு : புருஷனுக்குத் தான் முதல் மரியாதை. அவன் பேர் தான் முதல்ல வரும். அதனால அந்த முதல் லு பாலுவ�ோடது.

I¡IQ | 59 மாலு : இந்த வீடு எங்க அப்பா வாங்கிக் க�ொடுத்தது. மாலுல வர்ர லு தான் முதல்ல இருக்கு. சாரதி : எனக்கென்னவ�ோ பாலுல வர்ர லு தான் முதல்ல இருக்குன்னு த�ோணுது. அவர் தானே வயசுல பெரியவர். மாலு : என் பேர் பாஸ்போர்ட்ல மாலு பாலுன்னு தான் இருக்கு. மாலு தான் ஃபர்ஸ்ட். பாலு : பாஸ்போர்ட் வேற.. ப�ோர்ட் வேற. அதையும் இதையும் நீ கன்ப்யூஸ் பண்ணாதே. சாரதி : க�ொஞ்சம் ய�ோசனை செஞ்சி பார்த்தா மாலு தான் முதல் லுன்னு த�ோணுது.

(பக்கத்து நுழைகிறார்)

வீட்டு

அங்கிள்

அங்கிள் : இக்கட ஏமீ சவுண்ட்? மாலு : நீங்க யாரு.? அங்கிள் : நேனு நெய்பரு. ஆந்திரா நேட்டிவ். நா பேரு ச�ோமயாஜுலு. செப்பண்டீ.. ஏமி பராப்ளாலு? மாலு : லு தான் ப்ராப்ளம். அங்கிள் : டப்புலு ப்ராப்ளமா.? பாலு : இது டபுள் லு ப்ராப்ளம். அங்கிள் செப்பண்டீ!

:

விபரங்கா

பாலு : என் பேர் பாலு.

பாலு : அப்பவே பாலு தான் முதல்னு ச�ொன்னீங்க.?

அங்கிள் : பேர் பாக உந்தீ.

சாரதி : அப்போ ய�ோசனை செய்யல்லே. வெயிட். ஒரு வேளை பாலு தான் முதல்ல வரும�ோ?

அங்கிள் : இதி பாக லேது.

மாலு : என்ன மாமா இது.? சாரதி : க�ொஞ்சம் மாத்தி ய�ோசிச்சா இப்படித் த�ோணுது. Alphabetical order ல பார்த்தா கூட B க்கு அப்புறம் தான் M வருது. மாலு : சே... எங்க அப்பா எனக்கு மாலான்னு பேர் வைச்சதுக்குப் பதிலா அமலான்னு பேர் வைச்சிருக்கலாம். பாலு : சரி.. சரி. பஞ்சாயத்து கலைஞ்சது. பாலு தான் ஃபர்ஸ்ட். மாலு : நான் ஒத்துக்க மாட்டேன்

மாலு : என் பேர் மாலு. மாலு : மாலு மட்டும் பாக லேதா..? ஏன் இப்படிப் பாகப் பிரிவினை பண்றீங்க.? பாலு : ஆந்திரா பாபு, க�ொஞ்சம் கேளுங்க. வீட்டுக்கு எங்க பேரை வைச்சதுல தான் ப்ராப்ளம். இந்த இல்லுல ரெண்டு லு வருது. லு... லு... அங்கிள் : ரெண்டு லு வருதில்லே. லூஸ் ஹவுஸ்னு பேர் வைச்சிருக்கலாமே! மாலு : அதுல மாலு முதலா பாலு முதலான்னு ச�ொல்லுங்க. அங்கிள்

:

ரெண்டுமே

60 | I¡IQ

இருக்கட்டுமே! ஆந்திரா தெலுங்கானா வேற வேற ஸ்டேட். அய்த்தே ஹைதராபாத் ஒன்லி கேபிட்டல். அர்த்தம் ஆயிந்தியா? மாலு : நீங்க ஒண்ணும் புரியல்லே

ச�ொல்றது

அங்கிள் : திருப்பதில�ோ பத்மாவதி. திருமலைல�ோ பாலாஜி. அய்த்தே ரெண்டும் ஒகட்டீ மாலு : இதுவும் புரியல்லே அங்கிள் : மீரு கன்ப்யூஸ் ஆயின்னாரு. இப்புடு நான் ஜெரகண்டி சேஸ்தா. இனிமே சத்தம் செய்யாதண்டி. செஞ்சா க�ோபாலு வருது பாலு : க�ோபால் வருவாரா? யார் அந்த க�ோபால்? (ச�ோமயாஜுலு ப�ோகிறார்)

க�ோபத்துடன்

சாரதி : உங்க சண்டைல பக்கத்து வீட்டுக்காரரே வந்துட்டாரு. இப்போ என்ன முடிவு செஞ்சீங்க.? எந்த லு முதல்ல வருது.? மாலு : உலகமே திரண்டு வந்தாலும் முதல் லு என்னோடது தான். பாலு தான்.

:

ஸாரி.

படுக்கையறைக்குள் நுழைகிறாள்) பாலு : அப்படி என்னதான் டிபன் செஞ்சுகிட்டிருந்தா? (சமைய லறைக்குள் நுழைகிறான். பிறகு திரும்பி வருகிறான்) ப�ோச்சு. ப�ோச்சு. எல்லாம் ப�ோச்சு சாரதி : என்ன ப�ோச்சு? பாலு : சும்மா இருங்க சார். தேவையில்லாம நீங்க தான் சண்டையக் கிளப்பி விட்டீங்க. (படுக்கையறைக் கதவைத் தட்டுகிறான்) மாலு. உன் லு வே முதல் லுன்னு வைச்சிக்கோ. வந்து டிபனை செய் சாரதி : அப்படி என்ன டிபன் செய்ய ப்ளான் பண்ணியிருந்தா.? பாலு : ஆலு ப�ோண்டா சார். பேர்ல இருக்கற லுவுக்காக இந்த லுவை நான் விடுவேனா.? எனக்கு ர�ொம்பப் பிடிச்ச டிபன் மாமா. சாரதி : அப்போ, ராகலாம். தப்பில்லே!

சரண்ட

m

என்னோடது

மாலு : முதலும் முடிவுமா நான்தான் அது. மீறி நீங்க அடம் பிடிச்சா இன்னைக்கு உங்களுக்கு டிபன் கட். கிச்சன்ல பாதி செஞ்சிகிட்டிருந்தேன். அது கேன்சல். (க�ோபமாகப்

நந்து சுந்து

I¡IQ | 61

எப்படி இருந்தது 2022? மகிழ்ச்சிக்குச் சிறிதும் குறை வில்லை. மனதில் ஏன�ோ நிறை வில்லை. -மாலன் நாராயணன் * விளக்கத் துவங்கினால் ப�ொருளற்றுப் ப�ோய்விடும் காதலும், கவிதையும். -ராமானுஜம் க�ோவிந்தன்.. * லைக்ஸ் அள்ள ஒரு டிப்ஸ்! செக்கோஸ்லேவியா டூர் சென்றோம். அங்கு காஃபி எப்படி கேட்பது என தெரியவில்லை. அப்போதுதான் இந்தியின் அருமை புரிந்தது. இந்தி அவசியம் தேவை என்பதை உணர்ந்தேன்

என்று எழுதுங்கள். 300 லைக்ஸ் கன் ஃபர்ம்ட்! -செந்தில்குமார், மத்யமர், * மனைவியும் ஒரு திருக்குறள் தான்! – நிறைய அதிகாரம் இருப்ப தால்! -ராமமூர்த்தி ப�ொன்னுசாமி * 2009ம் ஆண்டு வரை தமிழ கத்தில் வெளியான வரலாற்று

62 | I¡IQ

நாவல்களின் எண்ணிக்கை சற்றேறக்குறைய 1200தான். ஆனால் 2009 முதல் 2022 இறுதிவரை வெளி யான, வெளியாகக் காத்திருக்கும் சரித்திர நாவல்களின் எண்ணிக்கை சுமாராக 1400. -கே.என்.சிவராமன் * வருவது வரட்டும்.. ப�ோவது ப�ோகட்டும்.. இருப்பது நிலைக் கட்டும்! ஜென் நிலையும், என் நிலையும்! -கவிதா ஜவஹர் * செதுக்கிய உளியே சிற்பத்தை உடைப்பதை காதலில்தான் காண முடியும்! -லதா சரவணன் * பணம் க�ொடுத்து திரையரங் குக்கு வருபவர்களின் கவனம் திரையிலேயே இருக்க வேண்டும் என்பதே வெற்றித் திரைக்கதையின் தாரக மந்திரம். -சுரேஷ் (சுபா) * தனியாகத்தான் வந்தோம். தனியாகத்தான் ப�ோவ�ோம். நடுவில் என்ன துணை வேண்டிக் கிடக்கிறது? துணை என்பது கானல் நீர். நெருங்க நெருங்க தூரம் ஓடும்!. -செல்வராகவன் * வாழ்க்கை இருக்கே வாழ்க்கை.. பல் ப�ோனவனுக்கு பக்கோடா க�ொடுக்கும்! சுகர் பேஷண்ட்டுக்கு லட்டு க�ொடுக்கும். வழுக்கைத் தலையனுக்கு சீப்பைக் க�ொடுக்கும்.

ம�ொட்டைத் தலையனுக்கு ஷாம்பூ க�ொடுக்கும். வாழ்க்கை ஓர் அபத்த முட்டாப் பீஸு! -பெ.கருணாகரன் * முக்கி ம�ொணகி ஒன்றர பக் கத்துக்கு லெங்த்தி ப�ோஸ்ட் ப�ோட்டுட்டு காத்திருந்தா ம�ொத் தமே அஞ்சு பேர் வெறும் லைக் மட்டும் ப�ோனாப் ப�ோகுதுன்னு ப�ோட்டுட்டுப் ப�ோனாலும், விடாம மறுபடி பெரிய ப�ோஸ்ட் ப�ோடற மனசிருக்கே.. அதான் சார் கடவுள்!. -லாவண்யா நாயர் * ஒரிஜினல் ஐடியில் ஒரு ஆள்: குத்து விளக்கு மாதிரி அம்சமா இருக்கீங்க அக்கா. ஃபேக் ஐடியில்: அயிட்டத்துக்கான அத்தனை அம்சமும் பக்கா! -கல்யாணி இளமாறன் * ஆணுக்கு நாளை காலை வேலைக்குப் ப�ோகத் தேவை யில்லை என்ற இரவும்.. பெண் ணுக்கு நாளை காலை சமைக்கத் தேவையில்லை என்ற இரவும்.. ச�ொர்க்கம்! -குமரன் கருப்பையா * காதலினால் மகிழ்ச்சி உண்டா கிறதா? இல்லைதான். அது ஒரு நிறைவின்மையைத்தான் தருகிறது. இன்னும் க�ொஞ்சம் க�ொடு என சதா பிய்த்துக் க�ொண்டிருக்கும் பசியடங்காப் பெரும்பூதம். -சவிதா

I¡IQ | 63

64 | I¡IQ

செ

ன்னையிலிருந்து வந்த அந்த ரயில் பல இடங்களில் தடைபட்டு நின்று மதுரையில் நின்று ஓய்வெடுக்கிறது. ரயிலினுள் ரங்கமணி என்ற இருபத்திரண்டு வயது இளைஞனும், அவனுக்குத் துணையாக ஐம்பதைக் கடந்த சங்கரராம தீக்ஷிதரும் வருகின்றனர். ரயில் புறப்படும் தருணம், திடீர்ப் பரபரப்பு ஏற்படுகிறது. ஒரு பெண்ணின் தலைமையில் வந்த கூட்டம் ரயிலின் இன்ஜினில் மூவர்ணக் க�ொடியைக் கட்டுகிறது. ப�ோலீசார் தடுக்க, ரங்கமணி அவர்களுக்கு ஆதரவாகப் பேச, அவனுடன் பலரும் பேச, ப�ோலீசாரால் தடுக்க இயலவில்லை. அந்தப் பெண் அவனை நன்றியுடன் பார்க்க, “விடுத லைக்கு உழைப்பதென்றால் இதைவிட உருப்படியான பல வேலைகள் இருக்கின் றன” என்று பட்டென்று ச�ொல்லிவிட்டு நகர்ந்துவிடுகிறான் ரங்கமணி. அவள் முகம் வாடி விடுகிறது. ரயிலினுள் ஒல்லியான ஓர் இளைஞனைச் சந்திக்கிறான் ரங்கமணி. தன் பெயர் வெங்கிட்டு என்றும் அனை வரும் பித்துக்குளி என்று கூப்பிடுவார்கள் என்றும் அவன் தன்னை அறிமுகம் செய்து க�ொள்கிறான். அவன் ஒரு வெகுளி என்பதையறிந்ததும் ரங்கமணிக்கு அவனைப் பிடித்து விடுகிறது. தீக்ஷிதர் மகாத்மாவைப் பற்றி உயர்வாகப் பேச, ரங்கமணி, அகிம்சையால் சுதந்திரம் பெற இயலாது, வெள்ளையனை ஒழிக்க அவனை அழித்தேயாக வேண்டும் என்று வாதிடுகிறான். மகாத்மாவை ஒருமுறை சந்தித்தால் நீ மாறி விடுவாய் என்கிறார் தீக்ஷிதர். க�ோயில்பட்டியில் அவர்

I¡IQ | 65 இறங்கிச் சென்றுவிட, விடுகிறான். வெங் கு வி ட ம் சில தினங்கள் பேசியபடியே அம்பா கழித்து வீட்டுக்கு சமுத்திரம் சென்று வரும் சாமிநாதன், சேர்கிறான் ரங்கமணி. தனக்கு அந்த அவன் தாத்தா பாக்கியம் கிடைக்க நெல்லையப்ப பிள்ளை வில்லையென்றும், அவ்வூரில் பெரும் வாஞ்சிநாதன் என்ற செல்வந்தர். அவனை இளைஞன் அதைச் ர.சு.நல்லபெருமாள் செய்து விட்டதாகவும் அன்புடன் வரவேற்று அவன் திருமணம் ச�ொ ல் கி ற ா ன் . பற்றிப் பேசுகிறார். அ வ னி ட மி ரு ந்த ‘நாடு விடுதலையடைந்த பின்தான் துப்பாக்கியையும், பாரதியின் திருமணம்’ என்கிற பேரனைக் கவிதையையும் நெல்லையப்ப கவலைய�ோடு பார்க்கிறார். எங்கே பிள்ளை ஒரு பெட்டியில் ப�ோட்டு தன் மகன் சாமிநாதனைப் ப�ோலப் மூடி மறைத்து வைக்கிறார். பேரனும் தேசவிடுதலைக்குப் இப்போது அந்தப் பெட்டியைத் ப�ோராடி பலியாகி விடுவான�ோ தற்செயலாகத் திறந்து பார்க்கும் என்று கவலைப்படுகிறார். மகனின் ரங்கமணி, அவற்றைத் தான் நினைவுகள் நிழலாடுகின்றன கைப்பற்றிக் க�ொள்கிறான். அவர் மனதில். அவனிடமுள்ள தீவிரவாதப் அவர் மகன் சாமிநாதன், பற்றுக்கும், வெறிக்கும் காரணம் வ.உ.சிதம்பரம் பிள்ளை என்ற உண்டு. தன் தந்தை சாமிநாதன், வக்கீலுடனும், சுப்ரமணிய பாரதி வெள்ளைக்காரப் ப�ோலீசாரால் என்ற கவிஞருடனும் வந்து, தடியடி நடத்திக் க�ொல்லப்படுவதை வ.உ.சி. துவங்கவிருக்கிற கப்பல் அருகிலிருந்து பார்த்தவன் சிறுவன் கம்பெனியின் பங்குகளை ஒரு ரங்கமணி. அப்போது மனத்தினுள் பெருந்தொகை தந்து வாங்கிக் எழுந்த வெள்ளையரைப் பழிவாங்க க�ொள்ள வைக்கிறான் தன் வேண்டுமென்ற கனல் இப்போதும் தகப்பனை. சிதம்பரம் பிள்ளையுடன் கனன்று க�ொண்டிருக்கிறது பல ப�ோராட்டங்களில் அவன் அவனிடம். கலந்து க�ொள்வதையும், ப�ோலீஸ் அன்றிலிருந்து இரண்டாம் நாள் தடியடியால் பாதிக்கப்படுவதையும் தாத்தாவிடமிருந்து விடைபெற்று கண்டு கவலை க�ொள்கிறார் நெல்லைக்குக் கிளம்புகிறான் பிள்ளை. இந்நிலையில் ஆஷ் ரங்கமணி. அப்போது அவன் என்கிற வெள்ளைக்கார பெட்டியில் இருக்கும் ஒரு கலெக்டரைக் க�ொல்லப் ப�ோவதாக சின்னஞ்சிறு ஏசுநாதர் சிலை அவன் கையில் இரு துப்பாக்கிகளுடன் நினைவை பின்னோக்கி இழுக் வீட்டுக்கு வருகிறான் சாமிநாதன். கிறது. சிறுவயதில் ரங்கமணியின் அவர் தடுத்தும் கேளாமல் ப�ோய் தீவிரத்தைக் குறைக்க தீக்ஷிதர்

66 | I¡IQ

அவனைக் காந்தியடிகளைச் சந்திக்க அழைத்துச் சென்றார். அப்போது, “தம்பி, இதைப் பார்த்தால், இவர் செய்த தியாகத்தை நினைத்தால் நீ அமைதி பெறுவாய். அஹிம்சையே சிறந்தவழி” என்று ச�ொல்லி காந்தி, சிறுவனுக்குப் பரிசாகத் தந்தது அந்த ஏசுநாதர் ப�ொம்மை. அதையும் எடுத்துக் க�ொண்டு கிளம்பு கிறான். நெல்லையில் சர்தார் ச�ொக்கலிங்கம் பிள்ளை என்பவரைச் சந்திக்கச் செல்கிறான். அவர் பெயருக்கு ஓர் அச்சகம் நடத்திக் க�ொண்டு, வெள்ளையருக்கு எதிரான பல தீவிரச் செயல்களை நிகழ்த்த தனக்குக் கீழே ஒரு கூட்டத்தையே வைத்திருக்கும் ஒருவர். அவரது இல்லத்திற்கு சென்றப�ோதுதான் ரயிலில் க�ொடி கட்டிய பெண் அவர் மகள் திரிவேணி என்பதை அறிகிறான். காந்தியின் மார்க்கத்தை உயிராய்ப் பேணுகிற அவள், ரங்க மணியின் மற்றும் தன் தந்தையின் தீவிரவாதம் தவறானதென்கிறாள். சந்திக்கும் ப�ோதெல்லாம் இருவ ருக்கும் எப்போதும் வாக்குவாதம் நிகழ்ந்த வண்ணம் இருந்தாலும் ஓர் இனம்புரியா அன்பும் பூக்கிறது. கூடவே, திரிவேணியின் அத்தை யின் பிரியம், தாய்ப்பாசத்தை அறியாத ரங்கமணியின் மனதை அசைக்கிறது. செயின்ட் ஜார்ஜ் க�ோட்டை யிலுள்ள அலுவலகம�ொன்றில் குண்டுவீசி அழிக்க ரங்கமணி

ப�ோட்ட திட்டம் வெற்றியடையாமல் ப�ோக, அவன் மாட்டிக் க�ொள்ள விருந்த தருணம் காப்பாற்றியவர் சர்தார் ச�ொக்கலிங்கம். தனி மனிதனின் தீவிரவாதம் ஒன்றுக்கும் பயனற்றது, இயக்கத்தில் சேர்ந்துவிடு என்று அவனை அழைத்திருந்தார். அதற்காகவே நெல்லைக்கு வந்திருந்தான் ரங்கமணி. அவர் தன் அச்சகத்தின் சார்பாக நடத்தும் ‘சுயேச்சை’ என்கிற பத்திரிகைக்கு நிருபர் என்ற ப�ோர்வையில் ரங்கமணி செயல்பட வேண்டும் என்கிற அவர், தன் கீழுள்ள எட்டு இளைஞர்களை அவனுக்கு அறிமுகம் செய்விக்கிறார். கூடவே,

I¡IQ | 67 சாலையில் சந்திக்கும் சிவானந்தம் என்ற இளைஞனையும் அறிமுகம் செய்விக்கிறார். சிவானந்தம் அந்த நகரின் டிஎஸ்பியாக இருப்பவன். க ா ங் கி ரஸ்காரர ்க ள ை க் க�ொடுமை செய்து அடக்குவது அவன் மனதிற்கு ஒப்பாத ஒன்று. ஆனால் கடமை காரணமாகவும், அவன் காதல் மனைவியின் உத்தரவு காரணமாகவும் பலமுறை கடுமையாக நடந்து க�ொண்டவன். அவன் மனைவி கமலவாசகி பேரழகி. அவளுக்குக் காங்கிரஸ் காரர்கள், மகாத்மாவைப் பின்பற்றுவ�ோர் என்றாலே கடும் வெறுப்பு. சில சமயங் களில் சிவானந்தத்தின் கீழுள்ள அதிகாரிகளுக்கு எதேச்சாதிகார மாக அவளே உத்தரவிட்டு, கடும் நடவடிக்கை எடுக்கச் செய்வாள். அவள் உள்ளத்தில் ஏன் அந்த வெறுப்பு என்பது சிவானந்தத்துக்குப் புரியவே இல்லை. திரிவேணி சுதந்திர உணர்ச்சி யைத் தூண்டுகிற விதமாக உரை நிகழ்த்துவதில் இணையற்றவள். அவள் உரையைக் கேட்டு ரங்கமணியே அசந்து ப�ோகிறான். திரிவேணி நடத்துகிற மதுக்கடை எதிர்ப்பில், சிவானந்தத்தையும் மீறி, கமலவாசகி தடியடி நடத்த காவல்துறையைத் தூண்டுகிறாள். விளைவாக, திரிவேணியின் தலையில் பலத்த காயம். வெங்கு அவளைக் காப்பாற்றுகிறான். அவன் சிவானந்தத்தின் உறவினன். அவன் வீட்டிலேயே தங்கியிருப் பவன். ஆனால் திரிவேணி குடும்பத்துக்கும் வேண்டியவன். சர்தாரின் இயக்கத்திற்காக

ஒரு நல்ல புத்தகம் எரிக்கப் படுவது நூறு நல்ல மனிதர்கள் எரிக்கப்படுவதற்குச் சமம்!

– செகுவாரா.

ம் புத்தக .. . என்பது டெல்லி சென்று நிருபராகப் பேட்டிகள் எடுக்கும் ரங்கமணி, சுபாஷ் சந்திரப�ோஸின் இந்திய தேசிய ராணுவம் அனுப்புகிற ரேடிய�ோ ஒலிபரப்புக் கருவியின் ஒரு பகுதியைப் பெற்றுக் க�ொண்டு நெல்லை வந்து சேர்க்கிறான். இயக்கத்தினர் அனைவரும் அவன்மீது மதிப்புக் க�ொள்கின்றனர். திரிவேணியின் மீது மெல்லிய காதல் தனக்குள் அரும்புவதை ரங்கமணி உணர்ந்தாலும், அஹிம்சையின் பக்கம் சற்றே மனம் சாய்ந்தாலும், கல்லூரிக் காலத்தில் தான் காதலித்தவளை எண்ணித் திரிவேணியின் காதலையும், அப்பாவை எண்ணி, அஹிம்சையையும் தள்ளியே வைத்திருக்கிறான் ரங்கமணி. இதற்கிடையில் ரங்கமணிக்கும் சிவானந்தத்துக்கும் நல்ல நட்பு உண்டாகியிருந்தது. உலகப்போர்

68 | I¡IQ

நடந்த சமயம் அது என்பதால் இந்தியாவின் ஆதரவு வேண்டி கிரிப்ஸ் என்பவர் மகாத்மாவுடன் பேச்சுவார்த்தை நடத்த வந்து, அது த�ோல்வியில் முடிய, காந்தி, நேரு, படேல் உள்ளிட்ட பெருந் தலைவர்கள் அனைவரையும் ரகசியமாக ஒரே நேரத்தில் கைது செய்தது ஆங்கிலேய அரசு. அதைக் கண்டித்து நாடெங்கும் ப�ோராட்டம் வெடிக்கிறது. நெல்லையில் திரிவேணியின் தலைமை யில் ப�ோராட்டம் நடக்கிறது. கூட்டத்தின் மீது தடியடி நடத்தாமல் ப�ொறுமை காக்கிறான் சிவானந்தம் (மனைவி திட்டியும் கேளாமல்). ஒரு கட்டத்தில் ப�ோலீஸ், வாகனத்தில் ஏறமுயன்ற ஒருவனைக் கீழே தள்ளிவிட, அவன் கல் வீச, த�ொடர்ந்து கூட்டமும் கல்வீசிக் காவலர்களைத் தாக்கத் த�ொடங்க, வன்முறை வெடிக்கிறது. சிவானந்தத்தின் தலையில் கல் பட்டு, மயக்கமடைய, கமலவாசகி துப்பாக்கிச் சூடு நடத்த இன்ஸ்பெக்டரைத் தூண்டுகிறாள். நடத்தப்படுகிறது. விளைவாக இரண்டு உயிர்கள் பலியாகின்றன. ஒன்று திரிவேணியின் அத்தை. மற்றொன்று வெங்கு. தீக்ஷிதரை ஒரு காவலன் சுடப் பார்க்க, அவரைத் தள்ளிவிட்டு வெங்கு அந்தக் குண்டுக்குப் பலியாகிறான். இந்த இரு மரணங்களும்

ரங்கமணியை மிகவும் பாதிக்கின்றன. ப�ோலவே, சிவானந்தத்தையும். தன் மனைவியை முதன்முதலாக வெறுக்கத் தலைப்படுகிறான். சர்தாரின் தீவிரவாத இயக்கம், சிவானந்தத்தின் மனைவியைக் கடத்திவரத் திட்டமிட, அந்தச் சந்தர்ப்பத்தில்தான் அவள் தன் முன்னாள் காதலி என்பதை அறியும் ரங்கமணி, கடத்தாமல் விட்டு விடுகிறான். விளைவாக இயக்கத்தினரின் அதிருப்திக்கு ஆளாகிறான். சர்தார் அவனுக்கு ஆதரவாகப் பேசி, வேற�ொரு திட்டத்துக்கு அனைவரையும் தயார்படுத்துகிறார். நெல்லைக்கு ரயிலில் வரும் அறுநூற்றுச் ச�ொச்சம் வெள்ளை

I¡IQ | 69 யர்களை சேரன் மாதேவிப் பாலத்தில் குண்டுவைத்து கூண்டோடு ச�ொர்க்கத்துக்கு அனுப்பும் திட்டம் அது. எதேச்சையாக அச்சகத்துக்கு வரும் திரிவேணி ஏத�ோ நடப்பதை அறிந்து, சாமர்த்தியமாகச் செயல் பட்டு அவர்கள் திட்டத்தை அறிந்து க�ொள்கிறாள். அந்த மரணங் களைத் தடுக்கப் புறப்படுகிறாள். நள்ளிரவில் ஆங்காங்கே புதர் மறைவில் சர்தாரின் கும்பல் பதுங்கியிருக்க, ரயில்

பயங்கரமான ப�ோர் ஆயுதம் என்பது புத்தகம் தான்! – மார்ட்டின் லூதர் கிங்

ம் புத்தக .. . என்பது பாலத்தில் ஊர்ந்து சென்று, குண்டுவெடிப்புக்கான வயரைக் கட் செய்து விடுகிறாள். திரும்புகையில் மின்னல் வெளிச்சத்தில் யாரந்த ஆசாமியென்று தெரியாத சர்தார், சுட உத்தரவிட, இரண்டு குண்டுகள் பாய்ந்து கீழே சரிகிறாள். இதேசமயம், குண்டு வெடி

சதித்திட்டத்தை வேற�ொரு வழியாக அறிகிற சிவானந்தம் அதைத் தடுக்க அங்கே வருகிறான். ரயில் பாலத்தைக் கடந்து செல்ல, இவர்கள் திட்டமிட்டபடி குண்டு வெடிக்கவில்லை. சிவானந்தத்தின் கூட்டத்தைக் கண்ட சர்தார் அனைவரையும் தப்பிய�ோடச் ச�ொல்ல, தப்பிய�ோடும்போதுதான் சுடப்பட்டது திரிவேணி என்பதை அறிகிறான் ரங்கமணி. ஸ்தம்பித்து அமர்ந்து விடுகிறான். அவனது தீவிரவாத மனம் அங்கேயே அழிந்துவிட, தியாகத் தின் பெருமையை உணர்கிறான். அங்கே வரும் சிவானந்தத்திடம் தன்னைக் கைது செய்யச் ச�ொல்கிறான். க�ோர்ட்டில் சிவானந்தமும், தீக்ஷிதரும் வக்கீல் வைத்து வாதாடிய ப�ோதும், ரங்கமணிக்கு ஆயுள் தண்டனை விதிக்கப் படுகிறது. சிவானந்தம் தன் ப�ோலீஸ் வேலையை ராஜினாமா செய்து, தேசத் த�ொண்டனாகிறான். அதைக் கேவலமாகப் பேசும் கமலாவின் கன்னத்தில் பளாரென்று அறைந்து அவளைப் புறந்தள்ள, அவள் தன் தவறை உணர்ந்து திருந்துகிறாள். அவன் வழிக்கே அவளும் மாறுகிறாள். ஐந்தாண்டுகள் கழித்து ரங்கமணி விடுதலை செய்யப்படு கிறான். காரணம், தேசம் விடுதலை பெற்றிருக்கிறது. சிவானந்தமும் கமலவாசகியும் அவனை வரவேற்றுத் தங்களுடனேயே தங்க வைக்கிறார்கள். நவகாளிக் கலவரம் உள்ளிட்ட இந்து முஸ்லீம் கலவரங்கள் வடநாட்டில்

70 | I¡IQ

துப்பாக்கியை நீட்டி மிரட்டியதும் “வலிக்காம சுடுங்க!” என்றது குழந்தை! -நத்தம்.எஸ்.சுரேஷ்பாபு

m படிப்பவரின் மனங்களில் சுதந் திர வேட்கையையும், நம் முன்னோர் குறித்த பெருமித உணர்வையும் ஒருங்கே ஏற்படுத்தவல்ல இந்த நாவல் 1967ம் ஆண்டு ‘கல்கி’ வார இதழ் நடத்திய வெள்ளிவிழாப் ப�ோட்டியில் இரண்டாம் பரிசை வென்ற கதை. கமலஹாசனின் ‘ஹேராம்’ திரைப்படத்தில் இந்த நாவலின் தடயங்கள் பல இருக்கும்! இந்நூலைப் படிக்க விரும்புகிற வர்கள் அணுக வேண்டிய முகவரி: வானதி பதிப்பகம், 23, தீனதயாளு சாலை, தி.நகர், சென்னை-17. ப�ோன் : 24342810 / 24310769.

குட்டியூண்டு கதைகள்

நிகழ்வதைக் கேள்விப்படுகிற ரங்கமணி மனம் தாளாது மகாத்மா காந்தியைச் சந்திக்கப் புறப்படுகிறான். தீக்ஷிதரும் உடன் வருகிறார். தில்லியில் அவன் தங்கியிருக்கும் விடுதியில் விநாயகராவ் என்ற இளைஞன் ரங்கமணிக்கு அறிமுகமாகிறான். அவனும் காந்தியைப் பார்க்க வந்திருப்பதாகக் கூறுகிறான். மறுநாள் தீக்ஷிதருடன் ரங்கமணி செல்கையில் நேரமாகிவிட, காந்திஜி பிரார்த்தனைக் கூடத்திற்குச் செல்ல நடந்து க�ொண்டிருக்கிறார். கூட்டத்தில் முண்டியடித்துக் க�ொண்டு முன்னே செல்லும் ரங்கமணி வணங்க, அங்கே நின்றிருந்த விநாயகராவ் (க�ோட்ஸே) காந்தியைத் திடீரென்று சுட்டு விடுகிறான். ‘ராம் ராம்’ என்றபடி மகாத்மா சரிய, ‘பாபுஜி...’ என்று அலறியபடி தாங்கிப் பிடிக் கிறான் ரங்கமணி. காந்தி ஒரு கணம் அவனைப் பார்த்துவிட்டுக் கண்மூடுகிறார். அவன் கையில் எடுத்து வந்திருந்த, அவர் தந்த இயேசு ப�ொம்மை கீழே கிடக்க, ரங்கமணியின் கண்ணீரும், காந்தியின் இரத்தமும் அந்தப் ப�ொம்மையை மூடுகின்றன.

ஷார்ட் ‘கட்’டியவர்

பாலகணேஷ்

“நாளை விடிந்ததும் தூக்கு” என்றார் ஜெயில் வார்டன். இரவு முழுவதும் தூங்கவில்லை, கைதியைத் தூக்கில் ப�ோடுபவன். -பழனீஸ்வரி தினகரன்

I¡IQ | 71

72 | I¡IQ



தயரேகையின் மையத்தில் அதிர்வுகளை அள்ளித் தெளிக்கும் வித்தையை எங்கே கற்றிருக்கிறாய்..? ஒரு நாளின் த�ொடக்கம் உன் சுவாசத்தின் அருகில்  இருக்க கூடாதா என ஏக்கம் க�ொள்ள வைக்கிறாயே. சொற்களற்ற போர் ஒன்றில் வாளின்றி போராடிக் கொண்டிருக்கிறோம். கற்பனைகளில் நீ என்னை ரசித்ததை நான் உன்னை ரசித்ததை வெட்கமின்றி, உளறத்தான் இன்று மனம் துடிக்கிறது. உறங்க மறுத்த விழிகளுக்கு நடுவில் நீ நின்று இம்சிக்கிறாய் டியர். ஆர்ப்பரிக்கும் அலைகளைப் போல உன் காமம் நேற்று என்னை வாரிச் சுருட்டிக் கொண்டது. குளிர் நிறைந்த காற்றில் ஆடைகளுக்குப் பதில் நான் ஆசையாய் அணைத்துக் கொள்ளக் கேட்டது. நான் சிரித்துக்கொண்டேன். உன் காதலையும், காமத்தையும் ஒருசேர தினசரி அணைத்துக் கொண்டே இருக்கிறேன். உனக்குப் பிடித்த நிறத்தை உடுத்தி, நீ கலைக்கவென மிதமான அலங்காரத்தில் காத்திருக்க, உன் மடியில் எனை அமர்த்திக் கொள்ள, மார்போடு சாய்த்துக் கொள்ள இருவரின் மூச்சுக் காற்றும் கலந்து அந்த உஷ்ணத்தில் அறைக்குளிர் இயந்திரம் தன் தோல்வியை ஒப்புக் கொண்டது நம்மிடம்.

I¡IQ | 73 ஏன்டா இத்தனை இதம். பேச்சில், அணைப்பில்? பக்கத்தில் அரைக் கண் மூடிச் சிரிக்கிறாய். போதுமா என்ற என்ற மெளனக் கேள்விக்கு போதாது என்று அணைத்துக் கொள்கிறாய். என் உடல் முழுக்க உன் வாசத்தை உணர்கிறேன். உன் உதடுகள் படாத இடம் ஒன்று இருக்கிறதா என்று யோசித்துப் பார்க்கிறேன். நம் இருவரின் உடலும் ஒருவரின் ஒருவர் பிடியில். ச ெல்ல ம ா ய் இம்சிக்க மெளனமாய் வ ார்த்தைகளை க் கோர்த்து குரல் எழுப்ப உன்னால் எப்படி முடிகிறது?! நீ என்னை மிஸ் பண்ணவே இல்லை.... என்று செல்லச் சண்டைகள் போடக் காத்திருக்கிறேன். எப்படி என்னைச் சமாளிக்கப் போகிறாய் காதலனே ! சரியான அன்பு ராட்சஸி டி நீ.....! அநேகம் முறை நீ உச்சரிக்கும் வார்த்தைகள். அராஜகக் காதலின் சுகம் அறிந்து கொள்ளடா என்னிடம். என் மெளனத்தின் அர்த்தம் கூட உணர்ந்தவளாயிற்றே நீ ! ஏய் இன்றைய தினம் இப்படி சண்டை பிடித்தே வீணாக்கப் போகிறாயா? இதற்கு போன தடவையைப் போல கடிதமே எழுதியிருக்கலாம்

என்கிறாய். நீண்ட நாள் ஆசை என் ராட்சஸியே... உன்னை மடியில் இருத்திக்கொண்டு, கூந்தல் கோதிக் கொண்டு இந்த டைரியை வாசிக்க வேண்டும் என்று.....! வெற்றுப் பக்கமாய் இருந்த மனதின் முழுநீள புரியாத ஓவியமாய் நீ! நேசிக்கும் விழிகள், விலக்கும் வார்த்தைகள் என்று, தவிப்பாய் காத் திருக்கிறாய். அருகில் வந்ததும் அனலாய்த் திரும்புகிறாய். இனிய கற்பனை களை விதைத்த வனே உன் கதவடைப் பினைத் தாங்கும் சக்தி இல்லை என்னிடம் ! எத்தனை முத்தங்கள் உ யி ர் ப் பூ ட்டை த் திறந்து எனை ஆட் கொள்ள நீ தந்த பரிசுகள். ஒவ்வொரு விடியலிலும் உனைக் கண்டேன் என் கனவில்! ஒவ்வொரு இரவும் மூடிய விழிகளுக்குள் உருவமாய் நீ வருவாய் என் நினைவில்! என்ன என் இதயம் தங்கமாய் ஜ�ொலிக்கிறது. நீ அதில் இருப்பதனாலா? நீ காதலை உணர்த்தினாய் உன் விழிகளில்! ஆசையை உணர்த்தினாய் வருடலில்! அன்பை உணர்த்தினாய் உன் அணைப்பில்!

74 | I¡IQ

அ,

ஆ- எழுத்துக்களை நாம படிக்க ற�ோம். ஆனா அந்த எழுத்துக்களைக் கண்டுபிடிச்சானே ஒருத்தன்... அவன் அ, ஆ படிக்கலை! அப்படின்னா... படிக்காதவன் கண்டுபிடிச்சதைத்தான் படிச்சவன் படிக்கிறான்!

-ஒரு மேடைப் பேச்சில்... -எம்.ஆர்.ராதா

உன் மனதை ஆயிரம் மூடிகள் ப�ோட்டு நீ மறைத் தாலும், விழிகள் உ ண்மையை க் காட்டிக் க�ொடுத்து வி டு கி றதே ! இமைக்க மறந்த த ரு ண ங்கள் ! பு ரி ப ட ா த பார்வைகள் பல நேரம்! அது என்ன உ ண ர் வு ? இ ர வு க ளி ன் த�ொ ட க்க த் தி ல் த னி மை யி ன் பிடிப்பில், ப�ோர் வையாய் உன் நினைவுகள்! என் ஆறறிவிற்குள் நீ அடங்க மறுக்கிறாய்! உனைப் புரிந்துக�ொள்ள இயலாமல் தவிக்கிறேன் நான்... விரும்பினாய் விழிப்பார்வையால்! விலகிடவே நினைத்தேன், முடியவில்லை,

மாட்டிக் க�ொண்டேன் உன்னில்! பார்வையால் நனைத்தாய்! வ ார்த்தை ய ா ல் து வ ட் டி ன ா ய் ! பிறகு…. ஏன்? ஏன்? ஏன்? அவன் டைரியை மூ டி ன ா ன் . “ அ ப்ப டி யெல்லாம் இ ல்லை ட ா ? ! உன்னை தள்ளி வைப்பது என்னை ந ானே . . . . … ” என்றான். “ ஒ ன் று ம் பேசாதே, எனக்குத் தெரியும்?!” “தெரிந்தும் ஏன்?” “இனி கடிதம் எழுதாதே? உன் கண்களை விடவா அது என் னிடம் உன்னை உணர்த்திவிடப் போகிறது?”

காதல் கிறுக்கி

I¡IQ | 75

1. உங்களுக்கு வாழ்நாளில் அசாதாரண சாகசம் என்னவ�ோ அதுவே எங்களின் அன்றாட வாழ்க்கை! - லே-லடாக் நெடுஞ்சாலையில் இந்திய ராணுவம் வைத்துள்ள வாசகம். 2. காற்று வீசுவதால் எங்கள் க�ொடி பறக்கவில்லை. தன் உயிரைத் தியாகம் செய்த ஒவ்வொரு ராணுவ வீரரின் இறுதி மூச்சுடன் பறக்கிறது. – இந்திய ராணுவம். 3. நான் மூவர்ணக் க�ொடியை ஏந்திக் க�ொண்டு… அல்லது மூவர்ணக் க�ொடியைப் ப�ோர்த்திக் க�ொண்டு வருவேன்… கண்டிப்பாக வருவேன் – கேப்டன் விக்ரம் பத்ரா, இறுதி வீரச்சக்கரம். 4. என் வீரத்தை நிரூபிக்கும் முன் என் மரணம் வந்தால்… நான் மரணத்தைக் க�ொல்வேன்… என்று சத்தியம் செய்கிறேன்.” – கேப்டன் மன�ோஜ் குமார் பாண்டே… பரம்வீர் சக்ரா. 5. எங்களைப் பிடிக்க நீங்கள் கூர்மையாக இருக்க வேண்டும்… ஆனால் எங்களை வெல்ல நீங்கள் குழந்தையாக இருக்க வேண்டும். – இந்திய ராணுவம். 6. கடவுளே, எங்கள் எதிரிகள் மீது கருணை காட்டுங்கள்… ஏனென்றால் நாங்கள் அதனை அவர்களிடம் காட்ட மாட்டோம். – இந்திய ராணுவம். 7. நம் வாழ்வு தற்செயல்! நம் காதல் நம் விருப்பம்! நாட்டைப் பாதுகாக்க க�ொலை செய்வது நம் த�ொழில்! – அதிகாரிகள் பயிற்சி அகாடமி. சென்னை. 8. மரணத்திற்குப் பயப்படவில்லை என்று ஒருவர் கூறினால், ஒன்று ப�ொய்யாக இருக்க வேண்டும்… அல்லது அவர் இந்திய ராணுவத்தைச் சேர்ந்தவராக இருக்க வேண்டும். –ஃபீல்ட் மார்ஷல் சாம் மானக் ஷா. 9. “பயங்கரவாதிகளை மன்னிப்பது கடவுளின் வேலை… அதற்காக அவர் களைக் கடவுளைச் சந்திக்க வைப்பது எங்கள் வேலை. - இந்திய ராணுவம். 10. நம் நாட்டுக்கு க�ொடுக்க ஒரே ஒரு உயிர் மட்டுமே உள்ளதே என்று வருந்துகிற�ோம். – இந்திய ராணுவம்.

-த�ொகுப்பு :

ஸர�ோஜா சகாதேவன்

76 | I¡IQ



ந்தியாவில் பணி செய்வதைவிட வெளிநாட்டில் பணி செய்பவர்களுக்கு அதிக ஊதியம் தரப்படுகிறது. வெளிநாடுகளில் பணிபுரிவதால் குறைந்த காலத்தில் பெருமளவில் ப�ொருளீட்ட முடியும் என்கிற எண்ணம் இன்றைய இளைஞர்களிடம் ஏறபட்டுள்ளது. காரணம் இந்திய ரூபாயின் மதிப்பை விட வெளிநாடுகளின் ரூபாயின் மதிப்பு அதிகம். வெளிநாடுகளில் வேலை கிடைத்தால் வாழ்க்கையில் விரைவாக முன்னேறிவிடலாம் என்று பல இளைஞர்கள் எண்ணுவதற்கும் காரணம் க�ொர�ோனாவுக்கு முன் காலங்களில் வெளிநாடு சென்றவர்கள் பிரமிக்கத்தக்க வகையில் முன்னேறியிருக்கிறார்கள். வெளிநாட்டு வேலைக்கு செல்ல நினைப்பவர்கள் படித்தவர்கள், படிக்காதவர்கள் என்றில்லாமல் எல்லாருக்குமே வேலைவாய்ப்புகள் உள்ளன. தற்போதைய க�ொர�ோனா சூழ்நிலையில் உள்ளூரில் வேலை வாய்ப்புகள் குறைந்துள்ளன. பல வெளிநாட்டு கம்பெனிகள் தங்கள் நிறுவனத்தில் உற்பத்தியைக் குறைத்துள்ளன. சில நிறுவனங்கள் மூடுவிழா கண்டுள்ளன. இந்த நிலையில் வெளிநாட்டு வேலைக்குச் செல்லுவ�ோரின் எண்ணிக்கை கூடியிருக்கிறதா? குறைந்திருக்கிறதா? என்கிற கருத்தை முன்வைத்து சிலரிடம் கேட்டேன். அவர்களின் பதிலுரை இத�ோ… மூத்த இயக்குநர், L&Tயில் பணியாற்றிய G.S. விஜயகுமார் தன் கருத்தை பதிவு செய்தார்.

“இன்றைய

தலைமுறை

யினரிடையே வெளிநாடுகளுக்கு இன்பச் சுற்றுலா செல்லவேண்டும், வெளிநாடுகளில் கல்வி / உயர் கல்வி பயிலவேண்டும், வெளிநாடுகளில் வேலை

I¡IQ | 77 பார்த்துக் க�ொண்டு, குடியுரிமை யைப் பெற்று அங்கேயே செட் டி ல ா கி வி ட வேண்டும் என்கின்ற ம�ோகம் நாளுக்கு நாள் அதிகரித்துக் க�ொண்டிருக்கின்றது என்பதே நிதர்சனம். நாம் அதிகம் விரும்பும் அமெ ரிக்கா, ஐர�ோப்பா, ஆ ஸ் தி ரே லி ய ா , சிங்கப்பூர், கனடா ப�ோன்ற நாடுகளில் இந்திய ரூபாயின் மதிப்பு குறைந்து இருப்பதும், இந்நாடுகளின் உள்கட்டமைப்பு வளர்ச்சி மற்றும் வாழ்க்கைத் தரம் சிறப்பாக இருப்பதும் அதற்கு ஒரு முக்கியக் காரணம். சில பெற்றோர்கள் கூட தங்கள் பிள்ளைகளின் திரும ணத்திற்கு வெளிநாட்டு வரன் தான் வேண்டும் என்று எதிர்பார்க் கின்றனர். கடந்தசில ஆண்டுகளாக, மெல்ல மெல்ல, இந்த நாடுகளில் வெளிநாட்டவர் வந்து செட்டில் ஆவதற்கு எதிர்ப்புகள் வலுத்துக் க�ொண்டிருக்கின்றன. மேலும், க�ொர�ோனா பாதிப்பால் விசா வழங்குவது மற்றும் வேலை வாய்ப்பு பர்மிட் வழங்குவதில் தாமதங்கள் ஏற்படுகின்றன. இதனால் பலர் பெரிதும் பாதிப்பிற்குள்ளாகி இருக்கின்றனர். இருந்தாலும், குறிப்பாகத்

தகவல் துறையில்

த�ொழில்நுட்பத் (IT) வெளிநாட்டு வேலை வாய்ப்புகள் அ தி க ரி த் து க் க�ொண் டு த ா ன் இ ரு க் கி ன்ற ன . இ த்தகை ய நி று வ ன ங ்க ள் தங்களின் 20% த�ொழிலாளர்களை வெ ளி ந ா டு க ளி ல் தங்க வைத்து அ வர ்க ள து வாடிக்கையாளர் களுக்குத் தடையில்லா சேவையை உறுதி செய்கின்றன. வேலை செய்யும் பர்மிட் கிடைப்பது தற்போது தாமதமா வதால் இ ந் நி று வ ன ங ்க ளு ம் கூ ட பலவகைகளில் பாதிக்கப்படு கின்றன. சென்னையில் எம்.என்.சி. கம்பெனியில் பணியாற்றும் சீனியர் மேனேஜர் ராசி பாஸ்கர் :

ச�ொ

ர்க்கமே என்றாலும் அது நம் ஊரைப் ப�ோல வருமா? எந்நாடு என்றாலும் அது நம் நாட்டுக்கீடாகுமா? என்கிற பாடல் வரிகள் தான் என் கருத்து. அதிகச் சம்ப ள த் தி ற ்காக வெ ளி ந ா டு க ளு க் கு ச் சென்று இங்கு கி டை க் கு ம் அரிய சந்தோ

78 | I¡IQ

எனக்கு ஒரு க�ோடி கிடைத்தால் ஒரு நூலகம் கட்டுவேன். – மகாத்மா காந்தி

ம் புத்தக .. . என்பது ஷத்தை இழக்க விரும்பவில்லை. இங்கிருக்கும் இயல்பான வாழ்க் கையை வாழ்வதை விடுத்து அங்கு சென்று இயந்திர வாழ்க்கையை வாழ விரும்பவில்லை! ச�ொந்த பந்தங்களை விட்டு விலகி பல கட்டுப்பாடுகளுடன் கவலையுடன் நிம்மதியைத் த�ொலைத்து ப�ோலியான வாழ்க்கை வாழ்வதைவிட குறை வான வருமானமே கிடைத்தாலும் ச�ொந்த பந்தங்களுடன் இங்கு நிறைவான, மகிழ்ச்சியான வாழ்க்கையையே வாழ விரும்புகிறேன்! குறிப்பாக க�ொர�ோனா காலத்திற்குப் பிறகு வெளிநாடு செல்வது குறைந்துதான் இருக்கிறது. என் உறவினர்கள் பலர் வெளிநாடு செல்ல முயற்சி செய்துவிட்டு இரண்டு ஆண்டு களாக உள்ளூரில் வேலை

செய்துக�ொண்டிருக்கிறார்கள். வெளிநாட்டு வேலைக்கு அனுப்பிவைக்க தமிழக அரசு நடத்தும் ஓவர்சீஸ் மேன்பவர் கார்ப்பரேஷன் லிமிடெட் (OMC) நிறுவனத்தில் பேசின�ோம்.

தற்போது

வெளிநாடுகளுக்கு வேலைக்குப் ப�ோகும் ஆட்கள் அ தி க ம ா கி யி ரு க் கி ற ா ர ்க ள் என்பது உண்மை. காரணம் க�ோவிட் பாதிப்பு குறைந்தவுடன் நிறைய பேர் ஆன்லைனில் பதிவு செய்துவருகிறார்கள். ஏற்கெனவே திரும்பி வந்தவர்கள், புதிதாக வேலைக்குப் ப�ோகிறவர்கள் என நிறையபேர் அப்ளை செய்கிறார்கள். எங்கள் மூலம் செல்பவர் களுக்கு வெளிநாட்டில் அந்த நிறுவனம் உண்மையானதுதானா என்று கண்டறிந்து எம்.ஓ.எச். கையெழுத்து ப�ோட்டு அனுப்புவ�ோம். எங்களிடம் ஏற்கெனவே த�ொடர்பில் இருக்கும் கம்பெனிகளுக்கு ஆட்களை அனுப்பிக் க�ொண்டிருக்கிற�ோம். அந்தக் கம்பெனிகள் எங்களிடம் வெளிநாடுகளில் என்ன வேலைக்குக் கேட்கிறார்கள�ோ அதற்கேற்ற ஆட்களை நாங்கள் அனுப்பி வருகிற�ோம். அதில் அதிகளவு செவிலிப் பணியாளர்கள், வீட்டுப் பணிக்கான பெண்கள்தான் நிறைய பேர் ப�ோகிறார்கள். குறிப்பாக குவைத் மற்றும்

I¡IQ | 79

ச�ௌதி அரேபியா நாடுகளுக்கு நாங்கள் அனுப்பி வைக்கிற�ோம். மற்ற நாடுகளில் எங்களிடம் தேவைக்குக் கேட்டால் தகுந்த ஆட்களை அனுப்பி வைப்போம். கடந்த ஆண்டில் 70 பேர் வெளிநாட்டு வேலைக்குப் ப�ோயிருக்கிறார்கள். தனியார் மூலம் ஆயிரக்கணக்கில் ப�ோகலாம். எங்கள் மூலம் வெளிநாட்டில் பணியாற்ற www.omcmanpower.com என்கிற முகவரியில் த�ொடர்பு க�ொள்ளலாம். குறைந்தபட்சம் 10வது படித்திருக்கவேண்டும். பாஸ்போர்ட் வைத்திருக்க வேண்டும்” என்றார். Y-Axis Chennai என்கிற பெர்மனன்ட் விசா வாங்கித் தரும் நிறுவனத்திடம் பேசின�ோம்.

“ க�ொ

ர�ோ ன ா வு க் கு ப் பிறகு எங்களிடம் வரும் வாடிக்கையாளர்களின் எண் ணிக்கை குறையவும் இல்லை, அதிகரிக்கவும் இல்லை. நார்ம லாக எப்போதும் ப�ோல்தான் உள்ளது. நாங்கள் வேலைக்கு அனுப்பும் ஏஜென்ஸி அல்ல. நாங்கள் அமெரிக்கா, ஆஸ்திரேலியா, கனடா, ஜெர்மனி ப�ோன்ற நாடுக ளுக்குப் ப�ோவ�ோருக்கு PR Visa and Immigration கிளியரன்ஸ் செய்து தருகிற�ோம். எங்களுக்குத் தெரிந்து வெளி நாட்டுக்குப் ப�ோகும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது என்றுதான் தெரிகிறது” என்றார்.

மூலவன்

80 | I¡IQ

காற்றைக் கிழித்துக் க�ொண்டு வந்த மின்சார ரயில் முதல் நடைமேடையில் வந்து நின்றது. சட்டென ரயிலில் தாவி ஏறினாள் கவி. “சாப்டியா வாணி?” “இன்னும் இல்லடி! உனக்காகத் தான் காத்திருந்தேன்” என்ற வாணியின் கவனம் திரும்பியது. கைகளைச் சத்தமாகத் தட்டி ஒலி எழுப்பியபடி ஆணின் உடல்வாகும், பெண்ணின் நளினமும் க�ொண்ட, கடவுளின் படைப்புப் பிழைகளான சிலர் அனைவரிடமும் கையேந்தினர். சில இளைஞர்கள் அவர்களைக் கண்டதும் கிண்டல் , கேலி செய்து மகிழ்ந்தனர். ஆண்களின் முகங்களை வழித்து திருஷ்டி கழித்து பணம் கேட்டும், கரகரக் குரலில் கூச்சல்கள், சேட்டைகள் என்று அவர்களும் பயணிகளிடம் கேட்டார்கள். பயணிகள் அனைவரின் முகங்களில் அசூயை!.. அருவெறுப்பு!... பயம்! வாணியிடம் வந்த ஒருவ(ள்)ன். “அக்கா நல்லாயிருக் கீங்களா?” என்று புன்னகையுடன் கேட்டாள். “ம்...நல்லாயிருக்கேன் சவிதா! நீ எப்டியிருக்கே?” என்றவளை ஆச்சரியமாக பார்த்த கவியிடம்... “அவங்க நம்ம கிட்ட எதிர்ப்பாக்குறது சக மனுஷியாய் ஒரு த�ோழமையான புன்னகை மட்டும்தான். நாம அவங்களை மனுஷங்களா நடத்தினா, அவங்களும் அதே மாதிரி நடந்துப்பாங்க...” என்றாள் வாணி.

I¡IQ | 81

1987 _ டிசம்பர் 23 , புதன் கிழமை.... மாலையிலிருந்தே புரட்சித் தலைவரின் உடல் நிலை கவலைக்கிடமாக இருப்பதாகப் பரபரப்பான செய்தி பரவிக் க�ொண்டிருந்தது. உலகின் பல்வேறு பகுதியிலிருந்தும் ப�ோயஸ்கார்டனில் இருந்த என்னிடம் த�ொலைபேசி மூலம் தலைவரது உடல் நிலை குறித்து விசாரித்துக் க�ொண்டேயிருந்தனர். இது பற்றி நான் புரட்சித் தலைவியிடம் தெரிவித்தேன். “சி.எம்.க்கு உடல் நிலை சரியில்லை. ப�ோனில் யார் த�ொடர்பு க�ொண்டாலும் இது பற்றிய செய்தி எதுவும் கூற வேண்டாம். தெரியாது என்று ச�ொல்லி விடு.” என்றார் அவர். ப�ோயஸ் கார்டன் வேதா நிலையமான ஜெ... வீட்டில் த�ொலைபேசி த�ொடர்ந்து ஒலித்துக் க�ொண்டே இருந்தது. பாதுகாப்பு அதிகாரி முதல் ஊழியர்கள் உட்பட எல்லோரும் உறங்கி விட்டனர். நான் ப�ோன் அருகிலேயே நாற்காலி ப�ோட்டு அதில் உட்கார்ந்தபடியே உறங்கியும் உறங்காமலும் இருந்து த�ொடர்பு

82 | I¡IQ

க�ொள்பவர்களுக்கு பதில் கூறிக் க�ொண்டிருந்தேன். விடியற்காலை இருக்கும். இண்டர்காமில் அழைத்தார் புரட்சித்தலைவி. அப்போது மணி 3. “ரவி... சி.எம். இறந்துட்டார். அதிகாரப்பூர்வமான அழைப்பு வந்ததும் புறப்படணும். தயாராய் இரு” என்று ச�ோகம் ததும்பிய குரலில் கூறினார் அவர். த�ொலைபேசி த�ொடர்ந்து ஒலித்துக் க�ொண்டிருந்தது. நான் பாதுகாப்பு அதிகாரியை எழுப்பி செய்தியை தெரிவித்தேன். அவர் ஓ.... என்று கதறி அழத் த�ொடங்கினார். அவரது அழுகுரல் கேட்டு ஊழியர்கள் விழித்துக் க�ொண்டனர். அவர்களும் அழ ஆரம்பித்தனர். அழும்

சத்தம் கேட்டு சமையற்காரர் ராஜம் வரவேற்பறை ந�ோக்கி, “அம்மாவுக்கு என்னாச்சு..?” என்று பதற்றத்துடன் ஓடி வந்தார். “அம்மாவுக்கு ஒன்றும் ஆக வில்லை. தலைவர் இறந்துட் டாங்க.” என்றேன். அவர் உடனே தலையில் அடித்துக் க�ொண்டு கதறினார். சிறிது நேரத்தில் மாடியிலி ருந்து இறங்கி வரவேற்பறைக்கு வந்துவிட்டார் ஜெ. என்னிடம்.... “காருக்கு பெட்ரோல் நிரப்பி விட்டு டிரைவரைத் தயாராக இருக்கச் ச�ொல். இந்த ப�ோன் ரிசீவரை எடுத்து கீழே வைச்சிடு” என்றார். ரிசீவரை எடுத்து கீழே வைக்கப் ப�ோன நான், இந்த அழைப்பை மட்டும் பேசிடலாம்

I¡IQ | 83 என்று... “வணக்கம்! வேதா இல்லம்....” என்றேன். “வணக்கம்.... நான் ரஜினி காந்த் பேசுறேன். சி.எம்.சார் இறந்துட்டாங்க. மேடம் ர�ொம்ப அப்செட்ல இருப்பாங்க. அவுங்க கிட்ட நான் அப்புறமா பேசுறேன். சினிமா உலகமே மேடத்துக்கு துணையா இருப்பப�ோமுன்னு... ச�ொல்லுங்க. என்னோட ஆறுத லயும் தெரிவிங்க. தைரியமா இருக்கச் ச�ொல்லுங்க... மேடத்தை பத்திரமா பாத்துக்கோங்க” என்றார். அதற்குள் ஜெ..... அவர்கள் கறுப்புச் சேலையில் ப�ோர்டிக�ோவுக்கு வந்து விட்டார். நானும் ப�ோர்டிக�ோ பகுதிக்கு ஓடினேன். தயாராய் நின்ற கண்டசா காரில் ஏறியதும் கார் புழுதி பறக்க ராமாவரம் த�ோட்டத்துக்கு சென்றது. அங்கு ஏற்கெனவே அமைச்சர்கள், எம்.பி., எம்.எல். ஏக்கள் கட்சி நிர்வாகிகள் மற்றும் ப�ொதுமக்கள் என்று கூட்டம் நிரம்பி வழிந்தது. உள்ளே செல்ல அனுமதி மறுத்ததைத் த�ொடர்ந்து, சிறிது நேரப் ப�ோராட்டத்திற்குப் பின்னரே உள்ளே செல்ல வழிவிட்டனர். அதற்குள் புரட்சிதலைவரின் உடல் வீட்டிலிருந்து வெளியே க�ொண்டு வரப்பட்டு வேனில் ஏற்றப் பட்டது. வேன் புறப்பட்டதும் ராமா வரத்திலிருந்து எல்லா கார்களும்

வேனைப் பின் த�ொடர்ந்து ராஜாஜி ஹால் ந�ோக்கி சென்றன. செய்தியறிந்து அங்கும் ஏராள மான ப�ொதுமக்கள் வரிசையில் நின்று காத்துக் க�ொண்டிருந்தனர். ப�ொதுமக்கள் பார்வைக்கு தலைவரின் உடல் வைக்கப் பட்டதும் லட்சக்கணக்கான மக்கள் கதறி அழுது க�ொண்டே வரிசை வரிசையாக வந்து க�ொண்டே இருந்தனர். மலர் வளையம் வந்ததும் புரட்சித் தலைவரின் பாதங்களில் வைத்து அஞ்சலி செலுத்தினார் புரட்சித்தலைவி. பின்னர் நேராக தலைவரது தலைமாட்டில் ப�ோய் நின்றார். வெகுநேரம் தலைவரைப் பார்த்தபடியே ச�ோகத்துடன் இருந்தார். ச�ொட்டு நீர்கூட அருந்தாமல் காலையிலிருந்து நாள் முழுவதும் நின்று க�ொண்டிருந்த அவர் ச�ோர்வடைந்தார். இரவு 11 மணியளவில் மயக்கம் ஏற்பட்டது அவருக்கு. இதனால் அவரை வற்புறுத்தி வீட்டிற்கு அழைத்துச் சென்றோம். ப�ோயஸ் கார்டன் சென்றதும் சாப்பாடு எதுவும் வேண்டாம் என்று ச�ொல்லி விட்டு அவரது அறைக்குள் ப�ோய்விட்டார்.



றுநாள் டிசம்பர்-25_ஆம் தேதி வெள்ளிக்கிழமை... அதி காலை நான்கு மணிக்கெல்லாம் மாடியில் உள்ள தனது அறை யிலிருந்து தயாராகிக் கீழே

84 | I¡IQ

இறங்கி வந்தார். கட்சி பார்டர் ப�ோட்ட வெள்ளை சேலை அணிந்திருந்தார் அவர். காரில் ஏறி 5 மணிக்கெல்லாம் ராஜாஜி ஹால் சென்றோம். சென்றதும்.... அவரிடம் மலர் வளையம் க�ொடுத்தார்கள். க�ொடுத்தவர்களிடம் எனக்கும் க�ொடுக்கச் ச�ொன்னார். தலைவரின் உடலுக்கு மலர் வைத்து ஜெ.... வணங்கினார். அவரைத் த�ொடர்ந்து நானும் மலர் வைத்து தலைவருக்கு அஞ்சலி செலுத்தினேன்.! தலை மாட்டில் நின்று க�ொண்டிருந்த ஜெ. அவர்களின் அருகில் ப�ோய் நானும் நின்று க�ொண் டேன். சிறிது நேரத்தில் ச�ோகமெல் லாம் கடந்து புரட்சித்தலைவிக்கு எதிர்ப்பான அரசியல் ஆரம்ப மானது. கட்சியின் சில விஷமிகள், சில ரவுடிப் பெண்களை வரவ ழைத்து ஜெ.வின் அருகில் நிற்க வைத்தனர். அவர்கள் ஜெ.வை இடித்தும் தள்ளியும் இடுப்பில் கிள்ளவும் செய்தனர். இதனால் அவருக்கு ரத்தக் காயம் ஏற்பட்டது. த�ொல்லை தாங்காமல் விரக்தியில் அந்த இடத்தைவிட்டு நகர்ந்து விடுவார் என அந்த விஷமிகள் த�ொடர்ந்து த�ொந்தரவு செய்து க�ொண்டே இருந்தார்கள். நாங்கள் அந்த இடத்தை விட்டு நகரவில்லை. என்னையும் சில ரவுடிகள் இடிப்பதும் தள்ளுவதுமாக துன்புறுத்திக்

க�ொண்டே இருந்தார்கள். இதை கவனித்து விட்ட புரட்சித்தலைவி அவர்கள்.... “ரவி! என்ன நடந்தாலும் இந்த இடத்தை விட்டுப் ப�ோய் விடாதே!” என்று சத்தமாகவும் அதட்டலாகவும் சிங்கம் ப�ோல் கர்ஜித்ததும் விஷமிகள் நடுங்கி விலகி நின்றார்கள். அதையடுத்து... சிறிது நேரத்தில், “ஜானகி யம்மா வரப் ப�ோறாங்க” என்று கூறி விரட்டிவிடப் பார்த்தாங்க. அப்போதும் ஜெ. தலைவரின் தலைமாட்டிலேதான் நின்றார். அப்போது.... ஜானகி எம்ஜியார் அவர்கள் வந்தார். தலைவரது கால் பகுதியில் ப�ோடப் பட்டிருந்த நாற்காலியில் உட்கார வைத் தார்கள். அவர் எம்ஜியாரின் உடல் மீது முகம் புதைத்து அழுதப�ோது மிகவும் துயரமாக இருந்தது. ராஜாஜி ஹால் வராண்டாவில் நடிகர் திலகம் சிவாஜி அவர்கள் தேம்பி தேம்பி அவர்களது நட்பைப் பற்றி கூறி அழுதப�ோது அங்கிருந்த அனைவரும் அவர�ோடு சேர்ந்து அழுது கதறினார்கள். தலைவரது உடல் குடும்ப சடங்குக்காக ராஜாஜி ஹாலுக்கு உள்ளே க�ொண்டு செல்லப்பட்டது. த�ொடர்ந்து நாங்களும் பின் சென்றோம். அங்கும் அனுமதி மறுக்கப்பட்டது. பின்னர் அவர்க ள�ோடு சண்டையிட்டு என்னையும்

I¡IQ | 85 அழைத்துக் க�ொண்டு உள்ளே சென்றார் புரட்சித் தலைவி! உள்ளே சடங்கு சம்பிரதாயங் கள் முடிந்ததும் பழையபடி ஹால் படிக்கட்டுக்கு தலைவரது உடல் க�ொண்டு வரப்பட்டது. பின்னர் பூக்களால் அலங்கரிக்கப் பட்ட பீரங்கி வண்டியை ந�ோக்கி தலைவரது உடல் எடுத்துச் செல்லப்பட்டது. அந்தக் காட்சிகளை த�ொலைக் காட்சி நேரடி ஒலிபரப்பிற்காக வர்ணித்துக் க�ொண்டிருந்தார் வார்த்தைச் சித்தர் வலம்புரிஜான். பீரங்கி வண்டியை ந�ோக்கி தலைவி சென்றப�ோது தலைவி யின் அரசியல் பிரவேசம், தலைவருக்கு ஆட்சியில் தந்த ஆல�ோசனைகள், இயக்கத்தை முன்னெடுத்துச் செல்ல தலைவி எடுத்துக் க�ொண்ட சிரத்தைகள் என ஒவ்வொன்றாக வர்ணித்துக் க�ொண்டிருக்கும் சூழலில்.... தலைவரின் உடல் பீரங்கி வண்டியில் ஏற்றி வைக்கப் பட்டதும் அதனைத் த�ொடர்ந்து தலைவியும் பீரங்கி வண்டியின் மேலே ஏறினார். அவர் ஏறுவதற்கு சிரமப்பட்ட நிலையில் மேலே இருந்த ராணுவ அதிகாரி ஒருவர் தலைவிக்கு உதவினார். மேலே ஏறியதும் மாலைகள் சரிந்து தலைவரின் முகம் மறைக்கப் பட்டிருந்ததை தன் கைகளால் சரிசெய்தார் அவர். அப்போது இதைக் கவனித்த....

ஜானகியின் சக�ோதரர் மகன் திலீபன் மற்றும் கே.பி. ராமலிங்கம் ஆகிய இருவரும் க�ோபத்தில் தலைவியைக் கீழே தள்ளிவிட்டனர். அந்த உயரத்தில் இருந்து கண் இமைக்கும் நேரத்தில் தலைவி சட்டென்று கீழே விழுவதை பார்த்த நான் .... எதுவும் செய்ய இயலாமல் “ஐய�ோ...!’ என்று அலறினேன். கீழே விழுந்த அவர்... க�ோபத்துடனும் வருத்தத்துடனும் முகம் மேலும் சிவக்க மெல்ல மெல்ல எழுந்தார். தந்னை ஆசுவாசப்படுத்திக் க�ொண்டார். தனக்கு எல்லாமுமாக இருந்த தலைவரைச் சுமந்த பீரங்கி வண்டியை பார்த்துக் க�ொண்டே நின்றார். அப்போது பீரங்கி வண்டி மெல்ல நகரத் த�ொடங்கியது. நாங்கள் ப�ோயஸ் கார்டனுக்குப் புறப்பட்டுச் சென்றோம்.

தஞ்சை ரவிராஜ் ( ஜெ ய ல லி த ா வி ன் முன்னாள் செயலாளர்.)

86 | I¡IQ

டா

ஸ்மாக் பாரின் நெரிசலில் பெண்கள் கல்லூரி வாட்ச்மேன் நெப்போலியனுக்கும் ஆட்டோ ஓட்டும் ஜானிவாக்கருக்கும் ஒரு சின்னஞ்சிறு மேஜை கிடைத்த சந்தோஷம். “மச்சி.. பாட்டிலைத் த�ொறடா..” என்றான் நெப்ஸ். இன்றைக்குக் க�ொஞ்சம் காசு இருந்ததால் எம். எம்.எம். பிராண்டு ரம் வாங்கி வந்த சந்தோஷத்தில் இருந்தனர் இருவரும். ப�ோதை ஏற ஆரம்பிக்குமுன்பே “என் உச்சி மண்டைல கிர்ருங்குது” என்று பாட ஆரம்பித்தான் ஜானிவாக்கர். “என் உச்சி மாநாட்டுல சுர்ருங்குது” என்று எசப்பாட்டு பாடினான் நெப்ஸ். “இப்பவே உளற ஆரம்பிச்சுட்டியாடா?” என்று ஒரு மார்க்கமாகப் பார்த்தான் ஜானி. “நான் ச�ொன்னது உனக்குப் பிரியலன்னு ஒத்துக்கோ... உளறல்னு ச�ொல்லாத.. உச்சி

மாநாடுன்னா இன்னான்னு உனக்குத் தெரியுமா?” சட்டென்று பணிவு பூசிய குரலிலுக்குத் தாவி “ச�ொல்லு நைனா.. தெரிஞ்சுக்கறேன்.. ஏன் குடிக்கப் ப�ோறேன்னு என் ப�ொண்டாட்டி என்னை அடிப்பாளே.. அப்போ புதுப்புது ஒலக விஷயம்லாம் தெரிஞ்சுக்கிட்டு வரேண்டின்னு ச�ொல்லாட்டி என் பேரு… ” “உன் பேரு ர�ொம்ப முக்கியம். நம்ம நாட்டோட பேரு க�ொடிகட்டி உச்சில பறக்குதுடா கஸ்மாலம்” என்றான் நெப்ஸ். “ஜி இருவதுன்னா இன்னா தெரீமா உனக்கு?” சைட் டிஷ்ஷூக்கு வாங்கியிருந்த நண்டு வறுவல் ப�ொட்டலத்தைப் பிரித்தபடி கேட்டான். ப�ொன்னம்மா கடை வறுவல், அவளை மாதிரியே சுண்டி இழுக்கும். “அதென்னப்பா ஜி இருவது..? ச�ொன்னாக் கேட்டுக்கறேன்..” “இருபது நாடுங்கள�ோட நிதி அமைச்சருங்களும் மத்திய வங்கிங்கள�ோட ஆளுனருங்களும் சேர்ந்து இதை அமைச்சிருக்காங்கடா.. ஆனா அதுக்கப்புறம் டாப் அரசியல் தலைவருங்க மாநாட்டுக்கு வர ஆரம்பிச்சுட்டாங்களாம்” “நல்ல நாள்லயே நீ

I¡IQ | 87 ச�ொல்றது புரிஞ்சு கிழிக்கும்.. இது ர�ொம்பவே கிழிச்சுடுச்சு ப�ோ..” என்று ச�ொன்னாலும் சலிப்புடன் ச�ொல்லாமல் சிரிப்புடன் ச�ொன்னான். “கேட்டே ஆகணும், உன்னை எவன் விடுவான்.? எனக்கு இருக்கற ஒரே ரசிகன் நீதானே… உண்மையிலேயே ஆச்சிரியமா ஆயிடுச்சு மச்சி. ஜி ட்வன்டின்னு பேசிக்கிட்டு வந்தாங்க காலேசல். ப�ொண்ணுங்கள்ளாமும் கிரிக்கெட் பத்தி ஏத�ோ டி ட்வன்டின்னு பேசுவாங்க. அதுமாதிரின்னு நெனைச்சேன். ஆனா இது இன்னும் பெரிய விஷயம்டா. ஆரம்பத்துல எட்டு நாடுங்கதான் இருந்துச்சாம். அப்புறம் நிதி பற்றிப் பேச எல்லா நாடுங்களும் சேர்ந்துக்கிச்சாம்.” உற்சாகமும் ஆர்வமும் த�ொற்று வியாதி. அது ஜானியைத் த�ொற்றிக்கொண்டது. “இந்த ஜி ட்வன்டில அம்புட்டும் டாப் நாடுங்கதானாம்..” “வெயிட்டீஸ். வெயிட்டீஸ். அந்த நாடுங்க இன்னா இன்னா? “அதெல்லாம் கேக்காதப்பா.. லிஸ்ட்டைச் ச�ொன்னா ப�ோஸ்டர் அடிச்சா ஒட்டப்போற? ஏத�ோ அவங்க பேசிக்கிட்டு வந்தாங்க. அதை நான் ச�ொன்னேன். 1990 ஆம் வருசத்துல ஏத�ோ பணம் பத்தாம ப�ோச்சாமே.. த�ொழில்லாம் படுத்துடுச்சாம்.” “ஆமாண்டா.. நியாபகம் இல்லியா? நமக்குக்கூடப் பணம் பத்தாம ப�ோயி சேட்டு கைல கடன் வாங்கின�ோமே? பிக் பாக்கெட் த�ொழில் முன்ன மாதிரி

இல்லைன்னு நம்ம மாரி கூடச் ச�ொன்னானே..” “உதார் வுடறதுக்கும் ஒரு அளவு இருக்கு.. நீ எந்த வருஷண்டா ப�ொறந்த? 90 ஆம் வருஷம் உனக்கு அஞ்சு வயசுதான் இருக்கும்..” “அட ஆமாம்.. அப்போ எங்க அம்மா அப்பாக்குப் பணம் ப�ோறாம ப�ோயிருக்கும்” “என்னிக்குடா நமக்குப் பணம் ப�ொரண்டிருக்கு?”

“அதுக்கு எனக்கு இன்னா வெக்கம்? நாட்டுக்கே பணம் பத்தலைன்னு இப்பதான ச�ொன்ன? அப்புறம் எப்டி நமக்குப் ப�ொரண்டிருக்கும்..?” பட்டிமன்றத்தில் வெற்றி பெற்றது மாதிரியான களிப்புடன் ச�ொன்னான். “அத்தனை நாடுங்களும் கையைக் கட்டிக்கிட்டு உக்காராம.. இதுக்கு இன்னா வழின்னு மாநாடு ப�ோட்டு ர�ோசனை பண்ணினாங்களாம்.. 20 பேர் அடங்கின குரூப்புன்னு குறிக்க ஜி 20ன்னு வெச்சுட்டாங்களாம் பேரை. இதுல உலகத்துல இருக்கற பத்தொம்பது வளர்ச்சியடைஞ்ச நாடுங்களும்

88 | I¡IQ

ஐர�ோப்பிய ஒன்றியமும்கூட இருக்காங்களாம்..” “அவங்கதான் வளர்ச்சியடைஞ் சுட்டாங்களே.. அப்புறமும் ஏன் வந்து ஒட்டிக்கறாங்க.. ஆனாலும் இன்டரஸ்ட்டா இருக்கு தலீவா..” மற்றவர்கள் கேஸில் ப�ோதை ஏறினால் மரியாதை குறையும். ஜானி அதற்கு நேர் எதிர். “இப்பதான்டா நாம பெருமைப் படற மாதிரியான விஷயம் ச�ொல்லப்போறேன்…” முக்கால் சரக்கில் கால் பங்கு தண்ணீர் ஊற்றி. காதலியைப் பார்ப்பதுப�ோல் அழகு பார்த்தான் நெப்போ. இந்த முறை க�ோல்டன் கிரேப் சாதா பிராண்டிக்குத்தான் க�ொடுப்பினை இருந்தது. அதற்கு மேல் ப�ோகக் கட்டுப்படியாக மாட்டேன் என்கிறதே? “ஹய்யா.. பெருமையா?” விஷயத்தைச் ச�ொல்வதற்கு முன்பே எழுந்து டான்ஸ் ஆடிய ஜானியைப் பார்த்துப் பக்கத்து டேபிள்காரன் “இன்னா மச்சி? ப�ொண்டாட்டி ஊருக்குப் ப�ோயிட்டாளா?” என்று விசாரித்தான். “அப்பிடி மட்டும் ப�ோகட்டும். அடுத்த நாள் ஒனக்கு ஃப்ரீயா சரக்கு வாங்கித்தரேன்” என்றான் ஜானி. “இந்த G20 மாநாடு எப்போதும் ஒரே இடத்துல, ஒரே நாடே நடத்தாதாம்பா

ஒவ்வொரு வருஷமும் டிசம்பர் மாசத்துல ஒரு நாடு தலைவராக ப�ொறுப்பேற்றுக்குமாம். இந்தத் தலைவர் நாடு தான், அடுத்த ஆண்டுக்கான எல்லா G20 சந்திப்புங்களையும் நடத்தணுமாம். இந்தத் தலைவர் நாடு நெனைச்சா G20-ல் உறுப்பினராக இல்லாத நாடுங்களைக் கூட விருந்தாளிகளாக அழைக்கலாமாம். எல்லா G20 மாநாட்டிலும் ஸ்பெயினை வெத்தல பாக்கு வெச்சுக் கூப்பிடுவாங்களாமாம்..” ப�ொசுக்கென்ற குரலில் கேட்டான்.. “இத்தையா பெருமைப் படற விஷயம்னு ச�ொன்ன?” “குடிச்சா மூளை ஷார்ப் ஆவணுண்டா. அதுக்குத்தான் குடிக்கற�ோம். நீ ய�ோசிச்சு முன்னேறவே மாட்டியா?” “ஓ.. புரியுது .. புரியுது.. நம்ம நாடு இந்த வருஷம் தலைமை தாங்குதா?“ குரல் லேசாகக் குழற ஆரம்பித்தாலும் இப்போதைக்கு மூளை ஒத்துழைத்தது. “அதே.. இதுக்கான ஏற்பாடுங்க தடபுடலா நடந்துக்கிட்டு இருக்கு. நம்மள�ோட பிரதம மந்திரிதான் முக்கியப் ப�ொறுப்பு எடுத்துக்கிட்டு இதை நடத்தப்போறாரு..” “சூப்பருப்பா.. ஆனாலும் இதனால நமக்கு ஏதாச்சும் லாபம் உண்டா என்ன?” “அப்டிக் கேளுடா என் சிங்கமே. இதுல எல்லா நாடுங்களும் ப�ொரு ளாதாரம்தாண்டா முக்கியமா பேசுவாங்க. நாம தலைமை தாங்கறதால...” “நாம எங்க தாங்கற�ோம்? நம்ம பிரதமர் தாங்கறாருன்னுதானே

I¡IQ | 89 ச�ொன்ன?” “நாமன்னு ச�ொன்னா நம்ம நாடுன்னு அர்த்தம்டா.. இப்பவே குடியரசு தினத்துக்குக் க�ொடி வாங்கிப் பாக்கெட்ல வெச்சுக்கினேன் பாரு. உனக்கும் ஒண்ணு வாங்கினேன். தேச பக்தி வேணும்டா நல்லவனே..” என்றான். “தப்பு மச்சான்..” “அத்தவுடு.. நமக்கு இன்னா லாபம்னு கேட்ட இல்ல. நம்ம அண்டை அசல் நாடுங்கள�ோட சண்டை கிண்டை வந்தால் நமக்கு சப்போர்ட் கெடைக்கணும்ல.. அதுக்காகவும்.. இந்த வர்த்தகம்ல வர்த்தகம்..” “முன்ன விவிதபாரதி வர்த்தக ஒலிபரப்புன்னு வருமே அதுவா?” “அட சீ… வர்த்தகம்னா யாவா ரம்டா.. அத்தாம்பா.. வியாபாரம்.. மத்த கண்ட்ரீங்க கூட பிசினஸ்..” “வந்து.. க�ோச்சுக்காதப்பா.. சரக்கெல்லாம் விப்பாங்களா?” “உன் புத்தி உன்னை விட்டுப் ப�ோகாதே.. நான் பெரிய அளவுல பேசிக்கினு இருக்கேன்..” “நானும் பெரிய அளவுல பீப்பாய் கணக்காப் ப�ோகுமான்னுதானே கேட்டேன்.’ “நேத்தி நீயும் அலிபாபா படம் டிவில பாத்த ப�ோல இருக்கு.. வுடு வுடு… இந்த வர்த்தகத்துலயே ப�ோட்டா ப�ோட்டி வந்து ப�ோர் வராம பேசித் தீப்பாங்களாம்..” “நம்ம ஆளுங்க பேசிட்டுத் ‘தீர்த்துடுவாங்க’.. அவங்க பேசித் தீர்ப்பாங்க.. ரைட் ரைட்..” “நீ பஸ் கண்டக்கடரா ஆட்டோ கண்டக்டரா? விஷயத்தைக் கேளு மச்சி… ரெண்டு தனி நாடுங்

களுக்குக்கூடப் பேச்சு வார்த்தை நடக்கறதுண்டாம். அமெரிக்கா அதிபர் நம் பிரதமர் கிட்ட பேசுவாராம்..” “அப்டீன்னா ஒலகத்துல முக்கியமான முடிவுகள் கூட எடுப்பாங்கன்னு செல்லு” “2009-ம் ஆண்டு G20 மாநாட்டுல அஞ்சு லட்சம் க�ோடி டாலரை பணத்தை உலகப் ப�ொருளாதாரத்தில் புழக்கத் தில் வுடலாம்னு பெரிய முடிவு எடுத்தாங்க. அப்பாலதான் க�ொஞ்சம் க�ொஞ்சமாக உலக ப�ொருளாதாரம் சரிவுலேந்து மேல வந்துச்சாம்..” “சூப்பரா வ�ௌக்கற மச்சி… நம்ம ப�ொருளாதாரத்தைக் க�ொஞ் சம் மேல க�ொண்டுவரணும்... ஒரு ஐநூறு ரூபாய் கைமாத்தா குடேன்..” “நெனைச்சேண்டா இப்டி ஏதாவது கேப்பேன்னு.. கைல பத்துப் பைசா கெடையாது..” என்றவாறு லுங்கி நழுவுவது தெரியாமல் வாசல் என்று நினைத்துக் கவுண்ட்டரை ந�ோக்கி நடந்தான் நெப்போலியன். அவனைத் த�ொடர்வதாக நினைத்து வாசல்பக்கம் நடந்தான் ஜானி.

ð£ñ£ «õî£

«è£ð£ô¡v

90 | I¡IQ



ல்யாணமாலை - நித்யÿ மகாதேவனின் வெண்கலக் குரல் முகப்புப் பாடலுடன் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் காலை சன் டிவியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சி. இணையதளம் மூலம் 5 லட்சத்திற்கும் மேற்பட்டவர்களை இல்லறத்தில் இணைத்திருக்கிறது கல்யாணமாலை நிறுவனம். ‘கல்யாண மாலை’யின் இயக்குநர் திரு.டி.வி. மோகன் பளிச்சென்று அவரின் புன்னகையைப் போல ஜொலிப்பவர். அவரிடம் மின்மினி சார்பாக ஒரே ஒரு கேள்வி.

கல்யாண சந்தையில் உள்ள இன்றைய பெண்களின் டிமாண்ட்ஸ் அல்லது நிபந்தனைகள் என்ன ? ஓவர் டூ ம�ோகன் சார்...



ணக்கம். மின்மினி வாசகர்களுக்கு இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். டிமாண்ட்ஸ் அல்லது நிபந்தனைகள் என்பது ஆண்களிடம் இருந்து உருவானதே தவிர, பெண்களிடம் இருந்து உருவானது இல்லை. ஒரு பெண் தன் எதிர்காலத்தைக் கணக்கிட்டு, திருமணத்திற்குப் பிறகு தன் வாழ்வாதாரம், குழந்தைகளின் வளர்ப்பு இதெல்லாம் கணக்கில் வைத்து, தனக்குக் கணவராக வரப்போகிறவரின் வருமானம், வசதி வாய்ப்பு அதற்குச் சரியாக இருக்குமா என்று யோசித்து பாதுகாப்பிற்காகச் சில விஷயங்களை எதிர்பார்ப்பதில் தவறில்லை. அடுத்ததாக நிபந்தனைகள்? திருமணத்திற்கு பிறகு யாரெல்லாம் நம்முடன் இருக்க வேண்டும். தனிக்குடித்தனமா? கூட்டுக் குடித்தனமா? என்றெல்லாம் சில இடங்களில் கேள்விகள் முன்வைக்கப்படுவதாக கேள்விப்படுகிறேன். ஆனால் காலப்போக்கில் உறவுகளின் அருமை என்பது தனியாக நிற்கும் போது தன்னாலேயே உணர்வார்கள். இந்தக் காலத்தில் பெண்கள் படிப்பு, வருமானம் என எல்லாவற்றிலும் தனித்து நிற்கிறார்கள். அதனால் அவர்களின் நிபந்தனைகள் மற்றும் டிமாண்ட்ஸ் தவிர்க்க முடியாத ஒரு விஷயமாக இருக்கிறது.

I¡IQ | 91 தன்னுடைய தேவைகள் என்ன என்பதை உணர்ந்து அந்த எதிர்பார்ப்புகள் இருந்தால் நலமாக இருக்கும். தன் பெண்கள் சொல்லும் நிபந்தனைகள் நியாயமானதாக உள்ளதா என்று பெற்றோர் புரிந்து ஒரு தனிமைத் தீவில் என்னை இன்றைய கொண்டு அதற்கு ஆதரவாக இருக்கச் ச�ொன்னால், இருக்கவேண்டும். தவறு என்னும் உடன் எனக்குப் புத்தகங்கள் பட்சத்தில் அவர்களுக்கு எடுத்துச் சொல்லவும் வேண்டும். வேண்டும்! – நேரு இது இருபாலருக்கும் பொருந்தும். பெண்கள் எப்போதெல்லாம் டிமாண்ட்ஸ் மற்றும் நிபந்தனைகள் மூலம் திருமணத்தை தள்ளிப் போடுகிறார்களோ, தனக்கான தகுந்த ஆணிற்கென காத்தி ருக்கிறார்களோ... அப்போது ஒரு ஆணுக்கும் திருமணம் தள்ளிப் போகிறதுதானே..? முன்பு இதேப�ோல ஆண்கள் நிபந்தனைகள் வைத்தார்களே... இப்போது நாங்கள் செய்வதில் என்ன தவறு என்று நியாயப்படுத்துதல் வேண்டாம். ஒரு தவறு செய்யப்பட்டால் அதற்கு மாற்று இன்னொரு தவறு அல்ல, அதற்கு மாற்று அந்தத் தவறை திருத்துவதே ஆகும்.

ம் புத்தக .. . என்பது

பர்ஸ் திருடு ப�ோனதைப் பற்றி வெளியே ச�ொல்லவே இல்லை இன்ஸ்பெக்டர்! -திருமயம் பெ.பாண்டியன்

குட்டியூண்டு கதைகள்

கமலக்கண்ணன் பெ ண் பார்க்க வந்த மாப்பிள்ளை, “பெண் ணின் தங்கையைத்தான் எனக்குப் பிடிச்சிருக்கு “ என்று ச�ொல்ல, “எனக்கு மாப் பிள்ளைய�ோட தம்பியைத்தான் பிடிச்சிருக்கு” என்றாள் தங்கை.

-எஸ். ராஜம்

92 | I¡IQ

‘காளி’ படப்பிடிப்பில் ரஜினி சார் என்னை அறிந்து க�ொள்வதற்கான வாய்ப்புகள் ஏற்படவில்லை. ஆனால் ‘ஜானி’ த�ொடங்கிய நாளில் அந்த கையெழுத்தின் ச�ொந்தக்காரனாய் என் முகம் ரஜினி சாருக்குப் பிடித்துப் ப�ோய்விட்டது. அவர் பின்னால் மேக்கப், உடை, மெய்க்காப்பாளன் என்றெல்லாம் விஞராகவும் திரைப்பட பாடல் எந்தக் கூட்டத்தையும் சேர்த்துக் ஆசிரியராகவும் இயக்குனராகவும் க�ொள்ளாதது அவர் மேல் ஒரு அறியப்படும் யார் கண்ணன் மரியாதையை ஏற்படுத்தியது. ஒரே எழுதிய ‘ச�ொல்ல மறக்காத கதை’ ஒரு உதவியாளர், கையில் லெமன் நூலில் இருந்து சில பகுதிகள்.... டீ ப�ோட்ட ஃபிளாஸ்க்குடன் எந்த அவர் மட்டும்தான். ணிப்படிகள்’, ‘பகலில் நேரமும் அந்த லெமன் டீயும் அவருக்கு ஓர் இரவு’, ‘காளி’, ‘ரிஷிமூலம்’, மட்டுமில்லை, எங்களுக்கும் ‘ஹிட்லர் உமாநாத்’ ப�ோன்ற படங் சேர்த்து தான். தனிப்பட்ட களில் எழுத்தாளர் மகேந்திரன் முறையில் தான் மட்டும் ஜூஸ் அவர்களுக்கு உதவியாளராகப் சாப்பிடுவது என்ற கதை எல்லாம் பணியாற்றி இருக்கிறேன். அங்கே இல்லை. விசேஷ ‘முள்ளும் மலரும்’ முடிந்த உணவு அங்கிருந்து நேரம் சென்று சேர்ந்து வரவேண் டு ம் , உதிரிப் பூக்களில் இருந்து இங்கிருந்து வர உதவி இயக்குனராய் வேண்டும் என்ற இருந்திருக்கிறேன். பேச்சும் இல்லை. ரஜினியின் வெற்றிக்கு நான் திரைப்படத் இந்த எளிமையும் ஒரு துறைக்கு வந்த காரணம். த�ொடக்க நேரம் அது. ‘யார்’ கண்ணன்



‘ஏ

I¡IQ | 93 க�ொஞ்சம் க�ொஞ் சமாய் ரஜினி சாரிடம் கவிதைகளை ச�ொல்லத் த �ொடங் கி னே ன் . லென்ஸ், ஷாட் கன்டினிட்டி எழுதும் எடிட்டிங் ந�ோட்டின் பின் பக்கங்களில் அவச ரத்திற்கு அவ்வப்போது கவிதை எழுதி விடுவேன். அவற்றை கண்களை மூடி ரசித்துக் கேட்பார். இதே ப�ோல் என்னுடன் ஒளிப்பதிவாளர் அச�ோக்குமாரின் உதவியாளராகப் பணியாற்றிய சுகாசினி மணிரத்தினமும் என் கவிதைகளைக் கேட்க ஆவலாய் இருப்பார். ரசிப்பார். அவர் ஒரு தேர்ந்த கவிதை ரசிகை. ‘கை க�ொடுக்கும் கை’ படத்திற்கு விநிய�ோகஸ்தர்களாக வந்து எமக்கு அறிமுகமானவர்கள் தான் கலைப்புலி எஸ். தாணுவும், ஜி சேகரனும், பி.சூரியும். தாணு சார் டப்பிங் நடக்கிற ப�ோது கூட அடிக்கடி வருவார். அ ப ்போ த ெ ல்லா ம் உதவி இயக்குனர் களாய் நாங்கள் 100 சதவீதம் உழைப்பதை கண் ணெதிரே பார்த்துப் பார்த்து ஒரு ஈடுபாடு வரத் த�ொடங்கியது அவருக்கு. பின் னால் ‘யார்?’ என்ற திரைப்படம் உருவாகக் கார ணமே அதுதான். என் உழைப் பைப் பார்த்து அவர் க�ொடுத்த வாய்ப்பு தான் அது.

‘யார்?’ என்ற பெயரில் படம் த�ொடங்கத் தி ட ்ட மி ட் டு ள்ளதை க் கூறியவுடன், “யார் ஹீர�ோ?” என்று கேட்டார் ரஜினி சார். “அர்ஜுன்” என்றவுடன், “குட் செலக்‌ஷன்” என்றார். த�ொடக்க விழா பூஜைக்கு வரவேண்டும் என்ற உடனே, ‘நான் சென்னையில் இல்லை, என் சப்போர்ட் என்றைக்கும் உண்டு. ஆரம்பிங்க, நான் வந்ததும் சந்திப்போம்’ என்று பாசிட்டிவாகப் பேசி வாழ்த்தி வழி அனுப்பி வைத்தார். ஏத�ோ ஒரு வகையில் இந்த படத்தில் ரஜினி சார் இடம் பெற வேண்டும் என்று நினைத்தேன். அவரைச் சந்தித்து, “உலக நன்மைக்காக யாகம் என்ற செய்தி பேப்பரில் வருவதை நீங்கள் எடுத்துப் படித்தால், ர ா கவேந் தி ர ர ை ப் பி ர ா ர்த்தனை செய்தால் ஆணித் தரமாக ஆழமாகப் பதியும்” என்று ச�ொல ்வ தற் கு ள் . . . காட்சிகளையும் அதற் காகும் நேரத்தைப் பற்றியும் ய�ோசிக்கத் த�ொடங்கினார். ஒரு முழுநாள் கால்ஷீட் க�ொடுத்து, “நான் ரெடி” என்றார். ப�ோயஸ் கார்டனில் தன் வீட்டிலேயே ஷுட் வைத்துக் க�ொள்ளலாம், ஜெனரேட்டர் வேண்டாம். பக்கத்து வீடுகளுக்கு சத்தம் த�ொந்தரவாய்த் தெரியும்.

94 | I¡IQ

வானம் தந்தை அல்லவா” -என்ற பாடல் அது. பிறகு ‘மெட்டி’யிலும் இளையராஜா இசையில் பாட்டு எழுதினேன்.

பெண்களின் கைகளில் கரண்டியைப் பிடுங்கிவிட்டு புத்தகத்தைக் க�ொடுக்க வேண்டும்.! – தந்தை பெரியார்

ம் புத்தக .. . என்பது வீட்டில் இருக்கும் பவரில் வ�ொர்க் பண்ணலாம் என்றார். படப்பிடிப்புக் குழு லைட் மேன்கள் அங்கு ப�ோனதும், வீட்டில் உள்ள மெயின் லைனில் லைட்டை இணைத்துப் ப�ோட்டதும் அங்கிருந்த ஏசி பணால் ஆனது. எனக்கோ டென்ஷன். அவர�ோ கூலாக, “இதெல்லாம் சகஜம் தானே கண்ணன்?” என்றார். ‘யார்?’ படம் தமிழிலும், தெலுங்கிலும் 100 நாட்கள் கடந்து ஓடியது. வெற்றி விழாவுக்கு ரஜினி சாரை அழைக்கவும், மேடையில் இருந்தார் அவர்.

‘நண்டு’

படத்தில்

இளைய

ராஜா இசையில் நான் ஒரு பாடல் எழுதினேன். “அள்ளித்தந்த பூமி அன்னை அல்லவா ச�ொல்லித் தந்த

‘வ

டிவங்கள்’ படத்தை இயக்க ஒத்துக் க�ொண்டதுமே மதுக்கூர் கண்ணன் என்ற பெயரில் தான் விளம்பரம் மற்றும் செய்திகள் வர வேண்டும் என்று என் அப்பா ஆசைப்பட்டார்கள். அதனால் அப்படியே செய்தேன். ஏற்கனவே ஒருவர் எழுதி வைத்திருந்த கதை, இன்னொருவர் இயக்குவதாக இருந்தது. கடைசி நேரத்தில் அவரால் இயலவில்லை. விலகி விட்டார். நடிகர், நடிகைகள் ஒப்பந்தம் செய்திருந்தார்கள். இறுதி நேரத்தில் நான் ஒப்புக்கொண்டது என் மாபெரும் தவறு. அந்த நேரத்து அறியாமை. நான் நம்பர் ஒன் உதவி இயக்குனர் அப்போது. ஆனால் இயக்குனராக மெச்சூரிட்டி அப்போது வரவில்லை கமர்ஷியல் அடிப்படை எதுவும் இல்லாத ஒரு படத்தைச் சூழ்நிலையால் ஏற்றுக் க�ொண்டேன். ‘வடிவங்கள்’, ‘பயணங்கள் முடிவதில்லை’ இரண்டு படமும் ஒரே நாளில் வெளியானது. நுகர் வ�ோருக்கான எந்த சிறப்பம்சமும் வடிவங்களில் இல்லை. ‘பயணங்கள் முடிவதில்லை’ படத்தில் நடித்த ம�ோகன், நான் கேட்டால் கால்ஷீட் தந்திருப்பார். ‘நெஞ்சத்தைக் கிள்ளாதே’ படம் மூலம் நெருங்கிய நண்பர் களாக இருந்தோம். நான் பயன் படுத்தியது புதுமுகம். சில

I¡IQ | 95 வி நி ய�ோகஸ்தர ்க ளி ன் விளையாட் டில் வடிவமற்றுப் ப�ோனேன். பிறகு ஒரு இடைவெளி ஏற்பட்டது. என்னுடன் இ ரு ந்தவர ்க ள ை , ப ணி ய ா ற் றி ய வர ்க ள ை முற்றிலுமாக மாற்றிக் க�ொள்ள வேண்டிய சூழல். படம் செய்தாக வேண்டும். என்ன செய்யலாம் என்று தனி ஒருவனாக அலைந்தப�ோது தான் நண்பர்கள் சிறு முதலீடு செய்ய முன்வந்தார்கள். அப்போது கூட வெளிநாட்டிலும் உள்நாட்டிலும் நல்ல வசதியாக மிகப்பெரிய பண பலத்தோடு இருந்த உறவினர்கள் யாரும் உதவ முன் வரவில்லை நாம் நல்ல நிலைக்கு வந்தால் க�ொண்டாடுவார்கள். நம் பெயரை உச்சரிப்பார்கள் அவர்கள் என்று காலம் பாடம் ச�ொல்லிக் க�ொடுத்தது அப்போது. நண்பர்கள் ஆளாளுக்கு க�ொஞ்சம் பணம் ப�ோட்டார்கள். ஓர் இசையமைப்பாளர் தான் பதிவு செய்து வைத்திருந்த பத்து பாடல்கள�ோடு பங்குதாரர் ஆனார். அதிலிருந்து ஐந்தாறு பாடல்கள் தேர்ந்தெடுத்து கதைய�ோடு காட்சியில் ப�ொருத்தி ஒரு பெரும் வெற்றி பெற்ற வெள்ளி விழா படம் க�ொடுத்தேன். அந்த படம் தான் ‘நம்ம ஊரு நாயகன்!’

என்

சிறு

மிகவும் பிடிக்கும். ராணி வார இதழில் முகவரி பார்த்து கடிதம் எழுதி புகைப்படம் கேட்டு இருக்கிறேன். சென்னை வந்து திரைத்துறைக்கு வந்து அவரை இயக்குகிற ப�ோதுதான் அவரின் க�ொடை உள்ளம் ப�ோன்ற மற்ற நற்பண்புகள் பார்த்து -தகுதியான ஒருவரைத்தான் யாரென்று தெரியாத வயதிலேயே நேசித்திருக்கிற�ோம் என்று மகிழ்ச்சி அடைந்திருக்கிறேன்.

40 ஆண்டு கால திரை உலக வாழ்க்கையின் நான்கைந்து பக்கங் களை மட்டுமே இப்போது புரட்டி இருக்கிறேன். இதை எழுதுகிற ப�ோது கூட அனுபவங்கள் பழசானாலும், புதிய சாரல்களை எனக்குள் சில்லென்று தூவிச் சென்றதை நான் உணர்ந்தேன். நூல் கிடைக்குமிடம்: நிவேதிதா பதிப்பகம், 10/3, வெங்கடேஷ் நகர் பிரதான சாலை, விருகம்பாக்கம், சென்னை- 600 092. விலை: 200/-

பிராயத்தில்

எனக்கு நடிகர் ஜெய் சங்கர் அவர்களை

த�ொகுப்பு : தெக்கூர் அனிதா

96 | I¡IQ

I¡IQ | 97

வெ

ளிநாட்டுக்கு உல்லாசப் பயணம் ப�ோக மூன்று வழி முறைகள் உண்டு. ஒன்று பேக்கேஜ் டூர் ப�ோட்டு அழைத்துச் செல்லும் நிறுவனங்களை நாடி அவர்கள் தரும் பயணத் திட்டங் களைப் பரிசீலித்து அதற்கான பணம் கட்டிவிட்டால் வேலை முடிந்தது. அதன் பிறகு தங்கும் இடம், உணவு, பார்க்கும் இடங்கள் எதைப்பற்றியும் சிந்தனை அவசியம் இல்லை. அத்தனையும் அவர்கள் பார்த்துக்கொள்வார்கள். ச�ொல்கிற தேதியில் விமான நிலையத்தில் ஆஜராகி பள்ளிக் குழந்தைகள் டூர் ப�ோகும்போது டீச்சர் ச�ொல்வதை அப்படியே கேள்வி கேட்காமல் ஏற்று செயல் படுவதைப் ப�ோல செயல்பட வேண்டும். அவர்கள் ப�ோடும் குரூப் டூரில் உங்கள் ச�ொந்த ய�ோசனையை நுழைக்கவ�ோ, நாள், நேரம், இடம் மாற்றவ�ோ முடியாது. எந்த இடத்திற்கு எவ்வளவு நேரம் என்பதும் அவர்களின் புர�ோக்ராம் படிதான் நடக்கும். எனக்கு அறிமுகமில்லாத இருபது முப்பது பேருடன் சேர்ந்து பயணம் செய்து சுற்றிப் பார்க்க விருப்பம் இல்லை, நான், என் குடும்பம் மட்டும் ப�ோனால் ப�ோதும், அதுவும்

நான் இஷ்டப்படும் ஊரில் இஷ்டப்படும் நாட்களுக்குத் தங்கி சுற்றிப் பார்க்க வேண்டும் என்று விரும்பினால் அதே டூர் ஆபரேட்டர்ஸ் மூலம் கஸ்ட மைஸ்ட் டூர் திட்டமிடலாம். அதற் கும் அவர்களே உதவுவார்கள். அல்லது.. மூன்றாம் வகை யில் நீங்களே களத்தில் இறங்க வேண்டும். க�ொஞ்சம் கம்ப்யூட்டர் அறிவும், ஆங்கில அறிவும் இருந்தால் ப�ோதும். வெப்சைட்களுக்கு பிரவுஸ் செய்து பழக்கம் இருந்தால் நல்லது. உதாரணத்திற்கு நீங்கள் கனடா நாட்டிற்கு 15 நாட்கள் சுற்றுப் பயணம் செய்ய விரும்பு கிறீர்கள் என்றால்.. தினமும் நேரம் ஒதுக்கி முதலில் கனடா நாட்டில் சுற்றிப் பார்க்க வேண்டிய நகரங்கள் எவை, அங்கே என்ன இருக்கின்றன, அவற்றைச் சுற்றிப் பார்க்க எத்தனை நாட் கள் தேவைப்படும் ப�ோன்ற விபரங்களைத் தேடத்துவங்க வேண்டும். இணையத்தில் தகவல்கள் வந்து க�ொட்டும். ஒரு ந�ோட் புக் ப�ோட்டு ஒவ்வொரு டூர் ஆபரேட்டரும் எந்த எந்த இடங்களைக் குறிப்பிட்டிருக்கி றார்கள், அங்கே ப�ோன

98 | I¡IQ

சுற்றுலா பயணிகள் என்ன கருத்து ச�ொல்கிறார்கள் என்று ஆராய்ச்சிக் கட்டுரை எழுதும் மாணவன் ப�ோலத் தேடலில் இறங்க வேண்டும். அடுத்து அந்த நாட்டில் அந்த ஊரில் தற்சமயம் சீத�ோஷ்ண நிலை என்ன, அரசியல் சூழ் நிலை என்ன, ஏதாவது கலவரம்,

ஹ�ோட்டலுக்குத் தாவிவிட வேண்டும். டூரிஸ்ட் அட்ராக்‌ஷன் என்று ச�ொல்லப்படும் கேளிக்கை பூங்கா, தியேட்டர்ஸ் ப�ோன்ற இடங்களுக்கும் முன்னதாக டிக்கெட் புக் செய்ய இயலும். அந்த இடங்களில் வாரத்தில் சில நாட்களில் சலுகை விலையில்

ப�ோர், வியாதி மாதிரி பிரச்சி னைகள் இருக்கிறதா என்றும் அறிய வேண்டும். அடுத்து தங்குமிடம். கூகுள் மேப் உதவியுடன் பார்க்கப்போகும் இடங்களுக்குச் சமீபமாக, பாதுகாப்பாக, நகரத்திற்கு மத்தியில், மெட்ரோ, பஸ், டாக்சி சேவைகள் கிடைக்கும் இடத்தில் உங்கள் பட்ஜெட்டுக்குள் இருக் கும் ஹ�ோட்டல்களைத் தேட வேண்டும். அங்கு முன்பு தங்கியவர்களின் கருத்துக்களை ப�ொறுமையாக படிக்க வேண்டும். அடுத்தடுத்து இரண்டு பேர் காறித் துப்பியிருந்தால் அடுத்த

டிக்கெட் கிடைக்கும். குறிப்பிட்ட வயதினருக்கு தனியாக சலுகை இருக்கும். அதெல்லாம் உன் னிப்பாகப் படித்து புக் செய்ய வேண்டும். அந்த இடங்களின் திறக்கும் நேரம், மூடும் நேரம் முக்கியம். ஒரு பூங்காவில் எட்டு மணி நேரம் செலவு செய்ய வாய்ப்பிருந்தால்.. நீங்கள் மூன்று மணி நேரம் தாமதமாகப் ப�ோனால் நஷ்டம் உங்களுக்குத்தான். இப்படி ச�ொந்தமாக பயணத் திட்டம் தயாரிக்கும்போது இதில் முன் அனுபவம் உள்ள,

I¡IQ | 99 ஏற்கெனவே ப�ோய் வந்தவர் களைக் கெஞ்சிக் கூத்தாடி வரச் ச�ொல்லி பக்கத்தில் வைத்துக் க�ொண்டால் பாதி வேலை மிச்சமாகும். அதில் ஒரே ஒரு பிரச்சினை உண்டு. அவருக்குப் பிடித்ததை மட்டுமே சிபாரிசு செய்வார். அது உங்களுக்கும் பிடிக்கும் என்பதற்கு உத்தர வாதம் இல்லை. இதையெல்லாம்விட.. நீங்கள் அதிர்ஷ்டசாலி என்றால்.. ஒரு வழி இருக்கிறது. அதற்கு உங்கள் மகன�ோ மகள�ோ வெளி நாட்டில் இருக்க வேண்டும். அவர் விமான டிக்கெட் எடுத்து அனுப்பி நீங்கள் அவர் வீட்டுக்குச் சென்று விட்டால் எல்லாப் பயணத் திட்டங்களையும் வகுத்து அவரே உங்களை எங்கும் அழைத்துச் செல்வார். ஆனால் அதற்கு அவருடன் உங்களுக்கு நல்லுறவும், அவருக்கு உங்கள் மீது பாசமும், நன்றியும் இருக்க வேண்டும். மெனெக்கெடல் வேண்டாம் என்று நினைப் பவர்கள் ஒன்றாம் வழியான க்ரூப் பேக்கேஜ் டூரை டி க ்க டி த் து செக் க�ொடுத்து விட்டு லக்கேஜ் பேக் செய்யும் ஒரு வேலையை ம ட் டு ம் பார்க்கலாம். -மிசஸ் ஜெனிஃபர்

üùõK 2022

ÝCKò˜ :

ð†´‚«è£†¬ì Hóð£è˜ àîM ÝCKò˜ :

èñô‚è‡í¡ Þî› õ®õ¬ñŠ¹ :

è«íw ð£ô£

܆¬ì õ®õ¬ñŠ¹ :

võ˜í ŠKò£

輈¶‚èœ, ð¬ìŠ¹èœ ÜŠð : I¡ù…ê™ ºèõK :

[email protected] ê‰î£ ðŸPò MðóƒèÀ‚° :

95519 99588 ºèõK : I¡IQ, ñEè‡ì¡ 6õ¶ ªî¼, ð¬öò õ‡í£óŠ«ð†¬ì, ªê¡¬ù - 600 021. I¡IQ Þ¬íòî÷ ºèõK :

www.minmini.co.in

100 | I¡IQ

சா

தாரண மனிதர்களின் அழகிற்கே ஆள்பாதி ஆடை பாதி என்பார்கள். அதிலும் அழகைப் பேரழகாக வெளிச்சம் ப�ோட்டுக் காட்டும் சினிமாவிற்கு காஸ்டியூம் டிஸைன் எனும் உடையலங்காரம் ஒரு படத்தின் காட்சியைப் பளிச்சிட வைக்கும் சிறப்பு வாய்ந்தது. நடிகர்கள், நடிகைகள் அழகுதான். அந்த அழகிற்கு அழகு சேர்க்கும் பிரம்மாக்கள் காஸ்டியூம் டிஸைனர்கள். ஒரு கதையில் ஒரு கேரக்டரை உண்மையாகச் சித்திரிக்க கதைக்கும் காட்சிக்கும் முக்கியத் தேவையாக இருப்பது உடையலங்காரம். “சினிமாவில் உடையலங்காரத்துக்குத் தைத்த ஆடைகளை படப்பிடிப்பு முடிந்ததும் என்ன செய்வார்கள்..?” என்று காஸ்டியூம் டிஸைனர்களிடமும் திரைப்படத் தயாரிப்பு நிர்வாகிகளிடமும் கேட்டேன். சென்னை க�ோடம்பாக்கத்தைச் சேர்ந்தவர் பி.ஆர்.கணேஷ். இவர் நடிகர் அருண்விஜய் மற்றும் கம்பெனி காஸ்டியூம் டிஸைனர். அவரிடம் பேசின�ோம்.



டம் எடுப்பதாக முடிவாகி படப்பிடிப்பு த�ொடங்கும் ப�ோது ஹீர�ோவுக்குத் தேவையான உடைகள் பற்றி ஒரு லிஸ்ட் ப�ோட்டு எங்களிடம் க�ொடுப்பார்கள். அந்தந்த ஆர்டிஸ்ட்டுக்குத் தேவையான டிரஸ் மெட்டீரியல்களை வாங்கி அந்தத் த�ொகைக்கான பில்லை தயாரிப்பாளரிடம் க�ொடுப்போம். படம் முடிந்ததும் அந்த பில்லை வைத்து யார் யாருக்கு என்னென்ன டிரஸ் மெட்டீரியல் எடுத்தோம் என்று கணக்குக் க�ொடுத்துவிட்டால் பிறகுதான் எங்களுக்கு பேலன்ஸ் பணம் தருவார்கள். எங்கள் வேலை உடைகள் தைத்துக்கொடுத்து ஷூட்டிங் ஸ்பாட்டில் ஆல்டர் செய்து அயர்ன்

I¡IQ | 101 செய்து தருவ�ோம். இப்போது ஒவ்வொரு நடிகரும் பர்ஸனலான டிஸைனர் வைத்திருக்கிறார்கள். படப்பிடிப்பு முடிந்ததும் படத்துக்குப் பயன்படுத்திய உடைகளை தேவையானதை மட்டும் வைத்துக்கொண்டு மீதி உள்ளதை விற்றுவிடுவார்கள். மூர்மார்க்கெட், பாரிஸ் கார்னரில் கடை வைத்திருப்பவர்கள் வந்து ஒரு த�ொகை க�ொடுத்து வாங்கிக் க�ொள்வார்கள். மீனாட்சிசுந்தரம், தயாரிப்பு நிர்வாகி, சென்னை.



ந்த ஆடைகள் சினிமாத் துறைக்குள்ளேயே சுற்றிக்கொண்டி ருக்கும். முன் க ா ல ங ்க ளி ல் வ ா டகை க் கு எ டு த்தார ்க ள் . தற்போது அப்படி எ டு ப ்ப தி ல்லை . மு டி ந்தள வு துணிகள் எடுத் துத் தைப்பார்கள். அல்லது ரெடிமேடாக எடுப்பார்கள். ரஜினி, கமல், அஜித், விஜய், சூர்யா ப�ோன்ற பெரிய நடிகர்களின் படங்களைத் தயாரிக்கும் பெரிய தயாரிப்பாளர்கள் பெரிய குட�ோவ்ன் வைத்திருப்பார்கள். ஒரு படம் கமிட்டான உடன் டைரக்டர் க�ொடுக்கும் சீன்க ளுக்கான கேரக்டர்களுக்கு ஏற்ற உடைகளைத் தேர்ந்தெடுக்க காஸ்டியூமரை தயாரிப்பாளர் அழைத்து, அவர் தயாரிக்கும் படத்தில் வரும் கேரக்டர்களுக்கு ஏற்ற உடைகளை எடுக்கச் ச�ொல்லி

விடுவார். சிறிய தயாரிப்பாளர்கள் என்றால் ஒரு படம் முடிந்ததும் பெரும்பாலும் உடைகளை வேறு காஸ்டியூமருக்கு விற்று விடுவார்கள். எல்லா கதாநாயகர்களுக்குமே புது ஆடைகள்தான் தைக்க வேண்டும். அதுவும் பிராண்டட் டாக இருக்கவேண்டும். ஒரு உடை பத்தாயிரத்திலிருந்து 50 ஆயிரம் வரை இருக்கும். அதுவும் சண்டைக் காட்சிகளில் கதாநாயகர்களுக்கு இரண்டு உடைகள் தைப்பார்கள். ஒன்று பழுதானால் இன்னொன்றைப் பயன்படுத்துவார்கள். கதாநாய கிக்கும் உடைகள் ர�ொம்ப காஸ்ட் லியாக இருக்கும். த�ொடர்ந்து படங்களை இயக்கும் லைகா ப�ோன்ற தயாரிப்பு நிறுவனங்கள் பெரிய

102 | I¡IQ

குட�ோவ்ன்களை வைத்திருக்கும். சில படங்களைத் தயாரிப்பவர்கள் வீடுகளை வாடகைக்கு எடுத்துப் பாதுகாத்து வைப்பார்கள். ஓரிரு படங்கள் மட்டும் எடுப்பவர்கள் க�ொஞ்ச நாட்கள் வைத்திருந்துவிட்டு தெரிந்தவர்களுக்குக் க�ொடுத்து விடுவார்கள். பழுதடைந்த உடை களை நஷ்டத்தோடு நஷ்டமாகக் குப்பையில் ப�ோட்டுவிடுவார்கள். ஷங்கர், ராஜம�ௌலி ப�ோன்ற இயக்குநர்களின் படங்களுக்கு ரூபாய் 10 க�ோடி வரைக்கும் உடைகளை வாங்குவார்கள். சிறிய தயாரிப்பாளர்கள் 10 லட்சம் வரைக்கும் உடைகளை வாங்குவார்கள். தற்போதைய காலத்தில் உடைகளை வாடகைக்கு வாங்குவதில்லை. வடபழநியில் ஓரிரு கடைகள் உள்ளன. அதுவும் நாடகத்துக்கு வாங்குவார்கள். பெரும்பாலும் படத்துக்கு ப�ோலீஸ் உடைகள், டாக்டர், வக்கீல், நீதிபதி உடைகளை வாடகைக்கு வாங்கிக்கொள்கிறார்கள்.” என்றார் மீனாட்சி சுந்தரம். வடபழநி, சென்னையைச் சேர்ந்த முன்னாள் கம்பெனி மானேஜர் வெங்கட்ராமன் :

“ஒ

ரு படத்துக்குத் தைக்கப் படும் அனைத்து உடைகளும் தயாரிப்பாளருக்குத்தான் ச�ொந்தம். ஏனென்றால் அவர்தான் அந்த உடைகளுக்குப் பணம் செ ல வ ழி க் கி ற ா ர் . கம்பெ னி க் கு த் தனி காஸ்டியூமர்

இருப்பார்கள். அதேமாதிரி பெரிய ஹீர�ோக்கள் தனியாக காஸ்டியூமரை வைத்திருப்பார். அவர்தான் ஹீர�ோவுக்கான உடைகளைத் தேர்ந்தெடுப்பார். அவர் எவ்வளவு பட்ஜெட் ச�ொல்கிறார�ோ அவ்வளவு த�ொகையைத் தயாரிப்பாளர் தரப்பு தந்துவிடுவார்கள். அதே மாதிரிதான் கதாநாயகிகளும் தங்களுக்கென்று தனியாக காஸ்டியூம் டிஸைனரை வைத்தி ருப்பார்கள். அவர் ச�ொல்கிற படிதான் உடைகள் தைக்கப்படும். காரணம், கதாநாயகிக்கு எந்த பிராண்ட் பிடிக்கும், அவருக்கு எந்த கிளாத் சரியாக இருக்கும் என்பது அவர்களுக்குத்தான் தெரியும். அதனால் காஸ்டியூம் டிஸை னர் முதலில் டைரக்டரிடம் சென்று கதாநாயகருக்கான உடைகள் எந்தெந்த காட்சிகளில் வருகிறது என்று குறிப்பெடுத்துக் க�ொள்வார்கள். பாட்டு, சண்டைக் காட்சி என்றால் மூன்று, நான்கு உடைகளும் மற்ற காட்சிகளுக்கு ஏற்ப இரண்டு, மூன்று உடைகளும் எடுத்துக்கொள்வார்கள். படம் முடிந்ததும் ம�ொத்த உடைகளும் தயாரிப் பாளரிடம் க�ொடுத்துவி வேண்டும். ஆனால் சரியாகக் கணக்குப் பண்ணி வாங்கிவிட முடியாது. சில உடைகள் டேமேஜ் என்று கூறப் பட்டால் ஒன்றும் செய்யமுடியாது.

I¡IQ | 103 ஒருமுறை பயன்படுத்திய உடைகளை மறுபடியும் வேறு ஹீர�ோக்களுக்குப் பயன்படுத்த முடியாது. காரணம் காஸ்டியூம் டிஸைனருக்குத் தெரிந்துவிடும். ஹீர�ோவிடம் ச�ொன்னால் கால்ஷீட் பிரச்சினை வந்துவிடும். அதனால் புதுப் புது உ டைகள ா கத்தா ன் வாங்குவார்கள். அது சில லட்சங்கள் ஆகும். இப்போது ஹீ ர�ோக ்க ளு க் கு க�ோ டி க ்க ண க் கி ல் சம்பளமே தருகி றார்கள். சில லட்சங்களில் உடைகள் எடுப்பது ஒன்றும் பெரிய விஷயமில்லை. அந்த உடைகளை கேரக்டர் ஆர்ட்டிஸ்ட் மற்றும் கம்பெனி ஆர்டிஸ்ட் டுக்குப் பயன்படுத்திக் க�ொள்வார்கள். பெயர் ச�ொல்ல விரும்பாத சென்னையைச் சேர்ந்த தயாரிப்பு நிர்வாகியிடம் பேசிய ப�ோது, “சினிமா உடையலங்காரக் கலைஞர்கள் இரண்டு வகை உண்டு. ஒன்று காஸ்டியூமர், இன்னொன்று காஸ்டி யூம் டிஸைனர். காஸ்டி யூமர்கள் தையல் கலை ஞர்கள், டிஸைனர்கள் ஹீர�ோவுக்கு தைத்துக் க�ொடுப் பவர்கள். டைரக்டர் இவர் களிடம் பேசி ஹீர�ோ ஹீர�ோயினுக்கு வேண்டிய உடைகளைப் பற்றிப் பேசி முடிவெடுத்து தைப்பார்கள்.

உடையலங்காரத்தில் இது தான் பெரிய பட்ஜெட். இன் றைய தயாரிப்பாளர்கள் 90 சதவிகிதம் உடைகளைக் க�ொண்டு ப�ோவதில்லை. அப்ப டியே விட்டுவிடுகிறார்கள். 10 ச த வி கி தம்தா ன் எடுத்து வைத்தி ருப்பார்கள். பு ர ா ண , வரலாற்றுப் படங்கள் தயாரித்தால் அந்த உ டைகள ை க் கண்டிப்பாக எடுத்து வைத்திருப்பார்கள். ம று ப டி யு ம் ப ய ன ்ப டு ம் . அப்படி வேண்டாம் என்றாலும் ஆர்ட் டைரக ்ட ர ்க ள் வ ா ங் கி க் க�ொள்வார ்க ள் . இந்த உடை யலங்கார விஷயத்தில் ஒரு விஷயம் முக்கியமா னது. படப்பிடிப்பு முடிந்தவுடன் எல்லா உடைகளையும் துவைத்து சுத்தப்படுத்தி மடித்து வைத்து விடுவார்கள். மீண்டும் எப்போது வேண்டுமானாலும் பயன்படுத்தலாம். இந்தப் பணியில் வெளியில் தெரியாமலேயே பல்லாயிரக்கணக் கான த�ொழிலாளர்கள் பணியாற்றி தங்கள் வாழ் வாதாரத்தை மேம்படுத்த இந்தக் கலையில் தங்களை ஈடுபடுத்தி வருகிறார்கள்.

மூலவன்

104 | I¡IQ

Get in touch

Social

© Copyright 2013 - 2024 MYDOKUMENT.COM - All rights reserved.