BOTHI MURASU OCT 2022 ONLINE VESION Flipbook PDF

BOTHI MURASU OCT 2022 ONLINE VESION

9 downloads 114 Views 25MB Size

Story Transcript

மாத இதழ் தாமரை 8 | இதழ் 10 | அக்டோபர், 2022 | ரூ.20/- அன்பு கருணை சமத்துவம் சக ோதரத்துவம் சமூக நீதி தனிமனித சுதந்திரம்


கடந்த 04/09/2022 ஞாயிறு அன்று கிருஷ்ணகிரி மாவட்டம் கிருஷ்ணகிரி நகரில் M.M.T டாக்டர் தம்பதிகள் டாக்டர் மகாலிங்கம்- டாக்டர் சிவமஞ்சு மற்றும் கல்வித்துறை அதிகாரி கோபிதாஸ் -பேராசிரியர். நாகராணி தம்பதிகள் என இருவரது புதுமனைகள் புகுவிழா நிகழ்ச்சிகள் தமிழ்நாடு ப ௌத்த அறநெறியாளர் சங்கம் சார்பில் சிறப்பாக நடத்தி வைக்கப்பட்டது. சென்னை கண்ணகி நகர் டாக்டர் அம்பேத்கர் இரவு பாட சாலையில் நடைபெற்ற ப ௌர்ணமி நிகழ்வு. தமிழ் நாடு ப ௌத்த சங்க பொதுச்செயலாளர் த.நடராஜன் கலந்து கொண்டார். தொ�ொகுப்்பொளர்: ஓ.ரா.ந. கிருஷ்்ணன் அண்்ணணா நகர் மேற்கு, சென்்னனை 600 040 பதிப்பகம் விலை: ரூ 700 தமிழ்்நநாடு பௌ�ௌத்த சங்்கம் பௌெத்தநா �திப்�்கம் தேரவாேம் தமிழ்்நநாடு பௌ�ௌத்த சங்்கம் பௌெத்தநா �திப்�்கம் தேரவாேம் தொ�ொகுப்்பொளர்: ஓ.ரா.ந. கிருஷ்்ணன் இந்திய இலக்கிய வரலாற்றில் மட்டுமல்ல, உலக இலக்கிய வரலாற்றிலும் இந்்த ஜா்தகக் கத்தகள் மிக முக்கியமான இடம் பெற்றுள்்ளன. ெல நூற்்ாண்டுக்ளாக இந்்தக் கத்தகள் ெல சமூகஙகளில் அனதெயும் கருதைதயயும் அதமதிதயயும் ெண்ெடுத்தி வ்ளர்பெதில் பெரும் ெஙகு வகித்துள்்ளன. சுயம் எனகி் உைரதவயய பெரும்ொலும் மக்கள் ெற்றிக்பகாண்டிருக்கி் இந்்தக் காலத்தில் குழந்த்தகளும் இத்ளஞரகளும் மட்டுமல்ல பெரியவரகளும் இந்்தக் கத்தகத்ள்ப ெடி்பெய்தா அல்லது யகட்ெய்தா மிக்க ெயனுதடய்தாக இருக்கும். இதவ மக்களின மனஙகளில் அனபு, கருதை, ்தனனலத் தியாகம், பொறுதம, பமயயறிவு யொன் யமனதமயான ெண்புகளின வித்தகத்ள்ப ெதிக்கும் எனெதில் ஐயமில்தல. இந்்தத் ்தமிழாக்கம் Buddhist Tales for Young and Old எனகி் ஆஙகில நூதல அடி்பெதடயாகக் பகாண்ட்தாகும். அண்ணா நகர் மேற்கு, சென்னை 600 040 பதிபபகம் புத்தர் ஜா்தகக் கத்தகள் | த்தாகுபபு 1 | ்தமிழில்: ஓ.ரா.ந. கிருஷ்ணன் | தெத்தா த்தாகுபபு 1 கத்தகள்: 01-50 தமிழில்: ஓ.ரா.ந. கிருஷ்ணன் Buddhist Tales for விதை: ரூ 230 Young and Old தமிழ் நாடு ப�ௌத்த சங்கம் மெத்தா பதிப்பகத்தின் வெளியீடு ஓ.ரா.ந. கிருஷ்ணன் அவர்களின் புதிய நூல்கள் இப்போது விற்பனையில்... த�ொடர்புக்கு: சங்கர் - 97104 30600 2 அக்டோபர், 2022


தாமரை 8 அக்டோபர் 2022 நிறுவிய ஆண்டு 2014 நிறுவனர்கள் சிறப்பாசிரியர்: ஓ.ரா.ந.கிருஷ்ணன் தங்கவயல் வாணிதாசன் நிர்வாக ஆசிரியர் Dr.G.சந்திரசேகரன் ஆசிரியர் செல்லரத்தின கேசவன் இணை ஆசிரியர் Dr.V.அமலன் ஸ்டேன்லி பேரா. முைனவர் க.ஜெயபாலன் ஆசிரியர் குழு பேரா. அ.மார்க்ஸ், T.கிருபாகரன், பேரா. P.விஜயகுமார், கஜேந்திரன் அப்பாதுரை, பேரா. துரை பார்த்திபன் நிர்வாகக் குழு K.சம்பந்தம், V.பரமதயாளன் D.நடராஜன், பேரா.பாவலன் செய்தி தொடர்பாளர் பி.மதிவாணன் இதழ் வடிவமைப்பு SAI Creative இதழ் தட்டச்சு எஸ்.சங்கர் வெளியீடு தமிழ்நாடு பௌத்த சங்கம் தமிழ்நாடு பௌத்த அறநெறியாளர் சங்கம். தொடர்பு முகவரி 194/9, ஏசியாட் காலனி, அண்ணாநகர் மேற்கு விரிவு, (திருமங்கலம் சிக்னல்) சென்னை - 600 101 தொலைபேசி: 99762 99993, 94449 29775 97104 30600 மின்னஞ்சல்: [email protected] [email protected] படைப்புகள், விமர்சனங்கள் வரவேற்கப்படுகின்றன. கட்டுரையின் கருத்துகளுக்கு எழுத்தாளரே பொறுப்பாளர் ஆவார். TamilNadau Bouddha Sangha Trust A/c No 31707722763, SBI, Anna Nagar West, Chenna- 40 ISFC Code: SBIN0003870, MICR: 600002006 இதழ் 10 மாத இதழ் / புத்தர் ஆண்டு 2566 சுட்டும் விரல் நிலவு ஆகாது புத்த புராணம் ப ௌத்தமும் முருகனும் பிரபஞ்சமும் பருப்பொருட்களும் ப�ௌத்தம்: பிற மதங்களிலிருந்து எவ்வாறு வேறுப்படுகிறது 6 14 16 22 30 அக்டோபர், 2022 3


ஆசிரியர் பக்கம் அனகாரிகர் என்றால் வீட்டைத்துறந்து வீடற்ற நிலைக்கு வந்து துறவியாக தம்மப் பணிக்காகவே தன்னை முழுமையாக அர்ப்பணித்து வாழ்பவர். துறவியாக மடத்திலே அடங்கிக் கிடக்கமால் மக்களிடையே அவர்களின் நலனுக்காகப் பணியாற்றுபவர் தர்மபாலர் என்றால் ப ௌத்த தர்மத்தை பாலிப்பவர், பாதுகாப்பவர் என்பதாகும். டேவிட் ஹேவவிதரன என்கிற இயற்பெயர் கொண்ட அவர் தனது இருபத்தியோரவது வயதில் தனக்குத் தானே புனைந்து சூட்டிக்கொண்ட பெயராகும். இலங்கை கொழும்பு பெட்டா மாவட்டத்தில் 1864 – ஆம் ஆண்டு செப்டம்பர் 17 – ம் தேதி அனகாரிக தர்மபாலர் பிறந்தார். அவரது 158– வது பிறந்த நாளை உலகம் பூராவும் ப ௌத்தர்கள் கொண்டாடி மகிழ்கின்றனர். இவ்வேளையில் இந்தியாவில் ப ௌத்த மறுமலர்ச்சிக்கு அனகாரிக தர்மபாலரின் அளப்பரிய அர்ப்பணிபபை, பங்களிப்பை நினைவு கூர்ந்து அவரது வழியில் தம்மத்தை பாதுகாத்து, புத்த பண்பாட்டை இந்திய மண்ணில் வளர்த்தெடுப்பது அம்பேத்கரிய ப ௌத்தர்களின் முதல் பணியாகும். தற்போது இலட்சக்கணக்கான ப ௌத்தர்கள் உலகின் பல பாகங்களிலிருந்து இந்தியாவில் உள்ள புத்தகயை, சாரனாத், குஷிநாரா, ஆகிய ப ௌத்த தலங்களுக்கு ஆண்டு தோறும் திரளாக யாத்திரை மேற்கொண்டு பகவன் புத்தரை வணங்கி செல்கிறார்கள். சுமார் 130 ஆண்டுகளுக்கு முன்பு இந்தப் புனிதத் தலங்கள் இருந்த இடமே தெரியாமல் இருந்தன. அன்றைய ஆங்கிலேயே அதிகாரிகளாலும் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்களாலும் கண்டுபிடிக்கப்பட்டு அடையாளாங்கள் காணப்பட்டன. ப ௌத்த தம்மத்தின்பால் தீவிர பற்றுக்கொண்ட சிங்கள ப ௌத்தரான அனகாரிக தர்மபாலர் பகவன் புத்தர் பிறந்த இந்தப் புனித மண்ணினைத் தரிசிக்க ஆர்வத்தோடு 1891 ஜீன் மாதத்தில் இங்கு வந்தபோது, அவர் சென்ற இடமெல்லாம் ப ௌத்த தலங்கள் சிதைந்து சீரழிந்து கிடப்பதையும் மாற்று சமயத்தினரின் ஆளுமைக்கு ஆட்பட்டுத் தவறான வழிகளில் பின்பற்றப்படுவதையும் கண்டு மனங்கலங்கி அவற்றையெல்லாம் மீட்டெடுத்து, அவற்றின் ப ௌத்த பழம் பெருமையை உலகிற்கு உணர்த்துவதையே தனது குறிக்கோளாக கொண்டார். அவரது இந்தியச் சுற்றுப்பயணமும், அர்ப்பணிப்பும் ப ௌத்த சமய வலாற்றில் புதிய சகாப்தத்தை தொடங்கி வைத்தன. தமிழகத்திலே ப ௌத்த சமயத்தை முன்னெடுத்துச் செல்வதில் முதன்மை பங்காற்றிய தமிழ்ச் சமூக சிந்தனையாளரும், ப ௌத்த அறிஞருமான அயோத்திதாசப் பண்டிதர் பேராசிரியர் லட்சுமி நரசு, சிங்காரவேலர், ஆகியோரோடு இணைந்து செயல்பட்டவர் அனகாரிக தர்மபாலர். மகா போதி சொலைட்டியின் கிளையை நிறுவுவதற்கு 1899 செப்டம்பர் 17-ல் (அவரது 35 வது பிறந்த நாள்) அனகாரிக தர்மபாலர் சென்னை வந்திருந்தபோது, “மெட்ராஸ் ஸ்டாண்டர்டு” பத்திரிக்கைக்கு அவர் அளித்த பேட்டியில் ப ௌத்தத்தின் நிலைபாட்டைத் தெளிவாக விளக்கியுள்ளார். “எங்களது குறிக்கோள் இந்தியாவை தேரவாத ப ௌத்த மரபு அல்லது மகாயான ப ௌத்த மரபை ஏற்றுக் கொள்ளச் செய்து ப ௌத்த நாடாக மாற்றுவது அல்ல இங்குள்ள மக்களுடைய வாழ்க்கையின் தன்மையையும், பொருளாதார மேம்பாட்டிற்கும் சமூக மேம்பாட்டிற்கும் புத்தர் போதித்துள்ள தத்துவக் கோட்பாடுகளையும், வாழ்வியல் நெறியையும், தம்மத்தையும் (அறத்தையும்) மக்கள் கடைபிடிக்க வேண்டியதன் அவசியத்தை உணர்த்துவதே எங்கள் நோக்கம் என தெரிவித்தார். மேலும் அவர் மக்களுக்கு வாழ்வியல் நெறியையும், சுகாதாரத்தையும், சுற்றுச்சூழல் பாதுகாப்பு, துப்புரவு ஆகியவற்றை போதிக்கும் அடிப்படைக் கல்வி அளிக்கப்பட்ட வேண்டியதன் அவசியம் குறித்தும் பேசினார். மகா போதி சொசைட்டி தொடங்கப்பட்டு, அதன் பொறுப்பாளராக செயல்பட்ட தர்மபாலர் துவக்கிய “புத்த கயையை காப்பாற்றுங்கள்” என்ற இயக்கம் இந்தியாவில் ப ௌத்த மறுமலர்ச்சியை உண்டாக்குவதில் மாபெரும் வெற்றி பெற்றது. புத்தகையை மீட்கத் தாம் மேற்கொண்டுள்ள போரட்டத்திற்கு சர்வதேச அளவில் ஒத்துழைப்பையும் ஆதரவையும் திரட்டுவதற்காக ப ௌத்தம் பரவியுள்ள அனைத்து நாடுகளிலும் மகாபோதி சொசைட்டியை நிறுவினார். தமது 69 ஆண்டு வாழ்நாள் காலத்தில், நாற்பது ஆண்டுகளுக்கு மேலாக அவர் இந்தியாவில் ப ௌத்த மறுமலர்ச்சிகான முயற்சிகளில் செலவழித்தார். பகவன் புத்தர் பிறந்த மண்ணில் அன்பும், கருணையுமே உருவான அவரது காலடிகளால் புனிதமடைந்த இந்திய மண்ணிலேயே அனகாரிகராக இருந்ததாம், ப ௌத்த சங்கத்திலே முழுமையாக ஒரு பிக்குவாக ஆன பின்னரே தனது கடைசி மூச்சு நிகழ வேண்டும் என விரும்பினார். அவ்வாறே இந்த மண்ணிலேயே தனது இறுதி மூச்சை விட்டார். இலங்கையில் பிறந்தவராக இருந்தாலும் தனது வாழ்நாட்களில் பாதிக்கு மேல் பகவன் புத்தர் பிறந்த இந்தப் புனித மண்ணிலே வாழ்ந்து ப ௌத்த சமய நெறியை இங்கு மீண்டும் நிலை நாட்டுவதற்காகவே தன்னை முழுமையாக அர்ப்பணித்துக் கொண்ட மாமனிதரை போற்றுவோம். தர்மபாலர் வழியில் தம்மத்தை பரப்புவோம். ப ௌத்தம் பண்பாட்டை வளர்த்தெடுப்போம். ப�ௌத்த தன்மை மலர்க. செல்லரத்தினகேசவன் ஆசிரியர் அனகாரிக தர்மபாலர் வழியில் தம்மத்தை பரப்புவோம் ! ப�ௌத்த பண்பாட்டை முன்னெடுப்போம் ! 4 அக்டோபர், 2022


புத்த வந்தனம் பாதுகாப்பற்றவவருக்கு நான் பாதுகாவலனாக இருப்பேனாக! கூட்டாகப் பிரயாணம் செய்யும் பயணிகளின் குழுவுக்கு வழிகாட்டி நடத்திச் செல்லும் தலைவனாக இருப்பேனாக! துக்கத்தை அறுத்த மறுகரையை அடைய விரும்புபவர்களுக்கு பாலமாக அமைவேனாக! இருளில் ஒளி தேவைப்படுவோருக்கு நான் ஒளியாக இருப்போனாக! ஓய்வு தேவைப்படுவோருக்கு நான் படுக்கையாக இருப்பேனாக! ஊழியம் தேவைப்படுவோருக்கு நான் ஊழியனாக இருப்பேனாக! உடல்கொண்ட உயிர்கள் அனைத்திற்கும் சேவை செய்யும் சேவகனாக இருப்பேனாக! உடல் கொண்ட உயிர்களுக்கு நான் அவர்கள் ஆசைகள் அனைத்தையும் பூர்த்தி செய்யும் அதிசய மாணிக்கக் கல்லாக இருப்பேனாக! அள்ள அள்ளக் குறையாத செல்வக் குவியலாக இருப்பேனாக! வேண்டியதை விளைவிக்கும் மந்திரச் சொல்லாக இருப்போனாக! அனைத்து வியாதிகளையும் குணமாக்கும் சஞ்சீவினி மருந்தாக இருபேனாக! கேட்டதைத் தரும் மாய மரமாக இருப்பேனாக! எல்லாத் தேவைகளையும் தரும் காமதேனுப்பசுவாக இருப்பேனாக! எவ்வாறு மண்ணும் மற்ற மூன்று பூதங்களும் மண்ணாகி, நீராகி, நெருப்பாகி, காற்றாகி அனைத்து மண்டலங்களிலுமுள்ள எண்ணற்ற உயிர்களைப் போஷித்துக் காப்பாற்றுகின்றனவோ, அவ்வாறே நானும் அனைத்து மண்டலங்களிலுமுள்ள எண்ணற்ற உயிர்களை, அவர்கள் விமோச்சனம் அடையும் வரை அவர்களுக்கு உணவாகவும் ஆதரவாகவும் இருந்து போஷித்துக் காப்பாற்றுபவனாக இருப்பேனாக! கடந்து சென்ற புத்தர்கள் எவ்வாறு போதிசித்தம் ஏற்றார்களோ, அவர்கள் எவ்வாறு போதிசத்துவப் பயிற்சியில் முன்னேற்றமடைந்தார்களோ, அவ்வாறே நானும் அனைத்து உலகத்தின் நல்வாழ்வுக்காகவும் போதிசித்தத்தை உருவாக்குவேனாக! அவ்வாறே அந்த நெறிகளிலும் பயிற்சியிலும் நிறைவு பெறுவேனாக! இவ்வாறு உலைவற்ற உறுதியோடும் நம்பிக்கையோடும் போதிசித்தத்தை எழுப்பும் அறிவுக் கூர்மையையுடைய ஒருவர், தமது குறிக்கோளான புத்தர் நிலையை அடையத் தமது உறுதியைக் கீழ்க்கண்டவாறு ஊக்கி வளர்க்க வேண்டும். “இன்று எனது பிறவியின் பலனை அடைந்தேன். இந்த எனது மனித வாழ்க்கை வீணாகவில்லை, வாழ்வின் குறிக்கோள் மெய்ப்பிக்கப்பட்டது. இன்று நான் புத்தரின் குடும்பத்தில் பிறந்துள்ளேன். இப்போது நான் புத்தரின் புத்திரன். “இந்த மாசு மறுவற்ற குடும்பத்திற்கு எந்தக் களங்கமும் உண்டாகாமலிருக்க, அதன் நற்புகழுக்கு இணக்கமாக அமையும் நற்காரியங்களையே செய்வேன். “பார்வையற்ற ஒரு குருடருக்கு குப்பைக் குவியலிலிருந்து ஒரு மாணிக்கக்கல் கிடைத்தது போல, இந்த போதி சித்தம் எவ்வாறோ என்னு ள் எழுந்துள்ளது. “இது இறவா வரம் தரும் அமிழ்தம், உலகில் மரணத்தை அழிக்கும் அரும்மருந்து இது அ ள்ள அ ள்ளக் குறையா த செல்வக்குவியல், புதையல், உ லகில் வறு மையை ஒழிக் கு ம் அரும்பொருள். ப�ோதிசித்தம் மேற்கொள்ளல் அக்டோபர், 2022 5


திகனாகர் எனும் துறவியை சாரிபுத்தரும் மொக்கல்லானரும் புத்தரிடம் கூட்டி வந்தனர். திகனாகர் சஞ்சயர் எனும் பெயரில் பிரபலாமான ஆசாரியராகத் திகழ்ந்தார். அவர் சாரிபுத்தரின் மாமாவும்கூட. தனது மருமகன் புத்தரிடம் சரண்புகுந்து துறவியானதைக் கண்டு வியப்புற்று புத்தரைப் பற்றிதாம் அறிய விரும்புவதாகக் கூறிட அவ்வாறே புத்தரைச் சந்திக்க வழிசெய்தனர். திகனாகர் புத்தரிடம் கேட்டார்: 'கோதமரே, உமது ப�ோதனை என்ன, மறைநெறிகள் யாவை என்பதை அறிய விரும்புகிறேன். உமக்கே தெரியும் ந ா ன் எந்தவி த மான ம ற ைநெறிக ள ை யு ம் ப�ோதிப்பதில்லை. எனக்கு அதில் விருப்பமுமில்லை என்று'. புன்னகையுடன் புத்தர் பதிலளித்தார்: 'எந்த நெறிகளையும் ப�ோதிக்காததே உமது ப�ோதனை என்கிறீர்கள்தானே? அப்படியானால் நம்பாமைதானே நீங்கள் ப�ோதிப்பது?' பழைய பாதை வெண்மேகங்கள் 32 சுட்டும் விரல் நிலவு ஆகாது சற்றே கலக்கமுற்று திகனாகர் கூறினார், 'நான் நம்புவதும் நம்பாமல் இருப்பதும் முக்கியமென்று, கோதமரே.' கண்ணியத்துடன் புத்தர் பேசினார், 'குறிப்பிட்ட மறைநெறியில் ஒருவர் நம்பிக்கை வைக்கையில் அவர் தனது சுதந்திரத்தை இழக்கிறார். அந்நம்பிக்கையில் பிடிமானம் ஏற்பட்டு அது மட்டுமே பேருண்மை என்றும் பிறயாதொன்றும் வறட்டுக் கோட்பாடுகளே என்று நினைக்கிறார். அக்குறுகிய நோக்கால் கருதுமோதல்களும் சர்ச்சைகளும் எழுகின்றன. அரிய நேர த ்தை முடி வ ற ்ற வ ா த ங ்கள ா ல் விரயமாக்குகின்றனர். சிலசமயம் அது ப�ோருக்கு வழி வகுக்கிறது. தவவாழ்வில் கருத்துருவாக்கங்களைப் பற் றி க ்க ொள்வ து பெ ருந்த டை . கு று கி ய கோட்பாடுகளால் கட்டுண்டு பேருண்மையின் வ ாசல ்களைத் தி றக்க முடியாம ல் சிக்கித் தவிக்கின்றனர்.' 'மனைவியை இழந்து தனது ஐந்து வயது மகனுடன் வ ா ழ்ந ்த ஓர் இ ள ம் த க ப ்ப ன ைப் பற் றி ய கதையொன்றைக் கூறுகிறேன். வியாபாரத்தின் நிமித்தம் மகனை வீட்டில் விட்டுவிட்டு அம்மனிதன் வி. அமலன் ஸ்டேன்லி 6 அக்டோபர், 2022


வெளியே சென்றிருந்தான். அன்று திருடர்கள் அவ்வூரையே களவாடி, எரித்துப் ப�ோயினர். கூடவே அவனுடைய மகனைக் கடத் தி க் கொண் டு ப�ோய்விட்டனர். மாலை தகப்பன் வீடு திரும்புகையில் அவனது வீட்டண்டை ஒரு சிறுவனின் உடல் எரிந்து சாம்பலாகிக் கிடந்தது. தன் ஒரே மகனை இழந்து அ வன் அ ரற் றி அழு த ா ன் . எ ஞ் சி யி ரு ந ்த உடற்பாகங்களைச் சேகரித்து சடங்கின்படி எரித்து அச்சாம்பலை முதுகில் சுமந்தபடியே திரிந்தலைந்தான். தன் மகனின்மேல் கொண்டிருந்த பேரன்பில் எங்கு ப�ோனாலும் அச்சாம்பலைத் தூக்கிக்கொண்டு ப�ோனான். பல மாதங்கள் கடந்து அவனுடைய மகன் திருடர்களிடமிருந்து தப்பித்து தனது ஊருக்குத் திரும்பினான். நள்ளிரவில் வீட்டை அடைகிறான். அச்சமயம் அவனது தகப்பன் மகனின் சாம்பலைக் கட்டியணைத்து அழுதபடி படுத்திருக்கிறான். மகன் வீட்டைத் தட்டுகிறான். தொடர்ந்து கத்துகிறான். ஆனால் தகப்பன் கதவைத் திறக்கவில்லை. தன் மகன் இறந்துப�ோய்விட்டான் என்றே அவன் நம்புகிறான். யாரோ அக்கம்பக்கத்துச் சிறுவர்கள் தன்னைக் கேலி செய்கிறார்கள் என்று நினைத்தான். கடைசிவரையில் கதவைத் திறக்காததால் மகன் வேறு வழியின்றி ஊரைவிட்டுச் சென்றுவிடுகிறான். அத்தகப ்பன் தன் மகனை எப ்போ து ம ா க இழந்துப�ோனான்.’ 'இதோ பாருங்கள் அன்பரே, எதோவொரு நம்பிக்கையை முடிவான உண்மையென்று நம்பி பற்றிக்கொண்டால் அத்தகப்பனைப் ப�ோல நம்மை ஒரு நாள் பேரிழப்பிற்குத் தாரைவார்த்து விடுவோம். நம்மிடம் ஏற்கெனவே உண்மையெனும் கருத்துரு உள்ளதென்று எண்ணி சரியான உண்மைக்கு, அது நம் கதவைத் தட்டினால்கூட நம்மனத்தைத் திறக்காமல் வைத்துவிடுவோம். திகனாகர் கேட்டார், 'சரிதான். ஆனால் உங்களுடையது எனும் ப�ோதனைதான் என்ன? அதைப் பின்பற்றும் ஒருவர் குறுகிய கண்ணோட்டம் கொண்டவராக ஏன் இருப்பதில்லை?' 'எனது ப�ோதனை என்பது மறைநெறியோ மெ ய்யிய லோ அல ்ல . எ ண்ண ங ்க ளி ன் தொகுப்புரையோ அல்லது மெய்யியல் சார்ந்த இப்பிரபஞ்சத்தின் அடிப்படை நெருப்பு, நீர், பூமி, காற்று என்ற சிந்தனாமுறை வழியான சாரமோ அல்ல. அல்லது, இப்பிரபஞ்சம் எல்லையற்றது, வரையறைக்கு உட்பட்டது, நித்தியமானது, உலக வழியானது ப�ோன்றப�ோதனையல்ல. எண்ணங்களின், சிந்தனைகளின் கருத்துத் தொகுப்பு என்பது பானையின் வட்டவடிவ வாயைச் சுற்றிச்சுற்றி வரும் எறும்புக ள ை ப் ப � ோன்ற து. அவ ை எங் கு ம் சென்றடைவதில்லை. எனது ப�ோதனை மெய்யியல் அல்ல. அது நேரடி அனுபவத்தின் வழிவந்தது. எனது சொந்த அனுபவத்தின் சாரமது. அதை உங்களின் அனுபவவழி உய்த்துணரலாம். என்னைப் ப�ோலவே நேர டி அனு பவத் தி ல் நீங ்கள ா க வே அறிந்துகொள்ளலாம். யாவும் எழுச்சி, வளர்ச்சி, வீழ்ச்சி எனும் நியதிக்குள் நீளும் தொடர் இயக்கம் எ ன் கி றேன் . இவ்வுண்மையை நேர டி ய ா க அறிந்துணர்ந்தேன். இப்பிரபஞ்சத்தின் பண்புகள் பற்றி எடுத்துக் கூறுவதல்ல எனது நோக்கம் . இருப்பின் நிஜத்தை நேரடியாக அனுபவத்தால் உய்த்துணர்வதே எனது ப�ோதனை. வார்த்தைகளால் அதை எட்டிப்பிடிக்க முடியாது. நிஜத்தின் முகத்தை அனுபவத்தின் வாயிலாகவே உணரவியலும்.' 'அருமை, அருமை, கோதமரே. எனினும், உங்களது ப � ோத ன ையை ஒரு க ோ ட ்பா ட ா க எடுத்துக்கொள்பவருக்கு என்ன நிகழும்?' என்று திகனாகர் கேட்டார். தலையாட்டிய படியே யோசித்தார் புத்தர். 'அருமையான கேள்வி, திகனாகா. நான்மறை நெறியையோ கோட்பாட்டையோ தரவில்லை எனது ப�ோதனை ஆற்றைக் கடக்க உதவுமொரு கட்டுமரம் மட்டுமே. விடுதலை எனும் அக்கரை சேர்ந்த பிறகு அக்கட்டுமரத்தைச் சுமந்து திரிபவன் முட்டாளாகத்தான் இருக்க முடியும். அக்டோபர், 2022 7


என்றாலும் சிலர் அப்படி எடுத்துக்கொள்கின்றனர். தெளிவாகச் சொல்கிறேன், எனது ப�ோதனை என்பது நிஜத்தின் வழியான அனுபவம் பற்றித்தான் அன்றி நிஜத்தைப் பற்றியதல்ல. வானத்தை நோக்கிச் சுட்டும் விரல் நிலவாகிவிடாது. விரலை மட்டுமே பார்ப்பவன் விரலை நிலவென்று தவறாக எண்ணிக்கொள்கிறான். அவனால் நிலவைக் காணவே இயலாது. பயிற்சியின் வழியானது எனது ப�ோதனை. அதைத் தூக்கிப் பிடித்துக்கொண்டோ வழிபட்டுக் கொண்டோ இருக்கத் தேவையில்லை. எனது ப�ோதனை ஆற்றைக் கடக்க உதவுமொரு கட்டுமரம் மட்டுமே. விடுதலை எனும் அக்கரை சேர்ந்த பிறகு அக்கட்டுமரத்தைச் சுமந்து திரிபவன் முட்டாளாகத்தான் இருக்க முடியும்.' திகனாகர் கைகூப்பி வணங்கினார். 'தயவுகூர்ந்து வலியுணர்ச்சிகளில் இருந்து விடுதலை பெறும் வழியை எனக்குக் காட்டுங்கள், புத்தரே.' புத்தர் கூறினார்: 'இங்கே, மகிழ்ச்சி, துன்பம், இரண்டிற்கும் இடைப்பட்டதென மூன்று விதமான உணர்வகைகள் உள்ளன. இம்மூன்று உணர்வுகளும் நமது உடலும் மனமும் அவற்றை எவ்வாறு அறிந்துகொள்கின்றன என்பதைப் ப�ொறுத்து மாறுப டுகின்றன. மேலும், அவ்வுணர்வு கள் உடலையோ மனத்தையோ சார்ந்து எழுச்சிகொண்டு, நீடித்துப் பின்னர் மறைகின்றன. அவ்வுணர்வுகள் தோன்றி மறைவதை வெளிச்சமிட்டு உற்றறியும் வழிமுறையைத் தான் நான் கற்றுத் தருகிறேன். அதன் வழியே அவ்வுணர்வுகள் நிஜத்திலேயே மகிழ்ச்சியை, துன்பத்தை, அல்லது இடைப்பட்ட உணர்வைத் தருபவைதானா என்று அறிந்துணர உதவுகிறேன். அ வ்வா று உணர்வுகளி ன் மூ ல ா த ா ர த ்தை உய்த்துணர்ந்து அவற்றின் அடிப்படைப்பண்புகளைப் பு ரி ந் து கொள்ள வ ை க் கி றேன். அப ்போ து , உ ண ர்வுக ள ை உய் த் து ண ர் ந் து அ வ ை தற்காலிகமானவை என்பதை அறிந்து கொள்ள, தோன் றி ம ற ையும் அவ்வு ண ர்வுக ள ா ல் சலனப்படாதிருக்கக் கற்றுக் கொள்கிறீர்கள் . பெரும்பாலான வலியுணர்வுகள் நிஜத்தைத் தவறாகப் புரிந்துகொள்வதால் விளைகின்றன. அத்தவறான பார்வையை விட்டொழிக்க துன்பம் மறைகிறது. அத்தவறான பார்வை தாற்காலிகத்தை நிரந்தரமென்று நம்மை நினைக்க வைக்கிறது. அறியாமையே அனைத்து துன்பங்களின் ஆதாரம். அகவிழிப்புப் ப யி ற் சி யி ன் வ ழியாக அறியா மையைப் ப � ோக் கு கி றோ ம். ஒன ்றை மி க ஆ ழ ம ா க ஆராய்வதன்மூலம் அதன் நிஜ உண்மைக்குள் ஊடுருவிப் ப�ோகிறோம். பிரார்தனைகளாலும் காணிக்கைகளாலும் அறியாமையைப் ப�ோக்க முடியாது.' சாரிபுத்தர், மொக்கல்லானர், களுதாயி , நாகசமாலா, சன்னா என யாவரு ம் புத்த ர் திகனாகருடன் உரையாடியதை ஊன்றிக் கேட்டனர். சாரிபுத்தர் அவ்வுரையாடலை மிக ஆழமாகப் புரிந்துணர்ந்தார். சூரியனைப் ப�ோல தனது அறிவுசுடர்வதைக் கண்டார். மெய்சிலிர்ப்புடன் புத்தரை வணங்கிப் பணிந்தார். மொக்கல்லானரும் பணி ந்தெழு ந்தார். புத்தர் கூறிய உரைய ால் மு ற் றிலுமாக ஈ ர்க்க ப ்ப ட ்ட தி க ன ா க ரு ம் பணி ந்தெழு ந்தார். களுதாயியும் சன்னாவு ம் நிகழ்வதைக் கண்டு பூரித்தனர். புத்தரோடு தாம் இருப்பதில் பெருமிதம் அடைந்தனர். புத்தரின்பால் நம்பிக்கையும் மதிப்பும் கூடி அவரது பாதையில் பயணிக்க அவர்களை உறுதிப்படுத்தியது. 8 அக்டோபர், 2022


ஜாதகக் கதைகள் சுகவிஹாரி - ஜாதகம் மகிழ்ச்சியான செல்வ மு ந்தர் இருந ன்னொரு கா ்தா ல ர். அவரு த்தில் ஒரு உயர் குடியில் பி க்கு வயதானபோ றந்த து, துறவி முதுமையில் வருகின்ற துன்பம் ஏழை பணக்காரன் யாருக்கும் ஒரே மாதிரிதான் என்பதை உணர்ந்தார். ஆகவே அவர் தமது செல்வத்தையும் அதிகாரத்தையும் துறந்து, ஒரு எளிய துறவியாக வாழ காட்டிற்குச் சென்றார். அவர் தியானப் பயிற்சிகளை மேற்கொண்டு தமது மனத்தைப் பண்படுத்தினார், தூய்மைப்படுத்தினார். அவர் தீய எண்ணங்களிலிருந்து விடுதலை பெற்றார், உள்ளச் சமநிலை கொண்டு எப்போதும் திருப்தியாகவும் மகிழ்ச்சியோடும் வாழ்ந்தார். அவருடைய அமைதியும் நேச உணர்வும் படிப்படியாக 500 சீடர்களை அவர்பால் ஈர்த்தது. அ ச்ச மயம், வெ கு ந ாள் மு ன் பு , பெரும்பாலான துறவிகள் வழக்கம ா க உணர்ச்சிகளை வெளிக்காட்டாமல் வீறமைதி கொண்டவர்களாகத் தோற்றமளிப்பார்கள். ஆனால் ஒரு துறவி இருந்தார். அவர் பெரும் மதிப்புக்குரியவராக இருந்தாலும் வீறார்ந்த தோற்றங் கொண்டவராக இருந்தாலும் , எப்போதும் தமது முகத்திலே குறைந்தது சிறு புன்னகை கொண்டிருப்பார். எது நேர்ந்தாலும், அதைப் பற்றிக் க வலை யி ல ்லாவர ா க இருப்பார், அக மகிழ்ச்சியைக் காட்டும் மினுங்கொளி அவரது முகத்திலிருந்து என்றும் நிங்காது. மகிழ்ச்சியான சமயங்களில் அவரது முகம் புன்னகையால் விரியும், அவர் உளமாரச் சிரிக்கவும் சிரிப்பார். சில சமயங்களில், மற்ற துறவிகளும் ஏனையோரும் அவரைக் கேட்டார்கள்: “எப்போதும் புன்னகையோடு கூடிய முகம் கொண்டவராய் இருக்கிறீர்களே, நீங்கள் எப்படி அவ்வளவு மகிழ்ச்சியாக இருக்க முடிகிறது?” அவர் வாய்விடாது சிரிப்பார். பிறகு கூறுவார்: “நான் கூறினால், நீங்கள் என்னை நம்ப மாட்டீர்கள். நான் ப�ொய் சொல்வதாக நீங்கள் எண்ணினால், அது எனது குரு வ ை அ வ மதிப ்பத ா கு ம் . ” அறிவுக்கூர்மை வாய்ந்த குரு, அவரது அக்டோபர், 2022 9


முகத்திலிருந்து துடைத்து அழிக்க முடியாத அவரது அக மகிழ்ச்சியின் மூலத்தை அறிவார். அனைவரினும் மகிழச்சியாக உள்ள இந்தத் துறவியை குரு தமது முதன்மைச் சீடராக்கினார். ஒரு வருடம், மழைக்காலத்துக்குப் பிறகு வயதான குரு தமது 500 சீடர்களுடன் நகரத்துக்குச் சென்றார். இளவேனிற் காலத்தில் அவர்கள் தமது நந்தவனத்தில் வசிக்கலாம் என்று அரசர் அவர்களுக்கு அனுமதி வழங்கியிருந்தார். அந்த அரசர் மிக நல்ல அரசர். ஆட்சியாளராக அவர் தமது ப�ொறுப்பு களை, கடமைகளை உள்ளார்ந்த அக்கறையோடு எடுத்துக்கொண்டு நிறைவேற்றுவார். அவர் தமது குடிமக்களை சண்டையிட்டுக் கொண்டார்கள். அவ்வப்போது ஏதாவது காரணத்தால் திருப்தியடையாத யாராவது ஒரு குடிமகன் அரசரைக் கொல்லவும் முயற்சிக்கிறான். இவற்றிற் கெல்லாம் மேலாக அரசர் எப்போதும் தனது இராஜ்ஜியத்தின் நிதி நிலைமையைப் பற்றிக் கவலை எடுத்துக் கொள்ள வேண்டியிருந்தது. உண்மையில், இவ்வாறு அரசருக்குக் கவலைப்பட ஏராளமான காரணங்கள் இருந்தன; ஆகையால் மகிழ்ச்சியாக இருக்க அவருக்கு எப்போதும் நேரம் கிடைப்பதில்லை. கோடைகாலம் நெருங்கிய ப�ோது, துறவிகள் காட்டிற்குத் திரும்பிச் செல்ல ஆயத்தம் செய்து கொண்டிருப்பதாக அரசர் கேள்விப்பட்டார். வ ய த ான குருவி ன் உட ல் நி லையை யு ம் இன்னலத்தையும் கருத்தில் கொண்டு அரசர் அவரிடம் சென்று கூறினார்: “வணக்கத்திற்குரியவரே, உங்களுக்கு இப்பொழுது மிக வயதாகிவிட்டது, வலுவும் குறைந்துவிட்டது, காட்டிற்குத் திரும்பிச் செல்வதால் என்ன நன்மை? நீங்கள் உங்கள் சீடர்களை அனுப்பிவிட்டு இங்கேயே தங்கியிருப்பது நல்லது.” இதன் பிறகு தலைமைக் குரு தமது தலைமைச் சீடர் வரவழைத்துக் கூறினார்: “எனக்கு மிக வயதாகிவிட்டதாலும், வலுக்குன்றியவனாகவும் இருப்பதால், அரசர் அன்போடு கூறியது ப�ோல, நான் இங்கேயே தங்கிவிடத் தீர்மானித்திருக்கிறேன். நீங்கள் அனைவரும் காட்டிற்குத் திரும்பிச் சென்று அங்கு வசிக்கும்போது, நீயே மற்ற துறவிகளின் தலைவனாக இருந்து அவர்களை வழிநடத்த வேண்டும்.” ஆகவே, 500 துறவிகள் காட்டிற்குத் திரும்பிச் சென்றனர், வயதான குரு நகரத்திலேயே தங்கியிருந்தார். முதன்மைச் சீடன் கா ட் டி லே தியானப் பயிற்சிகளைத் தொடர்ந்து மேற்கொண்டார் . தியானத்தின் பலனாக அவர் அவ்வளவு மெய்யறிவும் அமைதியும் பெற்றார், அவர் முன்னர் எப்போதையும் விட இப்போது அதிக மகிழ்ச்சியடைந்தார் . அவருக்குத் தனது குருவைப் பார்க்க வேண்டும் ப�ோலிருந்தது. தனது அளவற்ற மகிழ்ச்சியையும் அவ ர் தனது குரு வோ டு பகி ர்ந் து கொள்ள விரும்பினார். ஆகவே அவர் தனது குருவைப் பார்க்க நகரத்துக்குச் சென்றார். அவர் தனது குரு இருக்கும் இடம் சென்றடைந்து, அவரது காலடியில் ஒரு தரைவிரிப்பின் மீது அமர்ந்தார். அவர்கள் தங்களுக்குள் அதிகம் பேசிக்கொள்ளவில்லை; ஆனால் முதன்மைச் சீடர் அடிக்கடி கூறுவார்: “என்ன மகிழ்ச்சி”, ஓ என்ன மகிழ்ச்சி!” ஆபத்துகளிலிருந்து பாதுகாப்பதற்கும் அவர்களுடைய செ ல ்வ வள த ்தை யும் இன ்னல த ்தை யு ம் அதிகரிப்பதற்கும் செய்ய வேண்டிய எல்லா முயற்சிகளையும் அக்கறையோடு செய்வார். அவரது அண்டை அயலிலிருந்த மன்னர்களைப் பற்றி அவர் எப்போதும் கவலைப்பட நேர்ந்தது. அவர்களில் சிலர் அவரோடு நட்புறவு கொள்ளாமல் அவரது நாட்டை அச்சுறுத்துபவர்களாக இருந்தார்கள். அவருடைய மந்திரிகளும் தங்களுக்குள் ஒற்றுமை இல்லாமல் செயல்பட்டார்கள். அவர் அடிக்கடி தலையிட்டு அவர்களிடையே சமாதானத்தையும் அமைதியையும் நிலைநாட்ட வேண்டியிருந்தது. சில சமயங்களில் அவரது மனைவிகள் அவரது கவனத்தைப் பெறவும் தங்களது மகன்களின் மு ன ்னே ற ்றத் து க ்கா கவும் த ங ்க ளு க் கு ள் 10 அக்டோபர், 2022


அப்போது அரசர் குருவைப் பார்க்க வந்தார். அவர் தலைமைக் குருவுக்கு மரியாதையோடு தனது வணக்கத்தைத்தெரிவித்தார். ஆனால் இதையெல்லாம் கவனிக்காமல், காட்டிலிருந்து வந்த சீடர் இதை மட்டும் கூறிக் கொண்டேயிருந்தார்: “என்ன மகிழ்ச்சி! ஓ, என்ன மகிழ்ச்சி!” மன்னரை வணங்கவும் அவருக்குத் தக்க மரியாதை வழங்கவும் கூட நிறுத்தாமல் அவர் அதைத் திருப்பித் திருப்பிக் கூறிக் கொண்டிருந்தார். இது அரசருக்குக் கோபத்தை உண்டாக்கியது, அவர் எண்ணினார்: “என்னுடைய கவலைகளுக்கிடையே, இராஜ்ஜியத்தை நிர்வகிக்கும் தொல்லைகளுக்கிடையே அவசர வேலைகளுக்கும் இடையே, இங்கு வர நேரம் எடுத்துக் கொண்டு இங்கு வந்திருக்கிறேன். இந்தத் துறவி எனக்குப் ப�ோதுமான மரியாதை அளிக்கவில்லை என்பது மட்டுமல்ல. நான் இருப்பதாகவும் கூடக் கண்டுகொள்ளவில்லை. வீரர்களால் சூழப்பட்டிருப்பது வழக்கமாக இருந்தது. இப்போது, அச்சப்படுவதற்கு எதுவும் இல்லாமல், காட்டிலே தன்னந்தனியாகத் தியானிப்பவருக்கு ஆயுதம் ஏந்திய பாதுகாவலர்கள் தேவை இல்லை. பாதுகாக்கப்பட வேண்டிய செல்வத்தைப் பற்றிய க வலை யாகிய சு மையை யும் கீழே இ றக் கி வைத்துவிட்டவர் அவர். செல்வத்தைப் பற்றிய கவலையிலிருந்தும் அரசு பதவியும் அதிகாரமும் பறிப�ோய் விடுமோ என்கிற பயத்திலிருந்தும் விடுதலை பெற்றவராய் அவர் இருப்பதால், அவரது மெய்ய றிவு அவரை யும் மற ்றவர்கள ை யு ம் பாதுகாக்கின்றது. தியானத்திலே தேர்ச்சிபெற்றவராய் அவர் அடைந்திருக்கும் அக அமைதி அவ்வளவு ஆழமாகப் பதிந்திருக்கின்றது, ஆகவேதான் அவரால் இவ்வாறு கூறாமல் இருக்க முடியவதில்லை.” என்ன மகிழ்ச்சி! ஓ, என்ன மகிழ்ச்சி!” எவ்வளவு அவமதிப்பு!” ஆகவே அரசர் தலைமைக் குருவிடம் கூறினார்: “வணக்கத்திற்குரியவரே, இந்த முட்டாள் துறவி அளவுக்கு மீறிச் சாப்பிட்டிருக்க வேண்டும். அதன் காரணமாகத்தான் இவர் அவ்வளவு மகிழ்ச்சி நிறைந்தவராகத் தென்படுகிறார். இவர் எப்போதும் இப்படித்தான் சோம்பிக்கிடப்பாரா?” தலைமை குரு பதில் அளித்தார்: “ஒ மாமன்னரே, ப�ொறுமையாக இருங்கள். நான் இவருடைய மகிழ்ச்சியின் மூலத்தைக் கூறுகிறேன். பலருக்கு இது தெரியாது; அவர் ஒரு காலத்தில் ஒரு நாட்டின் மன்னராக இருந்தவர், உங்களைப் ப�ோலவே செல்வ வளம் மிக்கவராகவும், வல்லமை கொண்டவராகவும் இருந்தார்! ஆனால் பிறகு தமது அரச வாழ்க்கையைத் துறந்து, ஒரு துறவியாக தீட்சை எடுத்துக் கொண்டார். இப்போது அவர் தமது பழைய மகிழ்ச்சி இப்போது தாம் அனுபவிக்கும் மகிழ்ச்சியோடு ஒப்பிடுகையில் அற்பம், ஒன்றுமில்லை என்று கருதுகிறார். “அவர் முன்னர் எப்போதும் தம்மைக் காவல் காப்பதற்கும் பாதுகாப்பதற்கும் ஆயுதம் ஏந்திய ம ன ்ன ர் உட னே புரி ந் து கொண்டா ர் . மகிழ்ச்சியான துறவியின் கதையைக் கேட்டது, அவரையும் அமைதியை உணர வைத்தது. சிறிது நேரம் மன்னர் அங்கியிருந்த இரு துறவிகளிடமிருந்தும் ப�ோதனை பெற்றார். பிறகு அவர்களுக்குத் தன் மரியாதையைச்செலுத்திவிட்டு மன்னர் அரண்மனை திரும்பினார். பின்னர், மகிழ்ச்சியான துறவி முன்பு ஒரு காலத்தில் அரசராக இருந்த அந்தத் துறவி, தனது குருவுக்கு மரியாதைகளைத் தெரிவித்து விட்டு விடைபெற்று அழகான காட்டிற்குத் திரும்பிச் சென்றார். குருவான முதல் துறவி தனது எஞ்சிய வாழ்நாட்களை அங்கே தங்கியிருந்து கழித்தார், ம ரணத் தி ற் கு ப் பி ற கு அ வ ர் ஒ ரு உ ய ரி ய தேவலோகத்தில் மறுபிறவி கொண்டார். நீதி: செல்வத்தின் மீதும் அதிகாரத்தின் மீதும் கொண்டுள்ள பற்றுதலைக் கைவிடும்போது மகிழ்ச்சி அதிகரிக்கின்றது. குருவான முதல் துறவி தனது எஞ்சிய வாழ்நாட்களை அங்கே தங்கியிருந்து கழித்தார், மரணத்திற்குப் பிறகு அவர் ஒரு உயரிய தேவலோகத்தில் மறுபிறவி கொண்டார். அக்டோபர், 2022 11


தென்காசி வீதிகளா? தென்னகத்து காவிகளா? தென்னம் பிஞ்சுகளை தெருநாயாய் கடிப்பதுவா? சங்கரன்கோவில் தனில் சனாதன சத்தங்கள் சந்தனக் குருத்துகளை சாதிகளால் சாடுவதா? பாஞ்சாங் குளத்தில் பாவிகளின் நடமாட்டம் பள்ளிக்குழந்தைகள் மேல் பாய்கிறது பாவிக்கூட்டம் தீம்பண்டம் கேட்டதற்கு தீண்டாமை மலமுண்டு தீரா சாதிவெறி தீர்த்துக் கௌள்வதுவா? குழந்தை குழந்தையடா குரூரம் கொண்டவனே குலத்தில் பெருமையென்ன குணத்தில் வேண்டுமடா புத்தியில் சாணியடா புத்தகத்தை பாருமடா தீண்டாமை பாவமென்று திட்டிச் சொல்லுமடா ஊரில் பெருமையென்ன ஊன மனத்தோனே ஊற்றாய் சாதிவெறி - உன் உள்ளத்தில் வழியுதடா காசுக்குத்தான் கேட்டான் கடனா கேட்டுவிட்டான் காரனம் புரிந்திருந்தால் காறி உமிழ்ந்திருப்பான் ஊர் கட்டுப்பாடு உரத்து சொல்லிவிட்டாய் கூடி பேசியதாய் குளவிபோல் கொட்டிவிட்டாய் உங்களுக்கு தரமாட்டேன் உங்க வீட்டில் சொல்லுங்கள் ஏன் என்று கேட்காமல் எட்ட கொஞ்சம் தள்ளுங்கள் ஊரின் பெரியோரே உள்ளத்தில் சிறியோரே மனமெல்லாம் மலம் கொண்ட மனிதகுல வரலாறே தெருவில் விரட்டுதடா தீண்டாமை சாதிவெறி பள்ளியிலும் நிகழ்த்துதடா பக்குவமாய் குள்ளநரி அரசாங்க இருக்கையிலே அமர்ந்துவிட்டால் எனக்கு அடி ஆசிரியர் பெருமக்களே - அரசு புத்தகத்தின் முதல் பக்கம் நீ படி சோறுண்ண தட்டில்லை அமர்வதற்கு இருக்கையில் அடித்துக் கொள்ள தடையில்லை- தடுத்துவிட மனமில்லை துரோணரின் மனங்கொண்ட துருப்பிடித்த வாத்திகளே அனைவரும் சமமென்று சாவதற்குள் வாழுங்களே ஊரின் கட்டுப்பாடுகளை அரசே கட்டுப்படுத்து ஆண்டைத் திமிர்தனத்தை அரசாணை கொண்டு நெறிப்படுத்து கவிதை கவிஞர். ச.மணிகண்டன் 12 அக்டோபர், 2022


வருடாவருடம் தென்மேற்கு பருவ மழைக்காலம் ஜூலை, ஆகஸ்ட், செப்டம்பர் மூன்று ம ா த ங ்க ள் இ ந் தியாவி ன் பெ ரு ம்பான்மை ப குதிகளில் முழுமையும் இருப்பதை ப�ோல 2600 ஆண்டுகளுக்கு முன் புத்தர் காலத்திலும் இந்த மூன்று மாதங்கள் க டு மை யான ம ழை க ்கால ம் . ஆறுகள் ஓடைகள் வெள்ளப் பெருக்கெடுத்து கரைபுண்டோடும். தம்மப�ோதனைகளில் ஈடுபட்டுள்ள எல்லா பிக்குகளும் இந்த மூன்று மாதம் ஆங்காங்கே பாதுகாப்பாக தங்கியிருப்பார்கள். புத்தரும் இந்த மூன்று மாதங்கள் தான் ப�ோதனை செய்து கொண்டிருக்கும் இடத்தில் தங்கியிருப்பார். பல சீடர்கள் இந்த சமயத்தில் புத்தர் தங்கியிருக்கும் இடத்திற்கு வந்து ப�ோதனைகளைக் கேட்டார்கள். மேலும் தம்மத்தில் ஏற்படும் தங்களது சந்தேகங்களைப் புத்தரிடம் தெ ரி வி த் து தெளிவுபெறுவார்கள். பகவன் புத்தர் முதலாவது ம ழை க ்கால மு த ற ்பே ரு ரை நிகழ்த்திய சாரநாத்திலும், தனது கடைசி மழைக்காலத்தை தன் இறப்பை அறிவித்த வைசாலியிலும் கழித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த மூன்று மாத மழைக்காலம் முடிந்தவுடன் புத்தரும் அவரது சீடர்களும் ஆங்காங்கே தங்கியுள்ள இடத்தின் அருகாமையில் இருக்கும் நகரங்களில் கிராமங்களிலிருந்த உபாசகர்கள் உபாசகிகள் மற்றும் ப�ொது மக்களும் அடுத்த ஒன்பது மாதங்கள் தம்ம ப�ோதனை செய்ய புறப்படும் சீடர்களுக்கு இரண்டு து வர ா டை ம ற் று ம் அத்தியாவசியமான தேவைப் ப�ொருட்களைத் தானமாக கொடுத்து அனுப்பி வைப்பார்கள். இது பவுத்தத்தில் கத்தின சீவரதான நிகழ்வு எனப்படும். இந்த கத்தின சீவரதானா ஒரு விழாவாகவே எல்லா பவுத்த நாடுகளிலும் இன்றும் கொண்டாடப்படுகிறது. இந்த சீவரதான நிகழ்ச்சியின் ஆரம்ப நாள் அக்டோபர் பவுர்ணமி தினமாகும். மழைக்காலம் முடிந்து சீவரதான விழா ஆரம்பம் மற்றும் அரஹந்தர் சாரிபுத்திரரை முதன்மை சீடராக அறிவித்தல் அக்டோபர் மாத பவுர்ணமி தினம் வி. பரம தயாளன் பவுத்த நாட்குறிப்பு அக்டோபர், 2022 13


மதிப்புரை "புத்த புராணம் புராண வசனச்சுருக்கமும் அரும்பத உரையும் சேர்ந்தது. அம்பாசமுத்திரம் தீர்த்தபதி ஹைஸ்கூல் தலைமை தமிழ் பண்டிதர் ஆர். அரிகரமையர் எழுதியது. கல்லிடைக்குறிச்சி ஏகாம்பர புரங்கிகிராமம் எஸ்.எஸ்.சங்கர் அய்யர் அவர்கள் பொருள் உதவியால் தென்காசி ராமானுஜம் அச்சியந்திரசாலையில் பதிப்பிக்கப்பட்டது. முதற்பதிப்பு 1920 காப்பி 1000 விலை எட்டணா". இவ்வாறான தகவல்கள் நூலின் முதல் பக்கத்திலேயே அமைந்துள்ளன. இந்நூலுக்கான மதிப்புரைபின் வருமாறு: "நமது நாட்டில் சிறந்த மதங்கள் பல நிலைபெற்றிருக்கின்றன .அவைகளில் ஒரு மதத்தை அனுசரிப்போர், அன்னிய மதத்து வேஷமற்றுச் சமரசமாய் வாழ்வதே, தேச நன்மைக்கு ஏற்றதாகும். இக்கருத்துக்கிணங்க, நமது ஹைஸ்கூல்களில் வாசிக்கும் மாணாக்களுக்கு, நம் தேசத்தில் பரவியிருக்கும் பெரும் சமயங்களின் கொள்கைகளையும், அம்மத ஸ்தாபகர்களின் சரித்திரங்களையும், மேற்போக்காகவேனும் அறிவிக்க வேண்டியது அவசியமாயிருக்கிறது. இதனை உத்தேசித்தே புத்தர், கிறிஸ்து, மகம்மது, சங்கரர், ராமாநுஜர், ஆகிய இவர்களின் ச ரி த் தி ர த ்தோ டு, அ வர்கள ா ல் பரப ப ்ப ட ்ட ம தக் கொள்கைகளையும், இலகுவும், தெளிவுமானயில் எழுத வேண்டுமென்ற எனது கோரிக்கையின் பேரில், அம்பாசமுத்திரம் ஹைஸ்கூல் பிரதம தமிழ்ப்பண்டிதர் மகா -- ஸ்ரீ, ஆர். அரிகரமையரவர்கள் முதலில் கிறிஸ்து சரித்திரத்தினைத் தெள்ளிய தமிழ்நடையில் எழுதி வெளியிட்டனர் . அது கவர்ண்மெண்டாரால் அங்கீகரிக்கப்பட்டுப் பல இடங்களிலும் பரவிக்கிறது. இப்பொழுது புத்தர் சரித்திரத்தையும், அவர் மதத்தின் முக்கிய கொள்கைகளையும், வசனநடையின் தரத்திலும் செய்யுள் நடையிலும், "புத்தபுராணம் " என்னும் பெயருடன் இயற்றுவித்திருக்கின்றனர். மற்றைய சமயாசாரியர் வரலாறுகளையும் நூலாசிரியர் காலக்கிரமத்தில் வெளியிடுவார். தீர்த்தபதி ஹைஸ்கூல் அம்பாசமுத்திரம் ப�ொருள் உதவி செய்த சங்கர அய்யர் முகவுரை வழங்கி உள்ளார். அதில் "இற்றைக்கு இரண்டாயிரத்தைந்நூறு வருடங்கட்குமுன், கபிலவாஸ்து நகரத்தில் சுத்தோதன மஹாராஜனுக்குத் திருக்குமரராய் உதித்தருளிய க ௌ த ம பெள த்தரும் ஆதிபுத்தரி ன் பரம்பரையையேயாவர்" என்பதைப் பலவகைப்பட்ட பாஷை நூல்களிலும் பார்க்கக் காணலாகும். இ ப ்ப டி யெ ல ்லா மி ரு ந் தும் அ ப் புத்த ர ா ல் நிலைநாட்டப்பட்டுள்ள, புத்த மதம் நமது முன்னோராகிய சில ஆசாரிய ர்கள ா ல் பு றச்ச மயங ்க ளி லொ ன ்றா க ப் புறக்கணிக்கப்பட்டன, ஆச்சரியமே. அங்ஙனம் புறக்கணித்தற்குக் காரணமும் அவர் பலவாறு கூறாநிற்பர்; ஆயினும் அவைகட்குரிய மறுப்புக்களும் எண்ணிலடங்காதனவாயிருக்கின்றன. நிற்க, எது எப்படியானாலும் தற்கால உலகத்துக்கு ஏற்ற பற்பல நீதிகளைப் ப�ோதிப்பதில், இச்சரித்திரம் ப�ோலுஞ் சிறந்த ஓர் புத்த புராணம் 1920இல் எழுதப்பட்ட தமிழ் ப�ௌத்தக் குறுங்காப்பிய நூல் முனைவர் க. ஜெயபாலன் 14 அக்டோபர், 2022


நூல்வேறிருப்பதாக எனக்குத் தோன்றவில்லை". அங்ஙனந் தோன்றாமைக்குக் காரணம் பலவாயினும் அவைகளுள் ஒன்றான "அஹிம்? சாப்ரதமோதர்மக" என்றபடி, ஜீவகாருண்யமென்னும் இரக்த ஓட்டம் இச்சரிதத்துள் எல்லாப் பாகங்களிலும் ஒழிவற ஓடி வியாபித்துக்கொண்டிருத்தலேயாம். இக்கருத்தையே, இப்புராண ஆசிரியராகிய அம்பாசமுத்திரம் ஹைஸ்கூல் தலைமைத் தமிழ்ப் பண்டிதர் ஆர். அரிகரமய்யரவர்கள் பாயிரத்தில் "புத்தரின் மதமாம் இஃது புறத்து சமயமாக வைத்தனசெனினும் பூ த ச யை யி ன ை வளர்த ்த ல ா லே உ த ்த ம ம தத் தி னொ ன ்றா ய வந் து ளமெ ன ்னைத் தூண்டுவித்ததாற் செய்யுளாலே விளம்பினன் தமிழின்மன்னோ.' என நன்கு விளக்கியதுமன்றி, அந்தப் புத்தயையே தம்மைத் தூண்டத் தாம் இந்நூலை எழுதினதாகவும் கூறியிருக்கின்றார்" நூல் 13 படலங்களாகவும் 303 பாடல்களாகவும் விளங்கி நிற்கின்றன. சிலபடலங்கள் தலைப்புகள் வருமாறு: புத்த புராணம் 1. திரு அவதாரப்படலம் 2. நாட்டுத்துன்பறி படலம். 3. திருமணப் படலம். 4. சித்தார்த்தர் கனவுகாண் படலம். 5. நகரத்துன்பறி படலம். 6. யசோதரை கனவுகாண் படலம். 7. பிரிவுறு படலம். 8. உண்மையுசாவிய படலம். 9. பூததயைவிரித்த படலம் 10. புத்தரான படலம். 11. கபிலைமீண்ட படலம். 12. மகோபந்நியாசப் படலம். 13. கடமைகள்வகுத்த படலம். இந்நூலின் கவிதைநயங்கள் குறித்து வேறொரு கட்டுரையில் விரிவாக பார்ப்போம். நூலின் பயனாக நூலாசிரியர் கூறும் கவிதையுடன் கட்டுரையை நிறைவுசெய்வோம். சாதியின் பிரிவு நோக்கார் தாழ்வோடு மேன்மைகாணார். நீதியின் நெறியின் நிற்பார் நிலத்துடலழித்துத் தின்னார் பூதியிற்களியார் இன்மை பொருந்தினும் மயங்காராவார் போதியின் வேந்தனார்தம் புராணமிதாய்ந்துளோரே. அக்டோபர், 2022 15


தமிழ் நிலத்தில் முருக வழிபாடு வெகுமக்களிடம் முக்கிய இடத்தைப் பெற்றுத் திகழ்கிறது. முருகன் குறித்து வைதீகக் கதையாடல்கள் நிறைய உள்ளன. சிவபெருமானின் மகன், பிள்ளையாரின் சகோதரன், ஞானப்பழக் கதை, சூரசம்கார கதை என்று முருகனை முன்னிறுத்தி பலக் கதைகள் உள்ளன. மற்றொரு பக்கம் தமிழ் உணர்வாளர்களிடம், 'முப்பாட்டன்' கதைகளும் உண்டு. இவ்வாறான, முருகனைப் பற்றிய கதையாடல்களில், வேறுபட்ட கதைக்கூறலை முன்வைத்திருக்கிறார் பண்டிதர் அயோத்திதாசர். பண்டிதரின் சொல்லாடலில் முருகன் சிவனின் மைந்தனுமில்லை, அவதாரக் கடவுளுமில்லை, வெறுமனே மொழிரீதியார பாட்டனும் இல்லை. முருகன் ஒரு ப�ௌத்தர். புத்தரின் வழிசென்று மதிப்பைப் பெற்றவர். இதுதான் பண்டிதர் கூறும் முருக சரித்திரம். அதாவது, முன்னொரு காலத்தில், இன்றைக்கு பழனி என்று அழைக்கப்படும் அன்றைய ‘பூங்குறிஞ்சி’ மலையை ஆண்டு வந்த ப�ௌத்த அரசனான மருகனுக்கும், அவருடைய மனைவியான ராணி கங்கையம்மாளுக்கும் மகனாகப் பிறந்தவர் முருகன். முருகனின் மனைவி தெய்வானை, மயில் உருவில் செய்யப்பட்ட வாகனத்தில் வலம் வந்த முருகன், புத்த பள்ளியில் பயின்று, அறவாழ்வை மேற்கொண்டு மக்களின் நல்மதிப்பைப் பெற்றான். முருகன் புத்த தன்மத்தில் பயணித்து, வாழ்க்கையை கடந்து சென்ற சிரமணன் என்பதே சரவணன் என்று ஆனது. இதுவே பண்டிதரின் பார்வையின் சுருக்க வடிவமாகும். அதாவது முருகன் என்பவன் ப�ௌத்த ப�ௌத்தமும் முருகனும் ஸ்டாலின் .தி இளவரசன். அவர் தன்ம நெறியில் வ ா ழ் ந் து, ஞான மார்க்கத்தை ம க்களுக் கு ப � ோ தித்தமைய ா ல் ப�ோற்றுதலுக்குரியவராக ஆனார்; வழிபடப்பட்டார். அருக வழிபாடெனும் ப�ௌத்த வ ழி ப ்பாட் டி ன் ஊ ட ா க வு ம் முருகனைப் பற்றி நோக்கலாம் . அருகர், அருகன் என்பவை புத்தரின் ப�ோர்களில் உள்ளவை. ‘புத்தன், மால், அருகன், சாத்தன்’ எல்லாம் புத்தரி ன் பெ ய ர்களே எ ன் று நிகண்டுகளைக்கொண்டு தம்முடைய எழுத்துகளின் பல்வேறு இடங்களில் எடுத்துக் கூறுகிறார் பண்டிதர் அயோத்திதாசர், அருகன்மேடு , அருகேரி, அருங்குணம் ப�ோன்ற ஊர்களின் பெயர்கள், இன்றளவும் ப �ௌத்த ம ர பு க ள ை யு ம் கொ ண் டு ள்ள ன என ்பதை க ள ஆய்வுகளி ன் வ ழி ய ா க அறியமுடிகிறது. புத்த வழிபாடான அருக வழிபாடோடு, பூங்குறிஞ்சி மலை மக்கள், அருக நெறியாளன் முருகன ை இ ண ை த் து க் கொண்டதால், இன்றைக்கு ‘வைசாக கால’ வழிபாடு பழனியில் நடக்கிறது. பழனிக்குச் சென்று மொட்டை ப�ோட்டு வழக்கத்தின், புத்த தீட்சை சடங்கு கலந்திருப்பதையும், இதோடு இணைந்து காணலாம். முருகனின் இன்னொரு பெயர் ஆறுமுகம் . முருகனின் உடல் முகத்தோடு , பஞ்சசீலமான ஐங்குணங்களையும் முகமாகக் கொண்டு, ஆறுமுகமாக வாழ்த்தப்பட்டிருக்க வேண்டும் எ ன் று ந ம் பு வ தி ல் , குழப ்ப ம் எதுவுமில்லை நமக்கு. முருக னோ டு அ டை ய ப் ப டுத்தப ்ப டு பவற் றி ல் , ‘ வேல் ’ முக்கியமானது. வேல் முருகன் எ ன் றும் முருக ன் அ ழை க ்கப் படுவதுண்டு என்பதை அறிவோம். உண்மையில் அச்சிறப்பு பெயர் வேல்முருகனா? வேள்முருகனா , வேலனா? வேளனா? முருகன் அரச குடும்பத்தைச் சார்ந்தவன். அவனின் அரண்பணியை அடையாளப்படுத்த ‘வேல்’ தேவை ப்படுகிறதுதான். 16 அக்டோபர், 2022


மேலும் சூரசம்காரன் என்பது, ‘சூராபானமருதியா’ சூரர்களுடனான, புத்த அரசரான (சூரா ஜ் அசூரா) முருகன் மோதியதையே குறிக்கிறது. இதன்படி சம்கார ப�ோர்வீரரான அடையாளப்படுத்தவும் வேல் அடையாளம் பயன்படுத்தப்பட்டது. அதே வேளை, முருகனை ப�ோற்றும் பெயராக ‘வேள்முருகன்’ என்பதுவும் முக்கிய இடத்தைப் பெறுகிறது. வேள் என்றால் கொடை என்று அர்த்தம். கொடை வள்ளல்களே வேளிர் எனப்பட்டனர். கொடைக்குப் பெயர்பெற்ற மன்னர்களின் பெயருக்கு முன் ‘வேள்’ என்று இடுவது சங்க இலக்கியங்களில் வழக்கமாக இருந்துள்ளது. பாரியை ‘வேள் பாரி’ என்று கூறியிருக்கிறார் கபிலர். புத்த தன்மத்தை கடைப்பிடித்ததால் கொடை வள்ளலாகவும் இருந்த முருகன் ‘வேள்முருகன்’ என்று அழைக்கப்பட்டிருக்க வேண்டும். வேளன் என்பது கொடையாளியை அடையாளப்படுத்துவதால், முருகனுக்கு வேலன் என்பதைவிட, வேளன் என்பது கூடுதல் சிறப்பைத் தரும் என்பதில் ஐயமில்லை. சரி. வள்ளி என்பவள் யார்? முருகனின் இரண்டாவது மனைவியையே வள்ளி என்பார்கள். இதிலும் நம்முடைய பார்வை மாற்று அர்த்தங்களைக் கொடுக்கவே செய்கிறது. வள்ளல் என்பதன் பெண்பால்தான் வள்ளி என்பதாகும். வள்ளியம்மை என்றால் தயாள குணம் கொண்ட பெண் என்று அர்த்தம். முருகன் ‘வேளன்’ என அழைக்கப்பட்டதால், முருகனின் மனைவியான தெய்வானை ‘வள்ளி’ என்று அழைக்கப்பட்டிருக்க வேண்டும். பிற்கால ப�ௌத்த விரோத திரிப்புவாத கும்பல், வள்ளி- தெய்வானை என ‘இரண்டு கல்யாணக்’ கதையை இட்டுக்கட்டிருக்கவே வாய்ப்பிருக்கிறது. தமிழ்நாடு ப�ௌத்த சங்க ஆல�ோசனைக் கூட்டம் அன்பார்ந்த சங்க உறுப்பினர்கள், ப ௌத்த ஆர்வலர்கள் வருகின்ற, 19.10.2022 புதன்கிழமை அன்று காலை 10.30 மணியளவில் நடைபெற இருக்கின்ற தமிழ்நாடு ப ௌத்த சங்க ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். ஞா.ம. சந்திரசேகரன் த. நடராஜன் தலைவர்பொதுச் செயலாளர் தமிழ்நாடு ப�ௌத்த சங்கம் முருகனுக்கு மற்றொரு பெயராக இருப்பது கந்தன். கந்தன் என்பது ப�ௌத்த அடையாள பெயர் என்பதில் ஐயமில்லை. கந்தம் என்கிற பாலி சொல்லுக்கு ப�ொருள் என்று அர்த்தம். பஞ்ச கந்தகங்களான ‘உருவம் (உடல் எனும் அடிப்படைப் ப�ொருள்), வேதனை (உணர்வு), குறி (ஐம்புலங்களும் அதனுடனான அறிவும்), செய்கை (பக்குவம்), ஞானம் (பகுத்தறிவு)’ ஆகிய ஐந்து கந்தகங்களின் கூட்டுத்தான் மனிதர்களின் அடிப்படை. இவற்றை நெறிப்படுத்தி ஒழுங்கமைப்பதே நிர்வானம். முக்தி என்றும் கூறுவர். பெரியபுராண கதையில் திருஞானசம்பந்தன், “உன் தலைவர் (புத்தர்) பெற்றார் என்று நாட்டுகின்ற முக்திதான் என்னவாம்?” என்று சாரிபுத்தரிடம் கேட்க, “வுரு/வேதனை/குறிப்பு/செய்கை/நேர்நின்ற ஞானமென திகழ்ந்த ஐந்தும் ஒன்றிய கந்த ஒழுங்கமைவுதான் முக்தி என்று பதிலுரைகிறார் சாரிபுத்தர். மேற்கூறப்படும் பஞ்ச கந்தங்களின் கூட்டிலிருந்து கந்தங்கள் பிரிந்துப�ோவதே மரணமாகும். அதாவது, பரிநிர்வானம். இப்படியாக, கந்தங்களின் சேர்க்கை மற்றும் பிரிதல் பற்றிய உரையாடலில் உயிரினத்தின் வாழ்க்கையை ப � ொ தித்த த ா ல் புத்தரு க் கு ப் பி ற கு வ ந ்த ப�ௌத்தர்களுக்கும் ‘கந்த அடையாளம் சேர்த்தது. வடக்கே இது ‘ஸ்காந்தம்’ என்று அழைக்கப்பட்டது. மேலும், பிக்குகளின் உடைகள் கந்த உடை என்று அழைக்கப்பட்டது. இன்று பழைய, கிழிந்தலான ஆடைகள் கந்தலாடைகள் என்று சிறுமைப்படுத்தி கூறப்படுவதைக் காணலாம். அறச்சீலர்களின் சீவர ஆடை எனும் கந்தலாடையைச் சீர்மைப்படுத்தும் நோக்கத்திலும் இது நேர்ந்திருக்கலாம் என்பது நியாயமான யூகமாகும். அக்டோபர், 2022 17


வினா: அறம், நீதி, நேர்மை என்று எதைப் பற்றியும் கவலைப்படாமல் இருப்பவர்கள் நன்றாக வாழ்வது ப�ோலவும் இதைப்பற்றி கவலைப்படுபவர்கள் தான் மிகவும் தொல்லையில் இருப்பது ப�ோலவும் தோன்றுகிறதே. இதைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள் ஐயா? ப�ௌத்த வினா-விடை “ப�ோதி தர்மரை கேளுங்கள்” வாசகர்களிடமிருந்து பவுத்தம் தொடர்பான கேள்விகள் வரவேற்கப்படுகின்றன. மின்னஞ்சல்: [email protected] ப�ோதிதம்மர்: ஆமாம் அப்படி தோன்றுகிறது. அவ்வளவே. நீதியோடும் நேர்மையோடும் அறத்தோடும் இருப்பவர்கள் எதற்கும் அ ஞ்சாதவர்கள ாகவும் எப ்பொ ழுதும் மன நி ற ை வு பெற்றவர்களாகவும் மனச்செம்மை உடையவர்களாகவும் இருப்பதை நாம் காண முடியும். தவறான வழிகளில் வெற்றி பெற்றவர்கள் எப்பொழுதும் அஞ்சிக் கொண்டே இருக்கிறார்கள் தங்களை சுற்றி பாதுகாப்பு வளையங்களை ஏற்படுத்திக் கொண்டே இருப்பார்கள். தங்களை சுற்றி பிம்பங்களை உருவாக்கிக் கொண்டே இருப்பார்கள். யாரேனும் ஒருவர் உண்மையை பேசினால் தான் எவ்வளவு பெரிய அதிகாரத்தில் இருந்தாலும்மிகவும் அஞ்சி விடுவார்கள். ஒருப�ோதும் மனம் விட்டு யாரிடமும் பேசவும் மாட்டார்கள். இ த னால ்தான் இ தைப் ப � ோ ன ்ற ப � ோ லி கட்டமைப்புகளால் தங்களை பெரியவர்களாக இந்தியச் சூழலில் சொல்ல வேண்டும் என்றால் அதிகாரத்தால், பணத்தால், இன்னும் பலவற்றால் த ங ்கள ை ப் பெ ரி ய வர்க ள் என்று கா ட் டி க் கொள்பவர்க ள் எவ்வி த மான மிகப ்பெ ரி ய பங்களிப்புகளையும் வரலாற்றில் செய்து விடுவதில்லை. இக்கட்டமைப்புகளைக் கடந்து இயல்பாக வாழ்பவர்கள் தான் மாபெரும் கலைஞர்களாக, மாபெரும் ஞானிகளாக, ம ாபெரும் அறிஞர்களாக மகத்தான பணி களை செய்கின்றார்கள். இவர்கள் எல்லா சமூகங்களிலும் எல்லா மொழிகளிலும் எல்லா நாடுகளிலும் இருப்பார்கள். வினா: ஐயா இன்னும் இந்த வினாக்களுக்கு நேரடியாக பதில் தாருங்கள் ஐயா. ப�ோதிதம்மர்: திட்டமிடுதல், செயல்படுதல், சரியாக நி ர்வா க க் கட ்டமைப் பு க ள ை உரு வ ா க் கு தல் இ வ ற ்றையெ ல ்லா ம் யார் மிக ச் ச ரி ய ா க கையாளுகிறார்களோ அவர்களே வெற்றி பெறுகிறார்கள். அவர்கள் இப்படித்தான் இருக்க வேண்டும் என்று அவசியமும் இல்லை. யார் சரியாகச் செயல்படுபவர் களாக கடமையை நிறைவேற்று பவர்களாக திட்டமிட்டுச் செயலாற்றுகிறார்களோ அவர்கள் அனைவரும் வெற்றி பெற முடியும். வெறுமனே நீதி, நேர்மை மட்டுமே வெற்றிகளை தந்து விடுவதில்லை. சரியான உழைப்பும் செயல் திட்டங்களும் தேவை. 18 அக்டோபர், 2022


பகவன் புத்தரின் ப�ோதனைகளை கேட்டு உணர்ந்து ஏற்ற முதல் ஐந்து சீடர்கள் ப�ௌத்தம் தழுவிய நாள்... மாமன்னர் அசோகர் கலிங்கப் ப�ோரின் களங்கத்துக்குப் பிறகு கலங்கிய மனதை தெளிவாக்கி ப�ௌத்தம் தழுவிய நாள்... பாபாசாகேப் அம்பேத்கர் அவர்கள் லட்சக்கணக்கான மக்களுடன் நாக்பூர் தீக்ட்ச்சா பூமியில் ப�ௌத்தம் தழுவிய நாள். இப்படி உலக ப�ௌத்தர்களால் கொண்டாடப்படும் தம்ம சக்க பவத்தான சுத்த தினம் ( அறநெறிச் சக்கரத்தை பகவன் புத்தர் சுழலவிட்ட நாள்) இந்த நந்நாளின் பல அறநெறித் த க வ ல ்க ள் மக ்கள ை செ ன ்றடை யாம ல் த டு க ்க செய்யப்பட்ட ஏற்பாடுகள் தான் நவர ா த் திரி ,திருப ்ப தி பிரமோற்சவம்என்ற பெயர்களில் இ ந் தி ய ா மு ழு து ம் க டை பிடிக ்க ப ்பட் டு ஆயிரக்கணக்கான பண்டிகைகள் கொண்டாடப்படுகிறது. ஆயிரம் தடைகள் வந்தாலும் அ வ ை க ள ை கட ந் து லட்சக்கணக்கான மக்கள் ப�ௌத்த அறநெறிப்பாதையில் அன்றாடம் அணிவகுக்கிறார்கள். எதிர் வரும் 05/10/2022 அன்று இந்த வரலாற்று சிறப்பு மிக்க ப�ௌத்த விழா மராட்டிய மாநிலம் நாக்பூர் நகரின் தீக்ட்ச்சா பூமியில் நடைபெற உள்ளது. உலகம் முழுவதும் இருந்து லட்சக்கணக்கான ப�ௌத்தர்கள் இந்த பெ ருவிழாவில ்கலந் து கொள்ள குவிகின்றனர். இந்த தம்ம சேனையில் தமிழ் நாடு ப�ௌத்த அறநெறியாளர் ச ங ்க மும் க லந் து கொண் டு அணிவகுக்கஅணியமாகி வருகிறது வ ா ய் ப் பு ள்ளவர்க ள்உட ன் வரலாம். வாழ்த்த நினைப்பவர்கள் எங்களை வாழ்த்தி வழியனுப்பலாம் நம் முன்னோர்கள் காட்டி ய ப�ௌத்த சமயத்தின் வரலாற்று க டமையை செய்து முடிக்க சென்று வருகிறோம். கஜேந்திரன் அப்பாத்துரை பொதுச்செயலாளர், தமிழ்நாடு ப ௌத்த அறநெறியாளர் சங்கம், பதிவு எண் :152/2019 தொடர்புக்கு 9944807639. தம்ம சக்க பவத்தான சுத்த தினம் அக்டோபர், 2022 19


ஆசைகளே இல்லாத வாழ்வை சாதாரண மக்களாகிய நம்மால் நினைத்துக்கூடப் பார்க்க முடிவதில்லை. புத்தரே இந்த நிலையை ஆறு ஆண்டுகள் நீண்ட கடும் பயிற்சிக்குப் பின்னரே அடைந்தார். இந்த நிலையில் புத்தர், “தான்” எனும் தனி யுணர்வு அ ற ்றவ ா ர ாய், அன ைத் து உயி ர்களோ டு ம் ஒ ன் றி ணைந்த வர ாய், அன் பும் கரு ணை யு மே உருவானவராய், அனைத்து உயிர்களின் நலத்திற்கும் மகிழ்ச்சிக்கும் தம் வாழ்வை அர்ப்பணித்தவராய் வாழ்ந்தார். தன்னலம் கருதாது ஆசைகள் அனைத்தையும் அறுத்தெறிந்த உன்னத வாழ்வு புத்தர், இயேசுகிறிஸ்து, இராமகிருஷ்ணர், இரமண மகரிஷி, மஹாத்மா காந்தி தம்மத் தொடர் புத்தர் காட்டியுள்ள வாழ்க்கைச் சக்கரம் ஓ.ரா.ந. கிருஷ்ணன் ப�ோன்ற மஹான்களுக்கே சாத்தியம், அந்த உன்னத இலக்கைப் ப�ோதிக்கும் புத்தர், நாம் ஏற்கனே கண்டபடி, நம்மைப் ப�ோன்ற சாதாரண மக்களுக்கு நடுவழியையும் காட்டுகின்றார். உன்னத இலக்குக்கு நேர் எதிரான எதிர்மறை முனை தன்னலமே நாடி வாழும் வாழ்வாகும். எடுத்தவுடனேயே யாராலும் அனைத்து ஆசைகளையும் பற் று த ல ்கள ையும் து றந் து உன்னத இ ல க ்கை அடைந்துவிட இயலாது. ஆகவே, நாம் முதலில் இரண்டிற்கும் இடைப்பட்ட நடுவழியைக் கடைப்பிடிக்க வேண்டும். தன்னலம் கருதும் அதே சமயம் நாம் பிறர் நலத்துக்கும் மகிழ்ச்சிக்கும் ஊறு விளைவிக்கலாகாது. இது முதன்மையானதும் முக்கியமானதுமாகும். எல்லா ஆசைகளையும் துறந்து விடமுடியாது. ஆகவே, எதற்கு ஆசைப்படுகிறீர்கள் என்று ஆசைகளை விவேகத்துடன் தேர்ந்தெடுப்பதில் நீங்கள் முதலில் தெளிவு பெற வேண்டும். உங்களுக்கோ பிறருக்கோ தீமை பயக்கும் எதற்கும் நீங்கள் ஆசைப்படலாகாது. மாறாக, உங்களுக்கும் பிறருக்கும் நலம் பயக்கும் எதுவாயிருந்தாலும், செயல்திறனை அதிகரிக்கும் எதுவாயிருந்தாலும், அதற்கு ஆசைப்படுங்கள் ; ந ல ்லொழு க ்க நெறி யை உறுதியாய் ப் பற் றி க் கொள்ளுங்கள். தீமை செய்வதினால் விளையும் துக்கத்தை இது தவிர்க்கும்; கூடவே, நல்லொழுக்க நெறியில் உறுதியாக நடந்து முன்னேறுவதால் விளையக்கூடிய மகிழ்ச்சியும் ஆனந்தமும் பெருகும். இந்த முதல் நடுவழியில் தன்னலமும் பிறர் நலமும் சரிசமமாகப் பேணப்படுகின்றது. மாசுக்களையும் 20 அக்டோபர், 2022


களங்கங்களையும் விளைவிக்கும் உட்சக்திகளாக சில தீய குணங்களையும் ஆசைகளை யு ம் அறுத்தெறியும் பயிற்சி மேற்கொள்ளப்படுகின்றது. இந்த வடுவழியில் சிலகாலம் பண்பட்ட பின்னர், இந்த நடுவழியே இறுதி இலக்கான நிப்பாணத்திற்கு நே ர்எதிர்முன ை யாக க் கொள்ள ப ்பட் டு இரண்டிற்கும் இடைப்பட்ட ஒரு புது நடுவழி தேர்ந்தெடுக்கப்படுகின்றது. இந்தப் புது நடுவழியில், தன்னலம் கருதாது சேயின் நலமே கருத்தில் கொண்டு செயல்படும் தாயைப் ப�ோலப் பிறர் நல த்தைப் பெரிதா கக் கருதும் பண்பா டு அதிகரிக்கின்றது. மேலும், சில தீய குணங்களும் ஆசைகளும் இங்கு வேரறுக்கப் படுகின்றன. அடுத்து, இந்த இரண்டாவது நடுவழியே நேர் எதிர்முனையாகி மூன்றாவது ஒரு நடுவழி தேர்ந்தெடுக்கப் படுகிறது. இவ்வாறாகச் சாதகர் ப டி ப ்ப டியாக இறுதி இ ல க ்கை நோக் கி முன்னேறுகிறார். ஆசைகளில்லாவிட்டால் வாழ்க்கை இல்லை. ஆகவே, ஆசைப்படுங்கள். ஆனால், துக்கம் விளையாமல் இருக்க நல்லதற்கே ஆசைப்படுங்கள்; மாசுக்கள் நீங்கிய தூய்மைக்கு ஆசைப்படுங்கள்; தூய்மையின் சிகரத்தை அடைய ஆசைப்படுங்கள். தூய்மையின் சிகரம் என்று எதைக் கருதுவது? நீங்கள் அடைய விரும்பும் தூய்மையின் சிகரம் எது என்பதைத தியானியுங்கள். தன்னலம் - பிறர்நலம் இரண்டையும் சமமாகப் பேணும் நடுவழியைப் ப�ோதிக்கும் ப�ௌத்தம் தூய்மையின் சி கரம் எது என்பதையும் காட்டுகின்றது . மாசுமறுவற்று, “தான்” எனும் தனியுணர்வு இ ல ்லாத , த ன ்னல ம் கரு த ா த வ ா ழ்வே , அனைத்துயிர்களின் நலத்திற்கும் மகிழ்சிக்கும் பாடுபடும் வாழ்வே, தூய்மையின் சிகரம் என்கிறது ப�ௌத்தம். மெய்ஞ்ஞானம் எய்திய பின்னர் புத்தர் சுமார் 45 ஆண்டுகள் இங்கு நிப்பாணப் பேரின்ப வாழ்வில் நிலைத்திருந்தார். அவர் வாழ்ந்த அந்த நிப்பாண வாழ்வே தூய்மையின் சிகரத்தை நமக்குக் காட்டுகின்றது. நல்லதே நினைத்தாலும் தன்னலம் விழைந்து செயல்படும்போது, அது நிறைவேறாவிட்டால் துக்கம் விளைகின்றது. தன்னலம் கருதாது “தான்” என்ற உணர்வே இல்லாது செயல்படும்போது துக்கம் ஏது? துக்கம் பூரணமாகவும் நிரந்தரமாகவும் ஒழிகின்றது. ஆகவே, தன்னலம் கருதுவதை மேற்சொன்னவாறு படிப்படியாகக் குறைத்து, இந்த உன்னத சிகரத்தை அடைந்து நிப்பாணப் பே ரின்பத் தி ல் தி ள ை த் திருங ்க ள் என்றே ப�ோதிக்கின்றது ப�ௌத்தம். அக்டோபர், 2022 21


புத்தரின் அறிவு வெளிக்குள் பிரவேசிக்க மீண்டும் உங்களை அழைக்கிறேன். சென்ற கட்டுரைகளில் தெரிந்து கொண்டவாறு பிரபஞ்சத்தின் உருவாக்கம் குறித்த புத்தரின் கருத்தும் நவீன அறிவியல் கருத்துக்களும் எவ்வாறு மிகவும் அதிகமாக ப�ொருந்தி ப�ோகின்றன என்பதை உணர்ந்து வியப்பு மேலீட்டில் இருக்கும் தங்களை அடுத்த நிலைக்கு அழைத்துச்செல்ல விரும்புகிறேன். புத்தர் தன்னுடைய பேரறிவின் மூலமாக இந்த உலகில் உள்ள, அதாவது பிரபஞ்சம் முழுவதிலும் உள்ள பருப்பொருட்களின் தன்மைகள் குறித்து மிகவும் விளக்கமாகவும், ஒரு அறிவியல் பார்வையில் ஒரு ப�ொருள் தன்மையின் குணாதிசயங்களாக எவற்றையெல்லாம் விவரித்து நவீன ப�ொருள் அறிவியல் (material science) என்ற துறை யி ல் விவர மாக விளக்க ப ்ப டு கிறதோ அதுப�ோலவே 2500 ஆண்டுகளுக்கு முன்பு மிகவும் தெளிவாகவும் அறிவியல் நுட்பத்திற்கான ப�ொது தன்மைகளை விவரிக்க கூடிய விளக்கமான வி வர ங ்க ள் அபி தம்மத் தி ல் , கி டைக் கி ற து அதன்படியாக புத்தர் 28 ப�ொருள் தன்மையின் வித்தியாசப்படுத்துதலின் மூலமாக வகைப்படுத்தி கூறுகிறார். அதன்படியாக, சென்ற கட்டுரையில் வாசித்தவாது உறுதியான ப�ொருட்கள் உறுதியற்ற ப�ொருட்கள் (concretely process the matter non concrete matter) இந்த உறுதியான ப�ொருட்கள் என்பதை ஏழு அபிதம்மம் ஓர் அறிவியல் பெருங்கடல் - 4 பிரபஞ்சமும் பருப்பொருட்களும் முனைவர் க. செல்வராணி 22 அக்டோபர், 2022


விதமாக வகைப்படுத்தப்பட்டுள்ளது. அவை பெரிய 1. முக்கியத்துவம் வாய்ந்தவை (Great essentials) 2. உணர்வுகளை உருவாக்குகின்ற தன்மை உடையவை (sensitive phenomena) 3. புறநிலை தன்மையை உருவாக்குபவை objective phenomena 4. பாலினத்தை உருவாக்குபவை sexual phenomena 5. இதயம் தொடர்பானது heart phenomena 6. உயிர் தொடர்பானது life phenomena 7. சத்துக்கள் தொடர்பானது. Nutritional phenomena உறுதியற்ற ப�ொருள் தன்மையில் நான்கு விதமான வகைப்பாடு காணப்படுகிறது அவை 1. வரையறுக்கும் தன்னைக் கொண்டது limiting phenomena 2. தொடர்பு படுத்தும் தன்மை கொண்டது communicating phe nomena 3. மாற்றத்திற்கு உரிய தன்மை கொண்டது mutable phenomena அடுத்ததாக 4. பொருள்களின் தன்மைகளை விவரித்தல் characteristics of matter இவ்வாறான 11 வகையான வகைப்பாடுகளின் கீழ் மொத்தம் 28 விதமான ப�ொருள் தன்மையை கொண்டவைகளாக இயற்கையில் இருப்பில் இருக்கும் பருப்பொருட்களை புத்தர் விவரிக்கிறார். நாம் ஒவ்வொரு பிரிவின் கீழ் உள்ள ப�ொருள் தன்மைகளை விவரமாக பார்க்கலாம். அதன்படியாக, ப�ௌத்தம் எவ்வாறு பிரபஞ்சத்தில் உருவாகிய பருப்பொருளின் இருப்பை குறித்து, பிரபஞ்ச உருவாக்க கோட்பாடுகளின் படி உருவாகிய அனைத்து பருப்பொருட்களும் எவ்வாறு விதவிதமாக பல்கி பெருகி உள்ளது என்பதையும், அவற்றின் தன்மைகள் என்னென்ன, அவை எவற்றிற்காக பயன்படுத்தப்படுகிறது அந்த தன்மைகளை நாம் எவ்வாறு புரிந்து கொள்வது, அது நம் வாழ்வில் எவ்வாறு பயன்படுத்தத் தக்கது அல்லது அதனுடைய பங்களிப்பாக இப் பிரபஞ்சத்தில் எவ்வாறெல்லாம் நிகழ்கிறது என்பதை குறித்த விளக்கங்கள் இந்த கட்டுரையில் நாம் விவரமாக காண முடியும். நாம் முதலில் முதல் பிரிவான முக்கியத்துவம் வாய்ந்த நான்கு நிலைகள் என்ற ப�ொருள் தன்மையில் கொண்ட great essentials என்று கூறப்படும் நிலம், நீர், காற்று, நெருப்பு என்ற நான்கு முதன்மையான ப�ொருள் தன்மையை நான்கு பெரும் பெரும்பூதங்கள் என்று கு றி ப் பிடப ்பட் டு அ வற் றி ன் த ன ்மை க ள் விளக்கப்படுகிறது. சென்ற கட்டுரையிலேயே இது குறித்த விளக்கங்கள் கொடுக்கப்பட்டிருந்தாலும் இவற்றின் தன்மையை தனித்தனியாக விளக்குவது அவசியம் ஆகிறது அதன்படியாக மண் அல ்ல து நி ல ம் எ ன் று வழங்கப்படும் pathavi dhaatu என்பதன் தன்மை யாக இ தே ப � ொ ரு ட ்கள ை உருவாக்கவும் மற்ற பெரும் பூதங்களுடன் இணைந்து வெவ்வேறு தன்மையிலான ப�ொருட்களை உருவாக்கவும் செய்கிறது. ப ா தவி என்ற வ ா ர்த்தை யின் மூல வார்த்தை “விரிவடைதல்” அல்லது “பரவுதல்” எ ன ்ப திலிரு ந் து நி ல ம் என ்ப து விரி வடை ய கூடியதாகஇருக்கிறது என்று விளக்கப்பட்டுள்ளது. இதன் தன்மைகளாக விளக்கப்படுவது கடினத்தன்மை மற்றும் மிருதுத்தன்மை இந்த பெரும் முதன்மையான பூதம் தனியாகவோ மற்ற பெரும் பூதங்களுடன் இ ண ை ந் து ப ல ்வே று வி த மான இரு ப் பி ன் பருப்பொருட்களை உருவாக்கவும் மாற்றவும் முடியும். ஆ கை ய ா ல் இது பெ ரும் பூ த ங ்க ளி ல் முதன்மையானதாகவும் முக்கியமானதா க வு ம் கருதப்படுகிறது. இதில் மிகவும் குறிப்பான ஒரு தன்மையாக விலக்கப்படுவது இந்த பூதத்தை தொட்டு உணர முடியும் தொட்டுணரும் தன்மை உடையது என்று விளக்கப்பட்டுள்ளது நிலம் என்ற மகாபூதத்தை நாம் தொட்டு உணர முடியும் என்று விளக்கப்பட்டுள்ளது. இரண்டாவதான நீர் என்ற பெரும் பூதம் (apo dhaatu) என்று பாலியில் வழங்கப்படுகிறது. இது பாயக்கூடிய தன்மை உடையது வெவ்வேறு முதன்மை பூதங்களுடன் இணைந்து ப�ொருள்களை உருவாக்கக் கூடியது. ஒட்டும் தன்மையுடையது , இரு வேறு ப�ொருட்களை, ப�ொருள் தன்மையின் துகள்களை ஒன்றிணைத்து ஒட்டுகின்ற இயல்புடன் சிதறாமல் ஓரிடத்தில் குவிப்பதற்காக, ஒன்றிணைப்பதற்காக பயன்படும் தன்மை உடையது என்று விளக்கப்பட்டுள்ளது. இந்த பூதத்தின் மற்ற தன்மைகளாக விளக்கப்படுவது துளித்துளியாக புத்தரின் பேரறிவு அக்டோபர், 2022 23


விழக்கூடியது மற்றும் கசியும் தன்னை உடையது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. அடுத்த தன்மை யாக மற ்ற ப � ொ ரு ள் தன்மையுடன் இணைந்து அந்த ப�ொருள் தன்மையின் இயல்பை அதிகப்படுத்தவோ, குறைவு படுத்தவோ முடியும் தன்மையுடையது என்று விளக்கப்பட்டுள்ளது (intensification and dilution is the material characteristics of water this characteristics is explain in here in this context). இது மற்ற முதன்மை பூதங்களை உருவாக்குவதிலும் அவற்றுடன் இணைந்து புது பருப்பொருட்களை உருவாக்குவதிலும் முக்கியமான பங்கு வகிக்கும் காரணியாகவும் க ா ரணமாகவும் இரு க் கி ற து எ ன் று விளக்கப்பட்டுள்ளது. நீர் பூதம் என்பது தொட்டு உணரக்கூடியது என்றும் மற்ற பருப்பொருட்கள் ஒன்றுடன் ஒன்று ஒட்டி இருப்பதிலிருந்து இந்த மகாபூதம் அந்த ப�ொருள் தன்மையில் இருப்பதை உணர்ந்து கொள்ள முடியும் என்றும் விளக்கப்பட்டுள்ளது. அடுத்ததாக நெருப்பு பூதம் என்று கூறப்படும் பாலியில்Tejo dhaatu என்று அழைக்கப்படு ம் . வெப்பத்தன்மையை குறிக்கும் பருப்பொருளாக விளக்கப்பட்டுள்ளது. இதனுடைய முக்கியமான தன்மையாக கூறப்படுவது முதிர்ச்சி அளிக்கக் கூடியது அல்லது பழுக்க வைக்கக்கூடிய தன்மை உடையது என்பதே. இது தொடர்ந்து நெகிழ்வுத் தன்மையை, மிருது தன்மையை கொடுக்கக் கூடியது என்று விளக்கப்பட்டுள்ளது. குளிர்ச்சியும் வெப்பமுமாக உணரப்படும் இந்த நெருப்பு பூதம் என்பது நம் தோ லினா ல் உ ணர ப ்ப ட க் கூடியது எ ன் று விளக்கப்பட்டுள்ளது. இந்த இயல்பு மிகவும் முக்கியமாக நாம் விளக்கப்பட வேண்டிய ஒரு பகுதியாகும் இதன் படியாக வெப்பம் அல்லது நெருப்பு என்பது ஒரு ப�ொருளின் தன்மையை முதிர்ச்சியடைய செய்வது அல்லது பழுக்க வைப்பது என்ற இந்த பண்பு மிகவும் முக்கியமானது. நாம் இதை இரு நிலைகளில் உணர முடியும் நாம் சாதாரணமாக உணர்ந்து கொள்ளக்கூடிய ஒரு பழம் பழுக்கும் நிலையிலும் அல்லது ஒரு உடலில் இருக்கக்கூடிய கட்டி ப�ோன்றவை பழுத்து முதிர்ச்சி அடைவது; இதை உணரும் அதே வேளையில் வெப்பம் என்பது ஒரு கரு உருவாக்கத்திலும், அந்த கரு சிறு குழந்தையாக வள ர் ந் து ப ா ல கனாக மனி த ன ா க வயதானவனாக முதிர்ந்து தன்னுடைய முதிர்ச்சி எட்டும் வரை வெப்பம் அவனது உடலில் செய்யும் முதிர்ச்சி பெறுகின்ற செ ய ல ்பாட் டி ன ை , வள ர் சி தை மாற்றத்தினை(metabolism) குறிக்கிறது என்பதாக நாம் புரிந்து கொள்ள முடியும் இவ்வாறாக நெருப்பு பூதம் என்பது மனிதனின் அ ல ்ல து ஒரு உயிரி ன் வள ர் ச் சி தை மாற ்றத் தி ற ்கா ன, முதிர் ச் சி ய டை ய செய்வதற்கான, முக்கியமான பங்கை அளிக்கிறது என்பது இந்த பகுதியில் விளக்கப்பட்டுள்ளது. உயிர் ஒரு உடலில் இருக்கும் வரை அந்த உடல் வெப்பத்துடன் இருக்கும் என்பதை நாம் அனைவரும் அறிவோம் அந்த உயிர் அந்த உடலில் இருந்து விலகியதை அந்த உடலின் குளிர்ச்சி தன்மையை நம்மை நமக்கு உணர்த்துவதாக நாம் அறிந்து வைத்திருக்கிறோம். அதன்படியாக, ஒரு கரு உருவாவதற்கான ஒரு தன்மையை ஒரு குறிப்பிட்ட வெப்பநிலை என்பதும் அதற்கு அதிகமாகவோ அல்லது குறைவாகவோ இருக்கும்பொழுது ஒரு கரு உருவாவதில் தடை ஏற்படுகிறது என்பதையும் நம் மரபு மருத்துவ அறிவு தெரிவிக்கிறது. அதன்படியாக இந்திய மருத்துவ அறிவில் நாம் விளங்கிக் கொள்ள வேண்டிய ஒரு முக்கியமான தகவல் என்பது ஒரு கரு உருவாக்கத்தின் ப�ொழுது சாதகமான சரியான வெப்பநிலை ஒரு கரு உருவாக்கத்தின் ப�ோது இருக்க வேண்டியது அதன் முக்கியத்துவத்தை உணர்த்துகிறது அதை இந்த பகுதியில் நெருப்பு பூதத்தின் மூலமாக விளக்கப்பட்டுள்ளது. அதாவது, ஒரு ப�ொருள் தன்மையின் முதிர்ச்சியை, வளர்ச்சியை குறிக்கக் கூடியது என்பதை நாம் விளங்கிக் கொள்ள இயலும் வலர்சிதை மாற்றம் மிக அதிகமாக நடைபெறும் ஒரு உயிரின் ப�ொருள் தன்மையில் வெப்பம் அதிகமாக இருக்கும் என்பதை பித்தம் என்ற ஒரு வார்த்தையின் மூலம் சித்த மருத்துவம் குறிப்பிடுகிறது. அவ்வாறு பித்தம் அதிகமாக இருக்கும் உடல் தன்மை கொண்ட மனிதர்கள் பெரும்பாலும் ஒல்லியான உருவத்துடன் இருப்பதையும் வளர்ச்சிதை மாற்றம் மிகவும் அதிகமாக நிகழும் ப�ொழுது மிக வேகமாக உடல் ஆற்றல் எரிக்கப்பட்டு ஒல்லியான உடல் உருவம் கொண்ட ஒரு நிலையை அடைகிறோம் என்பதை நாம் நவீன அறிவியலின் வேதிப்பொருட்கள் 118 தனிமங்களாக இருந்து ஆயிரக்கணக்கான கூட்டுப் ப�ொருட்களை உருவாக்குவதாக கூறப்படும் கருத்தும் அபிதமத்தின் நான்கு பெரும் பூதங்களும் மற்றும் கூட்டுப் ப�ொருட்களும் என்ற கோட்பாடும் ஒன்று ப�ோல் இருப்பதை நாம் ஒப்பிட்டு பார்க்க இயலும். 24 அக்டோபர், 2022


சித்த மருத்துவ அறிவின் மூலம் அறிய முடியும். இந்த கருத்து புத்தருடைய வெப்பத்தின் இயல்பை குறிக்கும் ப�ொழுது விளக்கப்பட்டுள்ளது மிகுந்த ஆச்சரியத்தை கொடுக்கக் கூடியதாக உள்ளது அதன்படியாக ஒரு ப� ொ ருள் முதிர்ச்சி அடைவதற் கும் வளர்ச்சி அடைவதற்கும் பழுத்து தன்னுடைய தன்மையில் முழுமை அடைவதற்கும் நெருப்பு என்ற இந்த முதன்மை பூ த ம் ப ய ன ்ப டு கி ற து எ ன் று அபி தம்மத் தி ல் விளக்கப்பட்டுள்ளது. அடுத்ததாக காற்று என்ற பெரும் பூதம் வாயு என்று தமிழில் வழங்கப்படும் அதே பெயரில் பாலியில் vayudhaatu என்று அழைக்கப்படுகிறது. இந்த வாயு என்ற பெரும் பூதம் முதன்மையானதாக இயக்கத்திற்கும் அழுத்தத்திற்கும் காரணமாக இருக்கும் ஒரு காரணியாக விளக்கப்பட்டுள்ளது. இதன் மூலமாக, இது ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு இயக்கத்தை கொடுக்கக்கூடிய தன்மை உடையது என்றும் அந்த இயக்கத்தின் ப�ோது அழுத்தம் கொடுக்கக்கூடியது என்றும் (motion and pressure is the main characteristics of air element) நாம் அறியலாம். க ாற்று எல ்லா இடத் திலும் பரவக்கூடி யது என்பதையும் பரவுதல் நிகழ்த்தக் கூடியது என்பதையும் விளக்குகிறது நவீன அறிவியல் காற்றையும் நீரையும் பாய் ப�ொருள் (fluids - which can flow) என்று பெயர் சூட்டி இருப்பதை நாம் அறிவோம். அதுப�ோலவே வாயு என்ற இந்த முதன்மை ப�ொருளின் தன்மையை பற்றி கூறும் ப�ொழுது அதை அழுத்தத்தால் மற்றும் இயக்கத்தினோடு தொடர்புடைய என்ற ப�ொருள் படும்படியான ஒரு தன்மையை குறிப்பிட்டு இருப்பது மிகவும் சிறப்பானதாக உள்ளது. இந்த நான்கு முதன்மை மூலப் ப�ொருள்களும் ஆகிய நான்கு பூதங்களும் ஒன்றோடு ஒன்று இணைந்தோ தனித்தனியாகவோ பல்வேறு விதமான கூட்டுப் ப�ொருட்களை உருவாக்கி இந்த பிரபஞ்சத்தில் பல்வேறு விதமான நிலைகளில் பருப்பொருட்களின்தோற்றத்திற்கு காரணமாகிறது. ப�ொருள் உருவாக்கம் குறித்த கோட்பாட்டை அபிதம்மம் விளக்கும் ப�ொழுது இந்த மூல ப�ொருட்களை, நான்கு பெரும் பூதங்களை அடிப்படை ப�ொருட்கள் எனவும் (basic elements) மற்றும் இவை இணைந்தும் தனித்தனியாகவும் பல்வேறு வி த மான ப � ொ ரு ட ்கள ை கூட்டுப்பொருட்களை உருவாக்கும் என்பதை (aggregates are derived matter ) என்று குறிப்பிடுவதைப் ப�ோலவே அபிதம்மத்திலும் மூலப்பொருட்களும் கூட்டுப் ப�ொருட்களும் தனித்தனியாக விளக்கப்படுகிறது. நவீன அறிவியலின் வேதிப்பொருட்கள் 118 தனிமங்களாக இருந்து ஆயிரக்கணக்கான கூட்டுப் ப � ொ ரு ட ்கள ை உரு வ ா க் கு வத ா க கூறப்படும் கருத்தும் அபிதமத்தின் நான்கு பெரும் பூதங்களும் மற்றும் கூட்டுப் ப�ொருட்களும் என்ற கோட்பாடும் ஒன்று ப�ோல் இருப்பதை நாம் ஒப்பிட்டு பார்க்க இயலும். பருப்பொருள்களின் இரண்டாவது வகைப்பாடான உணர்வு நிலைகளை உருவாக்கும் பருப்பொருள் இந்த வகைப்பாடு பார்க்கலாம். pasada Rupa இது உணர்வுகளை உணரக்கூடிய உறுப்புகளில் இருக்கக்கூடிய உணர்ச்சிப் ப�ொருட்கள் என்று நாம் கூற முடியும் அதாவது rod cells and cone cells, taste buds, sensory nerve endings, ear drum இவ்வாறு கூறப்படும் அனைத்து ப�ொருட்களும் கண் மூக்கு காது நாக்கு மற்றும் தோல் இவற்றில் உள்ள உணர்ச்சிகளை உணரக்கூடிய உறுப்புகளின் பகுதிகள், இதுப�ோலவே அபிதம்மத்தில் கு றி ப் பிடப ்ப டும் ஐ ந் து உணர் ச் சி உ று ப் புகளுக ்கா ன மாற ்ற த ்தை ஏற்படுத்தக்கூடிய அல்லது உணர்வதற்கான நாம் உணராத - உயிர் என்றால் என்ன என்பதை புத்தர் உணர்ந்தவராகவே நாம் இந்த இடத்தில் புரிந்து கொள்ள வேண்டியிருக்கிறது. ப�ோதி முரசு இதழ் வளர்ச்சி நிதி அளித்த நன்கொடையாளர்களுக்கு நன்றி! 1) திரு. K. கலாமணி ரூ.1000/- முன்னாள் உறுப்பினர், தமிழ்நாடு சிறுபான்மையினர் நல ஆணையம்நெ.135, திருவள்ளுவர் நகர், பாரதி தெரு, விருத்தாசலம், கடலூர் மாவட்டம் 2) விளம்பர நன்கொடையாளர் ரூ.2000/- 3) திரு. K. கன்னியப்பன் ரூ.2000/- தெற்கு இரயில்வே HQRS தெற்கு இரயில்வே தலைமையகம் 4) திரு. அயன்புரம் இராஜேந்திரன் ரூ.1000/- தெற்கு இரயில்வே 5) Mr. Jayaseelan ரூ.2000/- SC/ST Association Secretary, AGS Office அக்டோபர், 2022 25


வழிவகையை செய்யக்கூடிய ப�ொருட்கள் என்பது குறிப்பிடப்பட்டுள்ளது அவை( cakkhu pasada - eye sensitivity Ghana pasada - nose sensitivity, Kaya pasada - body sensitivity, Jeeva pasada - tongue sensitivity, sota pasada - ear sensitivity) என்று ஒவ்வொரு உணர்வு உறுப்புகளின் உணர்ச்சி அறியும் தன்மை பற்றியும், அதற்கான கூட்டுப்பொருட்கள் அந்தந்த உணர்வு உறுப்புகளில் எழுவதாகவும் அவையே அந்த உணர்ச்சியை உணர்வதற்கான இயல்பை, திறனை அந்த உணர்வு உறுப்புகளுக்கு அளிக்கிறது என்றும் விளக்கப்பட்டுள்ளது. இந்த ப � ொ ரு ட ்க ள் அன ைத் தும் த னி ய ா க வகைப்படுத்தப்பட்டதன் மூலமாக நாம் நவீன அறிவியலில் குறிப்பிடப்பட்டுள்ள உணர்வு செல்களுடன் அவற்றை ப�ொருத்திப் பார்க்க இயலுகிறது. இந்த ஒவ்வொரு உணர்வு உறுப்புகளின் உணர்ச்சி அறியும் தன்மையை யும் அத ற ்கான கூ ட் டு ப் ப�ொருளையும் பற்றி விளக்கம் அதன் மூலமாகவே நமக்கு ஒவ்வொரு உணர்வு உறுப்புகளின் மூலமாக கிடைக்கும் அறிவும் அந்த உணர்ச்சிகளின் பதிவுகள் ஒரு ஞானமாக நமது மூளையில் பதிவாகிறது என்பதும் அபிதம்மத்தில் விளக்கப்பட்டுள்ளது. புத்தர் அறிவின் வாயில்களாக ஆறு உறுப்புகளை குறிப்பிடுவார் அவை ஐந்து உணர்வு உறுப்புகளும் ஆறாவது நமது கேட்டறியும் தன்மை அல்லது cognition and understanding என்று குறிப்பிடப்படும் பெற்ற அறிவை சிந்தித்து, உணரும் தன்மையால் வரும் ஞானம் அல்லது சிந்தித்தல், பரிசோதித்தல், ஆராய்ந்து பார்த்தல் இவற்றின் மூலமாக வரும் முடிவுகளும் தீர்மானங்களும் புரிதல்களும் என்பதாகவும் அதுவே ஆறாவது வாயில் என்று புத்தர் குறிப்பிடுவார். இதன் படியாக, மனிதனின் அறிவு என்பது ஆறு வாயில்கள் மூலமாக கிடைப்பதாக புத்தர் தெரிவிக்கிறார் (6 doors of knowledge) . இந்த உணர்ச்சிகளை உணரக்கூடிய தன்மை பெற்ற கூட்டுப் ப�ொருட்கள் என்பது அந்த உறுப்பின் உணர்வு அறியும் இடத்தில் மிகப் பரவலாக விரவி பரவியுள்ளது எ ன் று வி ள க ்க ப ்பட் டு ள்ள து ந ா முழுவதும் நாவின் உணர்ச்சி அறியும் கூட்டு ப�ொருள் விரவி இருப்பதாகவும், மூக்கில் நுகரும் தன்மையை உணரும் பகுதியில் அது முழுவதுமாக விரைவில் பரவி இருப்பதாகவும் அதுப�ோலவே காதில் உணர்ச்சியை உணரும் பகுதியில் அந்தக் கூட்டுப் ப�ொருள் விரைவில் பரவி இருப்பதாகவும் தோல் முழுவதிலும் இந்த கூ ட் டு ப் ப � ொ ருள் பர வி இருப்பதாகவும் மூளையின் திறனறியும் பகுதியில் இந்த கூட்டுப் ப�ொருள் பரவி இருப ்பதாக வும் அபி தம்மத் தி ல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலமாக ப�ொருள் தன்மையின் வேறுபாடுகளை உணர்வுகளை அறியும் ப�ொருள் கூட்டு ப�ொருள் என்ற வகைப்பாட்டில் இவ்வாறான கூட்டு ப�ொருள்களுக்கான விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது. அடுத்த வகைப்பாட்டில் வரக்கூடிய புறநிலை உணரும் ப�ொருட்கள் என்பது ஒவ்வொரு உணர்ச்சி உறுப்புகளிலும் ஐந்து உணர்வு உறுப்புகளிலும் வெளியில் இருந்து தூண்டுதலை உருவாக்கும் ப�ொருட்களை உள்வாங்கும் தன்மை உடைய ப�ொருட்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது அதன்படியாக கண்ணுக்கான உணர்வையும் தன்மை என்பது ஒளி கண்ணில் ஊடுருவி அதன் வழியாக செல்லும் என்பதே புறநிலையில் உள்ள உணர்வையும் கூட்டுப் ப�ொருளாக விளக்கப்பட்டுள்ளது. அதுப�ோலவே ஐந்து உறுப்புகளுக்கும் காது, மூக்கு, கண், வாய் மற்றும் தோல் இவற்றில் வெளியில் இருந்து தூண்டல்கள் வரும் ப�ொழுது அவை வந்து விழும் அல்லது ஊடுருவிச் செல்லும் பகுதி என்பது வெளிப்புற அல்லது புற நிலையில் உள்ள உணர்வுகளை அறியும் ப�ொருள் என்று கூறப்பட்டுள்ளது. இதன் படியாக கண்ணில் ஒளி ஊடுருவும் பகுதியான கண்ணின் பாவை, விழி லென்ஸ் மற்றும் விழித்திரை ஆகிய பகுதிகளை நாம் அறிய முடியும். அதுப�ோலவே நாக்கில் இருக்கக்கூடிய சுவை நரம்புகள் என்பதும், ஒலி விழக்கூடிய காதில் உள்ள மெல்லிய திரை அதுப�ோலவே தொடுதல் உணர்ச்சி உணரக்கூடிய நம் தோலின் நரம் பு மு ன ை கள் ம ற் றும் மூ க் கி ல் உ ள்ள உணர்ச்சிகளை உணரக்கூடிய Rhinitis ஆகியவை இரண்டு நிலைகளில் உணர் உ று ப் புகளி ல் உ ள்ள ப � ொ ரு ட ்க ள் விளக்கப்பட்டுள்ளது. ஒன்று வெளியில் இருந்து வரக்கூடிய தூண்டுதல் விழக்கூடிய ப� ொ ருள் மற்ற து விழுந்த ப� ொ ருள் தன்மையை உணரக் கூடிய கூ ட் டு ப் ப � ொ ரு ள்க ள் அதன்ப டியாக ந வீன அறிவியலில் கூறப்பட்டுள்ள (the external stimuli falls on the sensory organs in the perceiving part and the sensory perception happens இந்த உயிர் தன்மையை குறித்த பருப்பொருள் என்பது உயிர் உருவாக்கம் மற்றும் இயக்கம் வளர்ச்சி செயல்பாடு இவற்றை குறித்தானதாக உள்ளது என்று விளக்கப்படுகிறது. 26 அக்டோபர், 2022


in the interface of the similar resting point and the sensory area so it is like an interface which can connect both external stimulize stimulation and the perceiving sensory part) அதுப�ோலவே ஒவ்வொரு உணர்வு இருக்கும் தனித்தனியான சூழல்களை உணரக்கூடிய தன்மை பெற்றது என்று விளக்கப்பட்டுள்ளது. அ த ன ்ப டியாக, கா ட் சி க ள ை உணரக்கூடிய தன்மை கண்ணிற் கு ம் ஒலிகளை உணரக்கூடிய தன்மையை காதுகளுக்கும் மணத்தை நுகரக் கூடிய த ன ்மை மூ க் கி ற்க் கும் சு வ ை யை உணரக்கூடிய தன்மையை நாக்கிற்க்கும் வெப்பம் அல்லது குளிர்ச்சி மற்று ம் அழுத்தம் ப�ோன்றவற்றை உணரக்கூடிய தன்மைநமது தோலுக்குமாக தனித்தனியான சூழலில் நிகழக்கூடிய ப�ொருள் தன்மை மாற ்ற ங ்கள ை உ ணரக் கூ டி ய உணர்வுறுப்புகளை பெற்றிருத்தல் என்பது இந்த ப � ொ ருள் த ன ்மை க ள ை வகைப்படுத்தும் இடங்களில் அபிதம்மமும் விளக்குகிறது இதன் மூலமாக நவீன அறிவியலில் இருக்கக்கூடிய அளவிற்கு உண்மை யாகவும் தெ ளி வ ா க வு ம் விளக்கமாகவும் ப�ொருள் தன்மைகள் விளக்கப்பட்டுள்ளமை வெளிப்படுகிறது. அடுத்த வகைப்பாடு என்பது பாபரூபா (Bhava rupa) என்று அழைக்கப்படும் ப ாலினத்தை வித் தியாசப ்ப டு த் து ம் ப ரு ப ்பொ ருள் எ ன் று குறிப்பிடப்பட்டுள்ளது. இதன்படியாக ஆண் பெ ண் எ ன் று இ ர ண் டு வகைப்பாட்டில் உயிர்கள் உள்ளமை விளக்கப்பட்டுள்ளது. இதற்கு சென்ற கட்டுரையில் நாம ரூபா என்று உயிர் உள்ளவை விளக்கப் பட்டமை நாம் இங்கு நினைவு கூற வேண்டியுள்ளது அதன்படியாக உயிர் த ன ்மை யு டை ய ப � ொ ரு ட ்க ள் என ்ப து பருப்பொருட்களுடன் வகைப்படுத்தப்பட்டுள்ளது அவற்றில் தன்முனைபுள்ள ப�ொருட்களே உயிர் தன்மையுடைய ப�ொருட்களாகவும் தன் முனைப்பற்ற ப � ொ ரு ட ்க ள் உயி ர ற ்ற ப � ொ ரு ட ்கள ா க வு ம் விளக்கப்பட்டுள்ளமை சென்ற கட்டுரையில் நாம் விளக் கி யு ள்ளோ ம். இ தன் ப டியாக, ப ா லின வேறுபாட்டை உருவாக்கக்கூடிய ப�ொருள் என்பது ஆண் மற்றும் பெண் தன்மையை உருவாக்கக்கூடிய தன்முனைப்பை கொண்டுள்ள பருப்பொருள் என்று அ பி தம்பத் தி ல் விள க்க ப ்பட் டு ள்ள து ப ா லின வேறுபாட்டை உயிரினங்களில் உருவாக்கக்கூடிய தன்மையை நன்கு விளக்கி இருப்பதை நாம் இங்கு அறியலாம் அடுத்த வகை ப ா ட் டி ல் குறிப்பிடப்பட்டுள்ள இதயம் மற்றும் உயிர் தன்மையை குறித்த வகைப்பாடு இ தன் மூ ல மாக மனம் ம ற் று ம் உடலுக ்கா ன தொ டர்பு இ த ய தன்மையை பெ ற்ற ப� ொ ரு ட ்க ள் வயப்படுத்தும் என்று கூறப்பட்டுள்ளது. மேலும் மனதிற்கும் உயிருக்குமான தொடர்பை நிலைப்படுத்தக் கூடிய ஒரு ப � ொ ரு ளே இ த யத்தன ்மையை தரக்கூடியது என்றும் மனதில் நிகழும் மாற்றங்கள் உயிர் தன்மைக்கான மாற்றங்களை உருவாக்கும் என்றும், இதற்கு இடைப்பொருளாக இருப்பது இதயத்தன்மை உடைய ப�ொருள் என்று விளக்கப்பட்டுள்ளது. இதனை நாம் நமது வாழ்க்கையில் காணும் சில நிகழ்வுகளை வைத்து தெளிவுபடுத்திக் கொள்ள தேவை எழுகிறது. ஒரு ஆபத்தான செய்தியை கேட்கும் ப�ொழுதோ, துக்ககரமான செய்தியை கேட்கும் ப�ொழுது தன் பெருமைக்கு பங்கம் விளைவிக்க கூடிய செய்தியை கேட்கும் ப�ொழுது ஒருவர் மாரடைப்பு ஏற்பட்டு காலமாவதையோ அல்லது மிகவும் ஆபத்தான நிலைமைக்கு செல்வதும் நாம் அறிந்ததே இந்த இது ப�ோன்ற நிகழ்வுகளில் மனதை பாதிக்க கூடிய செய்திகளை கேட்பதன் மூலம் உயிருக்கு ஆபத்தான நிகழ்வுகள் நிகழும் ப�ொழுது மாரடைப்பின் மூலமாக மட்டுமே நிகழ்கிறது என்று நவீன அறிவியல் விளக்குவதையும் அபிதம்மத்தில் மனதிற்கும் உயிருக்கும் ஆன தொடர்பை தரக்கூடிய தன்மைகள் உள்ளது இதய தன்மையுடைய ரூபா என்று விளக்கப்படும் இந்த இடத்தில் நாம் மிகச் சரியாக ப�ொருத்தப்பட்டுள்ளது அறிந்து கொள்ளவேண்டியிறுக்கிறது. அதன் மூலமாக மனதி ற் கும் உயிரு க் கும் உ ள்ள தொ ட ர்பை நிலைப்படுத்தக் கூடிய அல்லது ஒழுங்குபடுத்தக்கூடிய ஒரு உறுப்பாக இதயம் தன்மையை வழங்கக்கூடிய ப�ொருள் பருப்பொருள் செயல்படுகிறது என்று அபிதம்மம் விளக்குவதை நாம் மிகத் தெளிவாக புரிந்து கொள்ள முடியும். இதைவிட முக்கியமாக, தன்முனைப்புள்ள பருப்பொருள் அல்லது உயிர் என்று விளக்கப்படும் தன்னை உடையது தனியான வகைப்பாட்டில் ஜீவ ரூபா என்று விளக்கப்பட்டுள்ளது . இந்த உயிர் தன்மையை குறித்த பருப்பொருள் என்பது உயிர் உருவாக்கம் மற்றும் இயக்கம் வளர்ச்சி செயல்பாடு இந்த உடலுக்குத் தேவையான உடலை நிலை நிறுத்தக்கூடிய உயிர்ச்சத்தை தரக்கூடிய உணவுப் ப�ொருளை ஆகாரம் என்று விளக்கப்பட்டு இது இந்த உடல் நிலைத்திருப்பதற்கும் இந்த உடல் இயங்குவதற்குமான ஆற்றலையும் தன்மையையும் தருகின்ற பருப்பொருள் என்று விளக்கப்பட்டுள்ளது. அக்டோபர், 2022 27


இ வ ற ்றை குறித ்தா ன த ாக உ ள்ள து எ ன் று விளக்கப்படுகிறது. இந்த உயிர் தன்மை என்பது தனித்தனியான வகை பாட்டில் குறிப்பிடப்படாமல் உயிர் இயங்கும் தன்மை என்ற நிலையிலேயே அதிகம் அதில் விளக்கப்படுகிறது. ஆகவே, நாம் இதை ஒரு முழுமையான உயிரைக் குறித்த விளக்கமாக அறிந்து கொள்ள இயலும் அதன்படியாக உயிர் துடிப்பை அல்லது தன்முனைப்பை உருவாக்கக்கூடிய நவீன அறிவியல் கருத்துக்கள் ஏதும் இல்லாத ஒரு நிலையில் ஜீவ இந்திரிய அல்லது ஜீவ ரூபா என்று குறிப்பிடப்படும் இந்த தன்மையை அதிகம் விளக்குவதை நாம் உணர வேண்டி இருக்கிறது உயிர் தன்மையை குறித்த மிகப்பெரிய விளக்கங்கள் ஏதும் நவீன அறிவியலில் இல்லாத நிலையில் இவற்றை இதற்கு மேலாக நம்மால் விளக்கவோ புரிந்து கொள்ளவோ முடியாத ஒரு நிலை ஏற்பட்டுள்ளமை வியப்புக்குரியது. ஏனெனில், நவீன அறிவியல் உயிர் என்றால் என்ன என்பதை இன்றளவும் விளக்குவதற்கு இயலாத நிலையிலேயே உள்ளது என்பதை நாம் அறிவோம். நாம் உணராத - உயிர் என்றால் என்ன என்பதை புத்தர் உணர்ந்தவராகவே நாம் இந்த இடத்தில் புரிந்து கொள்ள வேண்டியிருக்கிறது. அதன்படியாக அவர் கூறும் உயிர் தன்மையை தரக்கூடிய ப�ொருள் அல்லது தன் முனைப்புடைய பருப்பொருளே உயிரை உருவாக்கி வளர்க்கும் என்ற விளக்கம் நமக்கு புரியாததாகவும் புதியதாகவும் வியப்புக்குரியதாகவும் இருக்கிறது. அபிதம்மா அறிவியலில் நான் அறிந்த வரையில் இந்த விளக்கம் நவீன அறிவியலின் எந்த துறையிலும் விளக்கப்படாத ஒரு ப�ொருளாகவே பார்க்க வேண்டிய உள்ளது. முழுமை தன்மையை யும் ந வீன அறிவியலின் அறிவியலையும் தாண்டிய ஒரு தெளிவான விளக்கம் தத்துவ நிலையை தாண்டி ப�ொருள் தன்னை உடையதை பற்றியும் ஆற்றலை பற்றியும் ப�ொருட்கள் இயங்கும் விதங்கள் பற்றியும் விளக்கப்படுவதன் மூலமாக அபிதம்ம அறிவியலின் உயிர் நிலையை நாம் உணர்ந்து கொள்ள இயலும். இந்த உயிர் தன்மை குறித்த ஒரு விளக்கம் என்பது நவீன அறிவியலால் விளக்கவே படாத விளக்கவே முடியாத நிலையில் இருக்கும் ஒரு ப�ொருளாகும் இது ஆன்மீக நிலையிலும் அனைத்து ஆன்மீக விளக்கங்களிலும் மதம் சார்ந்த கருத்துக்களிலும் உயிர் என்றால் என்ன என்பது விளக்கப்படாததாகவே உள்ளது. ஆனால் அது தனித்தன்மை மிக்கதாகவும் தன்முனைப்பு உள்ளதாகவும் தானாக இயங்கக்கூடிய தன்மை பெற்றதாகவும் இருப்பதாக ப�ௌத்தம் விளக்கி இருப்பது புத்தரின் மகா பேரறிவை நமக்கு உணர்த்துகிறது அடுத்த த ாக உயி ர ்ச ்ச த ்தை தரக் கூ டி ய மறுப்பொருட்கள் என்று உணவுப் ப�ொருட்கள் விலக்கப்பட்டுள்ளது அவற்றிற்கு கபாலிக்க ஆஹாரா kabalikagara என்று உணவுப் ப�ொருள் உயிர் சக்தியை கொடுக்கக்கூடிய உணவுப் ப�ொருள் குறித்து வகைப்பாடு செய்யப்படுகிறது. இந்த உடலுக்குத் தேவையான உடலை நிலை நிறுத்தக்கூடிய உயிர்ச்சத்தை தரக்கூடிய உணவுப் ப�ொருளை ஆகாரம் என்று விளக்கப்பட்டு இது இந்த உடல் நிலைத்திருப்பதற்கும் இந்த உடல் இயங்குவதற்குமான ஆற்றலையும் தன்மையையும் தருகின்ற பருப்பொருள் என்று விளக்கப்பட்டுள்ளது. இது உடலுக்கான உயிர் சத்தை வழங்க கூடிய தன்மை பெற்றது என்று விளக்கப்பட்டுள்ளது. இவ்வாறாக 18 விதமான ப�ொருட்கள் உறுதியான பருப்பொருள் தன்மையில் இருப்பதாகவும் அவை அனைத்தும் உ ள்ளார்ந்த இயல ்பை பெற் றிருப ்பதா க வு ம் குறிப்பிடப்பட்டுள்ளது (SabavaRupa - internship nature. Salakanarupa - real characteristics, Nipphana rupa - concretely produced matter Rubarupa -; material matter, samas aana Rupa - matter to be comprehended by insight). இதுப�ோல ப�ொருள் உறுதி தன்மையுடைய ப � ொ ரு ள ான வகை ப ்பாட் டி ல் இ வ்வாற ா க வி ள க ்க ப ்பட் டு ள்ள து. இ வ ை அன ைத் து ம் பருப்பொருளின் நவீன வகைப்பாட்டில் இல்லாமல் ப�ோனாலும் நவீன வகைப்பாட்டில் பயன்பாடுகளை அ ல ்ல து செ ய ல் தி ற ன ்கள ை ஒ ட் டி ய த ா க வகை ப ்ப டுத்தப ்பட் டு ள்ளமை ந ாம் உணர வேண்டியுள்ளது. இதைத் தாண்டி நான்கு விதமான வகைப்பாட்டியலும் அது குறித்த விளக்கங்களையும் நாம் அடுத்த கட்டுரையில் காணலாம் நன்றி. - த ொடரும் கர்நாடக மாநிலம், கோப்பலில் உள்ள ஒரு கோயிலின் சிலையை தள்ளி சிறுவன் தொட்டான் என்று 60 ஆயிரம் ரூபாய் தண்டனை விதித்தது அங்கிருக்கும் சாதி இந்து கூட்டம். பாதிக்கப்பட்ட அந்தக் குடும்பம் தெளிவடைந்தது. ‘நாங்கள் தொட்டால் தீட்டாகும் கடவுள் எப்படி எங்களின் கடவுள் ஆவார்?’ எந்த சிந்தனையை வந்தடைந்த அவர்கள், வீட்டிலிருந்த இந்து கடவுள் உருவப்படங்களைத் தூக்கியெறிந்து புத்தர் படத்தையும் அண்ணல் படத்தையும் அவ்விடத்தில் வைத்துள்ளனர். - ஸ்டாலின் .தி 28 அக்டோபர், 2022


ப�ோதி முரசு வாசகர்களுக்கு அன்பான வேண்டுகோள் நம�ோ புத்தாயா, வணக்கம். பௌத்த அறிஞர் ஓ.ரா.ந. கிருஷ்ணன் மற்றும் மகா உபாசகர் ஐய்யா தங்கவயல் வாணிதாசன் ஆகியோரால் தமிழ்நாடு ப�ௌத்த சங்கம் நிறுவப்பட்டும், ப�ோதி முரசு இதழ் தொடங்கப்பட்டும் சீறிய முறையில் நடைபெற்று வருகிறது. தமிழ்நாடு ப�ௌத்த சங்கம் மற்றும் ப�ோதி முரசு இதழுக்கு தலைவர் மற்றும் நிர்வாக ஆசிரியராக டாக்டர் ஞா.ம. சந்திரசேகரன் தலைமையேற்று நடத்தி வருகிறார். திரு. த. நடராஜன், சங்கத்தின் ப�ொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டு செயல்பட்டு வருகிறார். மகா உபாசகர் ஐய்யா தங்கவயல் வாணிதாசன் அவர்களின் எதிர்பாரா பரிநிப்பானத்தை தொடர்ந்து, தமிழ்நாடு ப�ௌத்த சங்கம், தமிழ்நாடு ப�ௌத்த அறநெறியாளர் சங்கம், ஆசிரியர் குழு நடத்திய ஆலோசனை கூட்டத்தின்படியும் ப�ௌத்த அறிஞர் ஓ.ரா.ந. கிருஷ்ணன் அவர்களின் வழிகாட்டுதலின் படியும் ப�ோதி முரசு இதழ் ஆசிரியராக திரு. செல்லரத்தின கேசவன் (துணை ஆட்சியர், ப.நி) அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆசிரியர் திரு. செல்லரத்தின கேசவன் அவர்கள் ப�ோதி முரசு இதழை அடுத்த நிலைக்கு மேம்படுத்தி, வாசகர்களுக்கு கொண்டு செல்லும் பணியில் தன்னை முழுமையாக ஈடுபடுத்தி செயலாற்றி வருகிறார். எழுத்தாளர் ஜெயராணி அவர்களின் சீறிய ஆலோசனையின் படி ப�ோதி முரசு இதழ் புதிய வடிவம் கண்டுள்ளது. புதுப் ப�ொலிவுடன் வெளிவந்து கொண்டிருக்கிறது. தற்போது தமிழ்நாடு அரசு நூலக ஆணைக் குழுவின் உத்தரவு பெற்று, அரசு மாவட்ட நூலகங்கள் மற்றும் ஊரக நூலகங்களுக்கு ப�ோதி முரசு இதழ் அனுப்பி வைக்கப்படுகிறது. ப�ொது வாசகர்களால் பெரிதும் பாராட்டப்படுகிறது. நாட்டில் ஏற்பட்டுள்ள விலைவாசி ஏற்றத்தின் காரணமாக, பத்திரிக்கை தாள், அச்சடிப்பு தொகை, இதர செலவினங்கள் அதிகமாகியுள்ளன. இதனால் ப�ோதி முரசு இதழ் அச்சிட்டு வெளியீடு செய்வதற்கு கூடுதல் நிதி தேவைப்படுகிறது. இருப்பினும் இதழின் விலையை கூட்டாமல், வளர்ச்சி நிதி ஆயுள் சந்தா, ஆண்டுச் சந்தா திரட்டுவது என திட்டமிடப்பட்டுள்ளது. எனவே, ப�ௌத்த ஆர்வலர்கள், நன்கொடையாளர்களிடம் வளர்ச்சி நிதி பெற்றுத்தருமாறும், வாசகர் வட்டத்தை மேலும் விரிவாக்க ப�ோதி முரசு ஆயுள் சந்தா ரூ.3,000/- மற்றும் ஆண்டு சந்தா ரூ.250/- செலுத்தி புதிய சந்தாதாரர்களை சேர்த்து இதழின் வளர்ச்சிக்கு உதவுமாறும் அனைவரையும் அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். ப�ோதி முரசு இதழுக்கான வளர்ச்சி நிதியை, சந்தாத் தொகையை தமிழ்நாடு ப�ௌத்த சங்கத்தின் வங்கி கணக்கில் செலுத்துமாறு கோருகிறோம். வங்கி கணக்கு விபரம்: TAMILNADU BOUDDHA SANGHA TRUST A/C. No. 31707722763 State Bank of India, Anna Nagar West, Chennai - 600 040 ISFC Code: SBIN0003870 MICR: 600002006 மாத இதழ் தாமரை 8 | இதழ் 9 | செப்டம்பர், 2022 | ரூ.20/- அன்பு கருணை சமத்துவம் சககோதரத்துவம் சமூக நீதி தனிமனித சுதந்திரம் 1 tember 2022 ewspaper for India under No. blication:1st of every month. P-632/2020-2022 ள்ள து ன் மைல் ய ய்ம் ஹை மாத இதழ் தாமரை 8 | இதழ் 8 | ஆகஸ்்ட், 2022 | ரூ.20/- அன்பு கருணை சமத்துவம் சககோதரத்துவம் சமூக நீதி தனிமனித சுதந்திரம் 1 gust 2022 spaper for India under No. blication:1st of every month. -632/2020-2022 uly 2022 paper for India under No. blication:1st of every month. P-632/2020-2022 ல பிரத்த்சததில் ்ச என்றும் அடி தமதல ல் 5வது ்தலாய் ாச்சல பிரத்த்சம் து. ஜூலை, 2022 1 மாத இதழ் தாமரை 8 | இதழ் 7 | ஜூரை, 2022 | Rs.20/- - ஓ.ரா.ந. கிருஷ்ணன் அன்பு கருணை சமத்துவம் சககோதரத்துவம் சமூக நீதி தனிமனித சுதந்திரம் 1 தமிழ்நாடு ப ௌத்த சங்கம் 1848/8, 6ஆவது அவென்யூ அண்ணாநகர் மேற்கு, சென்னை-600 040 ஞா.ம. சந்திரசேகரன் த. நடராஜன் தலைவர் மற்றும் நிர்வாக ஆசிரியர் பொதுச் செயலாளர் கைபேசி: 99762 99993, கைபேசி: 98403 64970 அக்டோபர், 2022 29


ப�ௌத்தம்: பிற மதங்களிலிருந்து எவ்வாறு வேறுப்படுகிறது டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர் ஒழுக்கமே புத்தருடைய மதமாகும். ஒழுக்கம் மதத்தில் ஆழப்பதிந்துள்ளது. ஒழுக்கம் இல்லையென்றால் புத்த மதம் ஒன்றுமில்லாததாகும். புத்த மதத்தில் கடவுள் இல்லையென்பதே உண்மை. கடவுளுக்கு பதிலாகவே ஒழுக்கம் இருக்கிறது. பிற மதங்களுக்கு கடவுள் எப்படியோ அதுப�ோன்று புத்த மதத்திற்கு ஒழுக்கமே ஆகும். “தம்மம்” என்ற சொல்லின் ஒரு புதிய புரட்சிகரமான ப�ொருளை புத்தர் விளக்கினார் என்பது அரிதாகவே அங்கீகரிக்கபடுகிறது. “ தர்ம ம்” என ்ற ப � ொ ருள் வேதத் தி ன் கண்ணோட்டத்தில் ஒழுக்கத்துடன் எந்த வகையிலும் தொடர்பற்றவை. தர்மமானது சில கர்மங்களை செய்வ து த வி ர , அல ்ல து ரோ மானிய ம த செ ய ல ்பா டுகளி ன் சொற் பி ரயோ க த ்தைப் பயன்படுத்துவது தவிர வேறு எதுவுமல்ல. தர்மம் என்றால் யாகங்கள் நடத்துவதும், சடங்குகள் செய்வதும், கடவுள்களுக்கு பலியிடுவதும் தவிர வேறு எதுவுமில்லை. புத்தர் பயன்படுத்திய “தம்மம்” என்ற சொல்லுடன் சடங்குகள் அல்லது மரபுகளுக்கு எவ்வாறு சம்மந்தமும் இல்லை. யாகங்கள் மதத்தின் சாராம்சம் என்று கூறப்படுவதை புத்தர் நிரகரித்தார். “கர்மம்” என்பது செயலுக்கு பதிலாக ஒழுக்கத்தையே தம்மத்தின் சாராம்சம் என்று கூறினார். தம்மம் என்ற சொல்லை பிராமணிய ஆசான்களக்கு, புத்தரும் பயன்படுத்திய ப�ோதிலும் இருவரின் கூற்றுக்களின் உள்ளடக்கம் தீவிரமாகவும், அடிப்படையாகவும் வேறுபட்டதாகும். ஒழுக்கம் உண்மையில் மதத்தின் சாராம்சம் மற்றும் அதன் அடித்தளம் என்று வறிய உலகின் முதல் ப�ோதனையாளர் புத்தரே ஆவார். சதுர்வர்ணம் (நான்கு பிரிவுகள்) என்ற சமத்துவமின்மை கோட்பாட்டை ஒழிப்பதற்கு முறையான தன்னுடைய ப�ோதனைகளால் ஏற்படுத்தப்பட்ட நடவடிக்கைகளால் இந்து மதம் தனது கோட்பாடுகளில் பல மாற்றங்களை செய்ய வேண்டிய சூழ்நிலை உருவானது. ஆனால் இந்து மதத்தில் உயிர்வதை கைவிடப்பட்டது. வேதங்கள் பிழையற்றவை என்ற கோட்பாட்டைக் கைவிடவும் தயாராக இருந்தது. ஆகை ய ா ல் புத்தர் சது ர்வர்ணங ்க ள் என ்ற கோட்பாட்டை எதிர்ப்பதில் பின்வாங்காம ல் தொடர்ந்து சதுர்வர்ண சமத்துவமின்மையை எதிர்த்து வந்தார். அதனால் “பிராமணியமானது” ஜைன மதத்திற்கு காட்டிய எதிர்ப்பைக் காட்டிலும் புத்த மதத்திற்கு எதிராக வடுதலான வெறுப்பையும் , பகையையும் காட்டியது. சதுர்வர்ணத்திற்கு ஒரு புதிய தொகுப்பு: T. கிருபாகரன் 30 அக்டோபர், 2022


சத்துவத்தை, நியாயத்தை அது வளர்த்தது. இந்தப் புதிய தத்துவார்த்த நியாயத்தை பகவத் கீதையில் காணலாம். பகவத் கிதை என்ன ப�ோதிக்கிறது என்பதை யாரும் திட்டவட்டமாக சொல்ல முடிவதில்லை. பிற மதங்களுக்கும், பவுத்தத்திற்கும் இடையிலான வேறுபாடுகளை ஒவ்வொன்றாக விரிவாக ஒப்பிட்டுக் கூறுவது மிகவும் அசாத்தியமாகும். சமுதாயம் ஒன்றாக இருப்பதற்கு சட்ட உத்தரவாதம் அல்லது ஒழுக்க நியதியான உத்தரவாதம் இருக்க வேண்டும். இந்த இரண்டில் எதுவும் இல்லாவிட்டால் சமுதாயம் நிச்சயமாக சிதறுண்டு ப�ோகும். “The society must have either the sanction of law or the sanction if morality to hold it together. Without either society is sure to go to pieces.” எல்லா சமுதாயங்களிலும் சட்டம் ஒரு மிகச் சிறிய ப ங ்கையே ஆ ற் று கி ற து . அ து இ ச் சி று ப ா ன ்மையோரை சமூக க் க ட் டு ப ா ட் டு வீ ச் சினுள் அட க் கி வைப்பதை நோக்கமாகக் கொண்டதாகும். பெரும்பான்மைப் பகுதியானது தனது சக வ ா ழ்க்கையை ஒழுக ்க நியதியி ன் கோட்பாடுகள் மற்றும் அனுமதியினால் நிலைநிறுத்தி வைத்துக்கொள்வதற்கு வி ட் டுவிடப ்ப டு கி ற து; அ வ்வா று விட் டுவிடப ்ப ட வேண்டியு ள்ள து . எனவே, மதமானது “ஒழுக்க நியதி” என்ற ப�ொருளில் ஒவ்வொரு சமுதாயத்திலும் ஆட்சி செய்யும் கோட்பாடாக இருக்க வேண்டும். Religion in the sense of morality, must therefore, religion the govening principle in every science. 2. மதம ாவது விஞ்ஞானத்திற்கு ஏற்புடையதாக இருக்க வேண்டும் . விஞ்ஞானத்திற்கு இசைவாக இல்லாவிட்டால் அது தனது மரியாதையை இழந்துவிடும். எனவே அது ஏலனத்திற்கு உரியதாகிவிடும். அதன்மூலம் அது வாழ்க்கையை நிர்வகிக்கும். ஒரு கோட்பாடு என்ற தனது சக்தியை இழக்கிறது. காலப்போக்கில் அது சீரழிந்து, மறைந்துவிடும். வேறு சொற்களில் கூறுவதென்றால் மதம்- அது தொடர்ந்து செயல்பட வேண்டுமென்றால், க ா ரணத் தி ற் கு இ சைவ ா ன த ாக, அ த ா வ து விஞ்ஞானத்திற்கு இசைவானதாக இருக்க வேண்டும். That religion as defined in the first propositions must be in accord with science. If it is to function, must be in accord with reason which is merely another name for science. 3. மதமானது சமூக ஒழுக்கத்தின் ஒரு சட்டமென்ற வகையில் மற்றொரு சோதனையிலும் தேற வேண்டும். மதமானது ஓர் ஒழுக்கச் சட்டத்தைக் கொண்டிருப்பது மட்டும் ப�ோதாது, அதனுடைய ஒழுக்க சட்டம் சுதந் தி ரம், சமத்துவம், சகோரத்துவம் ஆ கி ய அடிப்படையான நியதிகளையும் அங்கீகரிக்க வேண்டும். ஒரு மதமானது சமூக வாழ்க்கையின் இந்த மூ ன் று அடிப ்படை யான க ோ ட ்பா டு க ள ை அங்கீகரித்தாலன்றி மதம் அழிந்துவிடும். That religion a code of social morality, must also stand together another test. It is not enough for religion to consist of a moral code, but its moral code must recognise the fundamental tencts of Liberty, euality and fratonit. Unless a religion recognises these three fundamental principles of social life, religion will be doomed. 4. மதமானது வறுமையில் புனிதப்படுத்தவோ அ ல ்ல து மேம்ப டுத்தவோ கூடாது. செ ல ்வ ம் படைத்தவர்கள் அதைக் கைவிடுவது மகிழ் ச் சி ய டை யத்தக்க நி லை ய ா க இருக்கலாம். ஆனால் வறுமை ஒருப�ோதும் அப்படியிருக்க முடியாது. வறுமையை மகிழ்ச்சியடையத்தக்க ஒரு நிலையாக அறிவிப்பது மதத்தை தவறான பாதையில் செல்லச் செய்வதாகும். தீமையையும், குற்றத்தையும் நீடித்திருக்கச் செய்வதும் பூவுலகத்தை ஒரு வாழும் நகரமாக்குவதற்கு சம்மதிப்பதுமாகும். That religion must not santify or ennoble poverty. Renunciation of riches by those who have it, may be a blessed state, but poverty can never be. To declare poverty to be a blessed state is to pervert religion, to perpetuate vice and crime, to consent to make earth a living all. புத்தர் தமது சமய பிரகாரத்தின் ஒரு பகுதியாக சமூக விடுதலை அறிவுத்துறை வி டு தலை , அ ர சி ய ல் விடு தலை முதலியவற்றை ப�ோதித்தார். அவர் மனிதனுக்கும் மனிதனுக் குமிடையேயான சமத்துவத்தையு ம் , ஆணுக் கும் பெ ண்ணுக் கும் இ டை யி ல ா ன சமத்துவத்தையும் வலியுறுத்தினார். எந்த மதம் இந்த தேவைகளையெல்லாம் பூர்த்தி செ ய் கி ற து என ்ற க ே ள்விக ள ை ப ரி சீ ல ன ை செய் யும்போது, இந்த எல்லா கேள்வி களிலு ம் தேறக்கூடிய ஒரே மதம் புத்த மதம்தான். பழைய உலகத்திலிருந்து பெரிதும் வேறுபட்ட ஒரு புதிய உலகம் உதயமானால் பழைய உலகைவிட அதற்கு ஒரு மதம் அவசியம் தேவை. அப்போது புத்தரின் மதம்தான் இந்த தேவையை பூர்த்தி செய்யக்கூடியது என்பதை யாரும் அறிய வேண்டியதாக இருக்கும். செல்வம் படைத்தவர்கள் அதைக் கைவிடுவது மகிழ்ச்சியடையத்தக்க நிலையாக இருக்கலாம். ஆனால் வறுமை ஒருப�ோதும் அப்படியிருக்க முடியாது. வறுமையை மகிழ்ச்சியடையத்தக்க ஒரு நிலையாக அறிவிப்பது மதத்தை தவறான பாதையில் செல்லச் செய்வதாகும். அக்டோபர், 2022 31


திக்கெட்டும் திரிபிடகம் இந்தப் பகுதியில் நாம் மஜ்ஜிம நிகாயத்தின் சுத்தங்கள் 91 – 120 வரை இருப்பதைக் குறித்துப் ப ா ர்க்கல ாம். இதி ல் இரு க் கும் உ ரை க ள் மிகச்சிறியனவாகவே இருக்கின்றன. அவற்றில் புத்தர் சொல்லும் உ ரை கள் 91 லிரு ந் து 100 வரை பார்ப்பனர்களுக்கு கூறும் உரைகளாகவும் மற்றவை தேவதக வக்கமும் அனுபவ சுத்தமும் ஆகும். அஸ்ஸலாயன் என்னும் ஒரு பார்ப்பனர் இருந்தார். அவர் மிகுந்த அறிவுடையராக இருந்தார். கல்வி கேள்விகளில் சிறந்தவராக இருந்த அவரை புத்தரிடம் வாதிடுவதற்காக பார்ப்பனர்கள் அழைத்து வருகிறார்கள். பார்ப்பனர்கள்தான் உயர்ந்த ஜாதி எனவும் பிரம்மனின் வாயில் பிறந்தவர்கள் அவர்கள் எனவும் பிரம்மாவின் வாரிசுகள் எனவும் வாதிடுகின்றனர். புத்தர் அவர்களுக்கு மனித பிறப்பின் அறிவியல் குறித்து விவரித்து கூறுகிறார். பார்ப்பனப் பெண்கள் கருத்தரித்துக் குழந்தைப் பெறுகிறார்கள்.பெண்ணிடம் பிறந்துவிட்டு, பிரம்மனின் வாயில் பிறந்தவர்கள் என்கிறார்கள். பார்ப்பனரானாலும் சத்திரியர் ஆனாலும் வாழ்க்கை என்பது ஒன்றுதான். யார் நெருப்பை மூட்டினாலும் நெருப்புதான் அது . சத்திரியருக்குத் தனியாகவும் பார்ப்பனருக்குத் தனியாகவும் நெருப்பில்லை. கழுதையும் குதிரையும் கூடினால் கோவேறு கழுதை வரும் என்பதைப் ப�ோல மஜ்ஜிம நிகாயம் (பிக்குகளுக்காக) யாழன் ஆதி சத்திரியனும் பார்ப்பனனும் கூடினால் புதியவகை இனமா தோன்றப் ப�ோகிறது? பிறப்பையும் கல்வியையும் முன்னிருத்திப் பேசுவதைவிட நல்லொழுக்கத்தை முன்னிருத்தலாம். அது அனைவருக்கும் ப�ொதுவானது. எனவே ப ார்ப்பனர்க ள் அனைவரை யு ம்வி ட உ ய ர்ந ்த வர்க ள் என ்ப து தவற ா ன து எ ன விரித்துரைக்கிறார். சங்கீ சுத்தத்தில் பார்ப்பனர்களோடு புத்தர் ஆற்றுகின்ற உரையாடல் நமக்குப் பல தெளிவுகளைக் கொண்டுவருகிறது. கல்வி கேள்விகளில் பார்ப்பனர்களே சிறந்தவர்களாக இருக்க வேண்டும் என்னும் அவசியம் ஒ ன் றும் இல ்லை. மொ ட ்டை த ்த லை யு ட ன் கருத்தநிறமுடைய தம்மத்தின் வழி நின்றால் ப�ோற்றுத லுக்குரியவர்களாகிவிடுகிறார்கள். பிறப்பு எதையும் தீர்மானிப்பதில்லை. இப்படி பார்ப்பனர்களோடு புத்தர் நிகழ்த்தும் உரையாடல்கள் ஒவ்வொன்றும் அவர்களின் மேனிலையை நிலைநாட்ட அவர்கள் தங்கள் கருத்துக்களை ஓங்கி வைக்கிறார்கள். புத்தரோ மிகப்பொறுமையாக வாதிடுபவர்கள் எவ்வளவு இளையவராக இருந்தாலும் மிகப்பொறுமையுடனும் ப�ொறுப்புடனும் பதிலாற்றி அவர்களைத் தன் பக்கம் திருப்புகிறார். வேதங்கள் வாசித்தல் மனனம் செய்தல் என்பவை எல்லாம் பிறப்பால் மட்டும் ஒருவருக்கு நேர்பவை அல்ல. அவற்றை யார் வேண்டுமானாலும் செய்ய முடியும் என்பது இந்த சுத்தங்களில் புத்தரின் ப�ோதனைகளில் அடியொளியாக இருக்கின்றது. வாசெட்ட சுத்தத்தில் இரண்டு இளைஞர்கள். இருவரும் பார்ப்பனர்கள். பிராமணர் யார் என்பது அவர்களின் விவாதம். புத்தரிடம் செல்கிறார்கள் . புத்தர் உலகின் உயர்ந்த நற்குணங்களை அடுக்கிக் கூறி அ வ ற ்றை யார் பின ்பற் றினாலும் அ வர்க ள் பிராமணர்கள்தான் என்று கூறுகிறார். ஒருகட்டத்தில் “ஓர் ஊசி முனையிலிருந்து கடுகு வீழ்ந்துவிடுவதுப�ோல யாரிடமிருந்து பெருங்காமம், கோபம், வெறுப்பு,பகைமை இறுமாப்பு ஏளனம் ஆகியவை வீழ்ந்துவிடுகின்றனவோ அவரையே நான் பிராமணர்” என்பேன் என்கிறார். இந்தப் பகுதியில் இன்னொரு முக்கியமான சுத்தம் ‘சுனக்கத்த சுத்தம்’ தற்காலத்திற்கும் ப�ொருந்தும் அறவுரைகளைப் புத்தர் சுனக்கத்தருக்கு விளக்கி கூறியிருக்கிறார். ப�ௌத்தத்தின் அடிப்படைக் கோட்பாடுகள் அனைத்தும் மிக எளிதாக அனைவருக்கும் தெளிவாகப் புரியும்படி எடுத்தாளப்பட்டிருக்கிறது. புலினின்பங்கள் குறித்த விழிப்புணர்வு, உதிர்ந்த மஞ்சள் இலை மீண்டும் ப சுமைக் கொண்டு காம்பை அடை யமுடியாததைப் ப � ோல சமாதி நி லை 32 அக்டோபர், 2022


பகவன் புத்தரின் ப�ோதனைகளை கேட்டு உணர்ந்து ஏற்ற முதல் ஐந்து சீடர்கள் ப�ௌத்தம் தழுவிய நாள்... மாமன்னர் அசோகர் கலிங்கப் போரின் களங்கத்துக்குப் பிறகு கலங்கிய மனதை தெளிவாக்கி ப ௌத்தம் தழுவிய நாள்... பாபாசாகேப் அம்பேத்கர் அவர்கள் லட்சக்கணக்கான மக்களுடன் நாக்பூர் தீக்ட்ச்சா பூமியில் ப ௌத்தம் தழுவிய நாள்.... இப்படி உலக ப ௌத்தர்களால் கொண்டாடப்படும். தம்ம சக்க பவத்தான சுத்த தினம் (அறநெறிச் சக்கரத்தை பகவன் புத்தர் சுழலவிட்ட நாள்) இந்த நந்நாளின் பல அறநெறித் தகவல்கள் மக்களை சென்றடையாமல் தடுக்க செய்யப்பட்ட ஏற்பாடுகள் தான் நவராத்திரி ,திருப்பதி பிரமோற்சவம் என்ற பெயர்களில் இந்தியா முழுதும் கடைபிடிக்கப்பட்டு ஆயிரக்கணக்கான பண்டிகைகள் கொண்டாடப்படுகிறது. ஆயிரம் தடைகள் வந்தாலும் அவைகளை கடந்து லட்சக்கணக்கான மக்கள் ப ௌத்த அறநெறிப்பாதையில் அன்றாடம் அணிவகுக்கிறார்கள். எதிர் வரும் 05/10/2022 அன்று இந்த வரலாற்று சிறப்பு மிக்க ப ௌத்த விழா மராட்டிய மாநிலம் நாக்பூர் நகரின் தீக்ட்ச்சா பூமியில் நடைபெற உள்ளது. உலகம் முழுவதும் இருந்து லட்சக்கணக்கான ப ௌத்தர்கள் இந்த பெருவிழாவில் ப ௌத்தர்கள் கலந்து கொள்ள குவிகின்றனர். இந்த தம்ம சேனையில் தமிழ் நாடு ப ௌத்த அறநெறியாளர் சங்கமும் கலந்து கொண்டு அணிவகுக்க அணியமாகி வருகிறது. அடைந்தவர்கள் மாறார், வேடகையாகிய அம்பு அறியாமையாகிய நஞ்சு ஒருவரிடமிருந்துப் பறிக்கப்பட வேண்டும்,கொடிய நச்சுப்பாம்பு ஒன்று எதிரே வருகிறது, வாழவேண்டும் என்று நினைக்கிற ஒருவர் அதனிடத்தில் சென்று தன் கையைக் காட்ட மாட்டார். அதுப�ோல துன்பமற்ற வாழ்வென்பது பிறர்பொருளைக் கவர்வதிலிருந்து விலகியிருத்தலில் இருக்கிறது என்று அற்புதமான உரையை நிகழ்த்துகிறார் ததாகதர். 118வது சுத்தம் ஆனாபானசதி சுத்தம். கார்த்திகை மாதம் கோமுதி முழுநிலவு நாளன்று திறந்த வெளியில் பால் ஒளியில் புத்தர் பிக்குகள் சங்கத்தினர் சூழந்திருக்க அமர்ந்திருந்தார். மௌனம் வீற்றிருந்த அந்த பிக்குகளை நோக்கி புத்தர் உரை நிகழ்த்தினார். “ மூ ச்சை உ ற் று ப ்பா ர் க் கும் தியானத ்தை வளர்த்தெடுக்கும்போது, அது பெரும் நற்பலன்களைத் தரும். இது விழிப்புணர்வை நிலைநாட்டும் பயிற்சிக்கு அடித்த ள மாக இரு க் கி ற து. உட ல் , உணர் வு , மனம்,எண்ணங்கள். மூச்சுப் பயிற்சியினால் இந்த ந ா ன் கு அடிப ்படை களும் நி ற ைவுறு ம்போ து மெய்ஞானத்தின் ஏழு அங்கங்களையும் அவை நிறைவு செய்கின்றன. உடலை உடல் எனச் சிந்தித்து தியானிப்பதால் பேராசையையும் வருத்தத்தையும் கைவிடுகிறார். இது மெய்ஞானத்தின் முதல் அங்கம் அப்போது அவர் தன்னுடைய மனநிலையை அலசி ஆராய்கிறார் – இது இரண்டாவது அங்கம் அங்ஙனம் மனநிலையை விசாரணைக்கு உட்படுத்தும்போது சோர்வற்ற வீரியத்தை உடையவராகிறார் – இது மூன்றாவது அங்கம் வீரியத்தை உடையவரின் உடலில் உலகம் காணாத பரவசத்தை அவர் அடைகிறார் – இது நான்காவது அங்கம் உடலின் அந்த பரவச உணர்ச்சி உள்ளத்தில் சாந்தத்தை உருவாக்குகிறது – இது ஐந்தாவது அங்கம் உடலின் பரவசமும் மனத்தின் சாந்தமும் அவருக்கு ஒருமுகப்பாட்டைத் தருகிறது – இது ஆறாவது அங்கம் இந்த ஒருமுகப்பாடு ஒருவருக்கு உள்ளச்சமநிலையைத் தருகிறது - இது ஏழாவது அங்கம் இந்த ஏழு அங்கங்களையும் நிறைவு செய்யும் ஒருவர் தன் புலன்களால் தாம் உணர்வனவற்றை அவை வெறும் உணர்வுகள் என்று அவரடைந்த சமநிலை அவரை நிறுத்திவிடுகிறது. அதனால் அவர் துன்பம் அடையாத நிலையை அடைகிறார். இவ்வாறு புத்தர் நிகழ்த்தி உரை பிக்குகளுக்கு மட்டுமல்ல, இல்லறத்தாரும் ஏற்றுக்கொள்ளத்தக்கனத்தான். மஜ்ஜிம நிகாயத்தின் மூன்றாம்பட்குதி இவ்வாறு நிறைவடைகிறது. வாசகர்களுக்கு வேண்டுகோள் போதி முரசு ஆயுள் சந்தா ரூ.3000/- ஆண்டு சந்தா ரூ.250/- மற்றும் போதி முரசு வளர்ச்சி நிதி நன்கொடையாளர்களிடம் வேண்டப்படுகிறது. ஆசிரியர் குழு, நிர்வாக குழு போதிமுரசு அக்டோபர், 2022 33


Published by O.R.N. Krishnan and Owned by Tamilnadu Bouddha Sanga Trust and published from 1848/8, 6th Avenue, Anna Nager West, Chennai - 600 040 and printed by O.R.N. Krishnan at J.M. Process, No.22/49, Subedar Hussain Street, Thottam, Royapettah, Chennai - 600 014. Editor: CHELLA RATHINA KESAVAN. நற்பண்புகளின் இருப்பிடமான ஒருவர் வாழும் பாதையினை மாரனால் அறிந்து கொள்ள முடிவதில்லை. ஏனென்றால் அவர் சரியான அறிவுடன் மனக் களங்கங்களை நீக்கி கவனமுடன் வாழ்பவர். தேரர் கோதிகாவின் கதை தேரர் கொதிக்க ஒரு சமயம் மகத நாட்டில் இருந்த இசிகிலி மலையின் ஒரு பக்கத்தில் இருந்தப் பாறையின் மீது அமர் ந் து த னது மன அ மை தி யை யு ம் நுண்ணறிவினையும் பெருக்குவதற்காக விட ா முயற்சியுடன் தியானம் செய்து கொண்டிருந்தார். இறுதியில் தான் அரஹத் ஆக வேண்டும் என்பதற்காகத் தன் கழுத்தைத் தானே அறுத்துக் கொண்டு உயிரிழந்தார். அதே நேரத்தில் அவர் அரஹத்தும் ஆகி விட்டார். தேரர் கோதிகா இறந்து விட்ட செய்தியை மாரன் அறிந்தான். அவர் எங்கே, என்ன மறுபிறப்பு எடுத்துள்ளார் என்பதை அறிய விரும்பினான். ஆனால் எவ்வளவு முயன்றும் அவனால் தெரிந்து கொள்ள முடியவில்லை. அதனால் ஒரு இளைஞனைப் ப�ோல் உரு எடுத்துக் கொண்டு அனைத்துமறிந்த புத்தபகவானை அணுகினான். தேரர் கோதிகாவை காண வேண்டும், அவரை எங்கே பார்க்கலாம் என்று மிகவும் பணிவாக வினவினான். மாரனின் மனதை அறிந்த தேரர் கோதிகா எங்கிருக்கிறார் என்ற தகவலினால் உனக்கு ஒரு நன்மையும் கிடைக்காது. மாரா! அரஹத் நிலை அடைந்தவர்கள் எங்கு எப்படி இருக்கிறார்கள் என்று அறிவது உன் அனைத்து தம்மபதம் 57 அவரது ஆழ்ந்த தியானத்தின் பலனாக அவர் மனம் ஒருமுகப்பட்ட நிலையில் அவரது உடல் நலம் கெட்டது. இந்த உடல் நலக் குறைவு அவரது தியானத்தையும் மிகவும் பாதித்தது. உடல் நலம் ஒவ்வொரு முறை மோசமான ப�ோதும் அவர் விடாது தனது தியானத்தை தொடர்ந்தார். இவ்வாறு ஆறுமுறை உடல் நலம் கெட்டும் அவர் மீண்டும் மீண்டும் தனது தியானத்தை விட ாது தொடர்ந்தார். அது மட்டுமல்லாமல் இன்னும் எத்தனை முறை தியானம் தடங்கல் ஏற்பட்டாலும், இந்த முயற்சியில் தன் உயிரே ப�ோனாலும் தன் எண்ணத்தில் வெற்றி அடைவேன் எனத் தீர்மானித்துக் கொண்டார். சக்திகளுக்கும் அப்பாற்பட்டது. தேரர் கோதிகா தன் மன மாசுகள்,களங்கங்கள், குற்றங்கள் நீங்கி அரஹத் ஆகிவிட்டார். ஆகவே அவரைத் தேடுவது வீண் என அறிவுறுத்தினார். உன்னைப் ப�ோன்ற ஒருவன் தன் சக்திகள் அனைத்தையும் திரட்டி முயற்சி செய்தாலும் அரஹத்கள் தங்கள் இறப் பி ற் கு ப் பின் எங் கு செல்கிறார்கள், என்னவாகிறார்கள் என்று தெரிந்து கொள்ளவோ புரிந்து கொள்ளவோ முடியாது என்றும் சொன்னார். இதன் பின்னர் பகவான் தம்மபதம் செய்யுள் 57 ஐ தன்னைச் சுற்றி இருந்த பிக்குகள், சீடர்கள் மற்றும் உபாசகர்களுக்குக் கூறினார். இறப்பிற்குப் பின் எங்கு செல்கிறார்கள் ஞா.சந்திரசேகரன் 34 அக்டோபர், 2022


24.09.2022 அன்று சென்னை மகா ப�ோதி சொசைட்டியில் நடைபெற்ற அனகாரிக தர்மபாலரின் 158- வது பிறந்த நாள் விழா நிகழ்வுகள். மகா போதி சொசைட்டி ( பொறுப்பு) பிக்கு நுககொல்லே சந்திர ரத்னா தேரே அவர்களிடம் போதி முரசு இதழை ஆசிரியர் செல்ல ரத்தின கேசவன் வழங்குகிறார். உடன் இணை ஆசிரியர் முனைவர் க.ஜெயபாலன், ABI நிறுவனர் திரு.ஜெயராஜ், ப ௌத்த அறநெறியாளர் சங்கத்தின் தலைவர் தம்மச்சுடர், புத்தர் ஒளி பன்னாட்டு பேரவையின் அமைப்பாளர் திரு.அன்பன், திரு.ப ௌத்தபாண்டியன். தமிழ் நாடு சிறுபான்மையினர் நல ஆணைய ப ௌத்த உறுப்பினர் பிக்கு மௌரியார் புத்தா அவர்களுக்கு தென்னிந்தியாவில் பாபா சாகேப் அம்பேத்கர் புத்தகம் மற்றும் போதி முரசு இதழ் வழங்கப்பட்டது. நிகழ்வில் கலந்து கொண்ட பீம் வாய்ஸ் இதழ் ஆசிரியர் ப ௌத்த பெருமாள், மெத்தா பதிப்பகம் சங்கர், இந்திரா பல்கலைக்கழக முன்னாள் உதவி இயக்குநர் திரு பீம்ராவ், ஆவின் துணை இயக்குநர் (பநி) திரு.மணி மற்றும் ப ௌத்த உபாசகர்கள். அக்டோபர், 2022 35


Posted at Pathrika Chennal, Egmore, Posted Between 1-7, October 2022 BODHI MURASU (Tamil Monthly) October 2022 Regd.with the Registrar of Newspaper for India under No. TNTAM/2014/57241 Postal Registration Number: TN/CCN/665/2020-22/ Date of Publication:1st of every month. Licenced to post without prepayment WPP No. TN/PMG (CCR) WPP-632/2020-2022 ஜப்பானின் மிகப் பழமையான புத்தர் கோவில். இது டோக்கியோ நகரில் உள்ளது. கி.பி.645 ஆம் ஆண்டு நிர்மாணிக்கப் பட்டது.ஒவ்வொரு ஆண்டும் 30 மில்லியன் மக்கள் இங்கு செல்கின்றனர். இதில் ஜப்பானிப் பாரம்பரிய ப�ொருட்கள் விற்கப்படும் வணிக வளாகமும் உண்டு. 36 அக்டோபர், 2022


Get in touch

Social

© Copyright 2013 - 2024 MYDOKUMENT.COM - All rights reserved.